CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts


போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்  நண்பர்களே..
டிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...

(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)
"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...?"

மேலும் வாசிக்க... "போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்..."



கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.

2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.

3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.

4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.

5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி  வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview"



பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி

(அந்த குண்டம்மாவுக்கு பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு சொல்லிட்டே பெரிய பாப்பாவுக்கு போன் செய்கிறாள் சின்ன பாப்பா.)

சின்ன பாப்பா: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்க மாட்டிங்கறாளே, இவ ஆடி அசைஞ்சு நடந்து வரவே ரெண்டு நாள் ஆகும். அதனால அடுத்து கால் பண்ணுவோம்.
(அடுத்த கால் செய்கிறாள்)
ஹலோ... ஹலோ... குண்டம்மா சீக்கிரம் போனை எடுடி.

பெரிய பாப்பா: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் பெரிய பாப்பா பேசறேன். நீங்க யாருங்க?

சின்ன பாப்பா: அக்கா, நான்தான் சின்ன பாப்பா பேசறேன். எப்படி அக்கா இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்கக்கா போயிருந்திங்க?

பெரிய பாப்பா: அடியே, நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்கடி போவேன்? இங்க வீட்டுல தாண்டி இருக்கேன். ஆனாலும் இப்ப ஒரு மாசமா ரொம்ப பிஸியா இருக்கேன்டி.

சின்ன பாப்பா: என்னக்கா சொல்றிங்க? வீட்டுல இருக்கேன்னு சொல்றிங்க, அப்புறம் ரொம்ப பிசின்னு சொல்றிங்க, புரியற மாதிரி சொல்லுங்கக்கா?

பெரிய பாப்பா: அதுவாடி, கொஞ்ச நாளா என் கணவருக்கு எம்மேல கோவமா இருந்தார்டி. அவரு நல்ல மூடுல இருக்கறப்போ என்னங்க, எம்மேல பாசமா இருக்க மாட்டிங்கறிங்கன்னு கேட்டேன். அப்பத்தான்டி மனுஷன் கொஞ்சம் வாயை தொறந்து பேசினாரு. அதாவது நான் வர வர வெயிட் போட்டுட்டே போறேனாம். உடம்பை கவனிக்கவே மாட்டிங்கறேனாம். அதான் அவர் அதை சொன்னா, எங்கே என்னைய குறை சொல்றார்ன்னு சொல்லி புலம்புவேன்னு, ஒண்ணுமே பேசாம கோவத்துல இருந்திருக்கார்.

சின்ன பாப்பா: ஓ... அப்படியா சங்கதி.. சரி, அவர் சொல்ற மாதிரி நீங்க வெயிட் அதிகமாயிட்டே தான் வறீங்க. கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுங்க அக்கா.

பெரிய பாப்பா: அடியே, வெயிட் குறைக்க ஒரு மாசமா லேடிஸ் பிட்னெஸ் சென்டருக்கு போயிட்டு இருக்கேன்டி. இப்ப தான் கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகுற மாதிரி தெரியுது. இப்பத்தான்டி எனக்குள்ள ஒரு நம்பிக்கையே வந்திருக்கு. வெயிட் குறைக்க முடியும்னு...

சின்ன பாப்பா: அக்கா ரொம்ப நல்ல விஷயம்... பிட்னஸ் சென்டருக்கு எவ்ளோ அக்கா பீஸ்? லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் இருக்கா?

பெரிய பாப்பா: அடியே, என்னடி அப்படி கேட்டுட்ட? மாசம் சுளையா அறுநூறு ரூபா தரேன்டி, எல்லா லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸும் இருக்குடி. ஆரம்பத்துல வார்மப்புல இருந்து ஹெவி எக்ஸர்சைஸ் வரை எல்லாமே இருக்குடி. அதோட டயட்டும் பாலோ பன்றேன்டி. வீட்டுல இப்ப நானும் அவரும் டயட் புட் தான் எடுத்துக்கறோம்.

சின்ன பாப்பா: அக்கா, இப்பவே உங்கள பாக்கணும் போல இருக்கு. ஆனாலும் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இந்த வீக் எண்ட்ல அங்க வரேன்.

பெரிய பாப்பா: சரிடி, எப்போ வேணாலும் வாடி.. வேறென்ன சங்கதி?

சின்ன பாப்பா: அக்கா, ஜீ தமிழ் டிவியில போடற சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் பாப்பிங்களா? பெண்கள், பொதுவான குடும்ப பிரச்சனைகளை தீர்க்குற விழிப்புணர்வு ப்ரோக்ராம்...

பெரிய பாப்பா: சில எபிசோட்ஸ் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ப்ரோக்ராம் அவசியமா இருந்தாலும், நாலு சுவத்துக்குள்ள குடும்பத்துக்குள்ள பேசி தீர்க்குற பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சத்துக்கு வருதே. அதனால அவங்களோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கேடி.

சின்ன பாப்பா: அக்கா, நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அப்படி நாலு சுவத்துக்குள்ள தீர்க்க முடியாமத் தான் இங்க வருதுன்னு சொல்லிக்கறாங்க. இப்படி ப்ரோக்ராம்ல கலந்துகிட்டு பிரச்சனை தீர்ந்தா போதும். நிம்மதி கெடச்சா போதும்னு தான் வராங்கன்னு கேள்விப்பட்டேன். ப்யூச்சர் பத்தி அவங்க கவலைப்பட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகாதுல. இந்த ப்ரோக்ராம் டைம்ல நான் சீரியல் பார்க்கிறது இல்லைக்கா...

பெரிய பாப்பா: ஆமாண்டி, சீரியலை விட பயங்கர இன்ட்ரஸ்டிங் டர்னிங்கெல்லாம் அந்த ப்ரோக்ராம்ல நடக்குது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒரே பரபரப்பா தான் இருக்கு. அதனால இந்த மாதிரி விழிப்புணர்வு ப்ரோக்ராம்ஸ் பாக்கலாம்.

சின்ன பாப்பா: அக்கா, இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு லேடிஸ் பியூட்டி பார்லர் இருக்குல. அங்க போன வாரம் புதுசா ஸ்பா அப்படின்னு தொறந்திருக்காங்க. எங்க தெரு லேடிஸ் எல்லாம் இப்ப அங்க கூட்டமா மொய்க்கறாங்க. நானும் அங்க போலாம்ன்னு பார்த்தா அந்த ஸ்பா ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. அப்படி ஸ்பான்னா என்னா அக்கா.

பெரிய பாப்பா: அடியே, ஸ்பா அப்படின்னா தண்ணீர்ல குளியல்ன்னு அர்த்தம். அதாவது நேச்சுரல் கிரீம் யூஸ் பண்ணி, மசாஜ், பேசியல், உடம்பை புத்துணர்ச்சி ஆக்கி அழுக்கை நீக்கும் மூலிகை குளியல்ன்னு விதவிதமா நிறைய இருக்கு. ரொம்ப காஸ்ட்லி தான். முன்னாடி பாரீன்ல பேமசா இருந்துச்சு. இப்போ நம்ம நாட்டுக்கும் வந்திருச்சு.

சின்ன பாப்பா: அக்கா நீங்க சொல்றத பார்த்தா அழகு பராமரிப்பின் லேட்டஸ்ட் நுட்பமா இருக்கும் போல. ரேட் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரு வாட்டியாவது அங்க போயிட்டு வரணும் அக்கா. மொதல்ல அவர் கிட்ட பெர்மிஷன் வாங்கணும். ஒரு நாளைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்.

பெரிய பாப்பா: அடியே, இப்பவே மாசம் அறுநூறு செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுல ஸ்பாக்கும் செலவு பண்ணினா அவரு ரொம்ப கோவப்பட்டிருவார். நீ போயிட்டு வாடி. அப்புறமா யோசிக்கலாம் நானும் வர்றத பத்தி...

சின்ன பாப்பா: ஓகே அக்கா. அக்கா... ஓகேன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்த ஹன்சிகா பொண்ணு இருக்குல. சிம்பு கூட கிசுகிசுல சிக்கியிருக்கு. சிம்பு கூட வேட்டை மன்னன் படத்துல ஹன்சிகா ஜோடி சேர்ந்தது மட்டுமில்லாம அடுத்த வாலு படத்துலயும் ஜோடி சேர போறாங்களாம். இதுக்கு சிம்பு ஹெவி ரெக்கமென்ட் பண்ணியிருக்காராம்.

பெரிய பாப்பா: ம்ஹும்... நல்ல ரெக்கமென்ட் தான்... சிம்பு கூட கிசுகிசுல மாட்டறது பெரிய விசயமே இல்லைடி...
(போன் கட் ஆகிறது. திரும்ப பெரிய பாப்பா போன் செய்கிறாள். சின்ன பாப்பா அட்டென்ட் செய்கிறாள்)

சின்ன பாப்பா: அக்கா, போன்ல காசு தீர்ந்து போச்சு. அதான் கட் ஆயிருச்சு. இந்த ஏர்டெல்ல ரொம்ப காஸ்ட்லி அக்கா.

பெரிய பாப்பா: ஏர்டெல் காஸ்ட்லின்னு நீதான் சொல்ற. ஆனா போன மாசம் அதிகமா ஆள் புடிச்சது ஏர்டெல் தான்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எல்லா மொபைல் காரனும் அவனால பிடுங்க முடிஞ்ச காசை பிடுங்குறான்.

சின்ன பாப்பா: ஆமாங்கக்கா.... அக்கா, அவர் வர்ற நேரம் ஆச்சு. ஏதாச்சும்  ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்கலினா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிருவார். 

பெரிய பாப்பா: என்ன டிபன் செய்யப்போறடி....

சின்ன பாப்பா: பால் பணியாரம். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதான் செய்யப்போறேன். ஓகே அக்கா... டைம் ஆச்சு.... பை... பை.... 

பெரிய பாப்பா: ஓகேடி... பை..பை....

(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)
மேலும் வாசிக்க... "பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி"



நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3


நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
எல்லோரும் போட்டோவுக்கு போஸ் தர சிபி மொபைலுக்கு போஸ் தாரார் போல!

ஹி... ஹி...அந்த மண்டபம் புல்லா தேடி ஒரு வழியா பாத்ரூமில் அவர கண்டுபிடிச்சோம். மறுபடியும் எல்லோரும் இருக்குற இடத்துக்கு வந்தா பாதி பேர காணல. எல்லா பயபுள்ளைகளும் அர்ஜென்ட்டா போயிட்டாங்க. அப்புறம் ஒரு வழியா எல்லோரும் அசெம்பிள் ஆயிட்டு மஹாலை விட்டு வெளியே வந்தா ஒரு கார் நின்னுட்டு இருந்துச்சு. உடனே மனோ வேகமா பேனட்ல ஏறி உட்கார்ந்தார். மனோ கார்ன்னு நெனச்சு சிபியும் ஏற முயற்சிக்க, யோவ், ஒரு போட்டோ எடுக்க காருக்கு வந்தா நீயும் பின்னாடியே வர்றீயே, என மனோ கலாய்க்க, சிபி நானும் போட்டோவுக்கு தான்யா வந்தேன் என சொல்ல,அவருடன் நாங்களும் இணைந்து கொள்ள  காருடன் கிளிக் செய்யப்பட்டது.  
கூலிங்கிளாஸ் போட மறந்த சிபி
மெட்ராஸ்பவன் சிவா ஐயாயிரம் தருவதாக சொன்னது மனோ மொபைலுக்கு தான்
 மனோ தனது பேஸ்புக் ஆயுதத்தால் எங்களை சுட்டார். (அதாங்க மொபைல்ல போட்டோ). கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு மண்டபத்திற்கு போனோம். கொஞ்ச நேரத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. ஆபிசர் மேக்கப் அளவா போட்டு இளமையாக இருந்தார். ஈவ்னிங் ரிசெப்சனுக்கு வருவதாக அவரிடம் சொல்லி விட்டு அவரவர் ரூமுக்கு வந்தோம். 

சும்மா ஒரு கிரியேட்டிவிட்டி. ஹி..ஹி...
நாங்கள் அவரவருக்கு தேவையான அளவு பானங்களை அடித்துவிட்டு பிரியாணி, சிக்கன் என புல் கட்டு கட்டிவிட்டு தூங்கிப் போனோம். ஈவ்னிங் எல்லோரையும் எழுப்பி மகாலுக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.  சிபி காலையில் பவுடரை அப்பியது போல மாலையும் அப்பிக் கொண்டிருக்க, போட்டோ எடுத்திருவோம்னு பயமுறுத்தியவுடன் பவுடரைக் குறைத்தார். 
மதிய உணவாக பிரியாணி
 மகாலில் பிரபுவும், கௌசல்யா அக்காவும் மரக்கன்றுடன் இருந்தார்கள். காலை முதல் அவர்கள் விருந்தினர்களுக்கு பசுமையை பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கூடல் பாலா போனில் இருமுறை பேசினார். அவரது ஊருக்கு கடைசி பஸ் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன் என சொன்னார். 
விஜயன் மற்றும் வெடிவேல் ஐயாவுடன்

யானைக்குட்டி ஞானேந்திரன் குடும்பம் சகிதம் வந்திருந்தார். பதிவுலக நண்பர்களைப் பார்த்ததில் அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். ஜோஸ்பின் கதைக்கிறேன் ஜோசப்பின் அவர்களும் குடும்பம் சகிதம் வந்திருந்தார். ஏற்கனவே போன வருஷ நெல்லை சந்திப்பில் நாங்கள் பார்த்திருந்ததால் உடனே அறிமுகம் ஆயிட்டோம். பின்னர் ஒவ்வொருத்தரையும் தனித்தனியே பெயர், பிளாக் பெயர் என கேட்டுக் கொண்டார்.
யானைக்குட்டி ஞானேந்திரனுடன் ராஜா

துபாய் ராஜா என்ற பதிவர் எங்களிடம் அறிமுகம் ஆனார். அனைவரது பதிவுகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். மனோ, பேஸ்புக் புகழ் விஜயன் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். மனோ மகளிடம் அப்பா மாங்காய் தந்தாரா என கேட்டால் இல்லை என சொன்னார். அட, பேஸ்புக்ல மகளுக்கு உப்பு காரம் போட்டு தந்ததா ஸ்டேடஸ் போட்டிருந்தது சும்மா என மனோ சொல்ல ஒரே ரகளையா இருந்துச்சு. IQ-225 level சாதனை பெண் விசாலினி பெற்றோருடன் வந்திருந்தார்.
IQ-225 level சாதனை பெண் விசாலினி
 மேடையேறி மனமக்களிடம் கிப்ட் அளித்துவிட்டு ஆபீசரிடம் ஒவ்வொருத்தரா விடை பெறவே அந்த மேடை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இன்னிசை கச்சேரியில் மேலோடி மெட்டுகள் முதல் குத்து மெட்டுக்கள் வரை களை காட்டிக்கொண்டிருந்தது. அவர்களையும் கிளிக் செய்தோம். நானும் சுரேஷ்ம் விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போ விஜயன் சுரேஷை பார்த்து நீங்க யாருன்னு கேட்க நாங்க சிரிச்ச சிரிப்பில் விஜயன் ஒரு மாதியா ஆனார். நான் வீடு சுரேஷ் என அவர் சொல்ல, அட பேஸ்புக்ல சண்டை போட்டுட்டு இவ்ளோ நேரமா யாருன்னு தெரியாம பேசிட்டு இருந்தேனே என விஜயன் அதிர்ச்சி அடைந்தார். 
டின்னரை ரசித்து சாப்பிடும் நக்கீரர், ராஜா
பின்னர் அனைவரும் டின்னர் சாப்பிட சென்றோம். சிபி மட்டும் தனியாக ஒரு மூலையில் சாப்பிட இடம் பிடிச்சார். எங்களுக்கு முன்னாடி சாப்பிட உட்கார்ந்த அவர் நாங்க சாப்பிட்டு முடிச்சு கால் மணி நேரம் கழிச்சே சாப்பிட்டு முடிச்சார். மனோவும், கருனும் சாப்பிடவில்லை. என்ன மர்மம் என தெரியவில்லை. 
ஆபீசருடன் விடைபெறுகையில்
இன்னிசைக் கச்சேரி முடியும் தருவாயில் விருந்தினர்களை நடனம் ஆட குழுவினர் அழைக்க ஒரு சின்ன பெண் முன் வந்தார். கலாசலா கலசலா  என பாட்டு அதிர ஆட்டம் ஆரம்பமானது. நடுவில் சௌந்தரும் டான்ஸ் ஆடினார். நெல்லையை விட்டுச் செல்லும் நேரம் நெருங்க மறுபடியும் ஆபீசரிடம் விடைபெற்றுக் கொண்டோம். கருனும், சௌந்தரும் கன்னியாகுமரிக்கு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நெல்லை ஜங்க்சனுக்கு சென்றோம் நெல்லையின் பாரம்பரியமான அல்வாவை வாங்கிக் கொண்டு...
கச்சேரியில்  நடனம்:
ஒரு நாள் எப்படி போச்சுன்னே தெரியல. ஆபிசரின் அன்பான வரவேற்பு, ருசியான உபசரிப்பு, முகம் பார்க்காமல் நண்பர்களாக இருந்த பதிவர்கள் முகம் பார்த்து கலாய்த்த தருணங்கள் என நெல்லைப் பயணம் வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் இருந்தது.
 -End-
முந்தைய  பாகங்களுக்கு:
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2
மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3"



நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2

1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
மேற்கண்ட  இரண்டு கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவில்...

24/04/2012 செவ்வாய் காலை எட்டு மணிக்கு கருண் போன் செய்து மச்சி ட்ரெயின் எக்மொர்ல கிளம்பிருச்சு. மதுரைக்கு ஈவ்னிங் போர் தர்ட்டிக்கு வந்திரும், கரெக்டா வந்திருடான்னு சொல்ல, ரைட்டுயான்னு சொல்லி போனை கட் பண்ணிட்டு தூங்கிட்டேன். ஆமாங்க நைட் டூட்டி பார்த்ததால தூக்கம். ஈவ்னிங் மூட்டை முடிச்ச தூக்கிட்டு கூடல்நகர்ல இருந்து ஜங்சனுக்கு வந்து சேரும் போது நல்லா மழை பெய்ய ஆரம்பிச்சது. நனஞ்சுட்டே ரெண்டாவது பிளாட்பாரம் போயி நிக்க பத்து நிமிசத்துல ட்ரெயின் வந்துச்சு. கருண், சௌந்தர் உடன் கூட்டணி சேர்ந்தாச்சு. விடாது மழையுடன் ட்ரெயின் மதுரையிலிருந்து கிளம்பியது. நக்ஸ்ம் ராஜபாட்டையும் மயிலாடுதுறை பேசஞ்சரில் பஞ்சராகி வந்திட்டு இருப்பதாக போன்ல அப்டேட் செஞ்சாங்க.
விருதுநகர் ஜங்சனில் கொட்டும் மழையில் சௌந்தர்
நெல்லை வந்து சேரும் போது மழை பெய்துவிட்டிடுச்சு. எங்களுக்கு போட்ட ரூமுக்கு போயிட்டு ரெப்ரெஷ் ஆயிட்டு லைட் டிபன் சாப்பிட்டுட்டு நல்லா தூங்கியாச்சு.
வேடந்தாங்கல் கருண், சௌந்தர், நான்

பவுடரை குறைத்த பின் சிபி

சுரேஷ்'ம் நானும்

25/04/2012 காலை, வீடு சுரேஷ், சிபி, தமிழ்பேரன்ட்ஸ் சம்பத் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். சிபி பேர்அன்ட்லவ்லி, பவுடர் போட்டு செம தூக்கலா இருந்தார். அண்ணே, கொஞ்சமா தொடச்சுக்கங்க என எல்லோரும் கோரசா சொல்ல மேக்கப் கண்ணாடியை கொஞ்ச நேரம் அழ வச்சிட்டு வந்தார். கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சிபியின் கண்டிசனோட பக்கதிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு இருக்கறப்போ திடீர்னு சிபிய காணோம், என்னடா இது கோயிலுக்கு போகனும்னு சொன்ன மனுஷன காணோம்னு சுத்தி முத்தி தேடுனா ஒரு மெடிக்கல் ஷாப் கடையில என்னமோ வாங்கிட்டு இருந்தார். 
இவருக்கு மட்டும்  மெடிக்கல்ஷாப்ல என்னமோ வச்சிருக்காங்க போல!

இந்த மனுஷன் ஈரோட்டுலயும் மெடிக்கல் ஷாப்ல என்னமோ வாங்கினார். இங்க நெல்லையிலும் ஏதோ பர்ச்சேசிங். கேட்டா கேமராவுக்கு பேட்டரி வாங்குனேன்னு சொல்றார். என்ன மர்மமோ? கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளிய வர சிபி திடீர்னு ஒரு காரை கட்டிப்பிடிச்சார். என்னான்னு கேட்டா ஹி..ஹி.... போட்டோ எடுயா, கார் கூட போஸ் தர்றேன்ல, என காமெடி செய்தார். இந்த போட்டோவை வீடு சுரேஷ் பக்காவா கிராபிக்ஸ் செய்து அவர் பிளாக்கில் வெளியிடுவதாக சொல்லி இருக்கார்.
ஐ.. ஐ... காரு... காரு....
 நக்ஸ் எங்கன்னு நீங்க கேட்கறது தெரியுது. அவர போன் போட்டு எழுப்பியும் இதோ வரேன்னு சொல்லிட்டு இருந்தார். ஆனா எங்களுடன் இணையவில்லை. பஸ் ஏறி மகாலுக்கு சென்றோம். வாசலில் ஆபீசர் வரவேற்று டிபன் சாப்பிட அழைத்து சென்றார். கேசரி, இட்லி, பொங்கல், வடை என சிம்பிள் வித் டேஸ்ட்டி ப்ரேக்பாஸ்ட் சாபிட்டோம். 
சம்பத், சுரேஷ், மனோ, பிரபு கிருஷ்ணா
கற்போம் பிரபு என்ற பலே பிரபு என்ற பிரபு கிருஷ்ணா எங்களை வரவேற்று காபி கொடுத்தார். மனதோடு மட்டும் கௌசல்யா அக்காவும் அங்கே வர, மனோ திடீரென எங்கிருந்தோ வந்து ஆஜரானார். மெட்ராஸ்பவன் சிவா அவரது கேமரா மெமரி கார்டுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு தருவதாக சொல்லி இருந்தார். ஆனா அவர் கையில் கேமரா இல்லை. அதுக்காக நக்ஸ் ரொம்பவே மாஸ்டர்பிளான் செஞ்சு வச்சிருந்ததா அப்புறமா சொன்னார். ஆளாளுக்கு ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுட்டே நல்லா டைம்பாஸ் ஆச்சு. ஸ்ரீவில்லிபுத்தூர் நடராஜன் அவர்கள் அவரது துனைவியாருடன் வந்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நடராஜன் ஐயா, அவர் துனைவியாருடன் நாங்கள்
நக்ஸ்ம் ராஜபாட்டையும் எங்களோட சேர்ந்துகிட்டாங்க. யோவ், தனியா விட்டுட்டு வந்துடிங்களேன்னு அவரு கதற நம்ம வீடு சுரேஷும், சம்பத் அவரை கூல் செய்தார்கள். அவரு மனோ கேமரா எங்க, எங்க என தீவிரமா தேட, மனோ கூலா மொபைல் மூலமா போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சார். ஆகா, இந்த கேமரா தான் மனோ பிளாக், பேஸ்புக்ல சுத்தி சுத்தி வருதான்னு அவர் மொபைலை ஆட்டைய போட மனோ பின்னாடியே சுத்திட்டு இருந்தார். மனோவிடம் விசயத்தை சொல்ல உஷாராகி வேற பக்கமா உட்கார்ந்தார்.
நக்கீரனை பார்த்து மனோ ஆச்சர்யப்படுகிறார்

சிபி  தன் ஆண்ட்ராய்டு மொபைலுடன் ரொம்பவே கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்புறமா திடீர்னு ஒருத்தருக்கு போன் போட்டு என்னமோ குசுகுசுன்னு பேசினார். ஓட்டு கேட்டப்போ தனது பாஸ்வேர்ட் சொல்லிட்டு இருந்தார். போஸ்ட் போட. திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் சிபி கையில மொபைலும் வாயில பல்லுமா ரொம்பவே துள்ளினார். என்ன என்ன என எல்லோரும் பதறி கேட்க, அவரோட போஸ்ட் பப்ளிஷ் ஆகி மொத கமென்ட்டும் வந்திருச்சுன்னு கூலா சொன்னார். 
தனது ஆண்ட்ராய்டு மொபைலுடன்கொஞ்சிக் கொண்டிருக்கிறார்

சிபி மொபைலுடன் கொஞ்சுவதை ரசிக்கும் சம்பத், நக்ஸ்

போஸ்ட் பப்ளிஷ் ஆச்சு, கமென்ட்டும் வந்தாச்சு. ஹே.. ஹே.. ஹே..
அடங்கோ, நக்கீரர் டென்சன் ஆக அவரையும் கூல் பண்ண போனா அவரும் மொபைலில் ஏதோ ஒரு பதிவை ரீடரில் வாசித்து கொண்டிருந்தார். அவரை நாங்க முறைக்க, ஹி..ஹி..ன்னு வழிஞ்சார். அது என்ன பதிவுன்னு கீழே போட்டோல பாத்து தெரிஞ்சுக்கங்க. 

நக்ஸ் மொபைலில் என்ன படித்தார்? நக்சஸிடம் போனில் கேட்கவும்
மண்டபம் போரடிக்க எல்லோரும் மகால் என்ட்ரன்ஸ்க்கு வந்தோம். அங்க பிரபுவும், கௌசல்யா அக்காவும் செடிகளுக்கு மத்தியில நின்னுட்டு இருந்தாங்க. என்னான்னு விசாரிச்சா பசுமை விடியலின் பிட் நோட்டிஸ் தந்து எல்லோருக்கும் ஒரு மரக்கன்று திருமண பரிசா தந்துட்டு இருந்தாங்க.
நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
அடுத்த பாகத்தில்....

மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2"



நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நேற்று 25-04-2012 நெல்லை மாநகரத்தில் நமது உணவு ஆபீசரான திரு. சங்கரலிங்கம் அவர்களின் மகள் திருமணம் இனிதே விமரிசையாக நடந்தது. அவரது அழைப்பிற்கேற்ப நமது பதிவுலக நண்பர்கள் வந்திருந்து ஆபீசர் வீட்டு விழாவை சிறப்பித்தார்கள்.
ஆபீசர் எங்களை வரவேற்கிறார்



காலை பத்து மணி அளவில் முகூர்த்தம். ஆபீசர் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். 

night dinner
மாலை ஆறு மணிக்கு மேல் வரவேற்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்னிசைக் கச்சேரியுடன் மாலை வேளை சூப்பராக களை கட்டியது. டின்னர் சாப்பாடு செம சூப்பர். காலை டிபன், மதிய லஞ்ச் என அனைத்துமே செம. 

இன்னிசை நிகழ்ச்சி

நண்பர்களே, இன்னும் விரிவான பதிவுகள் அடுத்தடுத்து தொடரும். நன்றி.

டிஸ்கி:
1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
3. கேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்?
4. இன்னிசைக் கச்சேரியில் அலப்பறை டான்ஸ் (வீடியோவுடன்), யாரது?

மேற்க்கண்ட கேள்விகளுக்கு விடை அடுத்த பாகங்களில்......
மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1"



அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!

சின்ன பாப்பா: அக்கா... அக்கா... வீட்டுல இருக்கிங்களா? அக்கா? (ச்சே... இந்த குண்டம்மாவுக்கு போன் பண்ணாம அவ வீட்டுக்கு வந்தது ரொம்ப தப்பா போச்சே. கதவ சாத்திக்கிட்டு என்ன தான் பண்றாளோ? காலிங் பெல் சத்தமும் காதுல விழல போல...)
பெரிய பாப்பா: அடியே, இருடி... வரேன், ஸ்டவ் ஆப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்கூட பொறுக்க மாட்டியாடி? என்னடி விஷயம், போன் கூட பண்ணாம வந்திருக்க?


சின்ன பீப்பா: ஒன்னுமில்ல அக்கா, இங்க பக்கத்துல என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்கள பாக்க வந்தேன். அப்படியே இங்க வந்தேன்.


பெரிய பீப்பா: ஓ... அப்படியா, ஏண்டி இந்த கரண்ட் கட் இப்படி பாடா படுத்துதே... எப்படி சமாளிக்கற?


சின்ன பீப்பா:எப்படியோ சமாளிக்க பழகிகிட்டேன். கரண்ட் இருக்கும் போது, நான், பிள்ளைங்க. அவருன்னு வேலைகளை பிரிச்சு ஒவ்வொருத்தரும் பாத்கிருவோம். அதனால வேலைகள் சரியா முடிஞ்சிரும் அக்கா.


பெரிய பீப்பா: ம்ஹும். உங்க வீட்டுல எல்லோருமே வேலை பாக்கரின்களா? உன்ன பாத்தா பொறாமையா இருக்குடி, உனக்கு வாய்ச்சவர் அப்படி...


சின்ன பீப்பா: ஏன் அக்கா அப்படி சொல்றிங்க, உங்க வீட்டுக்காரர் ஒன்னும் செய்ய மாட்டாரா?


பெரிய பீப்பா: என்னைக்காவது வீட்டு வேலை செய்வாரு. ஆனா நாம எதிர்ப்பாக்கும் போது செய்ய ரொம்ப பிகு பண்ணுவாரு.


சின்ன பீப்பா: நீங்க பாவம் அக்கா. சரிக்கா, என்ன சமையல் இன்னைக்கு?


பெரிய பீப்பா: அதுவா சுண்டல் குழம்பு தான் வச்சேன். சரி,சரி வா சாப்பிடு, சாப்ப்டுட்டே பேசலாம்.


சின்ன பீப்பா: எந்த குழம்பு வச்சாலும் நீங்க ருசியா தான் வப்பிங்க அக்கா..


பெரிய பீப்பா: ஏண்டி இந்த ஓகே ஓகே படம் நல்லா இருக்காமே, அப்படியா?


சின்ன பீப்பா: ஆமா அக்கா, நாங்க பார்த்துட்டோம், கதை அப்படி ஒன்னும் இல்லையாட்டியும் பொழுதுபோக்கு படமா இருக்கு.


பெரிய பீப்பா: ஓ.. நீ பார்த்துடியா! நானும் கேள்விப்பட்டேன், பார்க்கலாம்னு..


சின்ன பீப்பா: ஆமா, பாக்கலாம் தான்... ஸ்டாலின் மகன் உதயநிதி பரவாயில்லாம நடிச்சிருக்கார். ஹன்சிகா பொண்ணும் பரவாயில்ல, சந்தாணம் செம கலக்கல் அக்கா.


பெரிய பீப்பா: ம்ம்ம்... அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.


சின்ன பீப்பா: ம். அப்டியா! ஓகே ஓகே... அக்கா உங்களுக்கு ஒரு அழகு டிப்ஸ் சொல்லட்டா...


பெரியபீப்பா: ம்ம்ம்... சொல்லுடி,


சின்ன பீப்பா: மொதல்ல நீங்க உங்க வீட்டுக்காரர் மேல காட்டுற டென்ஷனை குறைங்க, அதுவே போதும்.. ஹி.. ஹி...


பெரிய பீப்பா: என்னடி சொல்ற, அவரு சொல்ற பேச்சு கேக்க மாட்டாரு. அதுக்காக நான் கொவப்படக் கூடாதா?


சின்ன பீப்பா: அக்கா, கோவப்படுங்க, செல்லமா கோவப்படுங்க, உங்க உடம்பு அதிர்ற மாதிரி ஆக்ரோசமா கோவப்படாதிங்க, அதனால உங்க அழகே கொறஞ்சு போயிரும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.


பெரிய பீப்பா: அப்படியாடி.. சரிடி, கொறச்சுக்கறேன், ஏண்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?


சின்ன பீப்பா: சொன்னாத்தானே தெரியும் அக்கா?


பெரிய பீப்பா: சொல்றேண்டி.. கேஸ் கெடைக்க ரொம்ப தட்டுப்பாடா இருக்குல. அதனால அடுப்பே இல்லாம சமைக்கலாம். ரொம்ப ஈசியானது தான்.


சின்ன பீப்பா: என்னக்கா சொல்ற? அடுப்பே இல்லாம சமையலா? சான்சே இல்லை. கடையில வேணா வாங்கி சாப்பிடலாம். வேற ஒன்னும் செய்ய முடியாது.


பெரிய பீப்பா: அடியே, சொல்றத கேளுடி, இயற்கை உணவுகள் தான் அது. ஆனா பிரியாணி முதல் அல்வா வரை அடுப்பே இல்லாம சமைக்கலாம். அதாவது இயற்கை காய்கறிகள், மசாலாக்கள், பழங்கள், அவல் என இதெலாம் வச்சு பல வகையான உணவுகளை ரெடி பண்ணலாம். இந்தா இந்த புக்ல பாரேன், எத்தனை டிஸ் போட்டிருகாங்கன்னு..


சின்ன பீப்பா: அட, ஆமாக்கா நிறைய டிஸ் இருக்கு, இது எதுக்குமே அடுப்பு தேவையில்லைங்கறது தான் ஸ்பெஷல்..


பெரிய பீப்பா: ஆமாண்டி... ஏண்டி, ஏதோ போன் சத்தம் கேட்குதே, உன்னோடதா?


சின்ன பீப்பா: அட, என் ரிங் டோன் தான் கேட்குது. யார் கூப்பிடராங்கன்னு தெரியலையே.


பெரிய பீப்பா: ஏண்டி, போனை எடுத்துப் பாருடி, அப்பதானே தெரியும்...


சின்ன பீப்பா: அயோ,அக்கா அவரு கூப்பிடறார், என்ன சொல்லப்போறார்னு தெரியலையே?
(சின்ன பீப்பா போனில் ஹலோ சொல்கிறாள். ஆனால் பிறகு பேசவில்லை, ம்ம்ம் என மட்டுமே சொல்கிறாள்)


பெரிய பீப்பா: என்னடி ஒண்ணுமே பேசாம இருக்க?


சின்ன பீப்பா: அக்கா இங்க வர்ற அவசரத்துல வீட்டு சாவிய கொண்டு வந்துட்டேன். எபப்வுமே பக்கத்து வீட்டுல தந்திட்டு வருவேன். இன்னைக்கு மறந்துட்டேன். அவரு போன்ல பரேடு எடுக்கிறார் அக்கா...


பெரிய பீப்பா: அடிப்பாவி, இப்படி செய்யலாமா? சீக்கிரம் கிளம்பு, இன்னொரு னால் பாக்கலாம்.


சின்ன பீப்பா: அக்கா, அவரே இங்க வராறாம். என்னை இந்த வெயிலில் வர வேணாம்னு சொல்லிட்டார்.


பெரிய பீப்பா: அட, அப்ப தப்பிச்ச....


சின்ன பீப்பா: அட போங்கக்கா, வீட்டுல போயி இருக்கு. இங்க வந்ததையும் அவர் கிட்ட சொல்லல. என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல.


பெரிய பீப்பா: நான் சொல்ற மாதிரி சொல்லுடி அவர் கிட்ட,


சின்ன பீப்பா: என்னான்னு சொல்ல?


பெரிய பீப்பா: ரொம்ப டென்சன் ஆனா அழகு குறஞ்சிரும்னு சொல்லுடி, அதனால கொவப்படாதிங்கன்னு சொல்லுடி,,,


சின்ன பீப்பா: அக்கா, என் டிப்ஸ் எனக்கே ரிப்பீட்டா? அக்கா, வெளிய ஏதோ பைக் சத்தம் கேட்குது. அவர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். அவர் கோவமா இருந்தா ஏதாவது சமாளிக்கணும் அக்கா.....
(சின்ன பீப்பா கணவர் வர, சின்ன பீப்பா அவருடன் கிளம்புகிறார்)
மேலும் வாசிக்க... "அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!"



"மதியோடை" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி

1 - மதியோடை - பெயர் காரணம் கூறுக.
    பெரிதாக ஒரு காரணமும் இல்லிங்க மகேஸ்வரி (அம்மா), தில்லையம்பலம் (அப்பா) என்ற என் பெற்றோரின் ஆரம்ப எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் பெயர் அவ்வளவும் தான்.
2 - நீங்கள் பதிவு எழுதும் நேரம் குறைந்து விட்டதே. என்ன காரணம் சகோ
         என் உடல் நிலை தான் முக்கிய காரணம். மற்றும்படி இப்போதும் 27 பதிவுகள் என்னிடம் சேமிப்பில் இருக்கிறது ஆனால் அவசியமானதை மட்டுமே ஒரு ஒழுங்கில் போடுகிறேன். அதிகாலையே எங்கள் இடத்தில் இணைய வேகம் மிகவும் வேகம் என்பதால் அப்போதே வாசிக்கிறேன்.
    நான்கு மணித்தியாலம் மட்டுமே ஓய்வு கேட்கும் என் கண்களுக்கு நன்றி.

3 - கிரிக்கெட்டில் நீங்கள் கைதேர்ந்த வீரராமே! இலங்கை அணியில் இடம்பெற முயற்சிக்கலாமே?
    அந்தளவுக்கு எனக்கு திறமையில்லிங்க அனால் முயற்சித்திருக்கலாம் அந்த வயதை தான் காடுகள் தின்று விட்டதே ?

4- முதல் எதிர் பின்னூட்டம் எந்த பதிவுக்கு வந்தது? அப்போது உங்கள் மனநிலை என்ன? அந்த பின்னூட்டத்திற்கு உங்கள் பதில் என்ன?
         அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற எனது 43 வது பதிவில் தான் முதல் எதிர் பின் ஊட்டம் வந்தது. அதை தந்தவர் இப்போது எனது ஒரு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல நல்ல வாசகரும் கூட. கெட்டதை மறப்போம் நல்லதை மட்டும் நினைப்போம்.

5 - இலங்கை உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற போது உங்கள் நாட்டினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? 

  நான் வசிக்கும் நாட்டில் இரண்டு அணிக்கும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கையணியின் வெற்றி பரிசு சம்பந்தமான செய்தியால் பலர் அணி ஆதரவை கைவிட்டிருந்தார்கள்.

6 - சோளம் பொறித்தல், தேயிலை இல்லா டீ போடுதல் போன்ற ஆராய்ச்சி பதிவுகள் உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுள்ளிர்களே! அதை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பலாமே?

      ஹ.. ஹ…. என்ன நக்கலா. அவை எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. ஒரு மனிதனுக்கு தேவைகள் தான் கண்டுபிடிப்புகளை தோற்றுவிக்கும் என்பதற்கு உதாரணமாகும். பொருள் தட்டுப்பாடு, பண நெருக்கடி என பலதையும் பழகிக் கொண்ட வன்னி மக்களால் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

7 - உங்களை பற்றி ஒரே வரியில் சொல்ல சொன்னால் எப்படி சொல்வீர்கள்?

         “நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை“

8 - முதல் பின்னூட்டமாக "சுடு சோறு எனக்குதான்" அப்படின்னு போடுறிங்களே! எப்படி இந்த ஐடியா வந்தது?

     வன்னி போன்ற இடங்களில் இப்போதும் எம் பழங்கால தமிழ் அப்பழுக்கில்லாமல் உயிர்வாழ்கிறது அவற்றை வெளிக் கொணரணும் என்ற ஆசையில் தான் செய்கிறேன் உதாரணமான மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) என்ற வசனமாகும். முகம் என்பதை விட மூஞ்சி என்பது அழகானதாம்.

9 -உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான தருணங்களில் உங்கள் உதவிக்கு வந்தவர் யார்? அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.                     

  ஒருவரல்ல இருவர் முதலாமவர் என்னை தனது முதல் பிள்ளையாக கருதி தூக்கி வளர்த்த அக்கா அவர் ஒரு விஞ்ஞான அசிரியராவார் நான் தப்பச் செய்தால் தன்னை தண்டித்த என்னை திருத்தும் ஒருவர். அடுத்தவர் பெரும்பாலன பதிவர்களின் வாசகரான என் நெருங்கிய நண்பர் ஜீவன் தான் உதவுவார். என் பதிவகளில் அடிக்கடி தலைகாட்டுவார். என்னை விட அதிக வயது மூத்தவரானாலும் எம் நட்பை விபரிக்க வார்த்தைகள் இல்லை

10 - நீங்கள் எப்படி பதிவுலகம் வந்திர்கள்? பதிவெழுத வந்ததன் நோக்கம் ?

        நான் முகாமில் இருந்த காலத்தில் களவாகப் பார்க்கும் தினக்குரல் பத்திரிகையில் வரும் இணையத்தில் நம்மவர் பகுதி தான் வரத் தூண்டியது அதில் வந்தும் விட்டேன். ஆனால் எழுத ஆரம்பிக்கும் போதே நினைத்தவை என்ன நடந்தாலென்ன என்ன எதிர்ப்ப வந்தாலென்ன போருக்கும் போதைப் பொருளுக்கும் எதிராகவே எழுதணும் என்பது தான். (சாராயத் தயாரிப்பு பதிவிலும் அதன் விளைவை சொல்லியிருக்கிறேன்)

11 - நல்ல சமூக விழிப்புணர்ச்சி பதிவுகளை வழங்கும் நீங்கள் 18+ பதிவகளையும் எழுதவதன் காரணம் ?
    ஹ… ஹ… யார் சொன்னது அது 18+ என்று அதில் ஆபாசமோ அருவருப்பன வசனமோ இருக்காது ஏதாவது அறிவியல் அல்லது சமூக விழிப்புணர்வே இருக்கும். அதன் அர்த்தம் 18+ ற்க உட்பட்டவருக்கு தேவைப்படாது என்பதாகும்.

12 - சிங்கள ராணுவ வீரர்கள், புலி வீரர்கள் இருவரிலும் ராணுவ ரீதியாக பார்க்கையில் உங்கள் கண்ணில் எப்படி இருந்தார்கள் ?
            இருவரதும் உயிர்கள் தான் கண் முன் தெரியும். இருவருக்கு ரத்தம் போனாலும் எம் கைகள் நீள யாரும் தடை போட்டதில்லை.

13 - இந்த பரவகாலத்தின் ஈழத் தமிழர், புலம் பெயர் தமிழர் ஒப்பீட்டு பிரச்சனைக்கு நீங்கள் தான் ஆரம்பகர்த்தாவாமே உண்மையா ? காரணம் என்ன?
உண்மை தான். ஆனால் புலம்பெயர்ந்தவர் என வார்த்தைச் சுட்டலில் அடக்கப்பட்டாலும் எல்லோரும் அப்படியல்ல எம்மைபுரிந்த பலர் இருக்கிறார்கள். இப்போதும் வன்னியின் வவுனிக்குளம் பகுதிக்கு கனடாவில் வாழும் சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தம் சொந்தப் பணத்தில் பல குடும்பத்திற்கு உதவுகிறார்கள். காரணங்கள் பல முக்கியமாக தவறான புரிந்தணர்வுகளே , மேலும் சிலரிடம் அவர்களது குடியுரிமை பெறுவதற்கான போராட்டம் , போர் வெறி கொண்டிருக்கும் மக்களை நாம் திசை திருப்பி விடுவோமா என்ற பயம் என சின்ன சின்ன காரணங்கள் நீண்டு செல்கிறது…

இதுவரை  எனது கேள்விகள் இடம்பெற்றது. இனி வாசகர்களின் கேள்விகள்:
சித்தார மாகேஷ்
(சுவர் தேடும் சித்திரங்கள் – http://siththara-mahesh.blogspot.com/ )
-அண்ணா தங்கள் படைப்புக்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது எப்படி இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் உங்களால் நேர முகாமைத்தவம் பண்ண முடிகிறது ?
பெரிதாக ஒன்றுமில்லை தங்கா மனதையும் உடலையும் எந்த வலியையும் தாங்குமளவுக்கு வளர்த்துக் கொண்டால் போதும்.. செந்தாமரையில் ஆசை வைத்தால் சேற்றிலிருந்தாலென்ன ஆற்றில் இருந்தாலென்ன பறித்தே தீரணும் என்று நினை எல்லாம் கூடிவரும்..
- ஏன் நீங்கள் நகைச்சுவை படைப்புகளையும் கொஞ்சம் முயற்சிக்கலாமே? தாங்கள் சிறந்த நகைச்சுவையாளன் என்பது எமக்கு மட்டும் தெரிந்தால் போதுமா உலகுக்கும் தெரிய வேண்டாமா ?
உங்கள் ஆதாங்கம் புரிகிறது உங்க முகத்தின் முன்னே நடந்து கொள்வது வேறு…. எழுத வரும் போது அடிக்கடி சிரியசான பதிவு போடும் இந்த நகைச்சுவையாளனை எந்த கண் கொண்டு பார்ப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் தான் காரணம். பதிவுகளின் முக்கியத்துடன் ஒப்பிடுகையில் என்னிடம் உள்ள நகைச் சுவை பதிவை விட சமூக பதிவே காத்திரம் கூடியதாக இருக்கிறது.

- உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறதே என்ன காரணம் ?
என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்

மதுரன்
(கூதற்காற்று - http://koothatkatru.blogspot.com/ )
- வன்னி பிரதேசம் போர் மேகங்களால் சூழப்பட்டு தொழில்நுட்பத்தில் மிகவும்பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. ஆனால் நீங்கள் எம்போன்ற பல பதிவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல உதவிகளை வழங்கி வருகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?
இதிலென்ன இருக்கிறது சகோதரம் கொஞ்ச ஆங்கில அறிவும் தேடலும் தான் காரணம் அதை விட முக்கியம் உதவி செய்வதில் வரும் ஒரு வித ஆத்ம திருப்தியும் தான்… என்னை விட அதிக தொழில் நட்பம் தெரிந்த வன்னி பதிவர் ஒருவர் இருக்கிறார் தெரியும் தானே..

- உங்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?
உண்மையாவே அது எப்படி வந்ததென்று எனக்கு தெரியாது சகோதரம்…. சிறுவயதிலேயே எதையும் கிண்டிக் கிளறுவேன் அப்படி செய்கையில் ஏதாவது கண்டு பிடிப்பேன் அதை நானே பிரயோகித்தும் பார்ப்பேன்… அவ்வளவும் தான்

தம்பி கூர்மதியன் kooranpathivu.blogspot.com
- தங்களின் விவர பக்கத்தில் தங்களது ஆரவங்கள் என்று பார்க்கையில் //போர் ஆதரவாளருக்கு எதிரான செயற்பாடு// என்று சொல்லியிருந்தீர்கள் அப்படியானால் தனியொரு ஈழம் அமைவதில் தங்களுக்கு விருப்பமில்லையா??? இல்லை ஆயிரம் ஆயிரம் உயிரை இழக்க செய்து தனியொரு ஈழத்தை பெற்று அந்த பிணங்கள் மீது புதிய ஈழத்தின் வாழ்க்கை தொடங்குவதில் உங்களுக்கு விருப்பமில்லையா?
முதலாவதை எல்லோருமே விரும்புகிறோம் ஆனால் இரண்டாவது மட்டும் தான் தீர்வென்பதை தான் நான் வெறுக்கிறேன்… யாரும் வெற்றியை பெறலாம் ஆனால் அது தக்கவைத்திருக்கும் போதே சாதிப்பதை சாதிக்கணும்.. சரியான பருவகாலத்தில் சரியான முடிவெடுக்கணும்..

- அந்நிய குண்டுகள் உங்கள் உடம்பை தைத்துண்டா???
குண்டுகளுக்கு தெரிவதில்லை நாம் ஒருவனை கொல்லப் போகிறோம் என்று சுட்டவன் மட்டும் தான் அறிவான்….. அதற்கு நல்லவன் கெட்டவன் என்ன வித்தியாசம் தெரியாது… சகோதரம்..

- இந்திய நாட்டில் தாங்கள் மறக்க முடியாத பிரபலமோ சாதாரண மனிதரோ யார்.??? ஏன்???
மேன்மை தகு ஜனாதிபதி அப்துல்கலாம் தான்…. அவரை எனக்கு மட்டுமல்ல உலகுக்கே பிடிக்கும்…. வடநாடே ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க துடிக்கையில் மனிதாபிமானத்தோடு கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு விடுவிக்கச் சொன்னாரே அந்த தருணம் யாராலும் மறக்க முடியாது…

லட்சுமி www.echumi.blogspot.com
- நண்பா, சிறப்பு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளந்திருக்கீங்க. திறமை இருப்பதால தானே வாய்ப்பு தேடி வருது. இவ்வளவு வளர்ந்ததற்கு கடுமையா உழைச்சிருப்பீங்களே? அதை எல்லாம் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
என் உழைப்பு என்பதை விட என்னை வளர்த்தவரின் வளர்ப்புத் தான் காரணம் அம்மா… இந்த பதிவுலகத்தை என் குடும்பம் போல் தான் கருதுகிறேன். எல்லோருக்கும் ஒரு தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்… யாரும் என்னை எதிரியாக கருதினாலும் அவர்களை நான் உறவினனாகவே பார்க்கிறேன்…. இவை தானம்மா எனது வெற்றி ரகசியம் வேறொன்றுமில்லை..

கோமு gomathykomu@gmail.com
- ஹாய் ம. தி. சுதா. முதலில் வாழ்த்துக்கள். இந்த சந்தோஷத்தை எப்படி உணர்கிறீர்கள்.?
மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என் உறவுகள் மனதுக்குள் என்னிடம் கேட்க இருந்ததை வெளிப்படையாக கேட்பதும் என்னால் முடிந்ததற்கு பதில் அளிப்பதையும் இட்டு இதை தந்த பிரகாசுக்கு மிக்க நன்றி சொல்லணும்.

- வாரம் மூணு பதிவாவது எழுதுவீங்களா? டைம் கிடைக்குதா?
ஆமாங்க பதிவு எழுத நேரம் கிடைக்கிறது ஆனால் பிரசுரிக்கத் தான் நேரமில்லை என் பதிவுக்கு கருத்திடும் நபர்களுக்காவது கருத்திடணும் அது முடிந்த பின் தான் அடுத்த பதிவு போடுவேன்.

- வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
பதிவர், பதிவு இரண்டும் வேறு வேறு அவரை வாசிப்பதானால் நெருங்கிப் பழகுங்கள். பதிவை வாசிப்பதானால் நல்ல ஆணித்தரமான கருத்தை வழங்குங்கள். உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..

நிரூபன்.http://www.thamilnattu.com/
- இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். இதே இலக்கிய மொழி நடையினையோ, அல்லது எமது மரபுகளையோ தொடர்ந்தும் தக்க வைக்காது தனி மனிதனது எண்ணங்களினூடாகவும், தனி மனிதனின் சுதந்திர சுயாதீன ஊடகத்தினூடாகவும் வலைப் பதிவுகளை எழுதி வரும் நாங்கள் ஏன் எங்களின் கடந்த கால விடயங்களைப் பதிவுகளாக்கப் பின் நிற்கிறோம்?
இவ் வினாவின் உப விடயங்களாக, அரசியலை விடுத்து, எமது அவலங்களை உற்று நோக்கினால், நடு நிலமையுடன் ஒரு தனி மனிதனது எண்ணங்களூடாக வெளி வரக் கூடிய வன்னியின் வாழ்வியல் சார்ந்த படைப்புக்கள் (இலங்கையில் 2008ம் ஆண்டுகளிற்குப் பின்னரான காலப் பகுதியினைக் குறிப்பிடுகிறேன்) இல்லை என்றே கூறலாம். இந்த எழுதப்படாத அவலங்கள் யாவும், காலவோட்டத்தில் கரைந்து போய் விடுமா? இல்லை காத்திரமான முறையில் தொகுக்கப்படுமா? உங்களின் எண்ணவோட்டத்தில் வலைப் பதிவுகள் மூலமாக எவரையும் சாடாத/ சாராத, ஒரு போர்க்கால படைப்புக்களை தனியாகவோ, அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்தோ வழங்குவது சாத்தியமாகுமா?

அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?
ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்..

செங்கோவி: www.sengovi.blogspot.com
- ஈழத்தில் இன்னும் ஆயுதப் போராட்டதிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? அல்லது மீண்டும் தந்தை செல்வா வழியில் அஹிம்சைப் போராட்டத்திற்கு திரும்ப வேண்டிய நேரமா இது?
ஈழத்தில் இப்போ இந்த ரெண்டுக்கும் சாத்தியமில்லை காரணம் எந்த இளைஞனிடமும் சரியான தொழில் வாய்ப்பில்லை பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு சிறிய நாட்டிற்காவது போய் குடும்பத்தை கவனிக்க வேண்டுமென்பது பற்றித்தான் சிந்தனையெல்லாம் இருக்கிறது. மற்றும்படி எல்லாம் வாய்ப் பேச்சுத் தான் சகோதரம்..
- சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சகஜமான சூழ்நிலை அங்கு நிலவுகிறதா?
சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…

- பதிவுலகில் உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி
-ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று நம்புகிறீர்களா?
அவர் செய்தது தப்பு என என்னால் சுட்டிக்காட்ட முடியும் சகோதரம் ஆனால் அதை துரோகம் என வரையறுக்கலாமா தெரியல காரணம் அப்படி பார்த்தால் பல துரோகிகளை பட்டியல்ப் படுத்த வேண்டியிருக்குமே. 
- உங்களுக்கு பிடித்த பதிவு/பதிவர்? காரணம்?
மீனவர்களுக்காக எழுதப்பட்ட அத்தனை பதிவும் என்னை கவர்ந்தவையே.. பதிவுலகம் எவ்வளவு ஒற்றுமையானது என பலரை திரும்பிப் பார்க்க வைத்த தருணம் அது அதற்காக பதிவிட்டவர் ருவிட்டியவர் கருத்திட்டவர் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்..
- இலங்கையில் தற்போது சூழல் எப்படி இருக்கிறது?
போர் நடக்கவில்லை என்ற மனத் துணிவு பிறந்ததால் பல கட்டடங்கள் தலை நிமிர்த்துகிறது.. பெற்றொர் துணையில்லாமல் தனியாக பல்வேறு வயது மட்டத்தவரும் வெளிக்கிட்டுத் திரிகிறோம் (ஆனால் சோதனைகள் நிறுத்தப்படவில்லை) மிக முக்கியமாக அடுத்த நாள் காலை உயிரோடு எழலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையில் படுக்கப் பழகி விட்டோம்.

முத்து குமார், குவைத்
தோ்தல் முடிவுக்குப் பின் வைகோவின் நிலை என்ன?
அடுத்த தேர்தல் வரும் போது தான் தெரியும் சகோதரம்..

Chitra Solomon www.konjamvettipechu.blogspot.com
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
....உண்மை..... தன் மனதில் உள்ள உணர்வுகளை .....தனக்கு நியாயம் என்று படுவதை, துணிந்து எழுதும் சுதாவுக்கு வாழ்த்துக்கள்!
- எத்தனயோ சோதனைகளை, வேதனைகளை கடந்து வந்து கொண்டிருக்கும் இவர், எப்பொழுதும் positive ஆக சோர்ந்து போகாமல் எப்படி இருக்க முடிகிறது?
நாங்கள் வாழ்க்கையை உயிராக காதலிக்கிறோம் அக்கா… காதலி எது செய்தாலும் உண்மை காதலன் என்ன செய்வான்…. எல்லாம் பழகி விட்டது அக்கா..

சிவா
- என்போன்ற புதியவர்களுக்கு வலைப்பதிவு பற்றிய தொழில்நுட்பம் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகம்களை எப்படி சரியாக தீர்க்கமுடியும்?
தெரிந்த குறுக்க வழிகளை காட்டுவோம் சகோதரம் இல்லாவிடில் எமக்கு மூத்த சசி போன்ற தொழில் நுட்ப பதிவர்களிடம் பரிந்துரைப்போம்..
- புலம்பெயர் தேசத்தில் இப்போது அதிகமான புதியவர்கள் எழுதுகின்றோம் நம்பதிவுகளை எப்படி அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க முடியும்!?
எனக்குத் தெரிந்தவரை மற்றவருக்கு அறிமுகமாக ஒரே வழி கருத்திடலும் கருத்தின் கீழ் பதிவின் தொடுப்பிடலும் முக்கியமாக திரட்டிகளில் இணைப்பதுமே..

- நாகரிகம்மற்ற பின்னுட்டம் இடும் பதிவர்களை எவ்வாறு இனம் கானுவது?
கருத்துக்களில் மட்டுமே அடையாளம் காணலாம் சகோதரம் ஹ… ஹ.. இல்லாவிடில் அவர்கள் வீட்டு போனால் வாசலில் கோலத்திற்கு பதிலாக ஏதாவது எழுதி வைத்திருப்பார்கள்.. அவர்கள் கருத்துப் பெட்டியில் இடுவது அவர்களது வீட்டில் அழைக்கப்படும் செல்லப் பெயர்களைத் தானே… ஹி.. ஹி

மகாதேவன் V.K www.thagavalthulikal.blogspot.com
- நீங்கள் பதிவெழுதிய பிறகு ஏன் இந்தப்பதிவை எழுதினேன்/பதிவிட்டேன் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
ஆமாம்… அசினிடம் நான் உதவி கேட்டு எழுதிய பதிவை 9 இணையத்தளங்கள் அவருக்கெதிரான பரப்புரைக்கு அதை பயன்படுத்திய போது மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டேன்..
- "பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும்" இந்தப்பழக்கம் எப்படி வந்தது? எந்த வயதில் வந்தது?
பாண் சுற்றி வருவது என்று ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் சொன்னேனுங்க… எனக்கு 6-7 வயதிலேயே இப்பழக்கம் வந்தது.. நூல் நிலையங்கள் சென்று பழைய பத்திரிகைகளுக்கு ஒரு தொகை பணம் கொடுத்து வாங்குவேன்.. பலர் ஒரு பத்திரிகைக்கு போட்டியிட்டால் பத்திரிகை வந்து அடுத்த நாளே போய் கிழித்து சட்டை பையில் மறைத்து கொண்டு வந்துவிடுவேன்.
ஆனால் ஒன்று இப்போ என்னிடம் இருப்பது மிக கொஞ்சமேயாகும் மீண்டும் சேகரிக்கிறேன்..
- இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டா ? அப்படியானால் அங்கே நீங்கள் சந்திக்க விரும்புவது யாரை (அரசியல்வாதி, நடிகர்கள் அல்லது நண்பர்கள் உறவுகள்) ?
நிச்சயமாக மிகவும் விரும்புகிறேன் காரணத்தை என்றொ ஒரு நாள் அறிவீர்கள் சகோதரம்..

ஆச்சி www.aatchi.blogspot.com
- தமிழக தமிழ் பல ஸ்லாங்குகளில் பேசப்படுவது போல இலங்கை தமிழும் பல ஸ்லாங்குகளில் பேசப்படுகிறதா?
ஆமாம் இங்கு ஊருக்கு ஊர் ஒரே சொல்லை பலவிதமாக அழைப்போம் அதிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்..
- அரசியல்,கல்வி அல்லது ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடும்படியான பெண்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். எனக்கு குமாரதுங்கா பண்டாரநாயக்காவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
பலர் இருக்கிறார்கள் நிங்கள் குறிப்பிட்டவரின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட முதல் பெண் பிரதமர் என்ற பெரும் சாதனைக்குரியவர் தமிழிலும் பல பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியலிங்க..
- நீங்கள் மருத்துவரா? இருப்பின் உங்கள் மருத்துவம்& வாழ்க்கை பற்றி சொல்லவும்.
ஆமாம் ஒரு தனியார் மருத்தவராக கடமை புரிந்தேன் இறுதியாண்டை தொடர பொரளாதாரம் இடம் தராததால் அந்த கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு ஒரு அரசு சார்பற்ற நிறுவனமொன்னில் மனதுக்கு திருப்தியான பணியொன்றை தேர்ந்தெடுத்து பணி புரிகிறேன்.

நிலாமதி www.mathinilaa.blogspot.com
- ஒரு நாளில் கணனிக்கு முன் எவ்வளவு நேரம் செலவிட முடிகிறது ?
அதையேன் கேட்கிறீர்கள் அக்கா கழுதை தேய்ந்து கட்டெறும்பானாலும் பரவாயில்லை என் கதை சுதா தேய்ந்து சுருட்டை புழுவான மாதிரியாச்சு..
- சமுதாய விழிப்புணர்வு உள்ள நீங்கள் பல சவால்களை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை எப்படி எதிர் கொள்ள முடிகிறது. ?
சேவை செய்வதில் ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது அதற்கு என் உடல் நிலையும் முழு ஒத்துழைப்பு தருகிறது இயலாத சூழ்நிலைகள் வரும் போது மட்டும் கொஞ்சம் தளர்வு மற்றம்படி கடவுள் என்னை சோர விடுவதில்லை.

போளூர் தயாநிதி
விடுதலை போராட்டம் என்றால் உயிர் இழப்புகள் படுகொலைகள் எல்லாமிருக்க வேண்டுமென்பதில்லை ஆயின் நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்றார் மாவோ அதுபோல இழப்பை எண்ணி வருந்தாமல் விடுதலையை முன்னொடுக்க வேண்டுமேயன்றி (இருதிகட்டத்திலும் கரும்புலிகள் வேண்டுகோள்) அங்கு ஈழத்தில் மக்கள்(போராளிகளை சொல்லமாட்டேன் ) விடுதலைக்கு பாடுபடவில்லை என எண்ணவைத்து விட்டது இதுகுறித்தான உங்களின் பார்வை என்ன ?
இது மிகவும் பெறுமதியான கேள்வி சகோதரம்.. வெளிப்படையாக கேட்டதற்க மிக்க நன்றி ஒரு வெளி நாட்டு பதிவர் என்னை பகிரங்கமாகவே கேட்டார்.. ”நீயெல்லாம் தப்பி ஓடி வந்ததால் தானே உயிரோடிருக்கிறாய்” என்றார். அப்படியானால் கரிபால்டி 3 தரம் கோழையானாரா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஒரு போரின் வெற்றி தோல்வியை பல காரணிகள் தீர்மானிக்கும் கொரில்லா யுத்தம் வேறு மரபு வழி யுத்தம் வேறு.. மக்களுக்கள் மரபு வழி யுத்தம் நடக்கையில் எவனும் கதிகலங்கித் தான் போவான்… ஒரு குடும்பத்தில் 2 பிள்ளை செத்தால் மற்ற 2 பிள்ளையாவது எஞ்சணும் என்பதற்காக தப்பி ஒடவே நினைப்பான்… சுருக்கமாக சொன்னால் ஒரு பேருந்தில் தவறி விழுந்தவனை இழுத்துப் பிடித்தால் அவன் மேலே வருவதற்குள் தேந்துய்து செத்தவிடுவான்… விழுந்தவன் முக்கியம் என்றால் பேருந்தை நிப்பாட்டணும்.. பிரயாணம் மக்கியம் என்றால் விழுந்தவனை கை விடுவதே சிறந்தது..

நாஞ்சில் மனோ: www.nanjilmano.blogspot.com
- நான் ஆட்சிக்கு வந்தால் "மாற்றத்தை" ஏற்படுத்துவேன் என்று ஆட்சியை பிடிச்சாரே ஒபாமா, அப்பிடி ஏதாவது மாற்றம் தெரிகிறதா உங்கள் பார்வையில்....?
ஆமாம் சகோதரம் இருக்கிறது தானே ஒற்றை மனிதனுக்கு இந்தளவு லட்சங்களை அள்ளி இறைத்து வெற்று உடம்பை கடலில் போட்டது பெரிய மாற்றமில்லையா ஹி... ஹி...

- விலைவாசி இப்படி உயர்ந்து வருகிறதே அதன் அடிப்படை காரணம்....?
பொருட்களுக்கான உற்பத்தி குறைந்து தேவை அதிகரிக்கின்றமை பெரும் காரணமாகச் சொல்லப்பட்டாலும்.. ஆளும் வர்க்கத்தின் சுயநலச் சுரண்டலும் தான் காரணமாக இருக்கிறது..

- நம்ம ஊர் குப்பனும் சுப்பனும் இப்போது விழிப்படைந்து வருகிறார்களா....?
நிச்சயமாக எங்கோ ஓர் கிராமப் புறத்தில் இருக்கும் குப்பன் சுப்பன் விழிப்பாயிருக்கிறான். ஆனால் பட்டணத்திலிலுக்கும் மனிதன் தான் உறக்கத்தில் இருக்கிறான்..

டிஸ்கி: கடந்த வாரம் மதிசுதா என்னிடம் மொபைலில் பேசினார். நல்ல நண்பர் அவர். அவர் நமது தளத்திற்கு ஏற்கனவே அளித்த பேட்டி இது. மீள்பதிவாக இன்று....
மேலும் வாசிக்க... ""மதியோடை" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1