CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கிர்ர்ர்ரடிக்கும் "வ" குவார்ட்டர் கட்டிங்


          
          குவார்ட்டர்னு பேரு வச்சாலே ஒரு கிக்குதான் போலிருக்கு! வ என்று பெயர் மாற்றிவிட்டாலும், ரசிகனின் நாவில் நர்த்தனமாடுவது அந்த பழைய அறிவிப்புதான். அதாவது குவாட்டர் கட்டிங்! மிர்ச்சி சிவா நடித்திருக்கும் இந்த படத்தை தமிழ் படம் என்ற காவியத்தை(?) தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ்தான் தயாரித்திருக்கிறது.
           தமிழ் படத்தின் தாறு மாறான ஹிட் குவார்ட்டர் விலையையும் கன்னா பின்னாவென்று ஏற்றி விட்டிருப்பதுதான் ஆச்சர்யம். முந்தைய படத்தை போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான். விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு இருக்கிற வரவேற்பு அளவுக்கதிமாக இருப்பதால் துரை.தயாநிதியும் அளவு கடந்த சந்தோஷத்திலிருக்கிறார்.
             கிட்டதட்ட எட்டு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியிருக்கிறதாம் இந்த படம். எந்திரன் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் இந்த படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்ட க்ளவுட் நைன் நிறுவனத்திடம், படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்க என்று கேட்டுக் கொண்டார்களாம் இப்படி பெரும் விலை கொடுத்தவர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பட்டாசு திருநாளில் திரைக்கு வரப்போகிறது குவார்ட்டர் கட்டிங்.
மேலும் வாசிக்க... "கிர்ர்ர்ரடிக்கும் "வ" குவார்ட்டர் கட்டிங்"



சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.

  
   சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது. அவரது வேடத்தில் நடிக்கும் வித்யா பாலன், சில்க் போல இடுப்பை வளைத்து நெளித்து கிக்காக டான்ஸ் ஆட ஒரு மாதம் பயிற்சி எடுக்கிறார். தனது காந்தக் கண் கவர்ச்சியால் இளவட்டங்களை கவர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1980களில் அவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்ற அளவுக்கு பெரும்பாலான படங்களில் நடித்தார். கமல், ரஜினி உள்ளிட்ட எல்லா நடிகர்களுடனும் சில்க் ஸ்மிதா நடித்திருக்கிறார்.               
         ரசிகர்களை மகிழ்வித்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. பட அதிபர்கள், நடிகர்கள், கால்ஷீட் மேனேஜர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். திடீரென்று ஒருநாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் அவரது வாழ்க்கை கதையை படமாக்குகிறார் இந்தி படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இதற்கு டர்ட்டி பிக்சர் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் வித்யா பாலன் பொருத்தமாக இருப்பார் என்று முடிவானது. ஸ்மிதாவின் கண், உதடு, இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவு பேசப்பட்டதால் அவரைப்போலவே ஆடுவதற்காக ஒரு மாதம் தென்னிந்திய நடன இயக்குநரிடம் பயிற்சி பெறுகிறார் வித்யா. "இது கவர்ச்சி படம் என்ற நோக்கத்தில் அல்லாமல் ஒரு நடிகைக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த உறவை சித்தரிக்கும் படமாகவே இருக்கும். நடிப்பு திறமை வாய்ந்த வித்யாபாலன், சில்க் வேடம் ஏற்பது பொருத்தம். இயக்குநர் மிலன் லுத்ரியாவும், நானும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம். நடன அம்சமே படத்தில் பிரதானம். இதில் நடிக்கும் கதாநாயகனை முடிவு செய்தபிறகே வித்யாபாலன் நடன பயிற்சி மேற்கொள்வார்", என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.  
மேலும் வாசிக்க... "சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது."



சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?


            சூர்யா நடித்திருக்கும் ரத்த ச‌ரித்திரம் தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. தமிழில் ஒரேயொரு பாகம். ஏன் இந்த பாரபட்சம்?

            சூர்யா நடித்திருக்கும் சூ‌ி கதாபாத்திரம் முதல் பாகத்தில் மொத்தம் பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. இரண்டாம் பாகத்தில்தான் சூ‌ரியின் விஸ்வரூபம். சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?

         அதனால்தான் தமிழில் மட்டும் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே பாகமாக வெளியிடுகிறார்கள். அப்படியானால் ஒரே டிக்கெட்டில் இரண்டு படமா என்று சிவராத்தி‌ி ஞாபகத்தில் குதிக்காதீர்கள்.
         
           முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டையும் எடிட் செய்து ஒரே பாகமாக்கியிருக்கிறார்கள்.
தீபாவளிக்கு ரத்த ச‌ரித்திரம் திரைக்கு வருகிறது.
மேலும் வாசிக்க... "சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?"

எங்க போனாங்க பிச்சைக்காரங்க?

   
    காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு டில்லியில் இருந்து 60 ஆயிரம்பிச்சைக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

        டில்லியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 69.94 சதவீதம் ஆண்கள், 30.04 சதவீதம் பெண்களும் இதில் அடங்கும். கடந்த ஒருவாரத்துக்கு முன்பெல்லாம், கல்காஜி கோயிலில் ஒருவர் சாதாரணமாக 600 பிச்சைக்காரர்களை பார்க்க முடியும்.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்காக 71 நாடுகளில் இருந்து டில்லி வந்துள்ள வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில், நல்ல பெயர் எடுப்பதற்காக, பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர். தவிர, பாதை ஓரங்களில் பலூன், பேனா மற்றும் பத்திரிகை போன்ற சிறு பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போன்றவர்களும், ஒரே இரவில் துரத்தப்பட்டுள்ளனர்.
         அரசின் இந்த செயலுக்கு, மனித உரிமை மற்றும் அரசு சாராத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதுகுறித்து சமூக சேவகர் பிரகாஷ் சிங் என்பவர் கூறுகையில்,"" எங்களுக்கு வந்த தகவல்கள் படி, ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் பலர் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற மாநில நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடம், காமன்வெல்த் போட்டி முடிந்த பின் தான் இங்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர்,'' என்றார்.
மேலும் வாசிக்க... "எங்க போனாங்க பிச்சைக்காரங்க?"



பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்

              ஆளும் காங்கிரஸ் கட்சியே இப்படி சைபர்கிரைம் குற்றம் புரியலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.,வின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பா.ஜ., வின் மேலிடம். காங்கிரசுக்கும் ,பா.ஜ.,வுக்கும் இடையில் முக்கிய பிரச்னை மையமாக வைத்து பெரும் பிரச்னை இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தற்போது இரு கட்சிகள் இடையே இணயைதள விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

              அகிலஇந்திய காங்கிரஸ் கட்சிதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.காம் என அட்ரஸ் பாரில் அடித்து பிரவுஸ் செய்யும் போது இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறது. பா.ஜ.,வின் உண்மையான முகவரி பிஜேபி.ஒஆர்ஜி ஆகும். பாரதியஜனதா கட்சியின் இணையதளத்தை பார்க்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பிஜேபி.காம் என டைப் செய்வர். எனவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாறு டொமைன் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

         இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, கட்காரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது, பி.ஜே.பி., பெயரை தவறாக பயன்படுத்தி சைபர் குற்றம் புரிந்துள்ள காங்கிரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த நோட்டீசில் இது போன்ற விஷம செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் , தங்களிடம் கேட்டால் இந்த பெயரை நாங்களே தருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1