CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!

வணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,
நேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.


மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!"



மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு

வணக்கம்
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:


Live streaming video by Ustream
மேலும் வாசிக்க... "மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு"



மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!


வணக்கம் தமிழ் வலைப்பதிவர்களே,

நாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.

2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.

3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.

4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.

இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.


5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.

7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.

8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.


நன்றி நண்பர்களே.....


தொடர்புடைய பதிவுகள்:

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!"



மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வணக்கம் உலக வலைப்பதிவர் நண்பர்களே...

மதுரையில்  நடைபெற இருக்கும் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்களுக்கு பேருந்து வழித்தடம் பற்றிய தகவல்கள் வரும் பத்திகளில் பகிரப்படுகிறது.

பதிவர்கள்  இன்னமும் தங்கள் வருகையை உறுதி செய்யாமல் இருந்தால் விரைவில் இங்குள்ள இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

பதிவர்  சந்திப்பு நடைபெறும் கீதா நடனகோபால நாயகி மந்திர் அரங்கத்தின் பேருந்து நிறுத்தம் காமராஜர் சாலை தியாகராஜர் கல்லூரி முன்புறம் உள்ளது.
அரங்கத்திற்கு வரும் வழி மற்றும் பேருந்து நிறுத்தம்


பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99. 

இரயில் மூலம் வருபவர்களுக்கு:
மதுரை இரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக வெளியேறி வலது பக்கம் ஐந்து நிமிட நடக்கும் தூரத்தில்  பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. 
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தட பேருந்தில் வர வேண்டும். 

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: C3, 16w
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

 விரகனூர் சுற்றுச் சாலையில்(ring road) இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99.
விரகனூர்  சுற்றுச்சாலையிலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி
எந்த பகுதியில் இருந்து அரங்கம் இருக்கும் தெப்பக்குளத்திற்கு வந்தாலும் பேருந்து நிறுத்தம் தியாராஜர் கல்லூரி முன்பாக மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 ****************************************
பதிவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
பகவான்ஜி: 8903694875
மனசாலி: 9150023966

பெண்  பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
திண்டுக்கல் தனபாலன்: 9043930051
பால கணேஷ்: 9003036166


தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!"



நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!


வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே,
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...

திருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில் பகிர்ந்திருந்தோம்.
இந்த  பதிவில் முழுமையான நிகழ்ச்சிநிரல் பகிரப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க... "நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1