CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
 நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில்  (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும். 

பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான  மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. 
  • பேஸ்புக்கில் நமது கணக்கை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம்.
  • அதே போல நமது அடையாள பெயரை (user name ie: time line name) எவ்வாறு தமிழ் பெயராக மாற்றுவது என்றும் பார்ப்போம்.

பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்).
 
2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary ஓபன் ஆகும். அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற லிஸ்ட் ஓபன் ஆகும். அதில் தமிழ் மொழியை தேர்வு செய்து save changes தர வேண்டும். (பார்க்க கீழே உள்ள இரண்டு படங்களையும்)

அவ்வளவு தான். இனி உங்கள் பேஸ்புக் கணக்கு முழுவதும் தமிழ் மொழிக்கு மாறியிருக்கும். (பார்க்க கீழேயுள்ள படம்)
ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறிக.






பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க மேலே முதல் படம்).
 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் முதலாவதாக name என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது தற்போதைய பெயர் காட்டும். அதன் வலது பக்கம் edit என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில் first, middle, last, display as என காட்டும். 
 
3. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை தமிழுக்கு மாற்றி, உங்கள் பேஸ்புக் password கொடுத்து save changes க்ளிக் செய்யவும். சுமாராக ஒரு நாளில் உங்களுக்கு விருப்பமான தமிழ் பெயர் பேஸ்புக்கில் மாறியிருக்கும்.

சந்தேகம் இருப்பின் கமென்ட்-இல் கேட்கவும்.

மேலும் வாசிக்க... "பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?"



மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்


மதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் "மாமதுரை போற்றுவோம்" என்ற  விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது. 

  • மதுரையைப் போற்றுவோம்,
  • தொன்மையைப் போற்றுவோம்,
  • வைகையைப் போற்றுவோம் 
என மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.


நிகழ்ச்சிநிரல்:
பிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் "மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும். 

பிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

பிப்.,9ல், "தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், "தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மூன்றாம் நாளான பிப்.,10ல், "வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் "முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும். 

மாமதுரை சிறப்பு ஏற்பாடுகள்:
விழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த  அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.  விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

  
வைகையைப் போற்றுவோம்:
 3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது. 

இங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க... "மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்"



கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க

      இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள்.

    ஆனால் இந்திய கிரிக்கெட்டில்  பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம்.  இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள்.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.
 துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில்  வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.

திருஷ் காமினி பற்றி:
சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த "ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த "சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார். 

உலக கோப்பை போட்டியில் முதல் சதம் அடித்து வரலாறு படைத்த திருஷ் காமினி அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்போம் நண்பர்களே.

திருஷ் காமினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க... "கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க"



மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்

    மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொழுதுபோக்கு மற்றும் கல்விக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இங்கு SVN நிறுவனத்தால் இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பங்கள், காய்கறி சிற்பங்கள் என புதுமையாக கண்காட்சியை அலங்கரித்து இருந்தார்கள். சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
LMV ROCKET



ARYABHATA




கரும்பால் உருவாக்கப்பட்ட ஈபிள் டவர்

மணலால் உருவாக்கப்பட்ட சிற்பம்

பூசணி காயில் மீன் வடிவம் செதுக்கப்படுகிறது

பறவை வடிவம்

மிளகாய் மற்றும் கத்தரிக்காயில்



கொழையாடு பாடம் செய்யப்பட்டுள்ளது

மலை உடும்பு


சிறுத்தை தோல்


மேலும் வாசிக்க... "மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்"



விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)


ஹாய் பிரண்ட்ஸ்..

ஏமாந்துட்டேன்:
என்னத்த சொல்ல? 
    முந்தா நாள் ஜட்ஜ் நைட் கண் முழிச்சு படத்துக்கு தடையை  விலக்கினார். நாமெல்லாம் சந்தோசப்பட்டு படம் ரிலீஸ் பண்ணிருவங்கனு ஆர்வத்துல இருந்தோம். அதை நம்பி நானும் அடுத்து நம்மூருல என்னென்ன நடக்கும்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். பதிவு போட்டுட்டு பேப்பரை மேஞ்சா,  இன்னொரு ஜட்ஜ் நல்லா கண் முழிச்சு விஸ்வரூப படத்துக்கு மறுபடியும் தடை போட்டுட்டாருன்னு போட்டிருந்தாங்க. இதனால நான் போட்ட பதிவு ஒர்த் இல்லாம போயிருச்சுன்னு நினைக்கும் போது ரொம்ப பீலிங்கா இருக்கு. அப்படி இப்படி என நடக்கும்னு நெனச்சது எல்லாத்துக்கும் சேர்த்து ஜட்ஜ் ஐயா தடை போட்டுட்டார். அவரு எப்ப தடையை நீக்கி, நான் பதிவுல சொன்னது எல்லாம் நடக்கும்???? மீ வெயிட்டிங்.....

மதுரை பொருட்காட்சி:
போன மாசம் மதுரையில மூணு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சி போட்டிருந்தாங்க. ஒண்ணு தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியோட கல்விக் கன்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போயிருந்தேன், இந்த வாட்டி அப்படியொண்ணும் சிறப்பா இல்லை. சில காலேஜ் பசங்க செஞ்சிருந்த இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பம், காய்கறி சிற்பம் என கொஞ்சம் புதுசா பார்த்தேன். ஆனா பொழுது போக்க அப்படியொண்ணும் விரும்பறது மாதிரி இல்லை. 

அடுத்து மூன்றுமாவடி சர்ச் மைதானத்தில் வண்ண மீன் கண்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போன வாரம் தான் போயிருந்தேன். அன்னைக்கு தான் கடைசி நாள்னு போட்டிருந்தாங்க. ஜஸ்ட் மிச்ச்னு நெனச்சுட்டேன். கிட்டத்தட்ட நூறு மீன் தொட்டியில கலர் கலரா மீன்கள் வரிசையா வச்சிருந்தாங்க. சில மீன்கள் நல்லா சுறுசுறுப்பாவும், சிலது சோம்பேறியாவும் இருந்துச்சு. ஆனா பொழுது போக்குனு பார்த்தா டோட்டல் வேஸ்ட். எந்தப் பொருள் எடுத்தாலும், அப்படின்னு சில கடைகள் இருந்துச்சு. அங்க எல்லா பொருட்களுமே அழுக்கு மண்டி போயிருந்துச்சு. அதையும் சிலர் வாங்கிட்டு தான் இருந்தாங்க. 

இந்த கண்காட்சிகளில் எடுத்த போட்டோஸ் நிறைய இருக்கு. தனியா ஒரு பதிவுல போடறேன்.

அடுத்து ஐயர்பங்களா மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டிருந்தாங்க. அங்க போக முடியல. ஏன்னா ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு. இந்த கண்காட்சி பத்தி தனியா பதிவு எழுதியிருக்கலாமோ?????

"மாமதுரை" அப்படின்னா?:

மதுரையில மாமதுரைன்னு சில இடத்துல விளம்பரங்கள் பார்த்தேன். பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல மீனாட்சியம்மன் கோயிலுக்கு போற சந்திப்பு பக்கத்துல மாநகராட்சி சொந்தமான ஆபீஸ் இருக்கு. அங்க புதுசா பெயின்ட் அடிச்சு சுத்தம் பண்ணி மாமதுரை, மாமதுரைன்னு பெரிசா விளம்பரம் போட்டிருந்தாங்க. அங்க கண்காட்சி மாதிரி மாத்தியிருக்கறதா கேள்விப்பட்டேன். மதுரை மாவட்டத்தின் பழமையை நினைவுபடுத்தவும், இன்றைய தலைமுறைகளுக்கு விளக்கவும் இந்த மாமதுரை விழா எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். மேலும் விவரங்கள் அறிய இந்த பதிவை வாசிக்கவும்.

பேஸ்புக்கும் விஸ்வரூபமும்:
 விஸ்வரூப பட விவகாரத்தில் பேஸ்புக்கில் விஸ்வரூபமா வளர்ந்து கமலுக்கு ஆதரவா, எதிரா ஸ்டேடஸ், வாக்குவாதம்னு செம பீக்குல நம்ம ஆளுங்க இருக்காங்க. இன்னும் சிலர், நாட்டுல காவிரி, மின்வெட்டு, கூடங்குளம், இலங்கை தமிழர் பிரச்சனைன்னு எத்தனையோ பிரச்சனை இருக்கு, அதுக்கெல்லாம் கிளர்ந்தெழாத பேஸ்புக் நண்பர்கள், கமல் காசு போட்டு எடுத்த படம் பிரச்சனையில இருக்குன்னு இப்படி கொந்தளிக்கறாங்களேன்னு நியாயமும் பேசுறாங்க. ஸ்டேடஸ் போடறது பேஸ்புக்கில் நம்ம உரிமைங்க. அதுக்காக வெட்டு குத்து நடக்கற அளவுக்கு வேணாங்க.

என்னைப்பற்றி:
போன வருஷம் பதிவுலகில் கொஞ்சம் விலகியிருந்தேன். அதுக்கு காரணம் புது வீடு கட்டிட்டு இருந்தேன். இப்போ வீட்டு வேலை ஓரளவு முடிஞ்சி புதுமனை புகு விழாவும் நடத்தியாச்சு. இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு வீட்டு வேலை இருக்கு. ஆனாலும் இப்ப லோன், மற்றும் அலையுற டென்ஷன் இல்லாம கொஞ்சம் டைம் கெடச்சதால சில பதிவுகள் எழுதிட்டு வரேன். அப்புறமா வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்.

பதிவுகள் எழுதாம இருந்த காலத்தில நான் எழுதிட்டு இருந்த CNC Programming தொடர் சில புதியவர்களிடம் சேர்ந்திருக்கு. ஆமா சிலர் அடுத்த பார்ட் எப்போ வரும்? கொஞ்சம் டவுட் இருக்கு. கிளியர் பண்ணுங்கன்னு  மெயில்கள் அனுப்பி இருந்தாங்க. அவங்களுக்காக தொடரை ரீஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். கொஞ்சம் எக்சாம்பிள் வீடியோ தந்து பதிவு எழுதனும்னு நினைக்கிறதால லேட் ஆகுது. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):

மேலும் வாசிக்க... "விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1