CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



"மதியோடை" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
1 - மதியோடை - பெயர் காரணம் கூறுக.
    பெரிதாக ஒரு காரணமும் இல்லிங்க மகேஸ்வரி (அம்மா), தில்லையம்பலம் (அப்பா) என்ற என் பெற்றோரின் ஆரம்ப எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் பெயர் அவ்வளவும் தான்.
2 - நீங்கள் பதிவு எழுதும் நேரம் குறைந்து விட்டதே. என்ன காரணம் சகோ
         என் உடல் நிலை தான் முக்கிய காரணம். மற்றும்படி இப்போதும் 27 பதிவுகள் என்னிடம் சேமிப்பில் இருக்கிறது ஆனால் அவசியமானதை மட்டுமே ஒரு ஒழுங்கில் போடுகிறேன். அதிகாலையே எங்கள் இடத்தில் இணைய வேகம் மிகவும் வேகம் என்பதால் அப்போதே வாசிக்கிறேன்.
    நான்கு மணித்தியாலம் மட்டுமே ஓய்வு கேட்கும் என் கண்களுக்கு நன்றி.

3 - கிரிக்கெட்டில் நீங்கள் கைதேர்ந்த வீரராமே! இலங்கை அணியில் இடம்பெற முயற்சிக்கலாமே?
    அந்தளவுக்கு எனக்கு திறமையில்லிங்க அனால் முயற்சித்திருக்கலாம் அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே ?

4- முதல் எதிர் பின்னூட்டம் எந்த பதிவுக்கு வந்தது? அப்போது உங்கள் மனநிலை என்ன? அந்த பின்னூட்டத்திற்கு உங்கள் பதில் என்ன?
         அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற எனது 43 வது பதிவில் தான் முதல் எதிர் பின் ஊட்டம் வந்தது. அதை தந்தவர் இப்போது எனது ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல நல்ல வாசகரும் கூட. கெட்டதை மறப்போம் நல்லதை மட்டும் நினைப்போம்.

5 - இலங்கை உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற போது உங்கள் நாட்டினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? 

  நான் வசிக்கும் நாட்டில் இரண்டு அணிக்கும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கையணியின் வெற்றி பரிசு சம்பந்தமான செய்தியால் பலர் அணி ஆதரவை கைவிட்டிருந்தார்கள்.

6 - சோளம் பொறித்தல், தேயிலை இல்லா டீ போடுதல் போன்ற ஆராய்ச்சி பதிவுகள் உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுள்ளிர்களே! அதை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பலாமே?

      ஹ.. ஹ…. என்ன நக்கலா. அவை எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. ஒரு மனிதனுக்கு தேவைகள் தான் கண்டுபிடிப்புகளை தோற்றுவிக்கும் என்பதற்கு உதாரணமாகும். பொருள் தட்டுப்பாடு, பண நெருக்கடி என பலதையும் பழகிக் கொண்ட வன்னி மக்களால் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

7 - உங்களை பற்றி ஒரே வரியில் சொல்ல சொன்னால் எப்படி சொல்வீர்கள்?

         “நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை“

8 - முதல் பின்னூட்டமாக "சுடு சோறு எனக்குதான்" அப்படின்னு போடுறிங்களே! எப்படி இந்த ஐடியா வந்தது?

     வன்னி போன்ற இடங்களில் இப்போதும் எம் பழங்கால தமிழ் அப்பழுக்கில்லாமல் உயிர்வாழ்கிறது அவற்றை வெளிக் கொணரணும் என்ற ஆசையில் தான் செய்கிறேன் உதாரணமான மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) என்ற வசனமாகும். முகம் என்பதை விட மூஞ்சி என்பது அழகானதாம்.

9 -உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான தருணங்களில் உங்கள் உதவிக்கு வந்தவர் யார்? அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.                     

  ஒருவரல்ல இருவர் முதலாமவர் என்னை தனது முதல் பிள்ளையாக கருதி தூக்கி வளர்த்த அக்கா அவர் ஒரு விஞ்ஞான அசிரியராவார் நான் தப்பச் செய்தால் தன்னை தண்டித்த என்னை திருத்தும் ஒருவர். அடுத்தவர் பெரும்பாலன பதிவர்களின் வாசகரான என் நெருங்கிய நண்பர் ஜீவன் தான் உதவுவார். என் பதிவகளில் அடிக்கடி தலைகாட்டுவார். என்னை விட அதிக வயது மூத்தவரானாலும் எம் நட்பை விபரிக்க வார்த்தைகள் இல்லை

10 - நீங்கள் எப்படி பதிவுலகம் வந்திர்கள்? பதிவெழுத வந்ததன் நோக்கம் ?

        நான் முகாமில் இருந்த காலத்தில் களவாகப் பார்க்கும் தினக்குரல் பத்திரிகையில் வரும் இணையத்தில் நம்மவர் பகுதி தான் வரத் தூண்டியது அதில் வந்தும் விட்டேன். ஆனால் எழுத ஆரம்பிக்கும் போதே நினைத்தவை என்ன நடந்தாலென்ன என்ன எதிர்ப்ப வந்தாலென்ன போருக்கும் போதைப் பொருளுக்கும் எதிராகவே எழுதணும் என்பது தான். (சாராயத் தயாரிப்பு பதிவிலும் அதன் விளைவை சொல்லியிருக்கிறேன்)

11 - நல்ல சமூக விழிப்புணர்ச்சி பதிவுகளை வழங்கும் நீங்கள் 18+ பதிவகளையும் எழுதவதன் காரணம் ?
    ஹ… ஹ… யார் சொன்னது அது 18+ என்று அதில் ஆபாசமோ அருவருப்பன வசனமோ இருக்காது ஏதாவது அறிவியல் அல்லது சமூக விழிப்புணர்வே இருக்கும். அதன் அர்த்தம் 18+ ற்க உட்பட்டவருக்கு தேவைப்படாது என்பதாகும்.

12 - சிங்கள ராணுவ வீரர்கள், புலி வீரர்கள் இருவரிலும் ராணுவ ரீதியாக பார்க்கையில் உங்கள் கண்ணில் எப்படி இருந்தார்கள் ?
            இருவரதும் உயிர்கள் தான் கண் முன் தெரியும். இருவருக்கு ரத்தம் போனாலும் எம் கைகள் நீள யாரும் தடை போட்டதில்லை.

13 - இந்த பரவகாலத்தின் ஈழத் தமிழர், புலம் பெயர் தமிழர் ஒப்பீட்டு பிரச்சனைக்கு நீங்கள் தான் ஆரம்பகர்த்தாவாமே உண்மையா ? காரணம் என்ன?
உண்மை தான். ஆனால் புலம்பெயர்ந்தவர் என வார்த்தைச் சுட்டலில் அடக்கப்பட்டாலும் எல்லோரும் அப்படியல்ல எம்மைபுரிந்த பலர் இருக்கிறார்கள். இப்போதும் வன்னியின் வவுனிக்குளம் பகுதிக்கு கனடாவில் வாழும் சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தம் சொந்தப் பணத்தில் பல குடும்பத்திற்கு உதவுகிறார்கள். காரணங்கள் பல முக்கியமாக தவறான புரிந்தணர்வுகளே , மேலும் சிலரிடம் அவர்களது குடியுரிமை பெறுவதற்கான போராட்டம் , போர் வெறி கொண்டிருக்கும் மக்களை நாம் திசை திருப்பி விடுவோமா என்ற பயம் என சின்ன சின்ன காரணங்கள் நீண்டு செல்கிறது…

இதுவரை  எனது கேள்விகள் இடம்பெற்றது. இனி வாசகர்களின் கேள்விகள்:
சித்தார மாகேஷ்
(சுவர் தேடும் சித்திரங்கள் – http://siththara-mahesh.blogspot.com/ )
-அண்ணா தங்கள் படைப்புக்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது எப்படி இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் உங்களால் நேர முகாமைத்தவம் பண்ண முடிகிறது ?
பெரிதாக ஒன்றுமில்லை தங்கா மனதையும் உடலையும் எந்த வலியையும் தாங்குமளவுக்கு வளர்த்துக் கொண்டால் போதும்.. செந்தாமரையில் ஆசை வைத்தால் சேற்றிலிருந்தாலென்ன ஆற்றில் இருந்தாலென்ன பறித்தே தீரணும் என்று நினை எல்லாம் கூடிவரும்..
- ஏன் நீங்கள் நகைச்சுவை படைப்புகளையும் கொஞ்சம் முயற்சிக்கலாமே? தாங்கள் சிறந்த நகைச்சுவையாளன் என்பது எமக்கு மட்டும் தெரிந்தால் போதுமா உலகுக்கும் தெரிய வேண்டாமா ?
உங்கள் ஆதாங்கம் புரிகிறது உங்க முகத்தின் முன்னே நடந்து கொள்வது வேறு…. எழுத வரும் போது அடிக்கடி சிரியசான பதிவு போடும் இந்த நகைச்சுவையாளனை எந்த கண் கொண்டு பார்ப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் தான் காரணம். பதிவுகளின் முக்கியத்துடன் ஒப்பிடுகையில் என்னிடம் உள்ள நகைச் சுவை பதிவை விட சமூக பதிவே காத்திரம் கூடியதாக இருக்கிறது.

- உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறதே என்ன காரணம் ?
என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்

மதுரன்
(கூதற்காற்று - http://koothatkatru.blogspot.com/ )
- வன்னி பிரதேசம் போர் மேகங்களால் சூழப்பட்டு தொழில்நுட்பத்தில் மிகவும்பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. ஆனால் நீங்கள் எம்போன்ற பல பதிவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல உதவிகளை வழங்கி வருகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?
இதிலென்ன இருக்கிறது சகோதரம் கொஞ்ச ஆங்கில அறிவும் தேடலும் தான் காரணம் அதை விட முக்கியம் உதவி செய்வதில் வரும் ஒரு வித ஆத்ம திருப்தியும் தான்… என்னை விட அதிக தொழில் நட்பம் தெரிந்த வன்னி பதிவர் ஒருவர் இருக்கிறார் தெரியும் தானே..

- உங்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?
உண்மையாவே அது எப்படி வந்ததென்று எனக்கு தெரியாது சகோதரம்…. சிறுவயதிலேயே எதையும் கிண்டிக் கிளறுவேன் அப்படி செய்கையில் ஏதாவது கண்டு பிடிப்பேன் அதை நானே பிரயோகித்தும் பார்ப்பேன்… அவ்வளவும் தான்

தம்பி கூர்மதியன் kooranpathivu.blogspot.com
- தங்களின் விவர பக்கத்தில் தங்களது ஆரவங்கள் என்று பார்க்கையில் //போர் ஆதரவாளருக்கு எதிரான செயற்பாடு// என்று சொல்லியிருந்தீர்கள் அப்படியானால் தனியொரு ஈழம் அமைவதில் தங்களுக்கு விருப்பமில்லையா??? இல்லை ஆயிரம் ஆயிரம் உயிரை இழக்க செய்து தனியொரு ஈழத்தை பெற்று அந்த பிணங்கள் மீது புதிய ஈழத்தின் வாழ்க்கை தொடங்குவதில் உங்களுக்கு விருப்பமில்லையா?
முதலாவதை எல்லோருமே விரும்புகிறோம் ஆனால் இரண்டாவது மட்டும் தான் தீர்வென்பதை தான் நான் வெறுக்கிறேன்… யாரும் வெற்றியை பெறலாம் ஆனால் அது தக்கவைத்திருக்கும் போதே சாதிப்பதை சாதிக்கணும்.. சரியான பருவகாலத்தில் சரியான முடிவெடுக்கணும்..

- அந்நிய குண்டுகள் உங்கள் உடம்பை தைத்துண்டா???
குண்டுகளுக்கு தெரிவதில்லை நாம் ஒருவனை கொல்லப் போகிறோம் என்று சுட்டவன் மட்டும் தான் அறிவான்….. அதற்கு நல்லவன் கெட்டவன் என்ன வித்தியாசம் தெரியாது… சகோதரம்..

- இந்திய நாட்டில் தாங்கள் மறக்க முடியாத பிரபலமோ சாதாரண மனிதரோ யார்.??? ஏன்???
மேன்மை தகு ஜனாதிபதி அப்துல்கலாம் தான்…. அவரை எனக்கு மட்டுமல்ல உலகுக்கே பிடிக்கும்…. வடநாடே ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க துடிக்கையில் மனிதாபிமானத்தோடு கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு விடுவிக்கச் சொன்னாரே அந்த தருணம் யாராலும் மறக்க முடியாது…

லட்சுமி www.echumi.blogspot.com
- நண்பா, சிறப்பு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளந்திருக்கீங்க. திறமை இருப்பதால தானே வாய்ப்பு தேடி வருது. இவ்வளவு வளர்ந்ததற்கு கடுமையா உழைச்சிருப்பீங்களே? அதை எல்லாம் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
என் உழைப்பு என்பதை விட என்னை வளர்த்தவரின் வளர்ப்புத் தான் காரணம் அம்மா… இந்த பதிவுலகத்தை என் குடும்பம் போல் தான் கருதுகிறேன். எல்லோருக்கும் ஒரு தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்… யாரும் என்னை எதிரியாக கருதினாலும் அவர்களை நான் உறவினனாகவே பார்க்கிறேன்…. இவை தானம்மா எனது வெற்றி ரகசியம் வேறொன்றுமில்லை..

கோமு gomathykomu@gmail.com
- ஹாய் ம. தி. சுதா. முதலில் வாழ்த்துக்கள். இந்த சந்தோஷத்தை எப்படி உணர்கிறீர்கள்.?
மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என் உறவுகள் மனதுக்குள் என்னிடம் கேட்க இருந்ததை வெளிப்படையாக கேட்பதும் என்னால் முடிந்ததற்கு பதில் அளிப்பதையும் இட்டு இதை தந்த பிரகாசுக்கு மிக்க நன்றி சொல்லணும்.

- வாரம் மூணு பதிவாவது எழுதுவீங்களா? டைம் கிடைக்குதா?
ஆமாங்க பதிவு எழுத நேரம் கிடைக்கிறது ஆனால் பிரசுரிக்கத் தான் நேரமில்லை என் பதிவுக்கு கருத்திடும் நபர்களுக்காவது கருத்திடணும் அது முடிந்த பின் தான் அடுத்த பதிவு போடுவேன்.

- வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
பதிவர், பதிவு இரண்டும் வேறு வேறு அவரை வாசிப்பதானால் நெருங்கிப் பழகுங்கள். பதிவை வாசிப்பதானால் நல்ல ஆணித்தரமான கருத்தை வழங்குங்கள். உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..

நிரூபன்.http://www.thamilnattu.com/
- இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். இதே இலக்கிய மொழி நடையினையோ, அல்லது எமது மரபுகளையோ தொடர்ந்தும் தக்க வைக்காது தனி மனிதனது எண்ணங்களினூடாகவும், தனி மனிதனின் சுதந்திர சுயாதீன ஊடகத்தினூடாகவும் வலைப் பதிவுகளை எழுதி வரும் நாங்கள் ஏன் எங்களின் கடந்த கால விடயங்களைப் பதிவுகளாக்கப் பின் நிற்கிறோம்?
இவ் வினாவின் உப விடயங்களாக, அரசியலை விடுத்து, எமது அவலங்களை உற்று நோக்கினால், நடு நிலமையுடன் ஒரு தனி மனிதனது எண்ணங்களூடாக வெளி வரக் கூடிய வன்னியின் வாழ்வியல் சார்ந்த படைப்புக்கள் (இலங்கையில் 2008ம் ஆண்டுகளிற்குப் பின்னரான காலப் பகுதியினைக் குறிப்பிடுகிறேன்) இல்லை என்றே கூறலாம். இந்த எழுதப்படாத அவலங்கள் யாவும், காலவோட்டத்தில் கரைந்து போய் விடுமா? இல்லை காத்திரமான முறையில் தொகுக்கப்படுமா? உங்களின் எண்ணவோட்டத்தில் வலைப் பதிவுகள் மூலமாக எவரையும் சாடாத/ சாராத, ஒரு போர்க்கால படைப்புக்களை தனியாகவோ, அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்தோ வழங்குவது சாத்தியமாகுமா?

அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?
ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்..

செங்கோவி: www.sengovi.blogspot.com
- ஈழத்தில் இன்னும் ஆயுதப் போராட்டதிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? அல்லது மீண்டும் தந்தை செல்வா வழியில் அஹிம்சைப் போராட்டத்திற்கு திரும்ப வேண்டிய நேரமா இது?
ஈழத்தில் இப்போ இந்த ரெண்டுக்கும் சாத்தியமில்லை காரணம் எந்த இளைஞனிடமும் சரியான தொழில் வாய்ப்பில்லை பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு சிறிய நாட்டிற்காவது போய் குடும்பத்தை கவனிக்க வேண்டுமென்பது பற்றித்தான் சிந்தனையெல்லாம் இருக்கிறது. மற்றும்படி எல்லாம் வாய்ப் பேச்சுத் தான் சகோதரம்..
- சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சகஜமான சூழ்நிலை அங்கு நிலவுகிறதா?
சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…

- பதிவுலகில் உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி
-ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று நம்புகிறீர்களா?
அவர் செய்தது தப்பு என என்னால் சுட்டிக்காட்ட முடியும் சகோதரம் ஆனால் அதை துரோகம் என வரையறுக்கலாமா தெரியல காரணம் அப்படி பார்த்தால் பல துரோகிகளை பட்டியல்ப் படுத்த வேண்டியிருக்குமே. 
- உங்களுக்கு பிடித்த பதிவு/பதிவர்? காரணம்?
மீனவர்களுக்காக எழுதப்பட்ட அத்தனை பதிவும் என்னை கவர்ந்தவையே.. பதிவுலகம் எவ்வளவு ஒற்றுமையானது என பலரை திரும்பிப் பார்க்க வைத்த தருணம் அது அதற்காக பதிவிட்டவர் ருவிட்டியவர் கருத்திட்டவர் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்..
- இலங்கையில் தற்போது சூழல் எப்படி இருக்கிறது?
போர் நடக்கவில்லை என்ற மனத் துணிவு பிறந்ததால் பல கட்டடங்கள் தலை நிமிர்த்துகிறது.. பெற்றொர் துணையில்லாமல் தனியாக பல்வேறு வயது மட்டத்தவரும் வெளிக்கிட்டுத் திரிகிறோம் (ஆனால் சோதனைகள் நிறுத்தப்படவில்லை) மிக முக்கியமாக அடுத்த நாள் காலை உயிரோடு எழலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையில் படுக்கப் பழகி விட்டோம்.

முத்து குமார், குவைத்
தோ்தல் முடிவுக்குப் பின் வைகோவின் நிலை என்ன?
அடுத்த தேர்தல் வரும் போது தான் தெரியும் சகோதரம்..

Chitra Solomon www.konjamvettipechu.blogspot.com
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
....உண்மை..... தன் மனதில் உள்ள உணர்வுகளை .....தனக்கு நியாயம் என்று படுவதை, துணிந்து எழுதும் சுதாவுக்கு வாழ்த்துக்கள்!
- எத்தனயோ சோதனைகளை, வேதனைகளை கடந்து வந்து கொண்டிருக்கும் இவர், எப்பொழுதும் positive ஆக சோர்ந்து போகாமல் எப்படி இருக்க முடிகிறது?
நாங்கள் வாழ்க்கையை உயிராக காதலிக்கிறோம் அக்கா… காதலி எது செய்தாலும் உண்மை காதலன் என்ன செய்வான்…. எல்லாம் பழகி விட்டது அக்கா..

சிவா
- என்போன்ற புதியவர்களுக்கு வலைப்பதிவு பற்றிய தொழில்நுட்பம் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகம்களை எப்படி சரியாக தீர்க்கமுடியும்?
தெரிந்த குறுக்க வழிகளை காட்டுவோம் சகோதரம் இல்லாவிடில் எமக்கு மூத்த சசி போன்ற தொழில் நுட்ப பதிவர்களிடம் பரிந்துரைப்போம்..
- புலம்பெயர் தேசத்தில் இப்போது அதிகமான புதியவர்கள் எழுதுகின்றோம் நம்பதிவுகளை எப்படி அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க முடியும்!?
எனக்குத் தெரிந்தவரை மற்றவருக்கு அறிமுகமாக ஒரே வழி கருத்திடலும் கருத்தின் கீழ் பதிவின் தொடுப்பிடலும் முக்கியமாக திரட்டிகளில் இணைப்பதுமே..

- நாகரிகம்மற்ற பின்னுட்டம் இடும் பதிவர்களை எவ்வாறு இனம் கானுவது?
கருத்துக்களில் மட்டுமே அடையாளம் காணலாம் சகோதரம் ஹ… ஹ.. இல்லாவிடில் அவர்கள் வீட்டு போனால் வாசலில் கோலத்திற்கு பதிலாக ஏதாவது எழுதி வைத்திருப்பார்கள்.. அவர்கள் கருத்துப் பெட்டியில் இடுவது அவர்களது வீட்டில் அழைக்கப்படும் செல்லப் பெயர்களைத் தானே… ஹி.. ஹி

மகாதேவன் V.K www.thagavalthulikal.blogspot.com
- நீங்கள் பதிவெழுதிய பிறகு ஏன் இந்தப்பதிவை எழுதினேன்/பதிவிட்டேன் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
ஆமாம்… அசினிடம் நான் உதவி கேட்டு எழுதிய பதிவை 9 இணையத்தளங்கள் அவருக்கெதிரான பரப்புரைக்கு அதை பயன்படுத்திய போது மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டேன்..
- "பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும்" இந்தப்பழக்கம் எப்படி வந்தது? எந்த வயதில் வந்தது?
பாண் சுற்றி வருவது என்று ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் சொன்னேனுங்க… எனக்கு 6-7 வயதிலேயே இப்பழக்கம் வந்தது.. நூல் நிலையங்கள் சென்று பழைய பத்திரிகைகளுக்கு ஒரு தொகை பணம் கொடுத்து வாங்குவேன்.. பலர் ஒரு பத்திரிகைக்கு போட்டியிட்டால் பத்திரிகை வந்து அடுத்த நாளே போய் கிழித்து சட்டை பையில் மறைத்து கொண்டு வந்துவிடுவேன்.
ஆனால் ஒன்று இப்போ என்னிடம் இருப்பது மிக கொஞ்சமேயாகும் மீண்டும் சேகரிக்கிறேன்..
- இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டா ? அப்படியானால் அங்கே நீங்கள் சந்திக்க விரும்புவது யாரை (அரசியல்வாதி, நடிகர்கள் அல்லது நண்பர்கள் உறவுகள்) ?
நிச்சயமாக மிகவும் விரும்புகிறேன் காரணத்தை என்றொ ஒரு நாள் அறிவீர்கள் சகோதரம்..

ஆச்சி www.aatchi.blogspot.com
- தமிழக தமிழ் பல ஸ்லாங்குகளில் பேசப்படுவது போல இலங்கை தமிழும் பல ஸ்லாங்குகளில் பேசப்படுகிறதா?
ஆமாம் இங்கு ஊருக்கு ஊர் ஒரே சொல்லை பலவிதமாக அழைப்போம் அதிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்..
- அரசியல்,கல்வி அல்லது ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடும்படியான பெண்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். எனக்கு குமாரதுங்கா பண்டாரநாயக்காவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
பலர் இருக்கிறார்கள் நிங்கள் குறிப்பிட்டவரின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட முதல் பெண் பிரதமர் என்ற பெரும் சாதனைக்குரியவர் தமிழிலும் பல பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியலிங்க..
- நீங்கள் மருத்துவரா? இருப்பின் உங்கள் மருத்துவம்& வாழ்க்கை பற்றி சொல்லவும்.
ஆமாம் ஒரு தனியார் மருத்தவராக கடமை புரிந்தேன் இறுதியாண்டை தொடர பொரளாதாரம் இடம் தராததால் அந்த கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு ஒரு அரசு சார்பற்ற நிறுவனமொன்னில் மனதுக்கு திருப்தியான பணியொன்றை தேர்ந்தெடுத்து பணி புரிகிறேன்.

நிலாமதி www.mathinilaa.blogspot.com
- ஒரு நாளில் கணனிக்கு முன் எவ்வளவு நேரம் செலவிட முடிகிறது ?
அதையேன் கேட்கிறீர்கள் அக்கா கழுதை தேய்ந்து கட்டெறும்பானாலும் பரவாயில்லை என் கதை சுதா தேய்ந்து சுருட்டை புழுவான மாதிரியாச்சு..
- சமுதாய விழிப்புணர்வு உள்ள நீங்கள் பல சவால்களை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை எப்படி எதிர் கொள்ள முடிகிறது. ?
சேவை செய்வதில் ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது அதற்கு என் உடல் நிலையும் முழு ஒத்துழைப்பு தருகிறது இயலாத சூழ்நிலைகள் வரும் போது மட்டும் கொஞ்சம் தளர்வு மற்றம்படி கடவுள் என்னை சோர விடுவதில்லை.

போளூர் தயாநிதி
விடுதலை போராட்டம் என்றால் உயிர் இழப்புகள் படுகொலைகள் எல்லாமிருக்க வேண்டுமென்பதில்லை ஆயின் நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்றார் மாவோ அதுபோல இழப்பை எண்ணி வருந்தாமல் விடுதலையை முன்னொடுக்க வேண்டுமேயன்றி (இருதிகட்டத்திலும் கரும்புலிகள் வேண்டுகோள்) அங்கு ஈழத்தில் மக்கள்(போராளிகளை சொல்லமாட்டேன் ) விடுதலைக்கு பாடுபடவில்லை என எண்ணவைத்து விட்டது இதுகுறித்தான உங்களின் பார்வை என்ன ?
இது மிகவும் பெறுமதியான கேள்வி சகோதரம்.. வெளிப்படையாக கேட்டதற்க மிக்க நன்றி ஒரு வெளி நாட்டு பதிவர் என்னை பகிரங்கமாகவே கேட்டார்.. ”நீயெல்லாம் தப்பி ஓடி வந்ததால் தானே உயிரோடிருக்கிறாய்” என்றார். அப்படியானால் கரிபால்டி 3 தரம் கோழையானாரா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஒரு போரின் வெற்றி தோல்வியை பல காரணிகள் தீர்மானிக்கும் கொரில்லா யுத்தம் வேறு மரபு வழி யுத்தம் வேறு.. மக்களுக்கள் மரபு வழி யுத்தம் நடக்கையில் எவனும் கதிகலங்கித் தான் போவான்… ஒரு குடும்பத்தில் 2 பிள்ளை செத்தால் மற்ற 2 பிள்ளையாவது எஞ்சணும் என்பதற்காக தப்பி ஒடவே நினைப்பான்… சுருக்கமாக சொன்னால் ஒரு பேருந்தில் தவறி விழுந்தவனை இழுத்துப் பிடித்தால் அவன் மேலே வருவதற்குள் தேந்துய்து செத்தவிடுவான்… விழுந்தவன் முக்கியம் என்றால் பேருந்தை நிப்பாட்டணும்.. பிரயாணம் மக்கியம் என்றால் விழுந்தவனை கை விடுவதே சிறந்தது..

நாஞ்சில் மனோ: www.nanjilmano.blogspot.com
- நான் ஆட்சிக்கு வந்தால் "மாற்றத்தை" ஏற்படுத்துவேன் என்று ஆட்சியை பிடிச்சாரே ஒபாமா, அப்பிடி ஏதாவது மாற்றம் தெரிகிறதா உங்கள் பார்வையில்....?
ஆமாம் சகோதரம் இருக்கிறது தானே ஒற்றை மனிதனுக்கு இந்தளவு லட்சங்களை அள்ளி இறைத்து வெற்று உடம்பை கடலில் போட்டது பெரிய மாற்றமில்லையா ஹி... ஹி...

- விலைவாசி இப்படி உயர்ந்து வருகிறதே அதன் அடிப்படை காரணம்....?
பொருட்களுக்கான உற்பத்தி குறைந்து தேவை அதிகரிக்கின்றமை பெரும் காரணமாகச் சொல்லப்பட்டாலும்.. ஆளும் வர்க்கத்தின் சுயநலச் சுரண்டலும் தான் காரணமாக இருக்கிறது..

- நம்ம ஊர் குப்பனும் சுப்பனும் இப்போது விழிப்படைந்து வருகிறார்களா....?
நிச்சயமாக எங்கோ ஓர் கிராமப் புறத்தில் இருக்கும் குப்பன் சுப்பன் விழிப்பாயிருக்கிறான். ஆனால் பட்டணத்திலிலுக்கும் மனிதன் தான் உறக்கத்தில் இருக்கிறான்..

டிஸ்கி: கடந்த வாரம் மதிசுதா என்னிடம் மொபைலில் பேசினார். நல்ல நண்பர் அவர். அவர் நமது தளத்திற்கு ஏற்கனவே அளித்த பேட்டி இது. மீள்பதிவாக இன்று....


19 கருத்துரைகள்:

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

nanri...thalaiva...

Unknown said... Best Blogger Tips

//அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே ?//


ஈழத்தில் இது போன்று ஏராளமான மதி சுதா-க்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை.
அதையும் தாண்டி சாதித்தமைக்கு பாராட்டுகள் சகோ.

Unknown said... Best Blogger Tips

மதிசுதா- மீதான மதிப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. மீள் பதிவிட்டதற்கு நன்றிகள் பிரகாஷ்.

ராஜி said... Best Blogger Tips

மதிசுதாவின் பதிவுகள் சிலவற்றை படித்திருக்கிறேன். அவர் மீது மதிப்பு உயர்ந்துள்ளாது. இனி தொடர்ந்து அவர் பதிவுகளை படிப்பேன்

Unknown said... Best Blogger Tips

நல்ல மனிதர் மதிசுதா!
அவர் பதிலில் ஒரு கண்ணியம் இருக்கிறது.

புலவர் சா இராமாநுசம்

Anonymous said... Best Blogger Tips

மீண்டும் ஒரு தடவை படித்தேன்... அநேக பதில்கள்/கருத்துக்கள் ஆழமாக தெரிகிறது..

ஆத்மா said... Best Blogger Tips

ஒரு சிறந்த பதிவரின் அறிமுகம் கிடைக்க வழிசமைத்தமைக்கு நன்றிகள்

Unknown said... Best Blogger Tips

super பேட்டி


இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

மீள் பதிவில் ம. தி. சுதாவின் பதில்கள் அனைத்தும் உறுதிபட, வெளிப்படையாக இருந்தன.

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே,
அருமையான ஒரு வலைப்பதிவரின் நேர்காணல் ..

அண்ணன் ம.தி.சுதா அவர்களிடம் கேட்கப்பட்ட
கேள்விகளும் அதற்கு அவர் பதில் சொன்ன விதமும்
அவரின் குனபாடுகளை தெள்ளென விளக்குகிறது..

கூடல் பாலா said... Best Blogger Tips

\\\நிச்சயமாக எங்கோ ஓர் கிராமப் புறத்தில் இருக்கும் குப்பன் சுப்பன் விழிப்பாயிருக்கிறான். ஆனால் பட்டணத்திலிலுக்கும் மனிதன் தான் உறக்கத்தில் இருக்கிறான்..\\\ உண்மை!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நல்ல மனிதர், நண்பர்...!

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!முன்பு நான் இந்தப் பேட்டியைப் பார்த்திருக்கவில்லை!மீள் பதிவிட்டதற்கு நன்றி!கள்ளங்கபடமின்றி பதில் சொன்ன ம.தி.சுதாவுக்கும் வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said... Best Blogger Tips

இப்படி அன்புமிகு உறவுகளை பெற்றுத் தந்த இந்தப் பதிவுலகத்திற்கு என்றும் நான் கடமைப்பட்டவன்...

இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தவருக்கும்... கருத்தும், கேள்வியும் கேட்ட அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்...

Manimaran said... Best Blogger Tips

அவர் அளித்த பதில்களை விட கேள்விகள் எல்லாம் நச்...பிரகாஷ். மீள் பதிவிற்கு நன்றி.

Rathnavel Natarajan said... Best Blogger Tips

வாழ்த்துகள் பிரகாஷ்.

தனிமரம் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
காட்டான் said... Best Blogger Tips

தம்பியின் பேட்டியை மீண்டும் பகிர்ந்ததற்கு நன்றி பிரகாஸ்..!!

S Murugan said... Best Blogger Tips

super site ...this is first time i visit. I will visit regularly.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1