இதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர்
வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து
அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.
முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு
முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும்
தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார்.
கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே
வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில்
எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு
பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர்
மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட
கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு
மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை
எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும்,
மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம்
அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும்
கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம்
நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும்.
பின்பு
தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில்
கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து
புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள்
இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும்
வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார்.
செய்திகள் தொகுப்பு: http://maduraipost.com/2012/05/kallalagar-festival/
புகைப்படங்கள் என் மொபைல் மூலம்