CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.

2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.

3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.

4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.

5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி  வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview"



சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா"

வணக்கம் பதிவுலக நண்பர்களே,
    எல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.  

          இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம "மது"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு,  அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

      அப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி). 

காலை நடந்தது என்ன?
"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,
... ஹி..ஹி..." அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு. 

மதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.

மதியம் நடந்தது என்ன?
"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் "தென்றலின் கனவு" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,
....ஹி...ஹி... " அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.

மாலை நடந்தது என்ன?
பட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...
.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...

ரொம்ப  சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா?போதுங்க...

அடுத்த  பதிவாக, 
பதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....


ஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.
நெல்லையில்  உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:
நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?

குறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு

நெல்லையில்  நடந்த பதிவர் சந்திப்பில்:
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)
நெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....

 மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ?
மேலும் வாசிக்க... "சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" "



உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI

வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...!


Sheduled post.,
மேலும் வாசிக்க... "உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI"



சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!

வணக்கம் நண்பர்களே,
வருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்!
மேலும் வாசிக்க... "சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!"



வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!

வணக்கம் வலை நண்பர்களே,
நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன். 

இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தோழர் மதுமதி (98941 24021),
மின்னல் வரிகள் கணேஷ் (7305836166),
மெட்ராஸ்பவன் சிவா (9841611301), 
சென்னைப்பித்தன் (9444512938), 
புலவர் சா. இராமாநுசம் (9094766822),
தென்றல் சசிகலா (9941061575)
 வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.


இந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.

நன்றி,
பதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1