வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த ஞாயிறு(01-09-2013) அன்று சென்னையில் பதிவுலக நண்பர்களால் பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், சந்திப்பு பற்றிய என் முதல் பதிவாக, பிற்பகல் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன். தனது கணீர் குரலில் பல்வேறு குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை ததும்ப பேசிய, அவர் சொன்ன சிறுகதைகளில் என் நினைவில் நின்ற கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
Best Blogger Tips
UA-18786430-1