CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label அரட்டை. Show all posts
Showing posts with label அரட்டை. Show all posts


போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்  நண்பர்களே..
டிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...

(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)
"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...?"

மேலும் வாசிக்க... "போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்..."



விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)


இருக்கேனா? இல்லையா?
போன மாசம் மொத வாரத்தில் சில பதிவுகள் எழுதினது. அப்புறம் இப்போ தான் எழுதறேன். ரொம்ப பிஸி (எப்ப பாரு, இத ஒண்ணு சொல்லிக்கிறாங்க) அப்படி நீங்க சத்தமாவே சொல்றது கேட்குது. என்ன செய்ய, பிஸியா இருக்கறதை வேறெப்படி சொல்றது? ஆனா மொபைலில் பேஸ்புக், நண்பர்களின் பதிவுகள் என ஓரளவு இருக்கேன். ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.

வலைச்சரத்தில் எழுதிய விஜயன் துரையின் சில பதிவுகளில் அவரது உழைப்பு நன்றாகவே தெரியும். அதனால், போனில் பாராட்டு தெரிவித்தேன். அதே போல, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தேன். 

******************************************
பதிவரின் மிரட்டல் விமர்சனம்:
ஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க?ன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே? நம்ம, திடமான சீனு தான்.

******************************************
விழித்த போலீஸ்:
மதுரையில், இப்ப சமீபமா எங்க திரும்பினாலும் போலீஸ் சார், அதிக கூட்டமுள்ள ஷேர் ஆட்டோ, இருசக்கர  வண்டிகளை மடக்கி, டாக்குமென்ட் இல்லாதவங்க, சந்தேக நபர்கள் என பிடிச்சு பைன் போட்டுறாங்க. ஆனா, சில ரூல்ஸை காத்துல பறக்க விட்டுறாங்க. முக்கியமா ஹெல்மெட் பத்தி கண்டுக்க மாட்டிங்கறாங்க. எவ்வளவு தான் ஹெல்மெட் முக்கியத்துவம் பத்தி சொன்னாலும், மக்களும் சரியா பாலோ பண்றதே இல்லை. ஹெல்மெட் போடாதவங்களை போலீஸ் புடிச்சு பைன் போட்டா நல்லது தான். போலீஸ் நண்பர்களே, ஹெல்மெட் வேட்டையை தொடருங்களேன்.

என்னதான் போலீஸ் விழிப்பா இருந்தாலும், அவங்க கண்ணுல கையை வுட்டு ஆட்டுறது இந்த ஷேர் ஆட்டோக்கள் தான். அதிக கூட்டம், ஓவர் ஸ்பீடு, விபத்தை ஏற்ப்படுத்துதல் என அவங்க தொல்லை அதிகம் தான். அதனால, ஷேர் ஆட்டோவை கடுமையா கண்ட்ரோல் செய்யணும்.

ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா?

******************************************
தெளிவான பசங்க:
போன ஞாயித்து கிழமை சூரியன் எப்எம்-இல் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். தலைப்பு, படிப்பறிவா? பட்டறிவானு வாதம் நடந்துச்சு. 
 அதுல ஒருத்தர் சொன்ன சுவாரஸ்யம் கீழே:

அப்பா: டேய், அவன் உன்கூட தானே படிக்கிறான்.. அவன் தொன்னுத்தி அஞ்சு மார்க் வாங்கியிருக்கான். நீ இருபத்தி அஞ்சு மார்க் தான் வாங்கியிருக்க... உன்னை என்னடா செய்யறது?

மகன்: அப்பா திட்டாதிங்க...


அப்பா:ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்... ரெண்டு பேரும் டீப் பிரண்ட்ஸ்,ரெண்டு பேருக்கும் ஒரே டீச்சர்,ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போறீங்க......ஒண்ணாவே விளையாடுரிங்க....ஒண்ணாவே சாப்பிடுறிங்க...ஒரே கடையில புக், நோட் வாங்கறிங்க...அப்புறம் ஏண்டா, மார்க் மட்டும் ஒண்ணாவே எடுக்க மாட்டிங்கிற...அட்லீஸ்ட், பாஸ் மார்க் வாங்கலாமே...


மகன்:அப்பா திட்டுறத நிறுத்துங்க...எல்லாமே சரிதான்... ஆனா அவனுக்கும், எனக்கும் அப்பா வேறயாச்சே????

எப்புடி, பையன் விவரமா பதில் சொல்லி இருக்கான். 

******************************************
பதிவர் சந்திப்பு:


இடமிருந்து: நான், மதுரை சரவணன், G.M.பாலசுப்ரமணியன், சீனா ஐயா, ரமணி ஐயா
கடந்த வாரம் பெங்களூரில் இருந்து பதிவர் G.M. பாலசுப்ரமணியன் குடும்பம் சகிதமாக மதுரைக்கு வந்திருந்தார். ஐயா பாலசுப்ரமணியன் http://gmbat1649.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடன் மதுரை பதிவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்தோம்.மேற்கண்ட படத்தில் இன்னொரு பதிவர் இல்லை. அவர் மதுரையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர். அவரது வலைப்பூ மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள் அவரும் அன்று தான் அறிமுகம் ஆனார்.

******************************************
இலவச மென்பொருள் அறிமுகம்:
இனி ஒவ்வொரு நா.எ.க பகுதியில் ஒரு இலவச மென்பொருள் தரவிறக்க லிங்க் பகிரப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Avast Browser Cleanup Tool
Remove Toolbars And Disable Unwanted Add-Ons From Your Favourite Browsers.
Features:
  1. Remove toolbars and disable unwanted add-ons from Internet Explorer, Mozilla Firefox and Google Chrome.
  2. It can help you remove browser toolbars and plugins from the system that either have a bad reputation based on community ratings, or that aggressively modify system settings.
  3. Avast Browser Cleanup is a portable tool, which means you won’t need to go through any installation hassles, and can use it on the go from a USB flash drive.
  4. Apart from removing toolbars and unwanted add-ons from supported browsers, the application also lets you disable any browser add-ons that you don’t require to be active all the time, but still want to keep installed.
  5. Avast Browser Cleanup also features an option to reset your current browser settings to the default values.
  6. The program detects major toolbars such as the Ask toolbar, Babylon Search toolbar or the AVG Security toolbar and many minor toolbars and plugins.
  7. It works on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8.
Download here
******************************************

ஜில் ஜில் ஜிகர்தண்டா:


மேலும் வாசிக்க... "விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)"



கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.

2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.

3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.

4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.

5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி  வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview"



பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி

(அந்த குண்டம்மாவுக்கு பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு சொல்லிட்டே பெரிய பாப்பாவுக்கு போன் செய்கிறாள் சின்ன பாப்பா.)

சின்ன பாப்பா: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்க மாட்டிங்கறாளே, இவ ஆடி அசைஞ்சு நடந்து வரவே ரெண்டு நாள் ஆகும். அதனால அடுத்து கால் பண்ணுவோம்.
(அடுத்த கால் செய்கிறாள்)
ஹலோ... ஹலோ... குண்டம்மா சீக்கிரம் போனை எடுடி.

பெரிய பாப்பா: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் பெரிய பாப்பா பேசறேன். நீங்க யாருங்க?

சின்ன பாப்பா: அக்கா, நான்தான் சின்ன பாப்பா பேசறேன். எப்படி அக்கா இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்கக்கா போயிருந்திங்க?

பெரிய பாப்பா: அடியே, நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்கடி போவேன்? இங்க வீட்டுல தாண்டி இருக்கேன். ஆனாலும் இப்ப ஒரு மாசமா ரொம்ப பிஸியா இருக்கேன்டி.

சின்ன பாப்பா: என்னக்கா சொல்றிங்க? வீட்டுல இருக்கேன்னு சொல்றிங்க, அப்புறம் ரொம்ப பிசின்னு சொல்றிங்க, புரியற மாதிரி சொல்லுங்கக்கா?

பெரிய பாப்பா: அதுவாடி, கொஞ்ச நாளா என் கணவருக்கு எம்மேல கோவமா இருந்தார்டி. அவரு நல்ல மூடுல இருக்கறப்போ என்னங்க, எம்மேல பாசமா இருக்க மாட்டிங்கறிங்கன்னு கேட்டேன். அப்பத்தான்டி மனுஷன் கொஞ்சம் வாயை தொறந்து பேசினாரு. அதாவது நான் வர வர வெயிட் போட்டுட்டே போறேனாம். உடம்பை கவனிக்கவே மாட்டிங்கறேனாம். அதான் அவர் அதை சொன்னா, எங்கே என்னைய குறை சொல்றார்ன்னு சொல்லி புலம்புவேன்னு, ஒண்ணுமே பேசாம கோவத்துல இருந்திருக்கார்.

சின்ன பாப்பா: ஓ... அப்படியா சங்கதி.. சரி, அவர் சொல்ற மாதிரி நீங்க வெயிட் அதிகமாயிட்டே தான் வறீங்க. கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுங்க அக்கா.

பெரிய பாப்பா: அடியே, வெயிட் குறைக்க ஒரு மாசமா லேடிஸ் பிட்னெஸ் சென்டருக்கு போயிட்டு இருக்கேன்டி. இப்ப தான் கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகுற மாதிரி தெரியுது. இப்பத்தான்டி எனக்குள்ள ஒரு நம்பிக்கையே வந்திருக்கு. வெயிட் குறைக்க முடியும்னு...

சின்ன பாப்பா: அக்கா ரொம்ப நல்ல விஷயம்... பிட்னஸ் சென்டருக்கு எவ்ளோ அக்கா பீஸ்? லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் இருக்கா?

பெரிய பாப்பா: அடியே, என்னடி அப்படி கேட்டுட்ட? மாசம் சுளையா அறுநூறு ரூபா தரேன்டி, எல்லா லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸும் இருக்குடி. ஆரம்பத்துல வார்மப்புல இருந்து ஹெவி எக்ஸர்சைஸ் வரை எல்லாமே இருக்குடி. அதோட டயட்டும் பாலோ பன்றேன்டி. வீட்டுல இப்ப நானும் அவரும் டயட் புட் தான் எடுத்துக்கறோம்.

சின்ன பாப்பா: அக்கா, இப்பவே உங்கள பாக்கணும் போல இருக்கு. ஆனாலும் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இந்த வீக் எண்ட்ல அங்க வரேன்.

பெரிய பாப்பா: சரிடி, எப்போ வேணாலும் வாடி.. வேறென்ன சங்கதி?

சின்ன பாப்பா: அக்கா, ஜீ தமிழ் டிவியில போடற சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் பாப்பிங்களா? பெண்கள், பொதுவான குடும்ப பிரச்சனைகளை தீர்க்குற விழிப்புணர்வு ப்ரோக்ராம்...

பெரிய பாப்பா: சில எபிசோட்ஸ் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ப்ரோக்ராம் அவசியமா இருந்தாலும், நாலு சுவத்துக்குள்ள குடும்பத்துக்குள்ள பேசி தீர்க்குற பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சத்துக்கு வருதே. அதனால அவங்களோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கேடி.

சின்ன பாப்பா: அக்கா, நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அப்படி நாலு சுவத்துக்குள்ள தீர்க்க முடியாமத் தான் இங்க வருதுன்னு சொல்லிக்கறாங்க. இப்படி ப்ரோக்ராம்ல கலந்துகிட்டு பிரச்சனை தீர்ந்தா போதும். நிம்மதி கெடச்சா போதும்னு தான் வராங்கன்னு கேள்விப்பட்டேன். ப்யூச்சர் பத்தி அவங்க கவலைப்பட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகாதுல. இந்த ப்ரோக்ராம் டைம்ல நான் சீரியல் பார்க்கிறது இல்லைக்கா...

பெரிய பாப்பா: ஆமாண்டி, சீரியலை விட பயங்கர இன்ட்ரஸ்டிங் டர்னிங்கெல்லாம் அந்த ப்ரோக்ராம்ல நடக்குது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒரே பரபரப்பா தான் இருக்கு. அதனால இந்த மாதிரி விழிப்புணர்வு ப்ரோக்ராம்ஸ் பாக்கலாம்.

சின்ன பாப்பா: அக்கா, இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு லேடிஸ் பியூட்டி பார்லர் இருக்குல. அங்க போன வாரம் புதுசா ஸ்பா அப்படின்னு தொறந்திருக்காங்க. எங்க தெரு லேடிஸ் எல்லாம் இப்ப அங்க கூட்டமா மொய்க்கறாங்க. நானும் அங்க போலாம்ன்னு பார்த்தா அந்த ஸ்பா ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. அப்படி ஸ்பான்னா என்னா அக்கா.

பெரிய பாப்பா: அடியே, ஸ்பா அப்படின்னா தண்ணீர்ல குளியல்ன்னு அர்த்தம். அதாவது நேச்சுரல் கிரீம் யூஸ் பண்ணி, மசாஜ், பேசியல், உடம்பை புத்துணர்ச்சி ஆக்கி அழுக்கை நீக்கும் மூலிகை குளியல்ன்னு விதவிதமா நிறைய இருக்கு. ரொம்ப காஸ்ட்லி தான். முன்னாடி பாரீன்ல பேமசா இருந்துச்சு. இப்போ நம்ம நாட்டுக்கும் வந்திருச்சு.

சின்ன பாப்பா: அக்கா நீங்க சொல்றத பார்த்தா அழகு பராமரிப்பின் லேட்டஸ்ட் நுட்பமா இருக்கும் போல. ரேட் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரு வாட்டியாவது அங்க போயிட்டு வரணும் அக்கா. மொதல்ல அவர் கிட்ட பெர்மிஷன் வாங்கணும். ஒரு நாளைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்.

பெரிய பாப்பா: அடியே, இப்பவே மாசம் அறுநூறு செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுல ஸ்பாக்கும் செலவு பண்ணினா அவரு ரொம்ப கோவப்பட்டிருவார். நீ போயிட்டு வாடி. அப்புறமா யோசிக்கலாம் நானும் வர்றத பத்தி...

சின்ன பாப்பா: ஓகே அக்கா. அக்கா... ஓகேன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்த ஹன்சிகா பொண்ணு இருக்குல. சிம்பு கூட கிசுகிசுல சிக்கியிருக்கு. சிம்பு கூட வேட்டை மன்னன் படத்துல ஹன்சிகா ஜோடி சேர்ந்தது மட்டுமில்லாம அடுத்த வாலு படத்துலயும் ஜோடி சேர போறாங்களாம். இதுக்கு சிம்பு ஹெவி ரெக்கமென்ட் பண்ணியிருக்காராம்.

பெரிய பாப்பா: ம்ஹும்... நல்ல ரெக்கமென்ட் தான்... சிம்பு கூட கிசுகிசுல மாட்டறது பெரிய விசயமே இல்லைடி...
(போன் கட் ஆகிறது. திரும்ப பெரிய பாப்பா போன் செய்கிறாள். சின்ன பாப்பா அட்டென்ட் செய்கிறாள்)

சின்ன பாப்பா: அக்கா, போன்ல காசு தீர்ந்து போச்சு. அதான் கட் ஆயிருச்சு. இந்த ஏர்டெல்ல ரொம்ப காஸ்ட்லி அக்கா.

பெரிய பாப்பா: ஏர்டெல் காஸ்ட்லின்னு நீதான் சொல்ற. ஆனா போன மாசம் அதிகமா ஆள் புடிச்சது ஏர்டெல் தான்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எல்லா மொபைல் காரனும் அவனால பிடுங்க முடிஞ்ச காசை பிடுங்குறான்.

சின்ன பாப்பா: ஆமாங்கக்கா.... அக்கா, அவர் வர்ற நேரம் ஆச்சு. ஏதாச்சும்  ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்கலினா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிருவார். 

பெரிய பாப்பா: என்ன டிபன் செய்யப்போறடி....

சின்ன பாப்பா: பால் பணியாரம். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதான் செய்யப்போறேன். ஓகே அக்கா... டைம் ஆச்சு.... பை... பை.... 

பெரிய பாப்பா: ஓகேடி... பை..பை....

(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)
மேலும் வாசிக்க... "பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி"



நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!


கரன்ட்டுக்கும் லீவ் முடிஞ்சிருச்சு:
ஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும்  நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.

நித்யானந்தரின் விதிமுறை மீறல்?
 நம்ம  நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது????

தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:
கேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல! அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.

நடிகை அஞ்சலிக்கு  இம்சை:
நம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா?
மேலும் வாசிக்க... "நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!"



அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!

சின்ன பாப்பா: அக்கா... அக்கா... வீட்டுல இருக்கிங்களா? அக்கா? (ச்சே... இந்த குண்டம்மாவுக்கு போன் பண்ணாம அவ வீட்டுக்கு வந்தது ரொம்ப தப்பா போச்சே. கதவ சாத்திக்கிட்டு என்ன தான் பண்றாளோ? காலிங் பெல் சத்தமும் காதுல விழல போல...)
பெரிய பாப்பா: அடியே, இருடி... வரேன், ஸ்டவ் ஆப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்கூட பொறுக்க மாட்டியாடி? என்னடி விஷயம், போன் கூட பண்ணாம வந்திருக்க?


சின்ன பீப்பா: ஒன்னுமில்ல அக்கா, இங்க பக்கத்துல என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்கள பாக்க வந்தேன். அப்படியே இங்க வந்தேன்.


பெரிய பீப்பா: ஓ... அப்படியா, ஏண்டி இந்த கரண்ட் கட் இப்படி பாடா படுத்துதே... எப்படி சமாளிக்கற?


சின்ன பீப்பா:எப்படியோ சமாளிக்க பழகிகிட்டேன். கரண்ட் இருக்கும் போது, நான், பிள்ளைங்க. அவருன்னு வேலைகளை பிரிச்சு ஒவ்வொருத்தரும் பாத்கிருவோம். அதனால வேலைகள் சரியா முடிஞ்சிரும் அக்கா.


பெரிய பீப்பா: ம்ஹும். உங்க வீட்டுல எல்லோருமே வேலை பாக்கரின்களா? உன்ன பாத்தா பொறாமையா இருக்குடி, உனக்கு வாய்ச்சவர் அப்படி...


சின்ன பீப்பா: ஏன் அக்கா அப்படி சொல்றிங்க, உங்க வீட்டுக்காரர் ஒன்னும் செய்ய மாட்டாரா?


பெரிய பீப்பா: என்னைக்காவது வீட்டு வேலை செய்வாரு. ஆனா நாம எதிர்ப்பாக்கும் போது செய்ய ரொம்ப பிகு பண்ணுவாரு.


சின்ன பீப்பா: நீங்க பாவம் அக்கா. சரிக்கா, என்ன சமையல் இன்னைக்கு?


பெரிய பீப்பா: அதுவா சுண்டல் குழம்பு தான் வச்சேன். சரி,சரி வா சாப்பிடு, சாப்ப்டுட்டே பேசலாம்.


சின்ன பீப்பா: எந்த குழம்பு வச்சாலும் நீங்க ருசியா தான் வப்பிங்க அக்கா..


பெரிய பீப்பா: ஏண்டி இந்த ஓகே ஓகே படம் நல்லா இருக்காமே, அப்படியா?


சின்ன பீப்பா: ஆமா அக்கா, நாங்க பார்த்துட்டோம், கதை அப்படி ஒன்னும் இல்லையாட்டியும் பொழுதுபோக்கு படமா இருக்கு.


பெரிய பீப்பா: ஓ.. நீ பார்த்துடியா! நானும் கேள்விப்பட்டேன், பார்க்கலாம்னு..


சின்ன பீப்பா: ஆமா, பாக்கலாம் தான்... ஸ்டாலின் மகன் உதயநிதி பரவாயில்லாம நடிச்சிருக்கார். ஹன்சிகா பொண்ணும் பரவாயில்ல, சந்தாணம் செம கலக்கல் அக்கா.


பெரிய பீப்பா: ம்ம்ம்... அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.


சின்ன பீப்பா: ம். அப்டியா! ஓகே ஓகே... அக்கா உங்களுக்கு ஒரு அழகு டிப்ஸ் சொல்லட்டா...


பெரியபீப்பா: ம்ம்ம்... சொல்லுடி,


சின்ன பீப்பா: மொதல்ல நீங்க உங்க வீட்டுக்காரர் மேல காட்டுற டென்ஷனை குறைங்க, அதுவே போதும்.. ஹி.. ஹி...


பெரிய பீப்பா: என்னடி சொல்ற, அவரு சொல்ற பேச்சு கேக்க மாட்டாரு. அதுக்காக நான் கொவப்படக் கூடாதா?


சின்ன பீப்பா: அக்கா, கோவப்படுங்க, செல்லமா கோவப்படுங்க, உங்க உடம்பு அதிர்ற மாதிரி ஆக்ரோசமா கோவப்படாதிங்க, அதனால உங்க அழகே கொறஞ்சு போயிரும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.


பெரிய பீப்பா: அப்படியாடி.. சரிடி, கொறச்சுக்கறேன், ஏண்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?


சின்ன பீப்பா: சொன்னாத்தானே தெரியும் அக்கா?


பெரிய பீப்பா: சொல்றேண்டி.. கேஸ் கெடைக்க ரொம்ப தட்டுப்பாடா இருக்குல. அதனால அடுப்பே இல்லாம சமைக்கலாம். ரொம்ப ஈசியானது தான்.


சின்ன பீப்பா: என்னக்கா சொல்ற? அடுப்பே இல்லாம சமையலா? சான்சே இல்லை. கடையில வேணா வாங்கி சாப்பிடலாம். வேற ஒன்னும் செய்ய முடியாது.


பெரிய பீப்பா: அடியே, சொல்றத கேளுடி, இயற்கை உணவுகள் தான் அது. ஆனா பிரியாணி முதல் அல்வா வரை அடுப்பே இல்லாம சமைக்கலாம். அதாவது இயற்கை காய்கறிகள், மசாலாக்கள், பழங்கள், அவல் என இதெலாம் வச்சு பல வகையான உணவுகளை ரெடி பண்ணலாம். இந்தா இந்த புக்ல பாரேன், எத்தனை டிஸ் போட்டிருகாங்கன்னு..


சின்ன பீப்பா: அட, ஆமாக்கா நிறைய டிஸ் இருக்கு, இது எதுக்குமே அடுப்பு தேவையில்லைங்கறது தான் ஸ்பெஷல்..


பெரிய பீப்பா: ஆமாண்டி... ஏண்டி, ஏதோ போன் சத்தம் கேட்குதே, உன்னோடதா?


சின்ன பீப்பா: அட, என் ரிங் டோன் தான் கேட்குது. யார் கூப்பிடராங்கன்னு தெரியலையே.


பெரிய பீப்பா: ஏண்டி, போனை எடுத்துப் பாருடி, அப்பதானே தெரியும்...


சின்ன பீப்பா: அயோ,அக்கா அவரு கூப்பிடறார், என்ன சொல்லப்போறார்னு தெரியலையே?
(சின்ன பீப்பா போனில் ஹலோ சொல்கிறாள். ஆனால் பிறகு பேசவில்லை, ம்ம்ம் என மட்டுமே சொல்கிறாள்)


பெரிய பீப்பா: என்னடி ஒண்ணுமே பேசாம இருக்க?


சின்ன பீப்பா: அக்கா இங்க வர்ற அவசரத்துல வீட்டு சாவிய கொண்டு வந்துட்டேன். எபப்வுமே பக்கத்து வீட்டுல தந்திட்டு வருவேன். இன்னைக்கு மறந்துட்டேன். அவரு போன்ல பரேடு எடுக்கிறார் அக்கா...


பெரிய பீப்பா: அடிப்பாவி, இப்படி செய்யலாமா? சீக்கிரம் கிளம்பு, இன்னொரு னால் பாக்கலாம்.


சின்ன பீப்பா: அக்கா, அவரே இங்க வராறாம். என்னை இந்த வெயிலில் வர வேணாம்னு சொல்லிட்டார்.


பெரிய பீப்பா: அட, அப்ப தப்பிச்ச....


சின்ன பீப்பா: அட போங்கக்கா, வீட்டுல போயி இருக்கு. இங்க வந்ததையும் அவர் கிட்ட சொல்லல. என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல.


பெரிய பீப்பா: நான் சொல்ற மாதிரி சொல்லுடி அவர் கிட்ட,


சின்ன பீப்பா: என்னான்னு சொல்ல?


பெரிய பீப்பா: ரொம்ப டென்சன் ஆனா அழகு குறஞ்சிரும்னு சொல்லுடி, அதனால கொவப்படாதிங்கன்னு சொல்லுடி,,,


சின்ன பீப்பா: அக்கா, என் டிப்ஸ் எனக்கே ரிப்பீட்டா? அக்கா, வெளிய ஏதோ பைக் சத்தம் கேட்குது. அவர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். அவர் கோவமா இருந்தா ஏதாவது சமாளிக்கணும் அக்கா.....
(சின்ன பீப்பா கணவர் வர, சின்ன பீப்பா அவருடன் கிளம்புகிறார்)
மேலும் வாசிக்க... "அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!"



பன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details.

டிஸ்கி: நேத்து என்னிடம் ஒரு பதிவர் சாட்டில் வந்தார். பேச்சு கோக்கு மாக்காக போனது. அவரிடம் பேசியது பதிவாக.. ஹி...ஹி... ஐயோ, ராமா... சம்பத்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க.... ஹி..ஹி....
me: ஊட்டுக்காரர் என்னா பண்றாரு?

 Sr: தோசை சாப்பிட போனங்க
 me: முட்டை தோசையா?
 Sr: நான் முட்டை தோசை
me: எத்தன முட்டை
 Sr: மக்கா முட்டையில்லாத தோசை
 நான் டயட்ல இருக்கிறேன்
 me: டயட்டா?
அப்போ திருநெல்வேலிக்கு உங்க தம்பி வருவார் போல...
 Sr: ஆமாம் 40 தோசைதான் சாப்பிட்டேன்
  திருநெல்வேலிக்கு வருவேன் 4பந்தியில மட்டும் தான் சாப்பிடுவேன்
me: பத்து பந்தி போடராங்கலாம்ல
 Sr: வழக்கமா எல்லா பந்தியிலும் சாப்பிடுவேன் டயட் என்பதால் குறைவு
 me: ஆபீசர் கிட்ட சொல்லி எலா பந்தியிலும் உங்களுக்கு இடம் கேட்டு வாங்கியிருங்க
Sr: ஆபிசர் வீட்டு கல்யாணத்தை சிறப்பா எப்படி நடத்தறதாம்
 me: அதானேSr: சாப்பிட்டாச்சா....?மக்கா
 me: ம். இட்லி/சிக்கன் குழம்பு
 Sr: வழக்கம் போல 10தட்டுதானே
 me: ஹே ஹே ஹே
'உம்ம மாதிரி இல்லை, வழக்கமா நாலே நாலு இட்லி
 Sr: இன்னிக்கு மதுரையில சிக்கன் தட்டுபாடு ஆயிருச்சாம் ஏய்யா இந்த கொலைவெறி
 me: ஆமாயா
 Sr: நீர் இப்படியே சாப்பிடும் வெடிக்க போற...ஹஹஹஹme: உங்க ஊர்க்காரங்க இங்க வந்து வண்டி வண்டியா வாங்கிட்டு போயிட்டாங்கலாமே
 Sr: நமக்கு சிக்கன் கட்டுபடியாகது ஒன்லி எருமைதான்
me: ஓ அதான் போன வாரம் மதுரையில எருமை மாடுக பத்து காணாம போச்சுன்னு பேப்பர்ல போட்டிருந்தான்,
இப்ப தாம்ல புரியுது
  எல்லாமே திருப்பூர்க்கு பார்சல் ஆயிருச்சுன்னு
 Sr: ஆமா பன்றி காய்ச்சலுக்கு பன்றி கறி சாப்பிடலாமா?
புதுசு புதுசா காய்ச்சல் பேரு சொல்லராய்ங்க
  பறவை பன்றி நரி கீரின்ட்டு
 me: என்ன புது காய்ச்சலா? என்ன பேருயா?
கீரி காய்ச்சலா? அதையும் விட்டு வைக்கலியா நீங்க
 Sr: நம்ம கொவைக்காரர் சொன்னாருய்யா என்னவோ டோங்கிரியாம்ல
me: நம்ம மாம்ஸ் உங்களுக்கு கீரி கறி பார்சல் பண்றப்பவே
 Sr: வென்ட்றி.....அடச்சே இன்னா பேருய்யா வாய்லையே நுழைய மாட்டிங்குது
 me: நெனச்சேன்
Sr: செங்கோவி என்ன சீரியஸ் பதிவா போடுறாரு
  ஹலோ...என்னயா மட்டையா
 me: செங்கோவி, விமர்சனம், எழுத்தாளர் பத்தி போட்டது சீரியஸா? கொடுமையடா சாமி..
போன் செய்தேனே? போன் எங்க போச்சு
எடுக்க மாட்டறிங்க?
 Sr: என்ன போன்
  இருங்க வர்ர

me: ஏம்பா போனையும் சேர்த்து முழுங்கிட்டின்களா?
 Sr: போனை காக்கா தூக்கிட்டு போயிருச்சு...
 me: அட பாவமே, அந்த காக்காவுக்கு வடை கிடைக்கலியா?
Sr: அதோட லவ்வருக்கு மிஸ்டு கால் வுட்டுட்டு தருதாம்...
me: உம் போன்ல மிஸ்டு கால் தர்ற அளவுக்கு பேலன்ஸ் இருக்கா?
  ஆச்சர்யம்ல...
 Sr: அதெல்லாம் நல்ல நிக்க வெச்சா பேலன்ஸ் பண்ணி நிக்கும்
me: அடங்கோ... பேலன்ஸ் இல்லைங்கறத மீசையில மண் ஒட்டாத மாதிரி சொல்றிங்க?
 Sr: நம்ம போன் செங்கல் மாதிரி!
  பில்டிங்கே கட்டலாம்
me: அப்போ பேஸ்மட்டம் வீக்கா?
  பில்டிங் வீக்கா?
Sr: டோட்டல் பாடியே வீக்கா கிடக்குது பன்றி காய்ச்சல் வேற எதாவது லொள்ளு பேசினீறு பக்கத்துல வந்து தும்மிருவேன்
  ஹாாாாாச்
me: ஐயோ... ஏனிந்த கொலைவெறி...
  வேனாம்யா வேணாம்
உன் தும்மல உன்ன்டோட வச்சுக்கங்க
 Sr: அப்ப என் அக்கவுண்டல 500ரூபாய் போட்டுவிடும் இல்லை மெயில்ல தும்மிருவேன் ஜாக்கிரதை!
me: இதென்ன புது வைரஸ்ஸா
  நாம வைரஸ் கூடவா சாட் பண்றேன்
  ஐயோ
Sr: ஆமா....! கொய்யால பிளாக்கர் எல்லாருக்கு பரப்ப போகிறேன் என்னை டாட்டாய்ஸ் கொசுவர்த்தி குட்நைட் எத யூஸ் பண்ணினாலும் ஒன்னும் பண்ணமுடியாது ஹஹஹஹ
me: ஹி..ஹி.. கொசு பேட் வச்சிருக்கேன்ல.... கரண்ட் ஷாக் அடிச்சு கொன்னே பூடுவேன்யா
Sr: மக்கா எங்க ஊர் கொசு காம்ளான் குடிக்கும் போல நான் வளர்கிறேனே மம்மி என்று கிடா சைஸ்க்கு இருக்கு இனி ஆட்டுக்கு பதிலா கொசுவ வெட்டலாம் போல
உம் கொசு பேட்டை மடக்கு மடக்குன்னு தின்னு பூடும்
me: ஆமாயா.... ஓவரா பேசுருவங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம தான் பேசுவாங்க.... கிடா கொசு மடா கொசுன்னு
  ?
 Sr: யோவ் என்னயா தண்ணி கலக்காம சரக்கு அடிச்சிட்டீரா?
me: அண்ணே,நீங்க சாட்ல பேசுறத பாத்தா ஹாஸ்பிட்டல்ல பெட்ல இருந்து சாட் பன்றாப்ல தெரியுதே..... அப்போ இருந்து காய்ச்சல் மயமா பேசுறிங்க...
  சரக்கா? அப்படின்னா?
Sr: இல்லிங்க மாட்டாஸ்பத்திரிக்கு போயி எனக்கு ஒரு ஊசியும் என் நாய்குட்டிக்கு எங்க பேமிலி டாக்டர்கிட்ட ஒரு ஊசியும் போட்டுட்டு வந்து படுத்து கிடக்கிறேன்
me: அதானே பார்த்தேன்... சரக்குல தண்ணி கலக்காம அடிச்சுபுட்டு ஆளும், நாயும் மாறிப் போயி ஊசி போட்டு வந்துபுட்டு கவுந்து கேடக்கறேன்னு சொல்ல்ரிங்க...
  ஹா.. ஹா...
Sr: இல்லையா தண்ணி நிறைய குடிக்க சொன்னாரு டாக்டர்
me: ஓ... தண்ணியா... குடிங்க குடிங்க..
Sr: சரிங்க நான் தூங்க போகிறேன் குட்நைட்
 me: ஹி.. ஹி.. தண்ணி ஓவரா போச்சா?
  சரி குட் நைட்..
மேலும் வாசிக்க... "பன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details."



"வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே, தமிழ்வாசியில் முன்பே வெளியான வலைச்சரம் சீனா ஐயாவின் பேட்டி மீள்பதிவாக இங்கே...

01 : சீனா பெயர்க்காரணம் கூறுக
          என்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 
02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
          புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம்.  பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும். 
          பிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.
03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை ? ஏன் ? 
          விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத்தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான். 
04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது ? ஏன் ? 
         பணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது. 
05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் ? அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா ?
           ஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல. 
06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது ? 
         ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும். 
         நாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து ....  என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் "ம" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.  
07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே ? இதைப் பற்றி தங்கள் கருத்து ?
           எழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ?  
         இப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.
09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
         அந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.
10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் ?
        இனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.
11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது 
உண்டா ?
         லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன்.  இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே! 
12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது ?
         தாயும் தந்தையும் இறந்தது தான்.
13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல  - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா ?
         எழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?
        இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும். 
15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை ?
        பிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே !
16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் ?
        அடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே !
17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது ?
       என்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.


இதுவரை நான் சீனா ஐயாவிடம் கேட்ட கேள்விகளைப் படித்தீர்கள். இனி வாசகர்கள், நண்பர்களின் கேள்விகள். 


ம.தி.சுதா; www.mathisutha.blogspot.com
என்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது? 
          வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால்  துவங்கப்பட்டு 11.11.2006  - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார். பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தாநதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும்       முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார்.   பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.
*************************************************************** 
ரஹீம் கஸாலி; http://ragariz.blogspot.com/

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? 
       குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான். 

***************************************************************
நா.ஜானகிராமன்; http://podhujanam.wordpress.com/
பதிவுகளின் பின்னுட்டத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்களை (மீ த பர்ஸ்ட்முத வடைமுத வெட்டுரைட்டுஇன்ன பிறபோடுபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? 
        மட்டுறுத்தல் வைக்கலாம். வெளியிடாமல் இருக்கலாம். போனாப்போறாங்களே! போட்டுட்டுப் போறாங்களே!  

இன்னும் வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
        பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். 

புதிதாக எழுத வரும் புதுப்பதிவர்களை ஆக்கப்பூர்வமாக உற்சாகப்படுத்தி வழிநடுத்துவதில் பிரபல பதிவர்களின் பங்கு என்ன? (இப்பல்லாம்பதிவர்கள் பிரபலமாய்டாலே அவருக்கென்று ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு சுருங்கிவிடுகிறார்கள் /புதுப்பதிவர்களின் பதிவுகளுக்கு கமெண்டிடுவதை நேர விரயம் என்று நினைக்கிறார்கள்)
         உண்மை தான் - நேரமின்மை என்பது உண்மையான காரணம். இருப்பினும் எல்லோருடைய இடுகைகளையும் படிப்பவர்கள் அனேகம் பேர். நாம் எழுதும் எழுத்துகள் மற்றவர்களைச் சுண்டி இழுக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்று ஒருவரும் பிறப்பது கிடையாது. நட்பு வட்டம் குழுக்கள் - இவை எல்லாம் தவிர்க்க இயலாது. புதுப் பதிவர்களிடையேயும் குழுக்கள் உள்ளனவே!  
***************************************************************
லக்ஷ்மி - echumi; http://www.echumi.blogspot.com/
நான் ப்ளாக்குக்கு புதுசுகடந்த 5 மாதங்களாகத்தான் பதிவு எழுதி வருகிறேன். வலைச்சரத்தில் என்னை இதுவரை, 4-பேர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நானும் நிறைய ப்ளாக் போயிமத்தவங்க பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன்எல்லாரும் கலக்கலா எழுதராங்கஅவங்களுக்கு முன்னாடி நான் u,k,g.  l,k,g. கூட இல்லைஆனாகூட நிறைய நிறைய எழுதனும்னு ஆர்வம் மட்டும் நிறையவே இருக்குஉங்ககூட அறிமுகமும் இல்லை .இப்பதான் முதல் முதலா பேசரேன்எந்தவிதத்தில் என்ப்ளாக்கை இன்னமும் சிறப்பாக வைக்கமுடியும்தகுந்த ஆலோசனை தருவீர்களாகம்ப்யூட்டரைப் பற்றியும் அதிகம் தெரியாது. முகம் தெரியாத பல நண்பர்கள் சமயத்தில் தகுந்த ஆலோசனைகள் சொல்கிரார்கள்ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு நல்ல பல நட்புகள் கிடைத்திருக்காங்கரொம்ப சந்தோஷமா இருக்கு. பாக்கப்போனா எனக்கு வயது கொஞ்சம் அதிகம் தான்என் சொந்தபந்தங்களே நான் கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு எகைன்ஸ்டதான் இருக்காங்கஎங்கரேஜ் மெண்டே கிடையாதுஎன்பதிவுக்கு வரும் பின்னூட்டம்தான் எனக்கு எனர்ஜிநான் எழுதுவது என்பக்கம் யாருமே படிச்சுகூட மாட்டாங்க. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லைதான். முடிந்தால் டைம் கிடைத்தால் என் ப்ளாக் வந்து என் ப்ளாக் படிச்சு எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க
     கலங்க வேண்டாம். - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com
(9840624293) படிக்கிறேன்.

***************************************************************

குண்டு(ராஜகோபால்); http://enpakkangal-rajagopal.blogspot.com/
வலைபூ வரமாசாபமா?


கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது  படைப்புகள் உலகத்தில் உள்ள அனைவர் பார்வைக்கும் கட்டுபாடுகளின்றி  வழி கிடைக்க செய்தது மற்றும்  நண்பர்கள் வட்டம் பெருக செய்தது  சரிஅது போல  பல ஆபாச தளங்கள் பெருக செய்வதர்க்கும் துணை புரிகிறதே உங்கள் கருத்து என்ன?
       கத்தியின் இருபக்கம் கூர்மையாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர்கள் சாக்கிரதையாக பயன் படுத்த வேண்டும். அதே தான் இங்கும் (இரண்டு கேள்விகளுக்கும்)

வலைச்சரத்தில் பன்னிக்குட்டியின் (ராம்சாமி) பின்னூட்ட  சாதனை பற்றி உங்கள் கருத்து?
       பன்னிக்குட்டி ராமசாமி ஒரு விளையாட்டிற்காக - ஏற்கனவே இருந்த ரெகார்ட், பிரேக் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நண்பர்கள் செய்தது அது. தவறென்று கூற மாட்டேன். தவிர்க்கலாம். இனி தவிர்ப்போம். 
***************************************************************

ஆசியா உமர்; http://asiyaomar.blogspot.com/
குடும்பத்தலைவிகள் பதிவர்களாவது பற்றி உங்கள் கருத்துஅவர்கள் இணையத்தில் நேரங்களைச் செலவழிப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன
       அது அப்பெண்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வு. பதிவர்களாகி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். குடும்பச் சுமைகளையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 


பதிவுலக அரசியல் என்றால் என்னதகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையாஇந்த அரசியலில் சிக்காமல் பிரபலமாவது எப்படி?
       பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது 


சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமாதாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
      சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள்.  வந்து செல்வதில் தடை இருக்காது.

உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
        புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை. 


ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்கள்  வைத்துக்கொள்வது பற்றி  தங்கள் கருத்துஎப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டுஅவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும்தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
      எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும். 

****************************************************************

ரத்தினவேல்; http://rathnavel-natarajan.blogspot.com/
தமிழில் வெளிவரும் வலைப்பதிவுகளில் அதிகம் படிக்கப்படும் 'முதல் பத்து வலைப்பதிவுகள்எவை என்ற விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன்.
      தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!

 ***************************************************************

Speed Master;www.speadsays.blogspot.com
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
 நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின்தங்கியுள்ளோம். மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில் குறைவாக உள்ள வியட்நாம் வது இடத்தில் உள்ளது. யாரேனும் விளக்கவும்?
      இது தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம். பல காரணங்கள் உண்டு. ஊழல் முதலான காரணம்.  

பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள். அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள்
       இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன். 

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறிகிறோம். ஏன் என்று காரணம் சொல்லவும்?
      ஆங்கிலம் -  அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டீஷ் ஆங்கிலம் என வேறுபாடுகள் உள்ளன. கலர் என்றால் color என்பதும் colour என்பதும் இந்தியாவில் வண்ணம் என்பதற்கு பயன்படுத்துகிறோம்.  


பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்பு கொடுத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கஷ்டப்படுத்துவது ஏன்?

       இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.  


வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
       பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.  

***************************************************************

அமைதி அப்பா; www.amaithiappa.blogspot.com
       நான் சமூக சீர்திருத்தம் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன்எனது மகன்எல்லா விஷயங்களையும் எழுது என்கிறான்ஆனால்நான் எப்படி ஆரம்பித்தாலும் சமுக விழிப்புணர்வை விட்டு என்னால் வெளியில் வர முடியவில்லைமற்ற விஷயங்கள் குறித்துதான் அனைவரும் எழுதுகிறார்களேநாம் இந்த ஒரு விஷயத்தோடு நிறுத்திக் கொள்வோமென்று முடிவு செய்து விட்டேன்இது சரியா
       இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது. 

நான்  எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லைஇருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
       இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.   


எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள்அந்த மாதிரியான ஒரு கேள்வியும்அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா
       அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

***************************************************************

C.P. Senthil kumar; www.adrasakka.blogspot.com
நான் கடந்த மாதமாக பார்த்ததில் வலைச்சரத்தில் ஃபிலாசபி பிரபாகரனின் உழைப்பு பிரம்மிக்க வைத்ததுஅவருக்கு எதாவது ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தீங்களா?
       வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான். 

வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
       இரண்டாம் கேள்விக்கான பதில். 


வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
       முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில். 

***************************************************************


முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com 
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
       அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர். 

ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(
பார்வையாளர் எண்ணிக்கையாநிறைய இடுகைகளா? ....????)

        இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.  


தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?

        கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா? 

         மதுரைப் பதிவர்கள் கல்லூரிகளில் தமிழ் வலைப்பூக்கள் ( பிளாக் ) பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். கல்லூரி அனுமதியுடன் - இரு வகுப்புகள் எடுக்கிறோம். பிளாக் துவங்குவது, தமிழில் எழுதுவது இவை பற்றி வகுப்பெடுக்கிறோம். ஈரோடு பதிவர்கள், திருப்பூர் பதிவர்கள் பல கல்லூரிகளில் வகுப்பெடுக்கிறார்கள். 
(ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன). 
***************************************************************
பிரபாஷ்கரன்; http://writerprabashkaran.blogspot.com/
இன்றைய வளர்ச்சி என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? 
        அறிவியல் வளர்ச்சி - தொழில் நுடப் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். அதனை பெறுவதற்கான வசதிகள் உள்ளவர்களுக்கு,
.
மேலும் வாசிக்க... ""வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1