அஜித் குமார் நடிக்கும் 50-வது படமான ‘மங்காத்தா’வின் பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் தரப்பு கசியவிட்டு வருகிறது. அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் சிவாஜி படத்தில் இடம்பெறும் ‘பல்லேலக்கா’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு; “ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.
மாலைமலர்
Best Blogger Tips
UA-18786430-1
25 கருத்துரைகள்:
வடை..வடை...வடை எனக்கே வடை!
ரீமிக்ஸ் பண்றாங்களா? வேற பாட்டே கிடைக்கலியா இவங்களுக்கு?
@செங்கோவி
ஒரு வடை தான் தருவேன்.
யுவன் இந்த முறை கலக்குவார்னு நம்புறேன்..தலயும்!
@செங்கோவி
யுவன் இந்த முறை கலக்குவார்னு நம்புறேன்..தலயும்!>>>
நானும் அப்படித்தான் நம்பறேன்
பல்லேலக்கா.. அட திரும்பவும் கலக்குதேக்கா... 5வது வடை ஹி ஹி
சரிங்க தல
பல்லேலக்கா எப்பிடி இருக்குன்னு கேட்டிருவோம் .
அப்புறம் நண்பரே நேத்து நம்ம பக்கம் ஆளையே காணோம் .
மங்காத்தா-பல்லேலக்கா-அடங்கொக்கமக்கா!
எது எப்படியோ தயாரிப்பாளர் பல்லேலக்கா ஆகாமல் இருந்தால் சரிதான் .......
யோவ் ரொம்ப மாசமா சுத்துறாங்க ரீலா.....கொய்யால படம் வருமா வராதா...அத சொல்லுய்யா மாப்ள ஹிஹி!
நல்ல அர்த்தமுள்ள lyrics ..அதான் போட்டி தமிழ்வாசி...
அப்படியா...
ok. :-)
@M.R
உங்க கடைக்கு வந்தாச்சு மாப்ளே
@கோகுல் ஹா...ஹா... அடங்கப்பா..
@FOOD
வாங்க ஆபீச்சர்.
@koodal bala
கவலை வேண்டாம் பாலா
@விக்கியுலகம்
மாம்ஸ் விரைவில் ரிலீஸ்
@Reverie
ஒரு வார்த்தை தான் இன்னமும் பாடல் வரிகள் தெரியல
தகவலுக்கு நன்றி மாப்ள
பாடல் வரட்டும்..
புதிய தகவல் ... அந்த வித்தியாசத்திற்காக காத்திருக்கிறோம்..
ரைட்டிடி
மாப்பிள விக்கி கேக்கிறார் ரெம்ப அமளிபடுகிறார் படம் எப்ப வரும்?
படதயாரிப்பாளர்கள் பம்மிக்கொண்டு இருக்கிறத பார்த்தா யோசிக்கதான் வேண்டும்...!!
பல்லேலக்காவின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.