மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (14/05/2014) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.
CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS
Showing posts with label சித்திரை திருவிழா 2014. Show all posts
Showing posts with label சித்திரை திருவிழா 2014. Show all posts
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திருவிழா 2014 - வீடியோ இணைப்பு
மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.
இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை
மதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014) காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
![]() |
| மீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி |
திருக்கல்யாணத்தை காண அதிகாலை முதலே மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் குவிந்தார்கள். மக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஆடி வீதி முழுதும் பந்தல் அமைத்து குளிர்சாதன வசதியும் செய்திருந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)
|
|










Best Blogger Tips
UA-18786430-1