இந்த சந்தோஷம் எத்தன நாள்கள் தான் நீடிக்கும் என எண்ணிட்டு இருந்தேன். நான் மட்டுமல்ல, நம்ம தமிழகமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போச்சு. ஆம், அது இன்னையோட முடிவுக்கு வந்துருச்சு. வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும் அந்த சந்தோஷம்.
ஆமாங்க, என்னத்த சொல்ல, போன வாரம் ரொம்ப சந்தோசமா ஒரு பதிவு போட்டேனுங்க. மதுரையில கரண்ட் கட் இல்லைன்னு போட்டிருந்தேன். அந்த பதிவ படிச்சுட்டு நம்ம நண்பர்களும் அவங்க ஊர்லயும் கரண்ட் கட் இல்லைன்னு சொல்லியிருந்தாங்க. மதுரைக்கு மீனாட்சியம்மன் அருள்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா காற்றாலை மூலமா ஆயிரம் மெகாவாட்க்கும் மேலாக கரண்ட் கிடச்சதால எல்லா ஊர்லயும் கரண்ட் கட் செய்றத நிறுத்தி மக்களை சந்தோசப்படுத்தினாங்க.
இன்னைக்கு எல்லாம் போச்சு. இன்னையுல இருந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, சுமார் அஞ்சு மணி நேரம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. மதியம் 12.00 - 3.00, அப்புறம் 6.30 - 7.30, அப்புறம் 9.30 - 10.15 இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ காற்றாலை கரண்ட் தீந்துச்சா? இல்ல, மதுரையில அழகர் திருவிழா முடிவுக்கு வர்றதுனால மீனாட்சியம்மன் அருளை நிறுத்திட்டாங்களான்னு தெரியல. மதுரை அல்லாத மற்ற இடத்திலையும் அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்துருச்சான்னு தெரியல.
ஆக, மக்கள் சந்தோசமா, நிம்மதியா கரண்ட் காத்தை சுவாசிக்க அரசு விரும்பல போல. சரிங்க, மறுபடியும் ஏதாவது நல்லா பலமா காத்தடிக்குதான்னு பாப்போம், அரசும் இப்ப மாதிரியே நம்மள சந்தோசப்படுத்துறாங்களான்னு பொறுத்திருந்து தான் பார்ப்போமே?????????????????????






Best Blogger Tips
UA-18786430-1