CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


ஊரும் ஏசியது... வீடும் ஏசியது...
என்னை, குடிகாரன் என்று..
குடித்துவிட்டு சாக்கடையோரம்
வீழ்ந்திருப்பேன்..!

எடுத்த வாந்தி எத்தனையோ?
தொலைந்த பணம் கணக்கில் இல்லை
சென்ற செல்போன்கள் கிடைக்கவில்லை
எடுத்த மகான்கள்
எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..!

பொண்டாட்டி கம்மல்
இப்போ மார்வாடிக் கடையில்
போட்ட தாலியும்
சேர்த்தே அவனிடம்
வீட்டுக்கு நிதானமா
போயி பத்துவருஷமாச்சு...!

தினம் தினம் குடிச்சே
வீட்டுப் படியில பாதம் வைப்பேன்...
துணைக்கு வருவான் இன்னொரு குடிகாரன்....
கண்ணில் படும் காரிகையிடம்
உதிர்க்கும் உளரல் வார்த்தை
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்..!

எனக்குள் ஒரு நாள் உதயம்...
திடீர்ன்னு எண்ணிப்பார்த்தேன்
கூட வந்த குடிகாரன்
கடைசி வரை வருவானா..?

குடியை விட்டேன்,
வீட்டிலும் மன்னிப்பு கேட்டேன்...!

சிலநாள் கழித்தும் என்னை ஊரே ஏசியது.....
குடிகாரன் திரும்ப ஆரம்பிச்சுட்டானே என்று...!

 நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!

இன்றைய பொன்மொழி:
நம்பிக்கையை விடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு! 

இன்றைய விடுகதை:
பதைக்கிறாள்; குதிக்கிறாள்;
பக்குவம் ஆகிறாள்; பந்திக்கு போகிறாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முல்லைப்பெரியாறும், தமிழக அரசியல்கட்சிகளும் இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: அம்மிக்குழவி.




29 கருத்துரைகள்:

ஆமினா said... Best Blogger Tips

குடிகாரன் என்ற பெயர் இறந்த பினும் மாறாது.......

அருமையா இருக்கு

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - நல்ல சிந்தனை - குடி ஒழியாது - நாம் தான் ஒழிவோம் - என்ன செய்வது ...... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சம்பத்குமார் said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே..

குடிகாரர்கள் திருந்த நினைத்தாலும் இந்த சமூகம் திருந்தவிடாது போல..

அருமை வாழ்த்துக்கள்

பால கணேஷ் said... Best Blogger Tips

நண்பா... ஒரு பள்ளிக்கூட வாத்தியார் ஷுகர் குறைவினால் மயக்கமாகி விழுந்துவிட, அவர் விழுந்த இடம் டாஸ்மாக்கின் அருகி்ல் என்பதால் குடிகாரன் என நினைத்து எவரும் கண்டு கொள்ளாமல் செல்ல, அவரிடம் படித்த மாணவர் ஒருவர் இவரைக் கண்டு பதறி, உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் என் நண்பர் கூறியது. நல்ல சிந்தனை விதையை விதைத்த உங்கள் கவிதை இதை நினைவுபடுத்தியது. பிரமாதம்!

Unknown said... Best Blogger Tips

உண்மைதான்..!குடிப்பவர்களால் ரோட்டில் மயங்கிகிடக்கும் ஒருவரை கூட
குடிகாரன் என நினைத்து யாரும் உதவுவதில்லை.

Admin said... Best Blogger Tips

குடியைப் பற்றி கவிதை..சிறப்பு

ராஜி said... Best Blogger Tips

நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!
>>
புரியாதவங்களுக்கு புரிய வச்சு லாபமில்லை.

Unknown said... Best Blogger Tips

சபாஷ்! நச் கவிதை!

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

ஆமா குடிகாரன் பேச்சை யாருமே நம்ப மாட்டாங்கதான் அவன் உண்மையே சொன்னாலும்.

கும்மாச்சி said... Best Blogger Tips

பலே அருமையான கவிதை.

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Nice....
:)
:)
:)

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம்,பிரகாஷ்!அருமையான விழிப்புணர்வுக் கவிதை!வாழ்த்துக்கள்.(சி.பி.கலாய்ச்சிருக்காரு.ஒரு கை பாக்கவேணாம்?)

rajamelaiyur said... Best Blogger Tips

/நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!


//

நல்ல திருப்பம்

SURYAJEEVA said... Best Blogger Tips

குடிக்கும் பதிவர்கள் கவனத்தில் கொள்ளவும்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!//

அடடடடா அருமையா இருக்கு, அவரை உடனே ஆஸ்பிட்டல் கொண்டு போங்கய்யா...!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்...!!!

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

//நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!//

நல்ல பெயர் எடுப்பது மிக கஷ்டம்

Anonymous said... Best Blogger Tips

காலத்திற்கேற்ற கவிதை.. ஒவ்வொருவரியும் அருமை........

உங்க கருத்த சொல்லுங்க

காதல் - காதல் - காதல்

சசிகுமார் said... Best Blogger Tips

என்ன இருந்தாலும் அனுபவத்தை இவ்ளோ அழகா எழுதி இருக்கியே மச்சி நீ கிரேட் டா....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அதனாலேதான் சொல்றேன்..


சூதானமா நடந்துக்கங்க தம்பி...

Jayachandran said... Best Blogger Tips

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மச்சி எப்படி இப்படியெல்லாம்?

அனுஷ்யா said... Best Blogger Tips

சில நாட்கள் மது அடிமைகள் மறுவாழ்வு குழுவில் பணியாற்றி இருக்கிறேன்..நிறைய பேர் திருந்த முற்பட்டு வாழ தொடங்கும் போது சமூகம் அவர்களை இப்படித்தான் மீண்டும் குடிகாரர்களாக மாற்றுகிறது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்..அருமையான பதிவு தோழரே...வாழ்த்துக்கள்...
இந்த பதிவு குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல..திருந்தும் கொஞ்ச பேரை சமுதாயம் ஏற்க வேண்டும் என்பதற்காக..
..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....அவள் அதுவாம்...!...

M.R said... Best Blogger Tips

அருமை ,இறுதியில் நச் என்று இருந்தது நண்பரே

கோகுல் said... Best Blogger Tips

சூப்பர்.,
அந்த அனுபவம் நிறைய இருக்கு,இங்கே பாண்டிச்சேரியில நிறைய பேரு இப்படித்தான் விழுந்து கிடைப்பாங்க,இதனால யாரவது முடியாம,அடி பட்டு விழுந்து கிடந்தாங்கன்னா கூட உதவி கிடைக்காது.வருத்தமான விஷயம்.

ஹேமா said... Best Blogger Tips

நல்லதொரு கவிதை.கெட்டவன் திருந்தினாலும் சமூகம் எப்பவும் ஒரேமனநிலையில்தான் பார்க்கிறது.குடிகாரனுக்கும் இந்தக் கதிதான் !

Unknown said... Best Blogger Tips

அருமை யான கவிதை
குடிகாரனின் நிலையைத் தெளிவாக்கியுள்ளீர்
போற்றத் தக்க முயற்சி!

புலவர் சா இராமாநுசம்

aalunga said... Best Blogger Tips

அருமையான கவிதை...

ஒருவனைப் பற்றி மக்களுக்குப் படிந்து விட்ட எண்ணங்களை மாற்றுவது மிக கடினம்.

aavee said... Best Blogger Tips

குடிகாரன் மட்டுமில்ல பாஸ்.. இப்பல்லாம் யார் விழுந்தாலும் கண்டுக்கிறதில்லை மக்கள்..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1