இங்கு ஸ்வீடன், பின்லாந்து நீச்சல் வீரர்கள் கடந்த ஜூலையில் சாகசம் செய்யும்போது, கடலுக்கு அடியில் 150 அடி ஆழத்தில் உடைந்த கப்பல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். கப்பலின் உடைந்த பகுதிகளுக்கு இடையே சில பாட்டில்கள் இருந்தன.
கப்பல் எந்த ஆண்டு விபத்துக்குள்ளானது என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு பாட்டிலை மட்டுமே மேலே எடுத்து வந்தனர். பரபரப்பாகிவிடும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 70 ஷாம்பெய்ன் பாட்டில்கள் கிடைத்துள்ளன. கடலுக்கு அடியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சூரிய ஒளி படாத இடத்தில் இருந்ததால் ஷாம்பெய்ன் இப்போதும்கூட குடிக்கும் நிலையில் இருக்கிறதாம்.
கப்பல் 200 ஆண்டு பழைமையானது என தெரியவந்தது. ஷாம்பெய்ன் சரக்கு 1780 வாக்கில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 1825&ல் தயாரிக்கப்பட்ட ஷாம்பெய்ன்தான் உலகிலேயே பழைய சரக்காக கருதப்படுகிறது.
பின்லாந்து சரக்கு தயாரானது 1780-களில் என்பது நிரூபணமானால் இதற்கு அந்த பெருமை கிடைக்கும். தலா ரூ.31.9 லட்சம் என 70 பாட்டில் விலை ரூ.22 கோடியை தாண்டும் என்கின்றனர் ‘சரக்கு’ நிபுணர்கள்.

Best Blogger Tips
UA-18786430-1
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - தகவல் களஞ்சியம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா