இந்த கொலவெறி பாட்டை பத்தி பதிவு நெறைய போடறாங்க. நானும் கூட ஒரு பதிவு போட்டிருந்தேன். கொலவெறி பத்தி எழுதறத அந்த பதிவோட நிறுத்திக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த கொலவெறி பாட்டை வச்சு நிறைய ரீமிக்ஸ் யூடியூப்ல தினம் தினம் வந்துட்டே இருக்கு.
ஆனா வட இந்திய சேனல் ஒண்ணு தனது ஒரு நிகழ்ச்சியில் கலைஞர், ஜெயலலிதா இருவரையும் கார்ட்டூன் வடிவில் கொலவெறி பாட்டை ரீமிக்ஸ் செய்து நக்கலடித்து ஒரு கிளிப்பிங்ஸ் போட்ருக்காங்க. தமிழகத்தின் முதல்வரா இருக்குற, இருந்த இவங்கள இப்படி நக்கலடிக்க வட இந்திய சேனல்களுக்கு நாம என்ன இளப்பமாவா இருக்கோம்?
செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல இப்படித்தான் யோசிக்கனுமா? நம்ம தலைவர்களை நாம ஏன் விட்டுத் தரனும்? இவங்க நல்லது பன்றாங்களோ? கெட்டது பன்றாங்களோ? அது விஷயம் இல்லை. இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள், தமிழகத்தில் பல முறை முதல்வராக இருந்தவங்க, இந்த செய்தி சேனல் இப்படி செய்திருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதான் இந்த பதிவு எழுது படியா வந்திருச்சு. ஏதோ, சொல்லனும்னு தோனுச்சு, சொல்லிட்டேன்.
அந்த வீடியோ:
THANKS: YOUTUBE
இன்றைய பொன்மொழி:
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
இன்றைய விடுகதை:
அரையடிப் புல்லிலே
ஏறுவான் இறங்குவான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: அகப்பை
முந்தைய விடுகதைக்கான இடுகை: