CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்!!!

 .
 
பதிவர் சந்திப்பு விழாவை உங்கள் தளத்தில் நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.
2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!
 
பிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 17M, 17E. M17M       

அனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.

17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.

குறிப்பு :  17M, 17E. M17M  தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.

கோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 70A, M70A, G70, D70 மற்றும் M27

கோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும். 

குறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம்  நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.      

70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.  

மற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.

தாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு : 

பேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும்  M18M

அனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது). 

தாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.

மாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)

சென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.

ஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.

அல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.                           

வடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது 

பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)  

வடபழனி டிப்போவில் இருந்து  சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால்  தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகவரி 

Masafi Guest House
No. 5, Gangappa Street, (Opp. to AVM Studio) Vadapalani,
Chennai - 600026.
Ph: 044 - 42136173 / 23766173 / 23766174

பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம் 

திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 
26. கமலா தியேட்டர் அருகில்.

நாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை. 




மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 
தொடர்புக்கு 

அரசன்  : 9952967645
ரூபக்     : 8148915596

சிவா      : 9841611301
சீனு        : 9940229934

 

மேலும் வாசிக்க... "2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்!!!"



2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!


வணக்கம் வலை நண்பர்களே,

நாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள். 
 
உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.
மேலும் வாசிக்க... "2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!"

பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு!!


வணக்கம் வலை நண்பர்களே,

சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் தாங்கள் எழுதியவற்றை புத்தகமாக வெளியிட ஆயத்தமாகி வரும் இவ்வேளையில் இன்னும் சில பதிவர்கள் தங்கள் வலைபதிவுகளை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போமா?
மேலும் வாசிக்க... "பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு!!"



பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!



வணக்கம் வலை நண்பர்களே,

        வரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம்  கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும் வாசிக்க... "பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!"



வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்!!!

வர்ற செப்டம்பர் ஒண்ணாம் தேதி சென்னையில் பதிவர் திருவிழா நடக்க இருக்கு. அதுல கலந்துக்க நாலா பக்கமிருந்தும் நம்ம பதிவுலக நண்பர்கள் தயாரா இருக்காங்க. அவங்களோட வேலைகள ஒதுக்கி, டிக்கெட் புக் செஞ்சு, துணைக்கு நண்பர்களையும் திரட்டி படையா வர ரெடி ஆகியிருக்குற நேரத்துல பதிவர்களின் மனைவி கிட்ட இருந்து "என்னங்க... எங்க போறீங்க? அம்புட்டு அவசியமா போகனுமா? லீவு இருந்தா வீட்டுல இருக்குற வழிய பாருங்க"ன்னு ஆர்டர் வந்தா எப்படி இருக்கும்? அதை சமாளிச்சு நம்ம பதிவர்கள் எப்படி வராங்கன்னு பார்ப்போமா?

மேலும் வாசிக்க... "வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்!!!"



அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக  உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.
மேலும் வாசிக்க... "அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18

வணக்கம் வலை நண்பர்களே,

இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம். 

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18"



இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்?


வணக்கம் வலை நண்பர்களே,

இன்று இந்தியாவின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிற இவ்வேளையில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நமது நாட்டை பல தலைவர்கள் அற வழியிலும், தீவிரவாத வழியிலும் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள். அவ்வாறு போராடிய தலைவர்களின் பெயர்கள் சில நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலம் தொட்டு, சுதந்திரம் அடையும் வரை போராட்டம் நடத்திய தலைவர்களின் பெயர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.


அரவிந்தகோஷ்
டாக்டர் அன்னி பெசன்ட்
அல்லமாஹ் இக்பால்
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்

பகத் சிங்
பால கங்காதர திலகர்
புலாபாய் தேசாய்
பக்கிம் சந்திர சாட்டர்ஜி
பிதான் சந்த்ரா ராய்
பிபின் சந்திர பால்
பகா ஜதின் முகர்ஜி

சித்தரஞ்சன் தாஸ்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
சந்திர சேகர் ஆசாத்

தாதாபாய் நவ்ரோஜி
தினேஷ் குப்தா

கோபின் வல்லப பந்த்
கோபால கிருஷ்ணகோகலே

ஜதின் முகர்ஜி
ஜே பிரகாஷ் நாராயண்
ஜவகர்லால் நேரு
ஜே.பி. கிரிபாலனி

கே காமராஜ்
குலபதி முன்ஷி
கான் அப்துல் காபர் கான்
குதிராம் போஸ்

லாலா லஜபதி ராய்
லால் பகதூர் சாஸ்திரி

மதன் லால் திங்க்ராஜ்
மகடோ கோவிந்த் ரானடே
மோதிலால் நேரு
PT. மதன் மோகன் மாளவியா
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
மணி லால் காந்தி
மங்கள் பாண்டே

புருஷோத்தம் தாஸ் டாண்டன்

ராணி லக்ஷ்மிபாய்
ராஜேந்திர பிரசாத்
ராம் மனோகர் லோஹியா
ராஷ் பிகாரி போஸ்
ரவீந்திரநா தாகூர்
ராம் பிரசாத் பிஸ்மில்


சேனாதிபதி பபட்
எஸ் சத்தியமூர்த்தி
சிவராம் ராஜகுரு
சுபாஷ் சந்திர போஸ்
சுக்தேவ்
சரோஜினி நாயுடு
சுரேந்திரநாத் பனேர்ஜா
டாக்டர் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன்

டாண்டியா டோப்

உதம் சிங்

எஸ் வீர்
வினோபா பாவே
விநாயக் தாமோதர் சவர்கார்
வல்லபாய் படேல்
வ.உ. சிதம்பரம் பிள்ளை

டாக்டர் ஜாகீர் ஹுசைன்

அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மேலும் வாசிக்க... "இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்?"



தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!

 
வணக்கம் வலை நண்பர்களே,

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


சந்திப்பு நடைபெறும் இடம்:
சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம்.

 மதுரை, நெல்லையை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும் சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு  தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.


எனது மின்னஞ்சல்: thaiprakash1@gmail.com
மொபைல்: 9080780981

தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
மின்னஞ்சல்: svramani08@gmail.com
மொபைல்: 9344109558

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:
1. வலைப்பூ பெயர், முகவரி ( blog name & blog url address)
2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,
3. தொலைபேசி எண்,
4. ஊர் பெயர்,
5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.

நண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

பதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும். 

விழா குழு பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.


தென்னகத்தில் இருந்து கிளம்பும் பதிவர்கள்:
உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர்.
ரமணி ஐயா,
மதுரை சரவணன்,
தருமி ஐயா,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஷ் செல்லத்துரை,
தமிழ்வாசி பிரகாஷ்,
ஜோக்காளி பகவான்ஜி,
கடற்கரை விஜயன் துரைராஜ்,
மணிவண்ணன்.
 
பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்?
சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் வெளியீடு:
கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். 
 
அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.

(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)
வருகைப் பதிவு:
கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.

தமிழ்வாசி பிரகாஷ்: thaiprakash1@gmail.com
ரமணி ஐயா: svramani08@gmail.com
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
 

 
மேலும் வாசிக்க... "தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!"



ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!


வணக்கம் வலை நண்பர்களே,

தினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.  
மேலும் வாசிக்க... "ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!"



குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்!


வணக்கம் வலை நண்பர்களே,
             போன வாரம் மதுரைக்கு பக்கத்துல இருக்குற அழகர் கோவில் மலைக்கு போயிருந்தோம் குடும்பத்துடன். அங்க நுபுர கங்கை எனும் தீர்த்தம் நீராடும் இடத்தில் குரங்குகள் ரொம்ப அதிகமா இருக்கும். மக்கள் கொன்டு வர்ற உணவுப் பொருட்கள், பொரிகடலை என சாப்பிட குரங்குகளுக்கு நிறையவே கிடைக்கும்.

மேலும் வாசிக்க... "குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்!"



பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா?

வணக்கம் வலை நண்பர்களே,

பேஸ்புக்கில் வெறும் ஒரு வரி ஸ்டேடஸ் போட்டாலும் ஒர்த்துன்னு?? லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா? இருக்காதாதா? பார்ப்போமா?
மேலும் வாசிக்க... "பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா?"



வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள். 

மேலும் வாசிக்க... "வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?"



இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern


வணக்கம் வலை நண்பர்களே,

இந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
நமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.
மேலும் வாசிக்க... "இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern"



மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


வணக்கம் வலை நண்பர்களே,

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வாசிக்க... "மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1