CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



குழந்தைகளிடத்தில் தமிழை வளர்ப்போம்!


வணக்கம் நண்பர்களே!

நமது நாட்டில் சமூக பழக்க வழக்கங்களும் கலாசாரமும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நம்மை உயர்தர வாழ்க்கை முறைக்கு முன்னேற்றி (மாற்றி ) கொண்டுவரும் அந்நியநாட்டு(ஆங்கில) பழக்க வழக்கங்களும், கலாசாரமும் நமது பழம்பெரும் மொழியாம் தமிழ் மொழியைத் தரம் தாழ்த்திக்கொண்டுபோகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆம், தமிழில் ஆங்கில கலப்பில்லாமல் நம்மால் பேசமுடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். வாழும் தலைமுறையான நாமும் தமிழ்ச் சொற்கள் தெரிந்தாலும், ஆங்கில கலப்பில் பேசவே விரும்புகிறோம். ஏனெனில் நமது ஸ்டேட்டஸ் அதையே விரும்புகிறது. ஆனால், வளரும் தலைமுறையான இன்றைய குழந்தைகளும் ஆங்கில கலப்பில்தான் பேசுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம்தான் அவர்களை ஆங்கிலத்தைக் கட்டாய முதன்மைப் பாடமாகவும், மற்றொரு அந்நிய மொழியை (உம்: பிரெஞ்ச்) கட்டாய இரண்டாம் பாடமாகவும் கொண்டுள்ள பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். அங்கு இந்திய மொழிகள் விருப்பப் பாடமாக  உள்ளது. பெரியவர்களாக ஆனபின் அந்தக் குழந்தை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டி  நாம் ஹிந்தி மொழியை அவர்களுக்குத் தேர்வு செய்து தருகிறோம். இதனால், நமது தமிழ் மொழி அவர்களிடத்தில் வெறும் பெயரளவுக்கே உள்ளது.

நாம் அவர்களிடத்தில் வீட்டில் தமிழில் பேசினாலும், பள்ளிகளிலோ ஆங்கிலத்தில் பேசவே அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். தமிழில் பேசினால் தண்டனை எனவும் சில பள்ளிகளில் இருப்பதால் வேறு வழியில்லாமல் குழந்தைகள் தமிழை மறக்க நேரிடுகிறது. அக்குழந்தைகள் இவ்வாறு ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமாவதால், அவர்கள் வீட்டில் பெற்றோர்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசவே மறைமுகமாக உந்தப்படுகிறார்கள். வேறு வழியில்லாமல்  நாமளும் அவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே பேசவேண்டி உள்ளது.
எனது உறவினர் குடும்பமாக அயல் நாட்டில் சுமார் இருபது வருடங்களுக்குமேல் வசித்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழை நமக்குச் சமமாகப் பேசுகிறார்கள். 'மாமா எப்படி இருக்கீங்க’ 'அத்தை எப்படி இருக்கீங்க’ என்றும் அழகாகத் தமிழில் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான். அவர்கள் குழந்தைகளிடத்தில் பேசும்போதும், அவர்களுக்குள் பேசும் போதும் தமிழில் பேசுகிறார்கள், எங்களை அக்குழந்தைகளிடத்தில் அறிமுகம் செய்யும்போதும் மாமா, அத்தை என்று தமிழிலேயே அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அவர்கள் தமிழ் மொழியினை அறிய வாய்ப்புக் கிடைக்கறது.
இதையே நம்மூரில் எடுத்துக்கொள்ளுங்களேன்,  ' hi, uncle how are you?' என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு , ' ya i'm fine' என ஆங்கிலத்தில் பதில் சொல்லியே பழகிவிட்டோம். எனவே,  குழந்தைகள்  தமிழை முடிந்தஅளவு பேசிப்பழக  நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள், திருக்குறள், ஆத்திச்சூடி புத்தகங்கள் என குழந்தைகளின் மனது ஏற்கும் அளவுக்குத் தமிழை அவர்களிடத்தில் உட்புகுத்தலாம். அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய தமிழ் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு சொல்லித்தரலாம்.

ஆங்கில கார்ட்டூன், பொம்மை படங்களைப் பார்க்கவிடாமல் தமிழில் வரும் கார்ட்டூன், பொம்மை படங்களை பார்க்கச் சொல்லலாம். சிறுவயதில் நாம் தமிழில் கதை கேட்டு வளர்ந்ததைப்போல, குழந்தைகளுக்கும் தமிழில் கதைகளைச் சொல்லலாம்.
குழந்தைகளின் வருங்காலத்தைக் கவனத்தில்கொண்டு அவர்கள் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்தாலும், தமிழை இரண்டாம் முதன்மைப் பாடமாக எடுத்து அவர்கள் மூலம் தமிழை அழியவிடாமல் வளரச் செய்வது தமிழனான நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்த கட்டுரை என் விகடனிலும், தமிழ்செடி வலைதளத்திலும் வெளியாகியுள்ளது.


தமிழ்வாசி பிரகாஷ்
மேலும் வாசிக்க... "குழந்தைகளிடத்தில் தமிழை வளர்ப்போம்!"



டெங்கு காய்ச்சலை ஒழிக்க மதுரை மாணவர்கள் பிரச்சாரம். அவர்களை ஊக்குவியுங்கள் நண்பர்களே!

வணக்கங்க,
     நம்ம மதுரையில நம்ம தலைமை ஆசிரியர் சரவணன் டெங்கு கொசுவையும், காய்ச்சலையும் ஒழிக்க அவரோட பள்ளி மாணவர்களை வச்சு நாடகமும், தெருமுனை பிரச்சாரமும் செஞ்சிருக்காரு. அவரோட பள்ளி மாணவர்களின் ஒன்றுபட்ட முயற்சியே டெங்குவை முழுசா ஒழிக்கனும்கிறது தான். 

அவர் பள்ளி மாணவர்களின் நாடகம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் பத்தி அவரோட வலைப்பூவில் தெளிவா பதிவு செஞ்சிருக்காரு. முழுமையா படிச்சு உங்களோட கருத்தை, மனதில் பட்ட விசயங்களை  பதிவு செஞ்சிங்கன்னா அந்த மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும். 

நண்பர்களே, இந்த இணைப்பில் முழுமையான விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள் 
மேற்கண்ட பதிவில் உள்ள கடைசி பத்தியை வாசிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே!

குறுந்தகவல்:
மேற்கண்ட இணைப்பில் உள்ள விசயங்களை தங்களால் முடிந்த அளவு சமூக தளங்கள், வலைப்பூவின் மூலம் நிறைய நண்பர்களிடம் பகிர்ந்தால் அந்த மாணவர்களுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

மேலும் வாசிக்க... "டெங்கு காய்ச்சலை ஒழிக்க மதுரை மாணவர்கள் பிரச்சாரம். அவர்களை ஊக்குவியுங்கள் நண்பர்களே!"



அடல்ட் கார்னர் ஆம்பிளைங்களுக்கு மட்டுமா? கேபிள் சங்கர் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! (cable SANKAR interview)

வணக்கம் நண்பர்களே,
நமது தமிழ்வாசியில் பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி வரப் போகிறது என பதிவிட்டு இருந்தோம். பதிவர்கள், வாசகர்கள் என நீங்களே கேள்விகளை கேட்குமாறு அறிவித்து இருந்தோம். அதன்படியே சிலர் கேள்விகள் அனுப்பி இருந்தார்கள். அவர்களின் கேள்விகளுடன் நானும் சில கேள்விகளை கேபிள் முன் வைத்துள்ளேன். அவரும் பதிலளித்து உள்ளார். என்ன கேள்விகள், பதிலகள் என பார்ப்போமா?


1. பதிவுலகில் பல லட்சங்களை தாண்டி உங்கள் வலைப்பூ ஹிட்ஸ் வாங்குகிறதே, அதன் ரகசியம் என்ன கேபிள்ஜி? 
தொடர்ந்து எழுதுவதும் மக்களுக்கு பிடித்த மாதிரி எழுதுவதுமாய் இருக்கலாம்.நீங்கள் இந்த பதிலை படித்துக் கொண்டிருக்கும் போது தமிழில் எழுதி 60 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியிருப்பேன். வாசகர்களுக்கு என் நன்றிகளை இதன் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 
 *******************************
2. தாங்கள் ஒரு படம் டைரக்ட் செய்தால் காமெடி, திரில்லர், ஆக்சன், சென்டிமென்ட் என எந்த சப்ஜெக்ட்டில் டைரக்ட் செய்வீர்கள்? 
டைரக்ட் செய்தால் என்ன செய்யப் போகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். எனக்கு எழுதுவதற்கு தொடர்ந்து காமெடி படங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஆக்‌ஷன் திரில்லர் வகை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் எல்லா ஜெனரிலும் சில கதைகள் யோசித்திருக்கிறேன். பட் இப்போது ஓகே ஆகியிருக்கும் படம் லவ் கம் த்ரில்லர் வகை.. 
 *******************************
3. தற்போதுள்ள பதிவர்களில் யாராவது சினிமாவில் கதை எழுதுமளவுக்கு திறமையுடன் இருக்கிறார்களா? குறிப்பிட்டு சொல்ல முடியுமா?
சினிமாவிற்கு கதை என்று தனியே இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. எந்தக் கதையெல்லாம் சினிமாவாக்க முடியும் என்று தெரிந்து, அறிந்து கொள்ளுவதுதான் திற்மை என்பது என் எண்ணம். நிறைய பதிவர்களுக்கு சினிமாவின் மீது ஆர்வமிருக்கிறது. ஆனால் அதை அடைய பெரும் முயற்சியும், காத்திருப்பும் தேவை. ஒரு ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை இருக்கிறது. என் கதைகளை அவர்களிடம் விவாதித்து இருக்கிறேன். 
 *******************************
4. சிலரின் ட்விட்டர் ஸ்டேடஸ் தற்போது சைபர் கிரைம் வரை சென்றுள்ளதே, இதனால் டிவிட்டர், முகநூல், வலைப்பூ எழுத்தாளர்களின் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா?
நிச்சயம் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெருமபாலான நேரங்களில் விவாதத்தின் போக்கை அடக்க, வசை மொழி உபயோகிப்பது கண்டனத்துக்குரியது. பொது வெளியில் எல்லோரும் தங்கள் பொறுப்பை உண்ர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த கைது சொல்லியிருக்கிறது. ஆனால் இது தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது . இதற்கான சட்டத்தை இணைய வெளியில் உள்ள அனைவரும் தொடர்ந்து எழுதி மாற்றப் பட வேண்டிய அவசியத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும். 
 *******************************
5. பதிவுலகில் அவ்வப்போது சில சர்ச்சை பதிவுகளால் கடும் வாக்குவாதம், பதிவுச் சண்டை ஏற்படுகிறதே, இத்தகைய போக்கு பற்றி தங்கள் கருத்து என்ன? 
எல்லாமே ஒரு கவனிப்புக்குத்தான் என்று தோன்றுகிறது. சாதாரண கருத்து மோதல்களாக ஆரம்பித்து, பின்னர் தனிநபர் தாக்குதலாய் மாறி, பின்னர் ஜாதி, மத அரசியல் செய்யப்பட்டு அடித்துக் கொள்ளும்காட்சிகள் தற்போது நிறைய நடக்கிறது. எல்லாவற்றிக்கும் காரணம் இணையத்தில் நான் சூப்பர் ஸ்டார் என்கிற ஈகோ உட்கார்ந்து கொண்டு இவன் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது போன்ற எண்ணமும் அதற்கு காரணம். கொஞ்சம் உக்காந்து யோசித்தால் இணையத்தை விட்டு வெளியே வந்தால் நம்மை யாருக்கும் தெரியாது என்று புரிந்து கொண்டால் நிச்சயம் சண்டை சச்சரவுகள் வராது, செய்யவும் மாட்டோம். யாராவது இணையத்தில் பிரபலமாய் இருப்பதால் பத்து காசு பிரயோஜன கிடையாது என்று சொன்னால் அதை மட்டும் நம்பாதீர்கள். நிச்சயம் பிரயோஜனம் உண்டு அந்த புகழை எப்படி பயன் படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான். 
 *******************************
6. வலைப்பூ பதிவர் சந்திப்பு சில ஊர்களில் நடந்துள்ளதே, இதனால் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடந்துள்ளனவா? பதிவர் சந்திப்புகள் அவசியமா? இது பற்றிய தங்களின் கருத்து என்ன? 
நல்ல விஷயம் தான். நிச்சயம் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புகள் ஆக்கபூர்வமான செயல்களாய் மாறும். மாறிக் கொண்டுமிருக்கிறது. நம் பதிவர்களுக்காக ஒரு சங்கம் அமைத்திருந்தால் இன்று கோர்ட் கேஸ் என்று வரும் போது ஆளாளுக்கு தனித்தனியாய் பதிவோ, ட்வீட்டோ, பேஸ்புக்கிலோ எழுதிக் கொண்டிருக்காமல் நம் எண்ணத்தை ஒருமித்து காட்ட எதிர்த்திருக்கலாம். 
 *******************************
7. தாங்கள் எழுதிய புத்தகங்களில் மிகவும் சிரத்தையுடன் எழுதிய புத்தகம் எது? எதனால்? 
என்னைப் பொறுத்த வரை எல்லா புத்தகங்களுமுமே சிரத்தையுடன் எழுதியதுதான். சிரத்தையில்லாமல் எழுதினால் இவ்வளவு வரவேற்பு அத்துனை புத்தகங்களுக்கும் கிடைத்திருக்காது. வாசகர்கள் தரமில்லாத ஒன்றை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 
 *******************************
இதுவரை எனது கேள்விகளை கேட்டேன். அடுத்து நமது பதிவர்கள் தங்களிடம் கேட்ட கேள்விகள்.

மின்னல் வரிகள் கணேஷ்: 
1. உங்களுக்கு கோபம் வரவழைக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? 
கோபம் வருமாறு நடந்து கொள்ள வேண்டும் தலைவரே.. 
 *******************************
வீடு சுரேஷ்குமார்: 
1. கேபிள்ஜீ அடல்ட் கார்னர் படிச்சிட்டு உங்க வாசகிகள் யாராவது.....? செமையா திட்டியிருப்பாங்க அதை விடுங்க...பாராட்டியிருக்காங்களா? 
திட்டுறது எல்லாம் கிடையாது. நிறைய பேர் படிச்சிட்டு சந்தோஷப்பட்டிருக்காங்க.. சில பேர் வெளிப்படுத்துவாங்க.. சில பேர் எதுக்கு வம்புன்னு ஏதும் சொல்லாம போவாங்க. செக்ஸ் ஜோக்குங்கிறது ஆம்பளைங்களுக்கு மட்டுமே உரித்த்தானது என்பது ஒர் ஆணாதிக்க எண்ணம். உங்களுக்கு எல்லாம் ஒரு ரகசியம் சொல்றேன் நானெழுதும் நிறைய ஜோக்குகளின் சோர்ஸே என் பெண் நண்பர்கள்தான். 
 *******************************
2. உங்க பழைய பதிவு எதையாவதை திரும்பப் படிச்சிட்டு இவ்வளவு மொக்கையாவா எழுதியிருக்கோம்..!நம்மையும் இந்த உலகம் நம்புதே என சிலாகித்தது உண்டா? 
 ஒரு எழுத்தாளனா எழுதினது எல்லாம் சூப்பர்னோ.. மொக்கைன்னோ என்னைக்கு நினைக்க ஆரம்பிக்கறோமோ அன்னைக்கே அவன் எழுதுறது நின்னுரும்னு யாரோ ஒரு மகான் சொல்லியிருந்ததா படிச்சிருக்கேன். அதனால எழுதினத நான் திரும்ப படிக்கிறதேயில்லை. அப்படி நினைக்கிறதுனாலதான் தான் இந்த உலகம் என்னை நம்புதேன்னு சிலாகிச்சிக்கிறது இல்லை. சிலாகிக்கிற உலகம் சில்லு சில்லா ஆக்கும்னு தெரியும்ங்கிறதுனால..:)) 
 *******************************
3. கேபிள்ஜீ நீங்க சைவம் உண்ணும் பாரம்பரியத்தில் வந்தவர்! ஆனாலும் உங்களுக்கு பிடிச்ச நான்வெஜ் எது என்று சப்புக் கொட்டிய படியே செப்ப முடியுமா..?
மறைக்காமல்! நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு காரணமே சினிமாதான். ராத்திரியில டிஸ்கஷன் முடிச்சிட்டு ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கு சாப்பிட போனா கூட வந்தவங்க மட்டும் பரோட்டாவும் சிக்கன் க்ருமாவுமா அடிக்கும் போது நான் மட்டும் வெறும் பரோட்டா பிச்சித் தின்ன கடுப்புல சாப்பிட ஆர்ம்பிச்சேன். இப்ப அவங்களுக்கே சாப்பாட்டுக்கடை எழுதி சொல்ற அளவிற்கு ஆயிட்டேன். இதன் காரணம், பெருமை, அனைத்தும் சினிமாவையே சாரும். நான் எனக்கு பிடிச்ச அயிட்டத்தையெல்லாம் சாப்பாட்டுக்கடை பதிவுகள்ல எழுதறேனே மறைக்காம... 
 *******************************
4. கேபிள் நீங்க ஒரு படத்தின் இயக்குனர் ஆகின்றீர்கள் (தெரியாத்தனமாக..?) படத்தில் பதிவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா...? இல்லை ஹலோ...ஹலோ....சிக்னல் வீக்கா இருக்குன்னு எஸ்கேப் ஆயிருவீங்களா...?
 தெரியாத்தனமாக எல்லாம் இல்லை தெரிந்தே ஆகப் போகிறேன். நிச்சயம் பதிவுலக நண்பர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுப்பேன். என் கதை விவாதங்களில் சில ந்ண்பர்களின் பங்களிப்பை பெற்றிருக்கிறேன். பெறவும் இருக்கிறேன். எஸ்கேப் ஆவேன்னு நீங்க கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னா இப்ப இப்படித்தான் பேசுவீங்கன்னு சொல்வீங்க..? அதனால அந்த டைம்ல கூப்பிடுங்க நான் எஸ்ஸாகுறேனா இல்லையான்னு உங்களுக்கு தெரிஞ்சிரும். வாழ்க்கையில ஒரு சுவாரஸ்யம் வேணாமா?
 *******************************
டிஸ்கி: இவரது பேட்டி வெளிவரும் என முன்பே அறிவித்து சில காரணங்களால் தாமதமாகி இன்று வெளியிடுகிறேன்.
அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்த கேபிள் சங்கருக்கு நன்றிகள் பல....
மேலும் வாசிக்க... "அடல்ட் கார்னர் ஆம்பிளைங்களுக்கு மட்டுமா? கேபிள் சங்கர் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! (cable SANKAR interview)"



கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.

2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.

3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.

4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.

5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம். 
 
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com

உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012

diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி  வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
மேலும் வாசிக்க... "கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview"



சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா"

வணக்கம் பதிவுலக நண்பர்களே,
    எல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.  

          இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம "மது"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு,  அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

      அப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி). 

காலை நடந்தது என்ன?
"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,
... ஹி..ஹி..." அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு. 

மதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.

மதியம் நடந்தது என்ன?
"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் "தென்றலின் கனவு" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,
....ஹி...ஹி... " அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.

மாலை நடந்தது என்ன?
பட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...
.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...

ரொம்ப  சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா?போதுங்க...

அடுத்த  பதிவாக, 
பதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....


ஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.
நெல்லையில்  உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:
நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?

குறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு

நெல்லையில்  நடந்த பதிவர் சந்திப்பில்:
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)
நெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....

 மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ?
மேலும் வாசிக்க... "சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" "



உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI

வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...!


Sheduled post.,
மேலும் வாசிக்க... "உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI"



சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!

வணக்கம் நண்பர்களே,
வருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்!
மேலும் வாசிக்க... "சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!"



வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!

வணக்கம் வலை நண்பர்களே,
நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன். 

இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தோழர் மதுமதி (98941 24021),
மின்னல் வரிகள் கணேஷ் (7305836166),
மெட்ராஸ்பவன் சிவா (9841611301), 
சென்னைப்பித்தன் (9444512938), 
புலவர் சா. இராமாநுசம் (9094766822),
தென்றல் சசிகலா (9941061575)
 வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.


இந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.

நன்றி,
பதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!"



பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST)

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு  பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா? ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா? இதோ பார்ப்போமே....!!!

தமிழ்வாசி பெயர்க் காரணம்:
தமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிய விளக்கத்தை உங்களுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 2010ம் வருட ஆரம்பத்தில் "என் தமிழ்ப் பதிவு" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து என்ன எழுதுவது என தெரியாமலே நாளிதழ்களில் வரும் செய்திகளை இரண்டு மாதங்கள் வரை ஏதோ என பகிர்ந்து கொண்டிருந்தேன். யாராச்சும் வாசிப்பாங்களா? என வலைப்பூவை ரெப்ரெஷ் செய்து செய்து பார்ப்பேன். ம்ஹும்... பக்க எண்ணிக்கைகளை பார்த்தால் நான் ரெப்ரெஷ் செய்த எண்ணிக்கைகளையே காட்டும். ஹி..ஹி... என்ன செய்ய? 

அப்படி காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவில் திடீரென புதிய பதிவுகள் எழுதும் பக்கம் பிழை (ERROR) ஆனது. டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தேன் என தெரியவில்லை. அந்த பக்கம் சரியாக திறக்கவில்லை. நானும் எப்படியாவது சரி செய்ய  வேண்டும் என இணையத்தில் தேடினால் ஒரு வழியும் புலப்படவில்லை. பிறகு ஓரிரு மாதங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இணையத்தில் ஏதேதோ மேய்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்த வலைப்பூவில் என்ன தவறு செய்தோம், என என்னையே விசாரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றை அறிந்தேன். இனி புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம். அதன் டெம்ப்ளேட்-ஐ விவரம் தெரியாமல் திருத்தக் கூடாது என எனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வலைப்பூவுக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினேன். 

ஆனால் தமிழ் என்ற சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்பி அதையொட்டியே சில பெயர்களை இணையத்தில் தேடினால் அவை அனைத்தும் வலைதளங்களாகவெ இருந்தது. அப்போது தமிழ் என்பதை விடுத்தது வசிக்கிற ஊர் பெயரை மையமாக வைத்து சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். அப்போது மதுரைக்காரன், என் மதுரை... இப்படி யோசித்து மதுரை வாசி என கடைசியில் முடிவு செய்தேன். அப்போது "வாசி" என்பதற்கு வாசித்தல் என்றும், வசித்தல் என்றும் இரு பொருள்கள் வருவதை கண்டு தமிழுடன் பொருத்தி தமிழ்வாசி என இணையத்தில் தேடியபொழுது இணையதளமா, வலைப்பூவோ இல்லை என அறிந்து அப்பெயரையே தேர்வு செய்தேன்.

"தமிழ்வாசி" தமிழகத்தில் வசிப்பவன் என்றும், தமிழை வாசிப்பவன் என்று இரு பொருள்களில் அமையும். சரி வலைப்பூ பெயர் வைத்தாயிற்று. அடுத்து பதிவுகள் எழுத வேண்டுமே, என்ன செய்வது என அறியாமலே சில தளங்களில் பகிர்ந்த பதிவுகளை எடுத்து (அவர்கள் அனுமதி பெறாமலே) எனது வலைப்பூவில் பகிர்ந்தேன். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அறிந்ததும் என்னைத் திருத்திக் கொண்டேன். 
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

தமிழ்வாசி பெற்றுத் தந்த நண்பர்கள்:
இணையத்தில் வாசிக்க வந்த காலத்தில் இருந்தே தொழில்நுட்ப தளங்களை அதிகமாக வாசித்து வருவதால் பல்சுவை பதிவுகளுடன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்த நுட்பங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன். நிறைய நண்பர்களின் வலைப்பூவின் தோற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் மனம் மகிழும் போது எனக்கும் சந்தோஷம் தான்... தொழில்நுட்பத்திற்கு என தனியாக இணையப்பூங்கா என வலைப்பூ வேறு தொடங்கினேன். அதிலும் தற்சமயம் தொடர இயலவில்லை

இந்த பதிவுலகம் மூலமாக நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன். இன்னும் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தப் பதிவுலகில் நான் எழுத வந்து பெற்ற பயன்கள் என்றால் எனது நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்... தான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் எண்ணம் என்னவென்று? "எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என" இந்த வரியை சில சமயம் எனது நண்பர்களிடம் அதிகமாக சொல்லி இருக்கிறேன். ஏனெனில் இவ்வாறு சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் வந்துள்ளது. அந்த சில சந்தர்ப்பத்திற்காக இப்போதும் திரும்ப சொல்கிறேன்,"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என"
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

பதிவுலக ஓய்வு பற்றி:
சரி, நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்... 

வலைச்சரத்தில் நான் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அதில் மட்டும் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் சில சமயம் மட்டுமே அதில் பொறுப்புகள் வரும். ஆகையால் அந்த பொறுப்பை கவனிக்க முடியும் என நினைக்கிறேன். 

எனது வேலைகள் நல்ல படியாக முடிந்த பின் மீண்டும் பதிவுலகம் பக்கம் வருவேன். எப்போது வருவேன் என உறுதியாக சொல்ல முடியவில்லை. 

மெக்கானிக்கல் நண்பர்களுக்காக ஒரு தொழில்நுட்ப தொடர் எழுதி பாதியில் நிறுத்தியுள்ளேன். என்றைக்காவது நேரம் கிடைக்கையில் அந்த தொடரை மட்டும் எழுதலாம் என நினைத்துள்ளேன். முடியுமா என தெரியவில்லை. பார்ப்போம் முடியுமா என?
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

ஐநூறாவது பதிவு பற்றி:
நண்பர்களே, தலைப்பில் 500வது பதிவு என போட்டுள்ளேன். ஆம்... இந்த பதிவு என் வலைப்பூவில் வெளியாகும் 500வது பதிவாகும். எப்படியோ சில காப்பி/பேஸ்ட் பதிவுகளையும் ( உண்மையை ஒத்துக்கனும்ல) உள்ளடக்கி ஐநூறை தொட்டாச்சு. இதுவரை என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நான் பதிவிட்ட ஒர்த் இல்லாத/ ஏதோ கொஞ்சம் ஒர்த்தான(ஹி..ஹி..) பதிவுகளையும் வாசித்து மெனக்கட்டு கமென்ட் எழுதிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 


தமிழ்வாசி இதுவரை:
மொத்த பதிவுகள்: 500


மொத்த கருத்துரைகள்: 10371 (இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)


மொத்தம் பக்கப் பார்வைகள்:(இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)


மொத்தம் தொடர்பவர்கள்: 571


அலாஸ்கா மற்றும் இண்டி பிளாக்கரில்:
 


தொடர்புக்கு: 
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar


முகநூல் குழுமம்:https://www.facebook.com/groups/tamilvaasi/


ட்விட்டர்:https://twitter.com/#!/tamilvaasi


மொபைல் எண்: 9894567375

(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...) என அடிக்கடி மேலே எழுதினேனே, அதற்கு காரணம் பதிவு கொஞ்சம் நீளமா இருக்குல அதான்... அடுத்து எப்போ எழுதப் போறோம்னு தெரியலைல. அதான் கொஞ்சம் நீளமா எழுதிட்டேன்.

நல்லதொரு நாளில் புதிய பதிவின் வழியாக உங்களை சந்திக்கும் வரை என்றும் நன்றியுடன் தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க... "பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST)"



சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி?

நண்பர்களே,
நேத்து நைட் வீட்டுல இட்லி செஞ்சாங்க. நமக்கு இட்லி அவ்வளவா பிடிக்காது. அதனால தோசை வேணும்னு சொல்லிட்டே தண்ணீர் பாட்டிலை பிரிட்ஜ்ஜை தொறந்தேன். அங்க மூணு முட்டை இருந்துச்சு. அதைப் பார்த்த உடனே எனக்குள் இருந்த சமையல் கலைஞன் எந்திரிச்சுட்டான். ஆமாங்க, முட்டை கலந்து சில்லி இட்லி ரொம்ப நல்லாவே செய்வேன். அதனால சில்லி இட்லி செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். காலையில் செய்த மீந்து போன இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. பிரஷ் இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. நாலஞ்சு இட்லி, கொஞ்சம் மட்டன் குழம்பு இருந்தாலே போதும். சரி, வாங்க செய்முறையை பார்ப்போம்.

தேவையானவை:
இட்லி - 5
முட்டை - 3 or 4
பெரிய வெங்காயம் - 3
மட்டன் குழம்பு ஒரு கப்
இடித்த மிளகு தூள் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு
கடுகு உளுந்து சிறிது.
நல்லெண்ணெய் தேவையான அளவு
கருவேப்பிலை கொஞ்சம்.
மிளகாய் பொடி தேவைப்படின்

இனி செய்முறை:
ஒரு தட்டில் இட்லியை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி, கடுகு உளுந்து, கருவேப்பில்லை, நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். கட்டி சேராத அளவுக்கு முட்டைகளை கிளறிய பின்னர், உதிர்த்து வைத்த இட்லியை போட்டு மீண்டும் கிளறவும். பிறகு குழம்பு கரண்டியில் நான்கைந்து முறை மட்டன் குழம்பை இட்லி, முட்டை கலவையில் ஊற்றி மீண்டும் கிளறவும். ஓரளவு மட்டன், முட்டை, இட்லி என அனைத்தும் நன்றாக கிளறிய பின் இடித்து வைத்த மிளகு தூள் சேர்த்து மீண்டும் கிளறவும். மிளகு காரம், மட்டன் குழம்பின் காரம் இருப்பதால் தனியாக மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை. ஆனாலும் காரம் கொஞ்சம் குறைவாக இருந்தால் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இட்லி நன்றாக உதிரியாக வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சில்லி இட்லி ரெடி. சூடாக பரிமாறி சைடு டிஷ் ஆக மட்டன், சிக்கன் சுக்கா வைத்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

வீட்டுல எல்லோரும் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சுன்னு சொன்னாங்க நெஜமாவே. 

பின்குறிப்பு:
சிக்கன் குழம்பு இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆனாலும் மட்டன் குழம்பு பயன்படுத்தினால் தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.

இந்த சில்லி இட்லி மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள முதலியார் இட்லிக் கடையில் சூப்பரா செய்வாங்க. அங்க சாப்பிட்டு ரொம்பவே பிடித்து போயி நானே செய்ய கற்றுக் கொண்டேன். ஹி..ஹி...
மேலும் வாசிக்க... "சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி?"



இந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா?

இந்த வருடம் நமது நாட்டிற்கு 13-வது ஜனாதிபதி தேர்தல் வரபோகுது. நாமெல்லாம் இதுக்கு ஓட்டு போட முடியாது. நாம விருப்பப்பட்டு? தேர்ந்தெடுத்த பெரிய ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பாங்க. எப்பவுமே ஜனாதிபதி தேர்தல்ல ஆளுங்கட்சி ஒருத்தரை சொல்வாங்க, மற்ற கட்சிகள் எல்லாம் அவரை ஆதரிச்சு அவரையே ஜனாதிபதியா உட்கார வச்சிருவாங்க. ஆனா இந்த வருஷம் எம்எல்ஏ, எம்பி தேர்தல் போல ஜனாதிபதிக்கும் ஏகப்பட்ட போட்டி வந்திருச்சு. ஆளுங்கட்சி தரப்புல இருந்து அவரா, இவரான்னு திண்டாடி, இப்ப பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதிக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க.

அப்புறம் மம்தா பானர்ஜி நம்ம ஊரு அப்துல் கலாமை ஜனாதிபதியா நிறுத்தனும்னு ரொம்பவே மெனக்கட்டு அவருக்காக ஆதரவை திரட்டிட்டு இருக்காங்க. நம்ம ஜெயலலிதா பி.ஏ.சங்மாவை நிறுத்தனும்னு சொன்னாங்க. ஆனா இப்போ அவருக்கு எந்த அளவுல ஆதரவு இருக்குன்னு தெரியல. பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்க விருப்பம் தெரிவிச்சு இருக்கார். ஆக, இப்படி, ஜனாதிபதி ரேசில், பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, ராம்ஜெத் மலானி என நாலு பேர் இருக்குற மாதிரி தெரியுது. எந்தெந்த கட்சி ஆதரவு இவங்களுக்கு கிடைக்குதுன்னு எப்படியும் பேரம் நடந்திட்டு தான் இருக்கும். ஆனாலும் இப்ப அஞ்சு வருசமா பிரதீபா பாட்டில் ஜனாதிபதியா இருந்திருக்காங்க. என்ன செஞ்சு நாட்டை முன்னேற்றி இருக்காங்கன்னு தெரியல. ஆனா நிறைய டூர் போயி நிறைய செலவு செஞ்சிருக்றதா சொல்றாங்க. சரி விடுங்க, அவங்க ஜனாதிபதி காலம் முடியப்போகுது. ஆண்டு அனுபவிச்சுட்டாங்க. அடுத்து வர்றவங்களாவது ஏதாவது பிரயோசனமா செய்வாங்களா?

மம்தாஜி சொல்றது போல கலாம் மீண்டும் ஜனாதிபதியா வந்தா இந்தியா ஓரளவு நல்ல பாதையில் செல்லும் என பெரும்பாலான மக்களின் விருப்பம். ஆனா ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பவர்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பவர்கள் மேலிடம் சொல்வதையே செய்வார்கள். வேற வழி..... அவர்கள் அந்த இடத்தில் பிழைப்பு நடத்த வேண்டி மேலிடம் சொல்வதைத் தான் கேட்பார்கள்.

ஆளுங்கட்சி நிறுத்தியிருக்கும் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவைகள் நிறைவேறாமல் போனால் இந்தியாவின் வரும் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போய் விட வாய்ப்புகள் மிக அதிகம்.
மேலும் வாசிக்க... "இந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா?"



பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி

(அந்த குண்டம்மாவுக்கு பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு சொல்லிட்டே பெரிய பாப்பாவுக்கு போன் செய்கிறாள் சின்ன பாப்பா.)

சின்ன பாப்பா: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்க மாட்டிங்கறாளே, இவ ஆடி அசைஞ்சு நடந்து வரவே ரெண்டு நாள் ஆகும். அதனால அடுத்து கால் பண்ணுவோம்.
(அடுத்த கால் செய்கிறாள்)
ஹலோ... ஹலோ... குண்டம்மா சீக்கிரம் போனை எடுடி.

பெரிய பாப்பா: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் பெரிய பாப்பா பேசறேன். நீங்க யாருங்க?

சின்ன பாப்பா: அக்கா, நான்தான் சின்ன பாப்பா பேசறேன். எப்படி அக்கா இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்கக்கா போயிருந்திங்க?

பெரிய பாப்பா: அடியே, நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்கடி போவேன்? இங்க வீட்டுல தாண்டி இருக்கேன். ஆனாலும் இப்ப ஒரு மாசமா ரொம்ப பிஸியா இருக்கேன்டி.

சின்ன பாப்பா: என்னக்கா சொல்றிங்க? வீட்டுல இருக்கேன்னு சொல்றிங்க, அப்புறம் ரொம்ப பிசின்னு சொல்றிங்க, புரியற மாதிரி சொல்லுங்கக்கா?

பெரிய பாப்பா: அதுவாடி, கொஞ்ச நாளா என் கணவருக்கு எம்மேல கோவமா இருந்தார்டி. அவரு நல்ல மூடுல இருக்கறப்போ என்னங்க, எம்மேல பாசமா இருக்க மாட்டிங்கறிங்கன்னு கேட்டேன். அப்பத்தான்டி மனுஷன் கொஞ்சம் வாயை தொறந்து பேசினாரு. அதாவது நான் வர வர வெயிட் போட்டுட்டே போறேனாம். உடம்பை கவனிக்கவே மாட்டிங்கறேனாம். அதான் அவர் அதை சொன்னா, எங்கே என்னைய குறை சொல்றார்ன்னு சொல்லி புலம்புவேன்னு, ஒண்ணுமே பேசாம கோவத்துல இருந்திருக்கார்.

சின்ன பாப்பா: ஓ... அப்படியா சங்கதி.. சரி, அவர் சொல்ற மாதிரி நீங்க வெயிட் அதிகமாயிட்டே தான் வறீங்க. கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுங்க அக்கா.

பெரிய பாப்பா: அடியே, வெயிட் குறைக்க ஒரு மாசமா லேடிஸ் பிட்னெஸ் சென்டருக்கு போயிட்டு இருக்கேன்டி. இப்ப தான் கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகுற மாதிரி தெரியுது. இப்பத்தான்டி எனக்குள்ள ஒரு நம்பிக்கையே வந்திருக்கு. வெயிட் குறைக்க முடியும்னு...

சின்ன பாப்பா: அக்கா ரொம்ப நல்ல விஷயம்... பிட்னஸ் சென்டருக்கு எவ்ளோ அக்கா பீஸ்? லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் இருக்கா?

பெரிய பாப்பா: அடியே, என்னடி அப்படி கேட்டுட்ட? மாசம் சுளையா அறுநூறு ரூபா தரேன்டி, எல்லா லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸும் இருக்குடி. ஆரம்பத்துல வார்மப்புல இருந்து ஹெவி எக்ஸர்சைஸ் வரை எல்லாமே இருக்குடி. அதோட டயட்டும் பாலோ பன்றேன்டி. வீட்டுல இப்ப நானும் அவரும் டயட் புட் தான் எடுத்துக்கறோம்.

சின்ன பாப்பா: அக்கா, இப்பவே உங்கள பாக்கணும் போல இருக்கு. ஆனாலும் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இந்த வீக் எண்ட்ல அங்க வரேன்.

பெரிய பாப்பா: சரிடி, எப்போ வேணாலும் வாடி.. வேறென்ன சங்கதி?

சின்ன பாப்பா: அக்கா, ஜீ தமிழ் டிவியில போடற சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் பாப்பிங்களா? பெண்கள், பொதுவான குடும்ப பிரச்சனைகளை தீர்க்குற விழிப்புணர்வு ப்ரோக்ராம்...

பெரிய பாப்பா: சில எபிசோட்ஸ் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ப்ரோக்ராம் அவசியமா இருந்தாலும், நாலு சுவத்துக்குள்ள குடும்பத்துக்குள்ள பேசி தீர்க்குற பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சத்துக்கு வருதே. அதனால அவங்களோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கேடி.

சின்ன பாப்பா: அக்கா, நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அப்படி நாலு சுவத்துக்குள்ள தீர்க்க முடியாமத் தான் இங்க வருதுன்னு சொல்லிக்கறாங்க. இப்படி ப்ரோக்ராம்ல கலந்துகிட்டு பிரச்சனை தீர்ந்தா போதும். நிம்மதி கெடச்சா போதும்னு தான் வராங்கன்னு கேள்விப்பட்டேன். ப்யூச்சர் பத்தி அவங்க கவலைப்பட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகாதுல. இந்த ப்ரோக்ராம் டைம்ல நான் சீரியல் பார்க்கிறது இல்லைக்கா...

பெரிய பாப்பா: ஆமாண்டி, சீரியலை விட பயங்கர இன்ட்ரஸ்டிங் டர்னிங்கெல்லாம் அந்த ப்ரோக்ராம்ல நடக்குது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒரே பரபரப்பா தான் இருக்கு. அதனால இந்த மாதிரி விழிப்புணர்வு ப்ரோக்ராம்ஸ் பாக்கலாம்.

சின்ன பாப்பா: அக்கா, இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு லேடிஸ் பியூட்டி பார்லர் இருக்குல. அங்க போன வாரம் புதுசா ஸ்பா அப்படின்னு தொறந்திருக்காங்க. எங்க தெரு லேடிஸ் எல்லாம் இப்ப அங்க கூட்டமா மொய்க்கறாங்க. நானும் அங்க போலாம்ன்னு பார்த்தா அந்த ஸ்பா ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. அப்படி ஸ்பான்னா என்னா அக்கா.

பெரிய பாப்பா: அடியே, ஸ்பா அப்படின்னா தண்ணீர்ல குளியல்ன்னு அர்த்தம். அதாவது நேச்சுரல் கிரீம் யூஸ் பண்ணி, மசாஜ், பேசியல், உடம்பை புத்துணர்ச்சி ஆக்கி அழுக்கை நீக்கும் மூலிகை குளியல்ன்னு விதவிதமா நிறைய இருக்கு. ரொம்ப காஸ்ட்லி தான். முன்னாடி பாரீன்ல பேமசா இருந்துச்சு. இப்போ நம்ம நாட்டுக்கும் வந்திருச்சு.

சின்ன பாப்பா: அக்கா நீங்க சொல்றத பார்த்தா அழகு பராமரிப்பின் லேட்டஸ்ட் நுட்பமா இருக்கும் போல. ரேட் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரு வாட்டியாவது அங்க போயிட்டு வரணும் அக்கா. மொதல்ல அவர் கிட்ட பெர்மிஷன் வாங்கணும். ஒரு நாளைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்.

பெரிய பாப்பா: அடியே, இப்பவே மாசம் அறுநூறு செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுல ஸ்பாக்கும் செலவு பண்ணினா அவரு ரொம்ப கோவப்பட்டிருவார். நீ போயிட்டு வாடி. அப்புறமா யோசிக்கலாம் நானும் வர்றத பத்தி...

சின்ன பாப்பா: ஓகே அக்கா. அக்கா... ஓகேன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்த ஹன்சிகா பொண்ணு இருக்குல. சிம்பு கூட கிசுகிசுல சிக்கியிருக்கு. சிம்பு கூட வேட்டை மன்னன் படத்துல ஹன்சிகா ஜோடி சேர்ந்தது மட்டுமில்லாம அடுத்த வாலு படத்துலயும் ஜோடி சேர போறாங்களாம். இதுக்கு சிம்பு ஹெவி ரெக்கமென்ட் பண்ணியிருக்காராம்.

பெரிய பாப்பா: ம்ஹும்... நல்ல ரெக்கமென்ட் தான்... சிம்பு கூட கிசுகிசுல மாட்டறது பெரிய விசயமே இல்லைடி...
(போன் கட் ஆகிறது. திரும்ப பெரிய பாப்பா போன் செய்கிறாள். சின்ன பாப்பா அட்டென்ட் செய்கிறாள்)

சின்ன பாப்பா: அக்கா, போன்ல காசு தீர்ந்து போச்சு. அதான் கட் ஆயிருச்சு. இந்த ஏர்டெல்ல ரொம்ப காஸ்ட்லி அக்கா.

பெரிய பாப்பா: ஏர்டெல் காஸ்ட்லின்னு நீதான் சொல்ற. ஆனா போன மாசம் அதிகமா ஆள் புடிச்சது ஏர்டெல் தான்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எல்லா மொபைல் காரனும் அவனால பிடுங்க முடிஞ்ச காசை பிடுங்குறான்.

சின்ன பாப்பா: ஆமாங்கக்கா.... அக்கா, அவர் வர்ற நேரம் ஆச்சு. ஏதாச்சும்  ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்கலினா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிருவார். 

பெரிய பாப்பா: என்ன டிபன் செய்யப்போறடி....

சின்ன பாப்பா: பால் பணியாரம். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதான் செய்யப்போறேன். ஓகே அக்கா... டைம் ஆச்சு.... பை... பை.... 

பெரிய பாப்பா: ஓகேடி... பை..பை....

(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)
மேலும் வாசிக்க... "பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்? அரட்டைக் கச்சேரி"



சொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் செஞ்சும் இறை பணியாற்றி வந்தார். அவர் இப்படியே இறைப்பணிக்காக நல்லாம் பட்டி அப்படிங்கற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி இறைப் பணியாற்றி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார். அப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவரின் இறைப் பணியில் மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக வந்து விடுவதாக சொன்னான். இதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டும், பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் பயணமானார்.

துறவி வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தார். அவன் வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தான். துறவி அவனிடம், தம்பி பின்னாடி உட்கார்ந்திருக்க, பொருட்கள் கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார். கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள். அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார். அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க, அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு என சொன்னான். இவர், கீழ விழுந்தா எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே என துறவி கேட்க, அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்க தானே சொன்னிங்க என சொன்னான். ஆக, அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாக சொன்னான். துறவி கீழ விழுந்தா பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்.

அடுத்து அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள். துறவி அவனிடம் எது கீழ விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என சொல்லி அவனை வண்டி ஏற்றினார். சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் நிறுத்தினார். இறங்கி வண்டிக்கு பின்னால் பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுதும் மாட்டு சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது. துறவி, என்ன தம்பி வண்டியில இவ்ளோ சாணி இருக்கு, என்ன விஷயம் என கேட்க, அதற்கு அவன், நீங்க தான ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னிங்க அதான் எடுத்து வச்சுட்டு வரேன் என பதில் சொன்னான். அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்து கவலைப்பட்டார். சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசித்தமாக செயல்பட மாட்டிங்கறானே என மிகவும் வருத்தமுற்றார். அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கி பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....
கற்றுக் கொள்வது:
  • சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள்ளர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசித்தமாக செயல்பட வேண்டும்.
  • சொன்னதை செஞ்சேன் என்கிற மனப்போக்கை தவிர்த்தால் நிறைய சாதிக்கலாம்.
மேலும் வாசிக்க... "சொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை"



மகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்!

வணக்கம் மகா பொது ஜனங்களே....
நான் தான் மதுரைக்காரன் விஜயகாந்த் பேசறேன். (ஐயா மதுரைக்காரன்னு சொல்றிங்களே, ஏதும் உள்குத்து இருக்கா?) இந்தம்மாவை நம்பி நான் மோசம் போயிட்டேன். நீங்க அன்பா, ஆசையா என்னைய அவங்க கூட கூட்டணி வைக்க சொன்னிங்க. மக்கள் ரொம்ப ஆசைப்படறாங்களேன்னு நானும் கூட்டணி வச்சேன். அவங்க புண்ணியத்துல செவப்பு கறுப்பு கட்சிய விட அதிகமா சீட்டு வாங்கி மொத தடவையா தமிழகத்துல எதிர்க்கட்சி தலைவரா வந்தேன்யா. நல்ல பொறுப்பா எதிர்க்கட்சி தலைவரா இருக்கலாம்னு நெனச்சா, அவங்க தரப்புல இருந்து என்  வாயை தொறக்கக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுட்டாங்க. பெருசா கை வேற எனக்கு மாறுச்சு. அதான் நானும் வாயை தொறக்கல. வாயைத் தொறக்காம இருந்து மக்கள் கிட்ட கெட்ட பேரு வாங்கினாலும் எதிர்க்கட்சி தலைவர்ன்னு மப்புல ச்சே..ச்சே.. கெத்துல இருந்துப்புட்டேன். 

ஆனாலும் சட்டசபையில அவங்க பண்ணுன அட்டகாசம் தாங்க முடியல. என்னால சும்மா உட்க்கார்ந்து இருக்க முடியல. அதான் கையை நீட்டி, நாக்கை மடக்கி என்னன்னம்மோ பேசிப்புட்டேன். அந்தப் பேச்சுல உடன்புறப்புகளும் ஆடிப் போயிட்டாங்க. ஆனாலும் அவங்க ரேஞ்சுக்கு என்னால முடியாட்டியும், என் ரேஞ்சுக்கு எதிர்க்கட்சி தலைவரா பேசுனேன்னு ரொம்ப தெனாவெட்டா இருந்தேன். ஆனா நான் பேசுனது குத்தம்னு எல்லா டிவியிலும் மாத்தி மாத்தி போட்டுக் காட்டிட்டாங்க. அப்படி என்னத்த பேசிட்டேன். கையை நீட்டி... நாக்கை சுத்தி.. சரி விடுங்க. நான் பேசுனது தப்புன்னு வச்சுகிட்டாலும், அதுக்காக சட்டசபையில இருந்து என்னை சஸ்பென்ட் பண்ணினது ரொம்ப ஓவர்யா.. அத்திப் பூத்த மாதிரி சட்டசபைக்கு போயிட்டு இருந்த என்னை தூக்கி வெளியில போட்டது ரொம்ப தப்புங்க. மெதுவா என்கிட்டே சொல்லி இருந்தா நானே அடுத்தநாள் வராம இருந்திருப்பேன்ல. சரி, விடுங்க நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டேன். 

கொஞ்ச நாளுக்கு முன்னாடி மஞ்சத்துண்டு தலைவர் புள்ளைங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சுக்கிட்டதுல ஏதாச்சும் எனக்கு சாதகமா கிடைக்கும்னு பார்த்தா ஒண்ணுமே கிடைக்கல. சரி, அவங்க குடும்பம் ரெண்டுபட்டா நமக்கு ஏதாச்சும் கிடைக்கும்னு நெனச்சது என் தப்பு தானே. இந்த விலைவாசி ரொம்ப ஏறிட்டே போகுதேன்னு அம்மா கிட்ட போயி நின்னா பேச்சே வர மாட்டிங்குது. ஏன்னா, அவங்க சொல்ற ரீசன் கரெக்ட்டா இருக்குதா, அதனால பேச முடியல. அங்க இருந்து வந்து மக்கள் கிட்ட மேடை போட்டு பேசினா அவங்க விலையேத்துனது தப்புன்னு தோணுது. அங்க ஆவேசமா பேசிடுறேன். ஆனா, எதிர்க்கட்சி தலைவர் சும்மா விமர்சனம் செயறார்னு பேப்பர்ல போட்டுடறாங்க. உண்மையில விலை ஏறிப்போச்சுனு சொன்னாலும் என்னமோ நான் பேசுறது காமெடியாவே இருக்குது போல அவங்களுக்கு. 

இதோ, இப்ப புதுக்கோட்டை தேர்தல் பிசியில இருக்கேன், ஆனா மஞ்சள் துண்டு தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஏகப்பட்ட மனு வந்துச்சு அவங்க தரப்புல இருந்து. ம்ஹும், நான் தலை வளைஞ்சு தரவே இல்லையே. ஏன்னா, நான் எதிர்க்கட்சி தலைவர்ல்ல. என்னை விட ஓட்டு கம்மியா வாங்குன கட்சி தலைவர் கிட்ட தலவணங்குறதா? நியாயம் இல்லையேன்னு வாழ்த்து சொல்ல முடியாதுன்னு கம்முன்னு இருந்துட்டேன். இந்த இடைத்தேர்தல்ல நான் அவங்க கூட கூட்டணி வைக்கணும்னு ரொம்பவே தூது விட்டாங்க. நான் சிக்கவே இல்லையே. ஏன்னா எப்பவுமே நான் மக்கள் கூட்டணி மகேசன் கூட்டணின்னு நினைக்கிறவன் நான்.

மக்களே, என்னமோ உங்க கிட்ட கொஞ்சமா மனசு தொறந்து பேசனும்னு நினைச்சேன். பேசிட்டேன். வரட்டுமா.. அக்காங்க்க்க்க்ங்...
மேலும் வாசிக்க... "மகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்!"



எம்மாம் பெரிய கொழுகொழு எலி?

எம்மாம் பெரிய எலி? கொழுகொழுன்னு சும்மா ஒரு மாசமா தண்ணி காட்டுன எலி. டிவிக்கு பின்னாடி, பீரோவுக்கு பின்னாடி, கட்டிலுக்கு பின்னாடி, இப்படி வீட்டுல எல்லாத்துக்கு பின்னாடியும் போயி ஒளிஞ்சுக்கிட்டிருந்த எலி, நேத்து எலிப் பொறிக்கு உள்ளேயும் ஒளிஞ்சுக்கிருச்சு. அட, ஆமாங்க... எலிப் பொறி வச்சு எலிய பிடிச்சுட்டோம்ல.
 இந்த எலி புடிச்ச கதையை கேளுங்க, மக்கா... இந்த எலி பகல்ல எங்க இருக்குன்னு தெரியல. நைட் ஆச்சுன்னா கரெக்டா வந்திரும். அங்க தாவும், இங்க தாவும், என்னத்தையாவது கர்க்.. கர்க்... கர்க்...ன்னு கடிச்சுகிட்டு இருக்குற சத்தம் மட்டும் கேட்கும். அந்த எலியை எப்படியாவது பிடிச்சே தீரனும்னு நானும் முடிவு பண்ணினேன். எலியை பிடிக்கறதுக்கென்னே மரக்கட்டையில செஞ்ச பொறி வீட்டுல இருந்த ஞாபகம். ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்குனது. எங்க இருக்குன்னு தெரியாம அதை எடுக்க முடியல. ஆனாலும் இந்த எலி இம்சையினால அந்த பொறியை தேடி எடுக்க வேண்டி பரண் மேல தேடினேன். ஒரு மூலையில அது இருந்துச்சு. ஆகா, எலி மாட்டுச்சுன்னு சந்தோசப்பட்டு பொறியை எடுத்து தொடச்சு ஒரு தேங்காய்ச்சிள் வச்சு டெஸ்ட் பண்ணிப் பார்தேன். டெஸ்ட் ஓகே ஆச்சு. சரி, பொறியை எங்க வைக்கலாம்னு தேடி, அதாவது எலி வர்ற இடம் பாத்து வைக்கனும்ல, எப்படியோ ஒரு இடத்துல வச்சேன். அடுத்த நாள் பாத்தா ம்ஹும்... எலி நம்மள விட புத்திசாலி, அன்னைக்கு மாட்டல. அடுத்த நாள் வேற இடத்துல வச்சேன். அப்போதும் மாட்டல. இப்படியே ஒரு வாரம் நானும் பல இடத்துல பொறியை வச்சு வச்சுப் பார்த்தேன். சிக்கவே இல்லைங்க.

அதனால நானும் எலி புடிக்க முடியாதுன்னு சோர்ந்து போயிட்டேன். ஆனா அங்க அங்க எலி மட்டும் கண்ணுல படும். அப்ப மறுபடியும் வந்துச்சு வேகாளம். இந்த எலியை விடக்கூடாதுன்னு மறுபடியும் ஒவ்வொரு இடமா வச்சு வச்சுப் பார்த்தேன். மாட்டவே இல்லை. நேத்து நைட்டு பரண் மேல கர்க்.. கர்க்...ன்னு ஒரு சத்தம். ஒரு ஸ்டூலை போட்டு என்னான்னு ஏறிப் பார்த்தா ஒரு அட்டைப் பெட்டி மட்டும் லேசா ஆடிட்டு இருந்துச்சு. அங்க தான் எலி இருக்குன்னு கன்பார்ம் பண்ணினேன். அப்புறமா அந்த எடத்துல எலிப்புளுக்கையா இருந்துச்சு. ஒரு வேளை அந்த இடம் தான் எலி டெய்லியும் தங்குற இடமா இருக்கும்னு முடிவு பண்ணி, இதுவரைக்கும் தரையில வச்ச பொறியை அந்த இடத்துல வச்சேன். பொறி கொக்கியில தேங்காச்சிள் மாட்டி வச்சேன். 
 நைட்  டப்புன்னு அந்த பொறி மூடுன சத்தம் கேட்டுச்சு. எலி மாட்டுச்சா, இல்லையான்னு தெரியலையே...? காலையில மொத வேலையா அந்த பரண் மேல ஏறிப் பார்த்தேன். சக்சஸ்..சக்சஸ்... எலி உள்ளார மாட்டியிருந்துச்சு. ஆனா தேங்காய்சிள் எல்லாத்தையும் தின்றுச்சு போல. கொஞ்சம் கூட இல்லை. அந்த எலியை மெதுவா ஒரு சின்ன சாக்குல பிடிச்சு வீட்டுல இருந்து கொஞ்சம் தூரத்துல கொண்டு போயி முள்ளு காட்டுக்குள தூக்கி எறிஞ்சுட்டேன். மறுபடியும் வீடு தேடி வராதுன்னு ஒரு நம்பிக்கை தாங்க. 

எப்படியோ ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்த எலியை புடிச்சாச்சு. ம்ஹும்... இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.

அப்புறமா ஒண்ணு சொல்றேனுங்க, இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு. அடங்கோ, மறுபடியும் எலி வேட்டையை ஆரம்பிக்கணுமா?
மேலும் வாசிக்க... "எம்மாம் பெரிய கொழுகொழு எலி?"



கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!

ரெண்டு மாசத்துக்கு முன் நண்பர் செங்கோவி கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு, இந்தியாவுக்கு வர்றேன்யா அப்படின்னு. வாங்க,,,, மாம்ஸ் வாங்க, ரொம்ப சந்தோசம், மீட் பண்ணுவோம் சீக்க்ரமா'ன்னு ரிப்ளை அனுப்பினேன். அப்ப இருந்து செங்கோவி எப்படி இருப்பார்னு ஒரே யோசனையா இருந்துச்சு. ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.

அவரும் இந்தியா வந்ததும் டெய்லியும் போன் செஞ்சு எப்ப பிரகாஷ் பிரீயா இருப்பிங்க? மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க? சரிய்யா, குவைத் போறதுக்கு முந்தின வாரம் மீட் பண்ணலாம்னு ஓரு வழியா முடிவு செஞ்சோம். சும்மாவே கூகிள் வாய்ஸ் சாட்ல மணிக்கணக்கா பேசுவோம்.  இப்ப போன்லையும் தெனமும் அரட்டை தான். பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார். சரிய்யா, மாமனார் வீடுன்னா சும்மாவா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்.

ஒருவழியா எங்க ரெண்ட பேருக்கும் ஒரு நாள் ஈவினிங் டைம் கெடச்சுசு. பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஆறு மணிக்கு வந்திருவேன்னு சொன்னார். வாங்க மாம்ஸ் நானும் கரெக்டா வந்திருவேன்னு சொல்லிட்டேன். ஆனா நான் கம்பெனியில இருந்து வீட்டுக்கு வந்து சேரவே ஆறு மணியாச்சு. அடாடா, செங்கோவி வந்திருவாரேன்னு நெனைக்க அவர் கிட்ட இருந்து போன், பெரியார் வந்துட்டேன் எங்க வெயிட் பண்ண என கேட்க, பர்மா பஜார் பக்கத்துல சர்ச்க்கு முன்னாடி வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நானும் ரெப்ரெஷ் பண்ணிட்டு ஜங்சன் பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் பக்கத்துல பைக் பார்க் பண்றப்போ மணி ஆறு முப்பது. செங்கோவிக்கு போன் பண்ண மொபைலை எடுக்க அவரே கூப்பிட்டார். இதோ நீங்க நிக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டேன்னு சொல்ல ஒரு உருவம் என்னைப் பார்த்து கை அசைத்தது. ஆகா, கண்டேன் செங்கோவியை என மனசுக்குள் ஒரு சந்தோஷம். (நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எனக்கு நண்பரானவர் செங்கோவி. அப்போ அவரது பிளாக்கில் மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு. பிளாக்கிலும் கமென்ட் போட்டு, மெயில்லும் அனுப்பி அப்படியே சாட் செய்து நண்பரானோம். இப்போ இந்த நட்பு கதையை ஒத்தி வச்சுட்டு சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு பார்ப்போம்) செங்கோவி எப்படி இருப்பார்னு கீழ இந்த போட்டோவை பாத்துக்கங்க.

இருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பின், வெயிலுக்கு இதமா கரும்புச்சாறு சாப்டுட்டு பேசிட்டே பைக் இருக்குற இடத்துக்கு வந்தோம். செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார். என்ன மாம்ஸ், தியேட்டரை பார்த்து சிரிக்கறிங்க'ன்னு கேட்க, அதுவாயா, நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். இப்போ அப்படியே டோட்டலா மாறி நல்ல படங்கள் போடறாங்களேன்னு ஆச்சர்யப்பட்டார். தியேட்டர் நல்ல படத்துக்கு மாறி ஏழெட்டு வருஷமாச்சு என சொன்னேன். சரிய்யா, நல்லது நடந்தா சரிதான்யா... அப்படின்னு சொல்லிட்டே ஏதோ கடையை தேடினார். மாம்ஸ், என்ன கடையை தேடுறிங்க'ன்னு கேட்க, இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார். இதோ இங்க இருக்குன்னு கடைக்கு கூட்டிட்டு போனேன். செங்கோவி கலகல காவியம் படைப்பவராச்சே, ஆனா உண்மையிலஇலக்கிய புழுவா இருக்காரே'ன்னு நினைச்சு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன் (ஏன்னா அவரது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், அவரது எழுத்து பற்றி). 

புத்தக கடையில ஏதேதோ புத்தக பேரை சொல்லி செங்கோவி கேட்க கடைக்காரர் இல்லைன்னு தலையாட்டிட்டே வந்தார். அட, கடையில் இல்லாத புக்கா கேட்கறாறேன்னு  ராணிமங்கம்மாள் சத்திரத்தில் இருக்குற வேற புத்தக கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் அவர் கேட்ட புத்தகங்கள் இல்லை, அப்புறம் அவரா ரேக்ல தேடி ரெண்டு மூணு புத்தகங்கள் வாங்கிகிட்டார். நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.

புக் வாங்கிட்டு, சாப்பிட நல்ல வெஜிட்டேரியன் கடைக்கு போலாம்ன்னு சொன்னார். நான் அதிர்ச்சியாகி என்ன மாம்ஸ், அன்னைக்கு போன்ல நல்ல பிரியாணி கடையை சூஸ் பண்ணி வையுங்க, நாம மீட் பண்றப்ப போலாம்னு சொன்னிங்களே, அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன், இப்படி பொசுக்குன்னு வெஜ் தான் வேணும்னு சொல்லிடிங்களே'ன்னு கேட்க, இந்தியா வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் மாமனார் வீட்டுல போதும் போதும்ங்ற அளவுக்கு நான்வெஜ் சாப்பாடுதான், நைட் தூங்குறப்போ கூட சாப்பிட்ட ஆடு, கோழி எல்லாம் வந்து மிரட்டுது. அதான், ஒரு சேஞ்சுக்கு வெஜ் சாப்பிடலாம்னு சொன்னேன்,ன்னு அவர் சொல்ல, டவுன்ஹால் ரோட்டில் இருக்குற மீனாட்சிபவன் ஹோட்டலுக்கு கூட்டீட்டு போனேன். ஆளுக்கு சப்பாத்தி, சில்லி பரோட்டா சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம். எனது பதிவுகள், அவரது பதிவுகள், எழுதும், எழுதிய தொடர்கள், நாட்டுநடப்பு பற்றி பேசினோம். 

அப்போ நாய்நக்ஸ் பத்தி ரொம்பவே விசாரிச்சார். (எந்த பதிவரா இருந்தாலும் நாயநக்ஸ் பத்தி ஒரு முன்னேச்சரிகையாவே பேசுறாங்க? அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ?) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா?ன்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சாப்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரா? இனிமே இந்த மாதிரி பச்சப் புள்ள பதிவருங்க கூட சேராதிங்கன்னு (பதிவர்களே நக்ஸிடம் கவனம் தேவை) சொல்ல, நான் நக்ஸ் அண்ணே, நாம அப்புறம் பேசுவோம்னு போனை கட் பண்ணிட்டேன்.

செங்கோவி புக்ஸ் வாங்குறப்போ அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்தேன். அதை அவர்கிட்ட காட்டி யாருன்னு கேட்டேன், அவரு யாரா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார். அட, நீங்க தான் அது. புக்ஸ் வாங்குறப்போ எடுத்தேன்னு சொன்னேன். அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். அப்புறமா சாபிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கடைக்கு வெளியே வந்தோம். அங்க என் பைக்கை சுத்தி நாலஞ்சு லேடி கான்ஸ்டபிள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. ஐயோ, நோ பார்க்கிங்ல நிறுத்திட்டோமான்னு வேகமா போனேன். ஆனா, அங்க பார்க்கிங்ன்னு தான் போட்டிருந்துச்சு. அப்புறம் ஏன் அங்க அவங்க நிக்கறாங்கன்னு யோசிச்சா, நான் அங்க நிறுத்தும் போது நிறைய பைக் இருந்துச்சு. இப்போ அந்த இடத்துல என்பைக் மட்டும் இருந்ததால கொஞ்சம் இடம் விலாசமா இருந்துச்சு. அதனால அங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க போல.

செங்கோவியும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ல, அடுத்து எப்ப இந்தியா வருவிங்க?ன்னு கேட்டேன். அடுத்த வருசம்ன்னு சொன்னார். அப்போதாச்சும் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி பிளான் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னேன். அவரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றி விட கூட்டிச் சென்றேன். அன்னைக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக், ட்ராபிக்ல ஊர்ந்து பஸ்ஸ்டாண்ட் போகவே அரை மணிநேரம் ஆச்சு. அவரை பஸ் ஏற்றி விட்டதுடன் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என மனம் நினைத்தது. ஆனாலும் சாட்டில் எப்பவேணாலும் பேசிக்கலாமே என நினைக்க, அப்போது பஸ் கிளம்பியது. இருவரும் கையசைத்து விடை பெற்றோம். இனிதே எங்கள் சந்திப்பு நிறைவுற்றது.

நாய்நக்ஸ் கவனிக்க: தலைப்பில் ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
மேலும் வாசிக்க... "கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1