CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts
Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts


ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!


வணக்கம் வலை நண்பர்களே,

தினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.  
மேலும் வாசிக்க... "ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!"



ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!

செய்தி:
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, விதிமுறைகளை மீறி ராணுவ நிலம், அளவுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நம்ம கமென்ட்: 
இதெல்லாம் ரொம்ப கம்மி. நம்ம ஊரு பெரும்புள்ளிகள் கிட்ட தகவல் அறியும் சட்டம் பாய்ந்தால் கையாடல் செய்த நிலத்தில் ஒரு குட்டி கண்டமே உருவாக்கலாம்.

செய்தி:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காக, மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை, 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நம்ம கமென்ட்: 
மொத்ததுல அவனோட கூட்டத்துக்கே  இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ரொம்ப குறைவாகவே பணம் செலவாயிருக்கும். இந்தளவு பணம் இருந்திருந்தா இன்னும் புதுசா டெக்னாலஜியோட தாக்கி இருப்பானுக?

செய்தி:
இதுவரையில் நாம் இளைய சமுதாயத்தினரை பார்த்து, "இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என கூறுவதை, பழமொழியாக கொண்டிருந்தோம். இனி, "இன்றைய அமைச்சர்கள் நாளைய சிறைக் கைதிகள்' என்ற சூழ்நிலை உருவாகும் என, கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பேச்சு.
நம்ம கமென்ட்: 
ஒரு வேளை ரொம்ப அனுபவமா இருக்குமோ? இன்றைய சிறைக் கைதிகளும் நாளைய அமைச்சர்கள்ன்னு சொன்னாலும் பொருந்துமே!

செய்தி:
சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பியதால், அரசு மாற்றி அறிவித்தது' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நம்ம  கமென்ட்: 
அப்போ நம்ம ஐயா அந்த பல கோடி தமிழர்கள் லிஸ்ட்டில் இல்லையா? என்ன கொடுமை?

செய்தி:
"விஜயகாந்த் கோபப்படுகிறான் என்று கூறுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், எனக்கு கோபம் வரும். மற்றவர்கள் நல்லதைச் செய்திருந்தால், நான் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டேன்" விஜயகாந்த் பேச்சு.
நம்ம கமென்ட்: 
நீங்க மட்டும் கோவப்படல. உங்க கட்சியில இருக்குற மிச்சம் சொச்சம் தொண்டர்களும் ரொம்ப கோவமா இருக்கறாங்க போல?

செய்தி:
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதில் ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம கமென்ட்: 
வரலாறு ரொம்ப முக்கியம் அரசியல்வாதிகளே, இந்த மாதிரி அடிக்கடி மறந்துட்டு சண்டை போடாதிங்க!

செய்தி:
கர்நாடகாவில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். பீர் தயாரிப்பு மற்றும் சப்ளையில் எந்த பாதிப்பும் இல்லை' என, மாநில கலால் துறை அமைச்சர் கூறினார்.
நம்ம கமென்ட்: 
பீருல ஏதோ உள்நாட்டு குழப்பம் வந்திருக்கும் போல. கணக்கு பாக்ரவங்க பீர் அடிச்சு மப்பாகி கணக்கு வழக்கு குழம்பியிருக்கும்!
மேலும் வாசிக்க... "ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1