CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts


அடல்ட் கார்னர் ஆம்பிளைங்களுக்கு மட்டுமா? கேபிள் சங்கர் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! (cable SANKAR interview)

வணக்கம் நண்பர்களே,
நமது தமிழ்வாசியில் பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி வரப் போகிறது என பதிவிட்டு இருந்தோம். பதிவர்கள், வாசகர்கள் என நீங்களே கேள்விகளை கேட்குமாறு அறிவித்து இருந்தோம். அதன்படியே சிலர் கேள்விகள் அனுப்பி இருந்தார்கள். அவர்களின் கேள்விகளுடன் நானும் சில கேள்விகளை கேபிள் முன் வைத்துள்ளேன். அவரும் பதிலளித்து உள்ளார். என்ன கேள்விகள், பதிலகள் என பார்ப்போமா?


1. பதிவுலகில் பல லட்சங்களை தாண்டி உங்கள் வலைப்பூ ஹிட்ஸ் வாங்குகிறதே, அதன் ரகசியம் என்ன கேபிள்ஜி? 
தொடர்ந்து எழுதுவதும் மக்களுக்கு பிடித்த மாதிரி எழுதுவதுமாய் இருக்கலாம்.நீங்கள் இந்த பதிலை படித்துக் கொண்டிருக்கும் போது தமிழில் எழுதி 60 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியிருப்பேன். வாசகர்களுக்கு என் நன்றிகளை இதன் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 
 *******************************
2. தாங்கள் ஒரு படம் டைரக்ட் செய்தால் காமெடி, திரில்லர், ஆக்சன், சென்டிமென்ட் என எந்த சப்ஜெக்ட்டில் டைரக்ட் செய்வீர்கள்? 
டைரக்ட் செய்தால் என்ன செய்யப் போகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். எனக்கு எழுதுவதற்கு தொடர்ந்து காமெடி படங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஆக்‌ஷன் திரில்லர் வகை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் எல்லா ஜெனரிலும் சில கதைகள் யோசித்திருக்கிறேன். பட் இப்போது ஓகே ஆகியிருக்கும் படம் லவ் கம் த்ரில்லர் வகை.. 
 *******************************
3. தற்போதுள்ள பதிவர்களில் யாராவது சினிமாவில் கதை எழுதுமளவுக்கு திறமையுடன் இருக்கிறார்களா? குறிப்பிட்டு சொல்ல முடியுமா?
சினிமாவிற்கு கதை என்று தனியே இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. எந்தக் கதையெல்லாம் சினிமாவாக்க முடியும் என்று தெரிந்து, அறிந்து கொள்ளுவதுதான் திற்மை என்பது என் எண்ணம். நிறைய பதிவர்களுக்கு சினிமாவின் மீது ஆர்வமிருக்கிறது. ஆனால் அதை அடைய பெரும் முயற்சியும், காத்திருப்பும் தேவை. ஒரு ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை இருக்கிறது. என் கதைகளை அவர்களிடம் விவாதித்து இருக்கிறேன். 
 *******************************
4. சிலரின் ட்விட்டர் ஸ்டேடஸ் தற்போது சைபர் கிரைம் வரை சென்றுள்ளதே, இதனால் டிவிட்டர், முகநூல், வலைப்பூ எழுத்தாளர்களின் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா?
நிச்சயம் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெருமபாலான நேரங்களில் விவாதத்தின் போக்கை அடக்க, வசை மொழி உபயோகிப்பது கண்டனத்துக்குரியது. பொது வெளியில் எல்லோரும் தங்கள் பொறுப்பை உண்ர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த கைது சொல்லியிருக்கிறது. ஆனால் இது தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது . இதற்கான சட்டத்தை இணைய வெளியில் உள்ள அனைவரும் தொடர்ந்து எழுதி மாற்றப் பட வேண்டிய அவசியத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும். 
 *******************************
5. பதிவுலகில் அவ்வப்போது சில சர்ச்சை பதிவுகளால் கடும் வாக்குவாதம், பதிவுச் சண்டை ஏற்படுகிறதே, இத்தகைய போக்கு பற்றி தங்கள் கருத்து என்ன? 
எல்லாமே ஒரு கவனிப்புக்குத்தான் என்று தோன்றுகிறது. சாதாரண கருத்து மோதல்களாக ஆரம்பித்து, பின்னர் தனிநபர் தாக்குதலாய் மாறி, பின்னர் ஜாதி, மத அரசியல் செய்யப்பட்டு அடித்துக் கொள்ளும்காட்சிகள் தற்போது நிறைய நடக்கிறது. எல்லாவற்றிக்கும் காரணம் இணையத்தில் நான் சூப்பர் ஸ்டார் என்கிற ஈகோ உட்கார்ந்து கொண்டு இவன் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது போன்ற எண்ணமும் அதற்கு காரணம். கொஞ்சம் உக்காந்து யோசித்தால் இணையத்தை விட்டு வெளியே வந்தால் நம்மை யாருக்கும் தெரியாது என்று புரிந்து கொண்டால் நிச்சயம் சண்டை சச்சரவுகள் வராது, செய்யவும் மாட்டோம். யாராவது இணையத்தில் பிரபலமாய் இருப்பதால் பத்து காசு பிரயோஜன கிடையாது என்று சொன்னால் அதை மட்டும் நம்பாதீர்கள். நிச்சயம் பிரயோஜனம் உண்டு அந்த புகழை எப்படி பயன் படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான். 
 *******************************
6. வலைப்பூ பதிவர் சந்திப்பு சில ஊர்களில் நடந்துள்ளதே, இதனால் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடந்துள்ளனவா? பதிவர் சந்திப்புகள் அவசியமா? இது பற்றிய தங்களின் கருத்து என்ன? 
நல்ல விஷயம் தான். நிச்சயம் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புகள் ஆக்கபூர்வமான செயல்களாய் மாறும். மாறிக் கொண்டுமிருக்கிறது. நம் பதிவர்களுக்காக ஒரு சங்கம் அமைத்திருந்தால் இன்று கோர்ட் கேஸ் என்று வரும் போது ஆளாளுக்கு தனித்தனியாய் பதிவோ, ட்வீட்டோ, பேஸ்புக்கிலோ எழுதிக் கொண்டிருக்காமல் நம் எண்ணத்தை ஒருமித்து காட்ட எதிர்த்திருக்கலாம். 
 *******************************
7. தாங்கள் எழுதிய புத்தகங்களில் மிகவும் சிரத்தையுடன் எழுதிய புத்தகம் எது? எதனால்? 
என்னைப் பொறுத்த வரை எல்லா புத்தகங்களுமுமே சிரத்தையுடன் எழுதியதுதான். சிரத்தையில்லாமல் எழுதினால் இவ்வளவு வரவேற்பு அத்துனை புத்தகங்களுக்கும் கிடைத்திருக்காது. வாசகர்கள் தரமில்லாத ஒன்றை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 
 *******************************
இதுவரை எனது கேள்விகளை கேட்டேன். அடுத்து நமது பதிவர்கள் தங்களிடம் கேட்ட கேள்விகள்.

மின்னல் வரிகள் கணேஷ்: 
1. உங்களுக்கு கோபம் வரவழைக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? 
கோபம் வருமாறு நடந்து கொள்ள வேண்டும் தலைவரே.. 
 *******************************
வீடு சுரேஷ்குமார்: 
1. கேபிள்ஜீ அடல்ட் கார்னர் படிச்சிட்டு உங்க வாசகிகள் யாராவது.....? செமையா திட்டியிருப்பாங்க அதை விடுங்க...பாராட்டியிருக்காங்களா? 
திட்டுறது எல்லாம் கிடையாது. நிறைய பேர் படிச்சிட்டு சந்தோஷப்பட்டிருக்காங்க.. சில பேர் வெளிப்படுத்துவாங்க.. சில பேர் எதுக்கு வம்புன்னு ஏதும் சொல்லாம போவாங்க. செக்ஸ் ஜோக்குங்கிறது ஆம்பளைங்களுக்கு மட்டுமே உரித்த்தானது என்பது ஒர் ஆணாதிக்க எண்ணம். உங்களுக்கு எல்லாம் ஒரு ரகசியம் சொல்றேன் நானெழுதும் நிறைய ஜோக்குகளின் சோர்ஸே என் பெண் நண்பர்கள்தான். 
 *******************************
2. உங்க பழைய பதிவு எதையாவதை திரும்பப் படிச்சிட்டு இவ்வளவு மொக்கையாவா எழுதியிருக்கோம்..!நம்மையும் இந்த உலகம் நம்புதே என சிலாகித்தது உண்டா? 
 ஒரு எழுத்தாளனா எழுதினது எல்லாம் சூப்பர்னோ.. மொக்கைன்னோ என்னைக்கு நினைக்க ஆரம்பிக்கறோமோ அன்னைக்கே அவன் எழுதுறது நின்னுரும்னு யாரோ ஒரு மகான் சொல்லியிருந்ததா படிச்சிருக்கேன். அதனால எழுதினத நான் திரும்ப படிக்கிறதேயில்லை. அப்படி நினைக்கிறதுனாலதான் தான் இந்த உலகம் என்னை நம்புதேன்னு சிலாகிச்சிக்கிறது இல்லை. சிலாகிக்கிற உலகம் சில்லு சில்லா ஆக்கும்னு தெரியும்ங்கிறதுனால..:)) 
 *******************************
3. கேபிள்ஜீ நீங்க சைவம் உண்ணும் பாரம்பரியத்தில் வந்தவர்! ஆனாலும் உங்களுக்கு பிடிச்ச நான்வெஜ் எது என்று சப்புக் கொட்டிய படியே செப்ப முடியுமா..?
மறைக்காமல்! நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு காரணமே சினிமாதான். ராத்திரியில டிஸ்கஷன் முடிச்சிட்டு ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கு சாப்பிட போனா கூட வந்தவங்க மட்டும் பரோட்டாவும் சிக்கன் க்ருமாவுமா அடிக்கும் போது நான் மட்டும் வெறும் பரோட்டா பிச்சித் தின்ன கடுப்புல சாப்பிட ஆர்ம்பிச்சேன். இப்ப அவங்களுக்கே சாப்பாட்டுக்கடை எழுதி சொல்ற அளவிற்கு ஆயிட்டேன். இதன் காரணம், பெருமை, அனைத்தும் சினிமாவையே சாரும். நான் எனக்கு பிடிச்ச அயிட்டத்தையெல்லாம் சாப்பாட்டுக்கடை பதிவுகள்ல எழுதறேனே மறைக்காம... 
 *******************************
4. கேபிள் நீங்க ஒரு படத்தின் இயக்குனர் ஆகின்றீர்கள் (தெரியாத்தனமாக..?) படத்தில் பதிவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா...? இல்லை ஹலோ...ஹலோ....சிக்னல் வீக்கா இருக்குன்னு எஸ்கேப் ஆயிருவீங்களா...?
 தெரியாத்தனமாக எல்லாம் இல்லை தெரிந்தே ஆகப் போகிறேன். நிச்சயம் பதிவுலக நண்பர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுப்பேன். என் கதை விவாதங்களில் சில ந்ண்பர்களின் பங்களிப்பை பெற்றிருக்கிறேன். பெறவும் இருக்கிறேன். எஸ்கேப் ஆவேன்னு நீங்க கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னா இப்ப இப்படித்தான் பேசுவீங்கன்னு சொல்வீங்க..? அதனால அந்த டைம்ல கூப்பிடுங்க நான் எஸ்ஸாகுறேனா இல்லையான்னு உங்களுக்கு தெரிஞ்சிரும். வாழ்க்கையில ஒரு சுவாரஸ்யம் வேணாமா?
 *******************************
டிஸ்கி: இவரது பேட்டி வெளிவரும் என முன்பே அறிவித்து சில காரணங்களால் தாமதமாகி இன்று வெளியிடுகிறேன்.
அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்த கேபிள் சங்கருக்கு நன்றிகள் பல....
மேலும் வாசிக்க... "அடல்ட் கார்னர் ஆம்பிளைங்களுக்கு மட்டுமா? கேபிள் சங்கர் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! (cable SANKAR interview)"



கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.

2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.

3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.

4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.

5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி  வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview"



"மதியோடை" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி

1 - மதியோடை - பெயர் காரணம் கூறுக.
    பெரிதாக ஒரு காரணமும் இல்லிங்க மகேஸ்வரி (அம்மா), தில்லையம்பலம் (அப்பா) என்ற என் பெற்றோரின் ஆரம்ப எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் பெயர் அவ்வளவும் தான்.
2 - நீங்கள் பதிவு எழுதும் நேரம் குறைந்து விட்டதே. என்ன காரணம் சகோ
         என் உடல் நிலை தான் முக்கிய காரணம். மற்றும்படி இப்போதும் 27 பதிவுகள் என்னிடம் சேமிப்பில் இருக்கிறது ஆனால் அவசியமானதை மட்டுமே ஒரு ஒழுங்கில் போடுகிறேன். அதிகாலையே எங்கள் இடத்தில் இணைய வேகம் மிகவும் வேகம் என்பதால் அப்போதே வாசிக்கிறேன்.
    நான்கு மணித்தியாலம் மட்டுமே ஓய்வு கேட்கும் என் கண்களுக்கு நன்றி.

3 - கிரிக்கெட்டில் நீங்கள் கைதேர்ந்த வீரராமே! இலங்கை அணியில் இடம்பெற முயற்சிக்கலாமே?
    அந்தளவுக்கு எனக்கு திறமையில்லிங்க அனால் முயற்சித்திருக்கலாம் அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே ?

4- முதல் எதிர் பின்னூட்டம் எந்த பதிவுக்கு வந்தது? அப்போது உங்கள் மனநிலை என்ன? அந்த பின்னூட்டத்திற்கு உங்கள் பதில் என்ன?
         அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற எனது 43 வது பதிவில் தான் முதல் எதிர் பின் ஊட்டம் வந்தது. அதை தந்தவர் இப்போது எனது ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல நல்ல வாசகரும் கூட. கெட்டதை மறப்போம் நல்லதை மட்டும் நினைப்போம்.

5 - இலங்கை உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற போது உங்கள் நாட்டினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? 

  நான் வசிக்கும் நாட்டில் இரண்டு அணிக்கும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கையணியின் வெற்றி பரிசு சம்பந்தமான செய்தியால் பலர் அணி ஆதரவை கைவிட்டிருந்தார்கள்.

6 - சோளம் பொறித்தல், தேயிலை இல்லா டீ போடுதல் போன்ற ஆராய்ச்சி பதிவுகள் உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுள்ளிர்களே! அதை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பலாமே?

      ஹ.. ஹ…. என்ன நக்கலா. அவை எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. ஒரு மனிதனுக்கு தேவைகள் தான் கண்டுபிடிப்புகளை தோற்றுவிக்கும் என்பதற்கு உதாரணமாகும். பொருள் தட்டுப்பாடு, பண நெருக்கடி என பலதையும் பழகிக் கொண்ட வன்னி மக்களால் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

7 - உங்களை பற்றி ஒரே வரியில் சொல்ல சொன்னால் எப்படி சொல்வீர்கள்?

         “நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை“

8 - முதல் பின்னூட்டமாக "சுடு சோறு எனக்குதான்" அப்படின்னு போடுறிங்களே! எப்படி இந்த ஐடியா வந்தது?

     வன்னி போன்ற இடங்களில் இப்போதும் எம் பழங்கால தமிழ் அப்பழுக்கில்லாமல் உயிர்வாழ்கிறது அவற்றை வெளிக் கொணரணும் என்ற ஆசையில் தான் செய்கிறேன் உதாரணமான மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) என்ற வசனமாகும். முகம் என்பதை விட மூஞ்சி என்பது அழகானதாம்.

9 -உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான தருணங்களில் உங்கள் உதவிக்கு வந்தவர் யார்? அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.                     

  ஒருவரல்ல இருவர் முதலாமவர் என்னை தனது முதல் பிள்ளையாக கருதி தூக்கி வளர்த்த அக்கா அவர் ஒரு விஞ்ஞான அசிரியராவார் நான் தப்பச் செய்தால் தன்னை தண்டித்த என்னை திருத்தும் ஒருவர். அடுத்தவர் பெரும்பாலன பதிவர்களின் வாசகரான என் நெருங்கிய நண்பர் ஜீவன் தான் உதவுவார். என் பதிவகளில் அடிக்கடி தலைகாட்டுவார். என்னை விட அதிக வயது மூத்தவரானாலும் எம் நட்பை விபரிக்க வார்த்தைகள் இல்லை

10 - நீங்கள் எப்படி பதிவுலகம் வந்திர்கள்? பதிவெழுத வந்ததன் நோக்கம் ?

        நான் முகாமில் இருந்த காலத்தில் களவாகப் பார்க்கும் தினக்குரல் பத்திரிகையில் வரும் இணையத்தில் நம்மவர் பகுதி தான் வரத் தூண்டியது அதில் வந்தும் விட்டேன். ஆனால் எழுத ஆரம்பிக்கும் போதே நினைத்தவை என்ன நடந்தாலென்ன என்ன எதிர்ப்ப வந்தாலென்ன போருக்கும் போதைப் பொருளுக்கும் எதிராகவே எழுதணும் என்பது தான். (சாராயத் தயாரிப்பு பதிவிலும் அதன் விளைவை சொல்லியிருக்கிறேன்)

11 - நல்ல சமூக விழிப்புணர்ச்சி பதிவுகளை வழங்கும் நீங்கள் 18+ பதிவகளையும் எழுதவதன் காரணம் ?
    ஹ… ஹ… யார் சொன்னது அது 18+ என்று அதில் ஆபாசமோ அருவருப்பன வசனமோ இருக்காது ஏதாவது அறிவியல் அல்லது சமூக விழிப்புணர்வே இருக்கும். அதன் அர்த்தம் 18+ ற்க உட்பட்டவருக்கு தேவைப்படாது என்பதாகும்.

12 - சிங்கள ராணுவ வீரர்கள், புலி வீரர்கள் இருவரிலும் ராணுவ ரீதியாக பார்க்கையில் உங்கள் கண்ணில் எப்படி இருந்தார்கள் ?
            இருவரதும் உயிர்கள் தான் கண் முன் தெரியும். இருவருக்கு ரத்தம் போனாலும் எம் கைகள் நீள யாரும் தடை போட்டதில்லை.

13 - இந்த பரவகாலத்தின் ஈழத் தமிழர், புலம் பெயர் தமிழர் ஒப்பீட்டு பிரச்சனைக்கு நீங்கள் தான் ஆரம்பகர்த்தாவாமே உண்மையா ? காரணம் என்ன?
உண்மை தான். ஆனால் புலம்பெயர்ந்தவர் என வார்த்தைச் சுட்டலில் அடக்கப்பட்டாலும் எல்லோரும் அப்படியல்ல எம்மைபுரிந்த பலர் இருக்கிறார்கள். இப்போதும் வன்னியின் வவுனிக்குளம் பகுதிக்கு கனடாவில் வாழும் சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தம் சொந்தப் பணத்தில் பல குடும்பத்திற்கு உதவுகிறார்கள். காரணங்கள் பல முக்கியமாக தவறான புரிந்தணர்வுகளே , மேலும் சிலரிடம் அவர்களது குடியுரிமை பெறுவதற்கான போராட்டம் , போர் வெறி கொண்டிருக்கும் மக்களை நாம் திசை திருப்பி விடுவோமா என்ற பயம் என சின்ன சின்ன காரணங்கள் நீண்டு செல்கிறது…

இதுவரை  எனது கேள்விகள் இடம்பெற்றது. இனி வாசகர்களின் கேள்விகள்:
சித்தார மாகேஷ்
(சுவர் தேடும் சித்திரங்கள் – http://siththara-mahesh.blogspot.com/ )
-அண்ணா தங்கள் படைப்புக்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது எப்படி இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் உங்களால் நேர முகாமைத்தவம் பண்ண முடிகிறது ?
பெரிதாக ஒன்றுமில்லை தங்கா மனதையும் உடலையும் எந்த வலியையும் தாங்குமளவுக்கு வளர்த்துக் கொண்டால் போதும்.. செந்தாமரையில் ஆசை வைத்தால் சேற்றிலிருந்தாலென்ன ஆற்றில் இருந்தாலென்ன பறித்தே தீரணும் என்று நினை எல்லாம் கூடிவரும்..
- ஏன் நீங்கள் நகைச்சுவை படைப்புகளையும் கொஞ்சம் முயற்சிக்கலாமே? தாங்கள் சிறந்த நகைச்சுவையாளன் என்பது எமக்கு மட்டும் தெரிந்தால் போதுமா உலகுக்கும் தெரிய வேண்டாமா ?
உங்கள் ஆதாங்கம் புரிகிறது உங்க முகத்தின் முன்னே நடந்து கொள்வது வேறு…. எழுத வரும் போது அடிக்கடி சிரியசான பதிவு போடும் இந்த நகைச்சுவையாளனை எந்த கண் கொண்டு பார்ப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் தான் காரணம். பதிவுகளின் முக்கியத்துடன் ஒப்பிடுகையில் என்னிடம் உள்ள நகைச் சுவை பதிவை விட சமூக பதிவே காத்திரம் கூடியதாக இருக்கிறது.

- உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறதே என்ன காரணம் ?
என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்

மதுரன்
(கூதற்காற்று - http://koothatkatru.blogspot.com/ )
- வன்னி பிரதேசம் போர் மேகங்களால் சூழப்பட்டு தொழில்நுட்பத்தில் மிகவும்பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. ஆனால் நீங்கள் எம்போன்ற பல பதிவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல உதவிகளை வழங்கி வருகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?
இதிலென்ன இருக்கிறது சகோதரம் கொஞ்ச ஆங்கில அறிவும் தேடலும் தான் காரணம் அதை விட முக்கியம் உதவி செய்வதில் வரும் ஒரு வித ஆத்ம திருப்தியும் தான்… என்னை விட அதிக தொழில் நட்பம் தெரிந்த வன்னி பதிவர் ஒருவர் இருக்கிறார் தெரியும் தானே..

- உங்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?
உண்மையாவே அது எப்படி வந்ததென்று எனக்கு தெரியாது சகோதரம்…. சிறுவயதிலேயே எதையும் கிண்டிக் கிளறுவேன் அப்படி செய்கையில் ஏதாவது கண்டு பிடிப்பேன் அதை நானே பிரயோகித்தும் பார்ப்பேன்… அவ்வளவும் தான்

தம்பி கூர்மதியன் kooranpathivu.blogspot.com
- தங்களின் விவர பக்கத்தில் தங்களது ஆரவங்கள் என்று பார்க்கையில் //போர் ஆதரவாளருக்கு எதிரான செயற்பாடு// என்று சொல்லியிருந்தீர்கள் அப்படியானால் தனியொரு ஈழம் அமைவதில் தங்களுக்கு விருப்பமில்லையா??? இல்லை ஆயிரம் ஆயிரம் உயிரை இழக்க செய்து தனியொரு ஈழத்தை பெற்று அந்த பிணங்கள் மீது புதிய ஈழத்தின் வாழ்க்கை தொடங்குவதில் உங்களுக்கு விருப்பமில்லையா?
முதலாவதை எல்லோருமே விரும்புகிறோம் ஆனால் இரண்டாவது மட்டும் தான் தீர்வென்பதை தான் நான் வெறுக்கிறேன்… யாரும் வெற்றியை பெறலாம் ஆனால் அது தக்கவைத்திருக்கும் போதே சாதிப்பதை சாதிக்கணும்.. சரியான பருவகாலத்தில் சரியான முடிவெடுக்கணும்..

- அந்நிய குண்டுகள் உங்கள் உடம்பை தைத்துண்டா???
குண்டுகளுக்கு தெரிவதில்லை நாம் ஒருவனை கொல்லப் போகிறோம் என்று சுட்டவன் மட்டும் தான் அறிவான்….. அதற்கு நல்லவன் கெட்டவன் என்ன வித்தியாசம் தெரியாது… சகோதரம்..

- இந்திய நாட்டில் தாங்கள் மறக்க முடியாத பிரபலமோ சாதாரண மனிதரோ யார்.??? ஏன்???
மேன்மை தகு ஜனாதிபதி அப்துல்கலாம் தான்…. அவரை எனக்கு மட்டுமல்ல உலகுக்கே பிடிக்கும்…. வடநாடே ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க துடிக்கையில் மனிதாபிமானத்தோடு கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு விடுவிக்கச் சொன்னாரே அந்த தருணம் யாராலும் மறக்க முடியாது…

லட்சுமி www.echumi.blogspot.com
- நண்பா, சிறப்பு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளந்திருக்கீங்க. திறமை இருப்பதால தானே வாய்ப்பு தேடி வருது. இவ்வளவு வளர்ந்ததற்கு கடுமையா உழைச்சிருப்பீங்களே? அதை எல்லாம் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
என் உழைப்பு என்பதை விட என்னை வளர்த்தவரின் வளர்ப்புத் தான் காரணம் அம்மா… இந்த பதிவுலகத்தை என் குடும்பம் போல் தான் கருதுகிறேன். எல்லோருக்கும் ஒரு தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்… யாரும் என்னை எதிரியாக கருதினாலும் அவர்களை நான் உறவினனாகவே பார்க்கிறேன்…. இவை தானம்மா எனது வெற்றி ரகசியம் வேறொன்றுமில்லை..

கோமு gomathykomu@gmail.com
- ஹாய் ம. தி. சுதா. முதலில் வாழ்த்துக்கள். இந்த சந்தோஷத்தை எப்படி உணர்கிறீர்கள்.?
மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என் உறவுகள் மனதுக்குள் என்னிடம் கேட்க இருந்ததை வெளிப்படையாக கேட்பதும் என்னால் முடிந்ததற்கு பதில் அளிப்பதையும் இட்டு இதை தந்த பிரகாசுக்கு மிக்க நன்றி சொல்லணும்.

- வாரம் மூணு பதிவாவது எழுதுவீங்களா? டைம் கிடைக்குதா?
ஆமாங்க பதிவு எழுத நேரம் கிடைக்கிறது ஆனால் பிரசுரிக்கத் தான் நேரமில்லை என் பதிவுக்கு கருத்திடும் நபர்களுக்காவது கருத்திடணும் அது முடிந்த பின் தான் அடுத்த பதிவு போடுவேன்.

- வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
பதிவர், பதிவு இரண்டும் வேறு வேறு அவரை வாசிப்பதானால் நெருங்கிப் பழகுங்கள். பதிவை வாசிப்பதானால் நல்ல ஆணித்தரமான கருத்தை வழங்குங்கள். உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..

நிரூபன்.http://www.thamilnattu.com/
- இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். இதே இலக்கிய மொழி நடையினையோ, அல்லது எமது மரபுகளையோ தொடர்ந்தும் தக்க வைக்காது தனி மனிதனது எண்ணங்களினூடாகவும், தனி மனிதனின் சுதந்திர சுயாதீன ஊடகத்தினூடாகவும் வலைப் பதிவுகளை எழுதி வரும் நாங்கள் ஏன் எங்களின் கடந்த கால விடயங்களைப் பதிவுகளாக்கப் பின் நிற்கிறோம்?
இவ் வினாவின் உப விடயங்களாக, அரசியலை விடுத்து, எமது அவலங்களை உற்று நோக்கினால், நடு நிலமையுடன் ஒரு தனி மனிதனது எண்ணங்களூடாக வெளி வரக் கூடிய வன்னியின் வாழ்வியல் சார்ந்த படைப்புக்கள் (இலங்கையில் 2008ம் ஆண்டுகளிற்குப் பின்னரான காலப் பகுதியினைக் குறிப்பிடுகிறேன்) இல்லை என்றே கூறலாம். இந்த எழுதப்படாத அவலங்கள் யாவும், காலவோட்டத்தில் கரைந்து போய் விடுமா? இல்லை காத்திரமான முறையில் தொகுக்கப்படுமா? உங்களின் எண்ணவோட்டத்தில் வலைப் பதிவுகள் மூலமாக எவரையும் சாடாத/ சாராத, ஒரு போர்க்கால படைப்புக்களை தனியாகவோ, அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்தோ வழங்குவது சாத்தியமாகுமா?

அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?
ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்..

செங்கோவி: www.sengovi.blogspot.com
- ஈழத்தில் இன்னும் ஆயுதப் போராட்டதிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? அல்லது மீண்டும் தந்தை செல்வா வழியில் அஹிம்சைப் போராட்டத்திற்கு திரும்ப வேண்டிய நேரமா இது?
ஈழத்தில் இப்போ இந்த ரெண்டுக்கும் சாத்தியமில்லை காரணம் எந்த இளைஞனிடமும் சரியான தொழில் வாய்ப்பில்லை பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு சிறிய நாட்டிற்காவது போய் குடும்பத்தை கவனிக்க வேண்டுமென்பது பற்றித்தான் சிந்தனையெல்லாம் இருக்கிறது. மற்றும்படி எல்லாம் வாய்ப் பேச்சுத் தான் சகோதரம்..
- சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சகஜமான சூழ்நிலை அங்கு நிலவுகிறதா?
சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…

- பதிவுலகில் உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி
-ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று நம்புகிறீர்களா?
அவர் செய்தது தப்பு என என்னால் சுட்டிக்காட்ட முடியும் சகோதரம் ஆனால் அதை துரோகம் என வரையறுக்கலாமா தெரியல காரணம் அப்படி பார்த்தால் பல துரோகிகளை பட்டியல்ப் படுத்த வேண்டியிருக்குமே. 
- உங்களுக்கு பிடித்த பதிவு/பதிவர்? காரணம்?
மீனவர்களுக்காக எழுதப்பட்ட அத்தனை பதிவும் என்னை கவர்ந்தவையே.. பதிவுலகம் எவ்வளவு ஒற்றுமையானது என பலரை திரும்பிப் பார்க்க வைத்த தருணம் அது அதற்காக பதிவிட்டவர் ருவிட்டியவர் கருத்திட்டவர் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்..
- இலங்கையில் தற்போது சூழல் எப்படி இருக்கிறது?
போர் நடக்கவில்லை என்ற மனத் துணிவு பிறந்ததால் பல கட்டடங்கள் தலை நிமிர்த்துகிறது.. பெற்றொர் துணையில்லாமல் தனியாக பல்வேறு வயது மட்டத்தவரும் வெளிக்கிட்டுத் திரிகிறோம் (ஆனால் சோதனைகள் நிறுத்தப்படவில்லை) மிக முக்கியமாக அடுத்த நாள் காலை உயிரோடு எழலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையில் படுக்கப் பழகி விட்டோம்.

முத்து குமார், குவைத்
தோ்தல் முடிவுக்குப் பின் வைகோவின் நிலை என்ன?
அடுத்த தேர்தல் வரும் போது தான் தெரியும் சகோதரம்..

Chitra Solomon www.konjamvettipechu.blogspot.com
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
....உண்மை..... தன் மனதில் உள்ள உணர்வுகளை .....தனக்கு நியாயம் என்று படுவதை, துணிந்து எழுதும் சுதாவுக்கு வாழ்த்துக்கள்!
- எத்தனயோ சோதனைகளை, வேதனைகளை கடந்து வந்து கொண்டிருக்கும் இவர், எப்பொழுதும் positive ஆக சோர்ந்து போகாமல் எப்படி இருக்க முடிகிறது?
நாங்கள் வாழ்க்கையை உயிராக காதலிக்கிறோம் அக்கா… காதலி எது செய்தாலும் உண்மை காதலன் என்ன செய்வான்…. எல்லாம் பழகி விட்டது அக்கா..

சிவா
- என்போன்ற புதியவர்களுக்கு வலைப்பதிவு பற்றிய தொழில்நுட்பம் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகம்களை எப்படி சரியாக தீர்க்கமுடியும்?
தெரிந்த குறுக்க வழிகளை காட்டுவோம் சகோதரம் இல்லாவிடில் எமக்கு மூத்த சசி போன்ற தொழில் நுட்ப பதிவர்களிடம் பரிந்துரைப்போம்..
- புலம்பெயர் தேசத்தில் இப்போது அதிகமான புதியவர்கள் எழுதுகின்றோம் நம்பதிவுகளை எப்படி அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க முடியும்!?
எனக்குத் தெரிந்தவரை மற்றவருக்கு அறிமுகமாக ஒரே வழி கருத்திடலும் கருத்தின் கீழ் பதிவின் தொடுப்பிடலும் முக்கியமாக திரட்டிகளில் இணைப்பதுமே..

- நாகரிகம்மற்ற பின்னுட்டம் இடும் பதிவர்களை எவ்வாறு இனம் கானுவது?
கருத்துக்களில் மட்டுமே அடையாளம் காணலாம் சகோதரம் ஹ… ஹ.. இல்லாவிடில் அவர்கள் வீட்டு போனால் வாசலில் கோலத்திற்கு பதிலாக ஏதாவது எழுதி வைத்திருப்பார்கள்.. அவர்கள் கருத்துப் பெட்டியில் இடுவது அவர்களது வீட்டில் அழைக்கப்படும் செல்லப் பெயர்களைத் தானே… ஹி.. ஹி

மகாதேவன் V.K www.thagavalthulikal.blogspot.com
- நீங்கள் பதிவெழுதிய பிறகு ஏன் இந்தப்பதிவை எழுதினேன்/பதிவிட்டேன் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
ஆமாம்… அசினிடம் நான் உதவி கேட்டு எழுதிய பதிவை 9 இணையத்தளங்கள் அவருக்கெதிரான பரப்புரைக்கு அதை பயன்படுத்திய போது மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டேன்..
- "பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும்" இந்தப்பழக்கம் எப்படி வந்தது? எந்த வயதில் வந்தது?
பாண் சுற்றி வருவது என்று ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் சொன்னேனுங்க… எனக்கு 6-7 வயதிலேயே இப்பழக்கம் வந்தது.. நூல் நிலையங்கள் சென்று பழைய பத்திரிகைகளுக்கு ஒரு தொகை பணம் கொடுத்து வாங்குவேன்.. பலர் ஒரு பத்திரிகைக்கு போட்டியிட்டால் பத்திரிகை வந்து அடுத்த நாளே போய் கிழித்து சட்டை பையில் மறைத்து கொண்டு வந்துவிடுவேன்.
ஆனால் ஒன்று இப்போ என்னிடம் இருப்பது மிக கொஞ்சமேயாகும் மீண்டும் சேகரிக்கிறேன்..
- இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டா ? அப்படியானால் அங்கே நீங்கள் சந்திக்க விரும்புவது யாரை (அரசியல்வாதி, நடிகர்கள் அல்லது நண்பர்கள் உறவுகள்) ?
நிச்சயமாக மிகவும் விரும்புகிறேன் காரணத்தை என்றொ ஒரு நாள் அறிவீர்கள் சகோதரம்..

ஆச்சி www.aatchi.blogspot.com
- தமிழக தமிழ் பல ஸ்லாங்குகளில் பேசப்படுவது போல இலங்கை தமிழும் பல ஸ்லாங்குகளில் பேசப்படுகிறதா?
ஆமாம் இங்கு ஊருக்கு ஊர் ஒரே சொல்லை பலவிதமாக அழைப்போம் அதிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்..
- அரசியல்,கல்வி அல்லது ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடும்படியான பெண்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். எனக்கு குமாரதுங்கா பண்டாரநாயக்காவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
பலர் இருக்கிறார்கள் நிங்கள் குறிப்பிட்டவரின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட முதல் பெண் பிரதமர் என்ற பெரும் சாதனைக்குரியவர் தமிழிலும் பல பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியலிங்க..
- நீங்கள் மருத்துவரா? இருப்பின் உங்கள் மருத்துவம்& வாழ்க்கை பற்றி சொல்லவும்.
ஆமாம் ஒரு தனியார் மருத்தவராக கடமை புரிந்தேன் இறுதியாண்டை தொடர பொரளாதாரம் இடம் தராததால் அந்த கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு ஒரு அரசு சார்பற்ற நிறுவனமொன்னில் மனதுக்கு திருப்தியான பணியொன்றை தேர்ந்தெடுத்து பணி புரிகிறேன்.

நிலாமதி www.mathinilaa.blogspot.com
- ஒரு நாளில் கணனிக்கு முன் எவ்வளவு நேரம் செலவிட முடிகிறது ?
அதையேன் கேட்கிறீர்கள் அக்கா கழுதை தேய்ந்து கட்டெறும்பானாலும் பரவாயில்லை என் கதை சுதா தேய்ந்து சுருட்டை புழுவான மாதிரியாச்சு..
- சமுதாய விழிப்புணர்வு உள்ள நீங்கள் பல சவால்களை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை எப்படி எதிர் கொள்ள முடிகிறது. ?
சேவை செய்வதில் ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது அதற்கு என் உடல் நிலையும் முழு ஒத்துழைப்பு தருகிறது இயலாத சூழ்நிலைகள் வரும் போது மட்டும் கொஞ்சம் தளர்வு மற்றம்படி கடவுள் என்னை சோர விடுவதில்லை.

போளூர் தயாநிதி
விடுதலை போராட்டம் என்றால் உயிர் இழப்புகள் படுகொலைகள் எல்லாமிருக்க வேண்டுமென்பதில்லை ஆயின் நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்றார் மாவோ அதுபோல இழப்பை எண்ணி வருந்தாமல் விடுதலையை முன்னொடுக்க வேண்டுமேயன்றி (இருதிகட்டத்திலும் கரும்புலிகள் வேண்டுகோள்) அங்கு ஈழத்தில் மக்கள்(போராளிகளை சொல்லமாட்டேன் ) விடுதலைக்கு பாடுபடவில்லை என எண்ணவைத்து விட்டது இதுகுறித்தான உங்களின் பார்வை என்ன ?
இது மிகவும் பெறுமதியான கேள்வி சகோதரம்.. வெளிப்படையாக கேட்டதற்க மிக்க நன்றி ஒரு வெளி நாட்டு பதிவர் என்னை பகிரங்கமாகவே கேட்டார்.. ”நீயெல்லாம் தப்பி ஓடி வந்ததால் தானே உயிரோடிருக்கிறாய்” என்றார். அப்படியானால் கரிபால்டி 3 தரம் கோழையானாரா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஒரு போரின் வெற்றி தோல்வியை பல காரணிகள் தீர்மானிக்கும் கொரில்லா யுத்தம் வேறு மரபு வழி யுத்தம் வேறு.. மக்களுக்கள் மரபு வழி யுத்தம் நடக்கையில் எவனும் கதிகலங்கித் தான் போவான்… ஒரு குடும்பத்தில் 2 பிள்ளை செத்தால் மற்ற 2 பிள்ளையாவது எஞ்சணும் என்பதற்காக தப்பி ஒடவே நினைப்பான்… சுருக்கமாக சொன்னால் ஒரு பேருந்தில் தவறி விழுந்தவனை இழுத்துப் பிடித்தால் அவன் மேலே வருவதற்குள் தேந்துய்து செத்தவிடுவான்… விழுந்தவன் முக்கியம் என்றால் பேருந்தை நிப்பாட்டணும்.. பிரயாணம் மக்கியம் என்றால் விழுந்தவனை கை விடுவதே சிறந்தது..

நாஞ்சில் மனோ: www.nanjilmano.blogspot.com
- நான் ஆட்சிக்கு வந்தால் "மாற்றத்தை" ஏற்படுத்துவேன் என்று ஆட்சியை பிடிச்சாரே ஒபாமா, அப்பிடி ஏதாவது மாற்றம் தெரிகிறதா உங்கள் பார்வையில்....?
ஆமாம் சகோதரம் இருக்கிறது தானே ஒற்றை மனிதனுக்கு இந்தளவு லட்சங்களை அள்ளி இறைத்து வெற்று உடம்பை கடலில் போட்டது பெரிய மாற்றமில்லையா ஹி... ஹி...

- விலைவாசி இப்படி உயர்ந்து வருகிறதே அதன் அடிப்படை காரணம்....?
பொருட்களுக்கான உற்பத்தி குறைந்து தேவை அதிகரிக்கின்றமை பெரும் காரணமாகச் சொல்லப்பட்டாலும்.. ஆளும் வர்க்கத்தின் சுயநலச் சுரண்டலும் தான் காரணமாக இருக்கிறது..

- நம்ம ஊர் குப்பனும் சுப்பனும் இப்போது விழிப்படைந்து வருகிறார்களா....?
நிச்சயமாக எங்கோ ஓர் கிராமப் புறத்தில் இருக்கும் குப்பன் சுப்பன் விழிப்பாயிருக்கிறான். ஆனால் பட்டணத்திலிலுக்கும் மனிதன் தான் உறக்கத்தில் இருக்கிறான்..

டிஸ்கி: கடந்த வாரம் மதிசுதா என்னிடம் மொபைலில் பேசினார். நல்ல நண்பர் அவர். அவர் நமது தளத்திற்கு ஏற்கனவே அளித்த பேட்டி இது. மீள்பதிவாக இன்று....
மேலும் வாசிக்க... ""மதியோடை" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி"



"வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே, தமிழ்வாசியில் முன்பே வெளியான வலைச்சரம் சீனா ஐயாவின் பேட்டி மீள்பதிவாக இங்கே...

01 : சீனா பெயர்க்காரணம் கூறுக
          என்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 
02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
          புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம்.  பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும். 
          பிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.
03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை ? ஏன் ? 
          விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத்தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான். 
04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது ? ஏன் ? 
         பணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது. 
05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் ? அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா ?
           ஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல. 
06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது ? 
         ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும். 
         நாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து ....  என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் "ம" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.  
07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே ? இதைப் பற்றி தங்கள் கருத்து ?
           எழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ?  
         இப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.
09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
         அந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.
10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் ?
        இனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.
11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது 
உண்டா ?
         லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன்.  இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே! 
12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது ?
         தாயும் தந்தையும் இறந்தது தான்.
13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல  - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா ?
         எழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?
        இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும். 
15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை ?
        பிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே !
16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் ?
        அடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே !
17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது ?
       என்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.


இதுவரை நான் சீனா ஐயாவிடம் கேட்ட கேள்விகளைப் படித்தீர்கள். இனி வாசகர்கள், நண்பர்களின் கேள்விகள். 


ம.தி.சுதா; www.mathisutha.blogspot.com
என்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது? 
          வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால்  துவங்கப்பட்டு 11.11.2006  - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார். பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தாநதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும்       முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார்.   பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.
*************************************************************** 
ரஹீம் கஸாலி; http://ragariz.blogspot.com/

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? 
       குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான். 

***************************************************************
நா.ஜானகிராமன்; http://podhujanam.wordpress.com/
பதிவுகளின் பின்னுட்டத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்களை (மீ த பர்ஸ்ட்முத வடைமுத வெட்டுரைட்டுஇன்ன பிறபோடுபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? 
        மட்டுறுத்தல் வைக்கலாம். வெளியிடாமல் இருக்கலாம். போனாப்போறாங்களே! போட்டுட்டுப் போறாங்களே!  

இன்னும் வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
        பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். 

புதிதாக எழுத வரும் புதுப்பதிவர்களை ஆக்கப்பூர்வமாக உற்சாகப்படுத்தி வழிநடுத்துவதில் பிரபல பதிவர்களின் பங்கு என்ன? (இப்பல்லாம்பதிவர்கள் பிரபலமாய்டாலே அவருக்கென்று ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு சுருங்கிவிடுகிறார்கள் /புதுப்பதிவர்களின் பதிவுகளுக்கு கமெண்டிடுவதை நேர விரயம் என்று நினைக்கிறார்கள்)
         உண்மை தான் - நேரமின்மை என்பது உண்மையான காரணம். இருப்பினும் எல்லோருடைய இடுகைகளையும் படிப்பவர்கள் அனேகம் பேர். நாம் எழுதும் எழுத்துகள் மற்றவர்களைச் சுண்டி இழுக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்று ஒருவரும் பிறப்பது கிடையாது. நட்பு வட்டம் குழுக்கள் - இவை எல்லாம் தவிர்க்க இயலாது. புதுப் பதிவர்களிடையேயும் குழுக்கள் உள்ளனவே!  
***************************************************************
லக்ஷ்மி - echumi; http://www.echumi.blogspot.com/
நான் ப்ளாக்குக்கு புதுசுகடந்த 5 மாதங்களாகத்தான் பதிவு எழுதி வருகிறேன். வலைச்சரத்தில் என்னை இதுவரை, 4-பேர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நானும் நிறைய ப்ளாக் போயிமத்தவங்க பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன்எல்லாரும் கலக்கலா எழுதராங்கஅவங்களுக்கு முன்னாடி நான் u,k,g.  l,k,g. கூட இல்லைஆனாகூட நிறைய நிறைய எழுதனும்னு ஆர்வம் மட்டும் நிறையவே இருக்குஉங்ககூட அறிமுகமும் இல்லை .இப்பதான் முதல் முதலா பேசரேன்எந்தவிதத்தில் என்ப்ளாக்கை இன்னமும் சிறப்பாக வைக்கமுடியும்தகுந்த ஆலோசனை தருவீர்களாகம்ப்யூட்டரைப் பற்றியும் அதிகம் தெரியாது. முகம் தெரியாத பல நண்பர்கள் சமயத்தில் தகுந்த ஆலோசனைகள் சொல்கிரார்கள்ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு நல்ல பல நட்புகள் கிடைத்திருக்காங்கரொம்ப சந்தோஷமா இருக்கு. பாக்கப்போனா எனக்கு வயது கொஞ்சம் அதிகம் தான்என் சொந்தபந்தங்களே நான் கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு எகைன்ஸ்டதான் இருக்காங்கஎங்கரேஜ் மெண்டே கிடையாதுஎன்பதிவுக்கு வரும் பின்னூட்டம்தான் எனக்கு எனர்ஜிநான் எழுதுவது என்பக்கம் யாருமே படிச்சுகூட மாட்டாங்க. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லைதான். முடிந்தால் டைம் கிடைத்தால் என் ப்ளாக் வந்து என் ப்ளாக் படிச்சு எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க
     கலங்க வேண்டாம். - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com
(9840624293) படிக்கிறேன்.

***************************************************************

குண்டு(ராஜகோபால்); http://enpakkangal-rajagopal.blogspot.com/
வலைபூ வரமாசாபமா?


கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது  படைப்புகள் உலகத்தில் உள்ள அனைவர் பார்வைக்கும் கட்டுபாடுகளின்றி  வழி கிடைக்க செய்தது மற்றும்  நண்பர்கள் வட்டம் பெருக செய்தது  சரிஅது போல  பல ஆபாச தளங்கள் பெருக செய்வதர்க்கும் துணை புரிகிறதே உங்கள் கருத்து என்ன?
       கத்தியின் இருபக்கம் கூர்மையாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர்கள் சாக்கிரதையாக பயன் படுத்த வேண்டும். அதே தான் இங்கும் (இரண்டு கேள்விகளுக்கும்)

வலைச்சரத்தில் பன்னிக்குட்டியின் (ராம்சாமி) பின்னூட்ட  சாதனை பற்றி உங்கள் கருத்து?
       பன்னிக்குட்டி ராமசாமி ஒரு விளையாட்டிற்காக - ஏற்கனவே இருந்த ரெகார்ட், பிரேக் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நண்பர்கள் செய்தது அது. தவறென்று கூற மாட்டேன். தவிர்க்கலாம். இனி தவிர்ப்போம். 
***************************************************************

ஆசியா உமர்; http://asiyaomar.blogspot.com/
குடும்பத்தலைவிகள் பதிவர்களாவது பற்றி உங்கள் கருத்துஅவர்கள் இணையத்தில் நேரங்களைச் செலவழிப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன
       அது அப்பெண்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வு. பதிவர்களாகி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். குடும்பச் சுமைகளையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 


பதிவுலக அரசியல் என்றால் என்னதகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையாஇந்த அரசியலில் சிக்காமல் பிரபலமாவது எப்படி?
       பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது 


சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமாதாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
      சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள்.  வந்து செல்வதில் தடை இருக்காது.

உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
        புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை. 


ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்கள்  வைத்துக்கொள்வது பற்றி  தங்கள் கருத்துஎப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டுஅவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும்தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
      எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும். 

****************************************************************

ரத்தினவேல்; http://rathnavel-natarajan.blogspot.com/
தமிழில் வெளிவரும் வலைப்பதிவுகளில் அதிகம் படிக்கப்படும் 'முதல் பத்து வலைப்பதிவுகள்எவை என்ற விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன்.
      தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!

 ***************************************************************

Speed Master;www.speadsays.blogspot.com
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
 நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின்தங்கியுள்ளோம். மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில் குறைவாக உள்ள வியட்நாம் வது இடத்தில் உள்ளது. யாரேனும் விளக்கவும்?
      இது தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம். பல காரணங்கள் உண்டு. ஊழல் முதலான காரணம்.  

பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள். அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள்
       இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன். 

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறிகிறோம். ஏன் என்று காரணம் சொல்லவும்?
      ஆங்கிலம் -  அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டீஷ் ஆங்கிலம் என வேறுபாடுகள் உள்ளன. கலர் என்றால் color என்பதும் colour என்பதும் இந்தியாவில் வண்ணம் என்பதற்கு பயன்படுத்துகிறோம்.  


பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்பு கொடுத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கஷ்டப்படுத்துவது ஏன்?

       இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.  


வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
       பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.  

***************************************************************

அமைதி அப்பா; www.amaithiappa.blogspot.com
       நான் சமூக சீர்திருத்தம் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன்எனது மகன்எல்லா விஷயங்களையும் எழுது என்கிறான்ஆனால்நான் எப்படி ஆரம்பித்தாலும் சமுக விழிப்புணர்வை விட்டு என்னால் வெளியில் வர முடியவில்லைமற்ற விஷயங்கள் குறித்துதான் அனைவரும் எழுதுகிறார்களேநாம் இந்த ஒரு விஷயத்தோடு நிறுத்திக் கொள்வோமென்று முடிவு செய்து விட்டேன்இது சரியா
       இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது. 

நான்  எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லைஇருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
       இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.   


எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள்அந்த மாதிரியான ஒரு கேள்வியும்அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா
       அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

***************************************************************

C.P. Senthil kumar; www.adrasakka.blogspot.com
நான் கடந்த மாதமாக பார்த்ததில் வலைச்சரத்தில் ஃபிலாசபி பிரபாகரனின் உழைப்பு பிரம்மிக்க வைத்ததுஅவருக்கு எதாவது ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தீங்களா?
       வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான். 

வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
       இரண்டாம் கேள்விக்கான பதில். 


வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
       முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில். 

***************************************************************


முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com 
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
       அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர். 

ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(
பார்வையாளர் எண்ணிக்கையாநிறைய இடுகைகளா? ....????)

        இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.  


தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?

        கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா? 

         மதுரைப் பதிவர்கள் கல்லூரிகளில் தமிழ் வலைப்பூக்கள் ( பிளாக் ) பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். கல்லூரி அனுமதியுடன் - இரு வகுப்புகள் எடுக்கிறோம். பிளாக் துவங்குவது, தமிழில் எழுதுவது இவை பற்றி வகுப்பெடுக்கிறோம். ஈரோடு பதிவர்கள், திருப்பூர் பதிவர்கள் பல கல்லூரிகளில் வகுப்பெடுக்கிறார்கள். 
(ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன). 
***************************************************************
பிரபாஷ்கரன்; http://writerprabashkaran.blogspot.com/
இன்றைய வளர்ச்சி என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? 
        அறிவியல் வளர்ச்சி - தொழில் நுடப் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். அதனை பெறுவதற்கான வசதிகள் உள்ளவர்களுக்கு,
.
மேலும் வாசிக்க... ""வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1