CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பொன்மொழிகள். Show all posts
Showing posts with label பொன்மொழிகள். Show all posts


புத்தாண்டில் கவனிக்க வேண்டிய சில வரிகள்

நண்பர்களே,
புது வருடத்தில் சில பொன்மொழிகளை கவனத்தில் கொள்வோம்.
லட்சியம் இல்லாத மனிதன் மனிதனே அல்ல. லட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை அல்ல.
-மாஜினி


சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
-கூப்பர்



தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
-மகாத்மா காந்தி


காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
-வீப்பில்


காலத்தின் அருமை - பெருமையை அறிந்து கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படுபவனிடம் மரணம் கூட நிதானமாகத்தான் நெருங்குகிறது.
-பாக்ஸ்டர்



நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
-எகிப்திய மொழி


சோம்பல் என்பது மனதின் உறக்கம்.
-பிரான்ஸ் மொழி

.
மேலும் வாசிக்க... "புத்தாண்டில் கவனிக்க வேண்டிய சில வரிகள்"



கோடாலியும் பிறந்தநாள் பரிசும்!

மழுங்கிய கோடாரி
         ஒரு தடவ ஒரு மரவெட்டிக்கு ஊரிலே பெரிய முதலாளி கிட்ட வேல கெடச்சது. மொத நாள் காட்டுக்கு போயி பதினெட்டு பெரிய மரங்கள வெட்டிட்டு வந்தான். அதுல ஆச்சர்யப்பட்ட மொதலாளி மரவெட்டியை ரொம்ப பாராட்டி கொஞ்சம் காசு அதிகமாவே தந்தார். ஆனா அடுத்த நாள் பதினஞ்சு மரமே வெட்டினான். அப்புறம் ஒவ்வொரு நாளும் மரத்தோட எண்ணிக்கை கொறஞ்சுகிட்டே வந்துச்சு.
      இதனால நமக்கு தான் திறமை கொறஞ்சு போச்சோன்னு மரவெட்டி ரொம்ப கவலை பட்டான். மொதலாளி திட்டுவார்ன்னு பயத்தோட அவர பாக்க போனான். அவரும் அவன் புலம்பல கேட்டு ரொம்பவே கோவப்பட்டார். அப்புறமா அந்த மொதலாளி அவன் கோடாலிய வாங்கி பார்த்தார். அப்போ தான் அவருக்கு விசயமே புரிஞ்சுச்சு. அவன் கோடாலி தீட்டாம மழுங்கி இருந்துச்சு. அத பார்த்து அவன் கிட்ட இப்படி மழுங்கி இருந்தா எப்படி மரத்தை வெட்டும்? அதை தீட்ட வேணாமா? அப்படின்னு கேட்டார். மரவெட்டி வேலை செய்யும் ஆர்வத்துல தீட்ட மறந்துட்டேன் அப்படின்னு சொன்னான். அதோட மரம் வேட்டுறதுக்கே நாள் முழுசும் போயிருது. அதனால மறந்துட்டேன்னு சொன்னான். 
நீதி: புத்திசாலித்தனம் இல்லாத கடும் உழைப்பால் பலன் குறைவே!

பிறந்தநாள் பரிசு
       அப்பா... அப்பா... என ரொம்ப நேரமா கூப்பிடுட்டே இருந்தாள் மகள். வேலையில் இருந்த அப்பா எரிச்சலில் என்ன? என மகள் பக்கம் திரும்பினார். நாளைக்கு உங்களுக்கு பர்த் டே வருதுல... அதான் உங்களுக்கு ஒரு பரிசு தர போறேன் அப்படின்னு ஒரு பெட்டிய நீட்டினாள். அவளது பிஞ்சு கைகளால் தங்க பேப்பர் சுத்தி அந்த பேட்டி அழகாக இருந்துச்சு.
       பெட்டிய திறந்து பார்த்த அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. பேட்டி காலியா இருக்கே, யாருக்காவது பரிசு தரும் போது பெட்டிக்குள்ள ஏதாவது வச்சு தரணும்னு உனக்கு தெரியாதா? என மகளை திட்டினார். இல்லைப்பா, உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.
நீதி: கண்களுக்குத் தெரியாத பலவும் விலைமதிப்பற்றதாகவே இருக்கும்!

இன்றைய பொன்மொழி:
புலன்களின் ஆளுகையால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்!

இன்றைய விடுகதை:
தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கரும்பு.
மேலும் வாசிக்க... "கோடாலியும் பிறந்தநாள் பரிசும்!"



வௌவால் ரகசியம் தெரியுமா? பொது அறிவு விஷயங்கள் (bat secret)

     குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண் உண்டு. இருந்தாலும் அதற்கு கண் பார்வைத் திறன் தேவையில்லை. வௌவால் "சவுண்டு ரேஞ்சிங்" என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை உணர முடியும்.
வௌவாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாக வெளிப்படுத்தும்.
ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் தான். 17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமார்த்தியமாக பறக்கிறது வௌவால்.



இன்றைய பொன்மொழி:
பிறருக்கு தொண்டு செய்வதால் எவர் உடல் அழிவடைகிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்!

இன்றைய விடுகதை:
இலையுண்டு; கிளையில்லை;
பூ உண்டு; காய் இல்லை. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

மேலும் வாசிக்க... "வௌவால் ரகசியம் தெரியுமா? பொது அறிவு விஷயங்கள் (bat secret)"



லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

            லஞ்சம் தரனும்னா என்னென்ன தரலாம். பணம், நகைகள், அல்லது கிப்ட் பொருட்கள் அப்படின்னு நிறைய இருக்கு. ஆனா உத்திரபிரதேசம் லக்னோல இருக்குற ஒரு கிராமத்து விவசாயிகள் கிட்ட லஞ்சம் கேட்ட அரசு அபீசர்களுக்கு வித்தியாசமான முறையில லஞ்சம் கொடுத்திருக்காங்க அந்த விவசாயிகள். அந்த விவசாயிகள் லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ரெண்டு மூணு சாக்கு பைகள் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிகளும் ஆசையா பிரிச்சு பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. பணத்துக்கு பதிலா விஷமுள்ள பாம்புகள் இருந்துச்சாம் அதுல. உடனே அதிகாரிகள் பையை கீழே போட்டுட்டு அங்க இங்க ஓடினாங்க. ஒரு சிலர் அந்த பாம்புகளை விரட்ட ஏதேதோ செய்திட்டு இருந்தாங்க. அவங்க அளப்பறையை இங்கே வீடியோவா பகிர்ந்திருகேன். பாருங்க. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளார்கள்.
    இந்த செய்தியை ரெண்டு மூணு நாள்களுக்கு முன் புதியதலைமுறை செய்தி சேனலில் செய்தியாக பகிர்ந்தார்கள். அப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இனியும் இவர்களால் லஞ்சம் கேட்க முடியுமா? அப்படி கேட்டால் பாம்பு போல இன்னும் நிறைய தர விவசாயிகள் ரெடி...
நன்றி: புதியதலைமுறை

இன்றைய பொன்மொழி:
பசு மாடு கறுப்புன்னா பாலும் கறுப்பா இருக்குமா?

இன்றைய விடுகதை:
யாரும் இறங்காத கிணற்றிலே
அரிச்சந்திரன் இயங்குகிறான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சிலந்திவலை
மேலும் வாசிக்க... "லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு"



போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

       அனுபவத்தில், வயதில் மூத்த பெண் காரை மிக வேகமாக ஒட்டி போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட போது நடந்த வேடிக்கையான உரையாடல் இது.
பெண்: என்னிடம் பிரச்சனையா?, என்ன சார் அது?
அதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.


பெண்: ஓ... அப்படியா....
அதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா?


பெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.
அதிகாரி: என்னது... இல்லையா? ஏன்?


பெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.
அதிகாரி: அப்படியா? அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா? நான் பார்க்கலாமா?


பெண்: ஓ... அதுவா? அதுவும் என்கிட்டே இல்லை.
அதிகாரி: ஏன் இல்லை?


பெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை
அதிகாரி: என்ன? இது திருடிய காரா?


பெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.
அதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க?


பெண்: அவர நீங்க பாக்கணுமா? இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.


(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)


அதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா?
பெண்: சோதனை போடணுமா? என்ன பிரச்சனை சார்?


அதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.
பெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.


( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)


அதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா? எவிடன்ஸ் இருக்கா?
பெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.
(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)


அதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா?
(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)


அதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க?
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?


       பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!
டிஸ்கி: 
இது ஆங்கில உரையாடல், உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன். படம் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டது.

இன்றைய பொன்மொழி:
அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடிக்கும்!

இன்றைய விடுகதை:
துடிதுடித்து இடி இடிக்கும்
சடசடவென்று படபடக்கும். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வாழைப்பழம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்



மேலும் வாசிக்க... "போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)"



நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

      ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள்.

    நண்பர்களே, ஒரே ஒரு அனிமேஷன் படம் மூலம் இன்றைய உலகம்(பூமி) உங்கள் கண்ணுக்கு தெரியுதா? இந்த நிலையை மாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?
thanks for Google search

இன்றைய பொன்மொழி:
மதி கெட்ட ராசாவுக்கு புத்தி கெட்ட மந்திரி!

இன்றைய விடுகதை:
பட்ட மரத்தில் பச்சை
அதிலும் சிவப்பு. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: விளக்கு திரி
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி



மேலும் வாசிக்க... "நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?"



சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

     டிஸ்கி:நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே,  பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. 
இனி ரெண்டு பீப்பாக்களின் ஆட்டம் ஆரம்பம்.....
பெரிய பீப்பா: ஹலோ.. ஹலோ...யார் சின்ன பீப்பா இருக்காங்களா? நான்தான் பெரிய பீப்பா பேசறேன்...


சின்ன பீப்பா: ஹாய் பெரிய பீப்பா, எப்படி இருக்குற,? நான் நல்லா இருக்கேன்.


பெரிய பீப்பா: நான் நல்லா இருக்கேன்டி... உன்கிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு தெரியுமா? 


சின்ன பீப்பா: ஆமாங்க்கா, ரொம்ப நாளாச்சு... என்ன விஷயம் இம்புட்டு நாளா போன் பண்ணாம இருந்திங்க.?


பெரிய பீப்பா: எம் புருசன் தான் என் அம்மா வீட்டுக்கு போன் ரொம்ப பேசறேன்னு என் மொபைலை பிடுங்கி வச்சுக்கிட்டார். ரொம்ப படுத்தறார்டி. உம் புருசன் உன்னை எப்படி வச்சிக்கிறார்? குழந்தைகள் எப்டி இருக்குங்க?


சின்ன பீப்பா: அவருக்கென்ன கொறச்சல், அதெல்லாம் நல்லாத்தான் இருக்கார். இந்த கட்டிக்கிட்ட மனுஷன் என்னை ஆட்டி வைக்கிறார். குழந்தைகள் அதுபாட்டுக்கு படிப்பு, படிப்புன்னு போகுதுங்க.


பெரிய பீப்பா: ஏண்டி, இந்த மனுசன்களே இப்பிடி தானா? இல்ல தெரியாம தான் கேட்கறேன். அவங்களுக்கு நாம அடிமையா? என்னை ரொம்ப பாடா படுத்தறாரு


சின்ன பீப்பா: என்ன பண்றது? நம்ம தலையில கட்டி நாம அழ வேண்டியதா இருக்கு? சரி விடு, இந்த ஆம்பிளைங்க கொட்டம் காலங்காலமா நடக்கிறது தானே. உன் உடம்பு எப்பிடி இருக்கு. ஆபீஸ்க்கு எப்படி போற? கால் வலி சரியாரிருச்சா?


பெரிய பீப்பா: அத ஏன் கேட்குற? கால் வலி கொஞ்சம் கூட கொறயலே. டெய்லியும் ஆபீசுக்கு பஸ்ல தான் போறேன். இந்த பெட்ரோல் வில கூடினதுல இருந்து வண்டிய எடுக்க விட மாட்டிங்குறார். வண்டிய மூலையில வச்சுட்டார். 


சின்ன பீப்பா: இங்கேயும் அதே கதை தான், அவரு வேலைக்கு போற வழியில தான் பசங்க ஸ்கூல் இருக்கு, அவங்கள எப்பவும் கூட்டிட்டு போயி இறக்கி விடுவாரு. இப்ப விலை கூடினதுல இருந்து பசங்கள பஸ்ல போக சொல்லிட்டாரு. அவரும் பஸ்ல தான் போறாரு.


பெரிய பீப்பா: உனக்க்காச்சும் பரவாயில்ல. நீ வேலைக்கு போகாததுனால வண்டி இல்லாத கஷ்டம் உனக்கு தெரிய மாட்டிங்குது. உன் புருசனாச்சும் அவரும் வண்டிய வச்சுட்டு போறாரு, எம் புருசன் என்னைய வைக்க சொல்லிட்டு அவரு மட்டும் எடுத்துட்டு போறாரு. கேட்டா அவர் ஆபீஸ்க்கு பஸ் ரூட் கிடையாதுன்னு சாக்கு போக்கு சொல்றாரு. ம்ஹும் எண்ணத்த சொல்ல?


சின்ன பீப்பா: சரி விடுக்கா? நாம பொம்பளையா பொறந்துட்டோம். என்ன பண்றது? அப்புறம் என்ன சமையல் அங்க?


பெரிய பீப்பா: அட போடி.... எல்லா விலையும் கூடிப் போச்சு. வெறும் அரிசிய போட்டு கஞ்சி காய்ச்சினேன். அப்படியே மாங்கா ஊறுகா இருக்கு. அதான் தொட்டுக்க. காய் வாங்க போனா மலை ரேட்டு சொல்றாங்க. அதான் இப்ப அரிசி ரேட் தான் கொஞ்சம் கூடாம இருக்கு. அதனால பெரும்பாலும் கஞ்சி தான்.


சின்ன பீப்பா: பரவாயில்ல, நீங்க இங்க என் வீட்டுக்காரருக்கு கஞ்சினாலே பிடிக்காது. எப்பவும் நாக்கு ருசியா கேட்க்கறாரு. பிள்ளைங்க கூட அட்செஸ்ட் பண்ணிக்குதுங்க. அவருக்கு நல்லா ஆக்கி போட வேண்டியதா இருக்கு. அதனால விலையை பத்தி கவலைபடுறது இல்லை.


பெரிய பீப்பா: அட பாவமே, உன் பாடு ரொம்ப கஷ்டமா இருக்கே.


சின்ன பீப்பா: ஆமா ரொம்ப கஷ்டம் தான். 


பெரிய பீப்பா: இந்த அம்மாவை நம்பி ஓட்டு போட்டு நம்மள இப்பிடி மோசம் பண்றாங்களே? எல்லா விலையும் ஏத்திட்டாங்களே, பெட்ரோல் கண்ட்ரோல் தான் மத்திய கையில இருக்கு. அம்மாவால ஒன்னும் செய்ய முடியல. ஆனா, நேத்துல இருந்து அவங்க கண்ட்ரோல்ல இருக்குற எல்லாத்தையும் இப்படி ஏத்திட்டாங்களே.


சின்ன பீப்பா: ஆமா, இவங்கள நம்பி நாம மோசம் போயிட்டோமே. பால் விலைய இப்படி சகட்டு மேனிக்கு ஆறு ரூபா ஏத்தி விட்டுட்டாங்களே, நம்மள மாதிரி நடுத்தர குடும்பம் என்ன செய்யும்?


பெரிய பீப்பா: அட போடி, நடுத்தர குடும்பம் மட்டுமா பாதிக்குது, எல்லா மட்டத்திலயும் விலையேற்றம் பாதிக்க தான் செய்யும். அப்புறம் இந்த பஸ் ரேட் கூடியத தான் தாங்க முடியல. ஏற்கனவே ஐயா சொகுசு பஸ் விட்டதுல இருந்து ரேட் தாறுமாறா ஏறிப போச்சு. இந்தம்மா அதையும் ஏத்தி விட்டுட்டாங்க.


சின்ன பீப்பா: ஆமா, இந்த ரேட் அதிகம் இப்போ அவசியமா? கஜானா காலி ஆச்சுனா அதுக்கு வேற திட்டம் போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு நம்ம தலையில கையை வைக்கறாங்களே?


பெரிய பீப்பா: அந்த அய்யா இலவசம் கொடுத்து கஜானாவை காலி பண்ணினாருன்னு இந்த அம்மா சொல்றாங்க. இவங்களும் இலவசம் தராங்களே, இதுக்கு பணம் எங்க இருந்து வரும்? 


சின்ன பீப்பா: அம்மா தர்ற இலவசத்துக்கு சிங் கிட்ட கை ஏந்தியிருக்காங்கனு கேள்விப்பட்டேன், இப்போ விலையேற்றத்த பார்த்தா அவரும் கையை விரிச்ச மாதிரியில தெரியுது. 


பெரிய பீப்பா: அப்போ நீ சொல்றத பார்த்தா நாம கிட்ட வாங்கி நம்மகிட்டயே தர போறாங்களா? என்னா ஒரு மைன்ட் இந்த அம்மாவுக்கு...


சின்ன பீப்பா: அக்கா, நாம் பொலம்பி என்னா நடக்கப் போகுது. அப்பவே நல்லது செய்வாங்கன்னு நம்பி ஓட்டு போட்டோம்ல நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.


பெரிய பீப்பா: ஆமா அந்த பதினோரு மணிக்கு இப்போ என்னா சீரியல் போடறாங்க? பகல்ல சீரியல் பாக்றதே கொறஞ்சு போச்சு.


சின்ன பீப்பா: ஆமா நானும் இப்போ பாக்றதே இல்லை. பாதி நேரம் கரண்ட்  இருக்க மாட்டிங்குது. பேப்பர்ல நம்ம ஏரியாவுக்கு இத்தன மணிக்கு கரண்ட் போகும்னு போடறாங்க. நாம அதுக்காக பிளான் பண்ணினா அந்த நேரத்தை விட மத்த நேரத்துல தான் கரண்ட் கட் அதிகமா இருக்கு. ஒரு வேலையும் ஓட மாட்டிங்குது. காலையில ஆறு ஆரம்பிச்ச கரண்ட் கட் நைட் பத்து மணி வரை உள்ள டைம்ல எப்படியும் ஒரு அஞ்சு மணி நேரத்தை முழுங்கிடுது. பாவம் பசங்க படிக்றப்பவும் கரண்ட் இருக்க மாட்டிங்குது.


பெரிய பீப்பா: ஆமாண்டி, இங்கேயும் அதே கதை தான், அம்மா எதாவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா அய்யாவை மிஞ்சிடுவாங்க போல. சரி விடு சின்ன பீப்பா, அவரு வீட்டுக்கு வர்ற நேரம், இம்புட்டு நேரம் நான் போன் பேசுனது தெரிஞ்சா ரொம்ப திட்டுவாரு.


சின்ன பீப்பா: ஆமா போனை வாங்கி வச்சுட்டார்னு சொன்ன? இப்போ எப்படி பேசற?


பெரிய பீப்பா: அவரு இன்னைக்கு போனை வீட்டுல மறந்து வச்சுட்டு போயிட்டாரு. அதான் உன்கிட்ட பேச முடிஞ்சது. சரி இன்னொரு நாள் நாம அந்த எக்கோ பார்க்ல மீட் பண்ணலாம்.


சின்ன பீப்பா: எப்படி மீட் பண்றது? அந்த பார்க் தான் சயிந்தரம் தான் ஓபன் பண்ணுவாங்க.


பெரிய பீப்பா: நான் என் பிள்ளைகளை வாக்கிங் போகனும்னு கூட்டிட்டு வரேன், நீயும் அப்படி சொல்லியே கூட்டிட்டு வா?


சின்ன பீப்பா: சரி அக்கா, நேரம் இருக்கிற சமயம் போன் பண்ணுங்க, நானும் பண்றேன், வைக்கறேன் இப்போ. பை..பை... 


பெரிய பீப்பா: ஓகே, பை.. பை...
இனி அடிக்கடி இவர்களின் உரையாடல் நம் தளத்தில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.



இன்றைய பொன்மொழி:
பசு மாடு கருப்புன்னா பாலும் கருப்பா இருக்குமா?

இன்றைய விடுகதை:
வெள்ளை மாடு தன்
வாலால் நீர் குடிக்குது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: பல்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?



மேலும் வாசிக்க... "சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி"



பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

     பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS FEED போன்ற சமூக தளங்களின் ஐகான்கள் புதிய அழகிய வடிவில் நமது பிளாக்கில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பிளாக்கில் இருந்த படியே இந்த சமூக தளங்களுக்கு செல்லலாம். இதனால் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS ஆகியவற்றில் உங்களுக்கு பாலோயர்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழகிய சிறிய ஐகான்களை உங்கள் பிளாக்கில் எப்படி நிறுவுவது என பார்ப்போம்.

1. உங்கள் DASBOARDஇல் DESIGN கிளிக் செய்து ADD A GADGET கிளிக் செய்து Choose Html/Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்.



2. கீழ்க்காணும் நிரலிகளில் சில மாற்றங்களுடன் பேஸ்ட் செய்யுங்கள்.
<center><a href="https://www.facebook.com/sprakashkumar" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTmf-B6vSSkEsSwrntjEypzLFLYwB-12sbiSQAKshcSx3mDxPZKiCi9GOrjX9E2mLu3oBBDTrVIqA93mF1h86aZ-2h8eZ-MOfY-aL3pxExXMu7h1Cghsj-9K2TxjzLO_mXbRgK3PIQ1H8/s1600/facebook-30x43.png" /></a><a href="http://twitter.com/tamilvaasi" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuX7DqFs5RKwWuTQOe-fipCBGEX40Z9LWnOddbyZm0E6MWOoGdMob1uuGvn3MRZ6JJGaUA5m5ptgeB2WKYLG6vAtf_z4owlyyQaa6w3s8c-_Odo3euFPExpskJl6wfbZRrjPmcwENtrB8/s1600/twitter-30x43.png" /></a><a href="https://plus.google.com/u/0/106412922467461633842/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsDMN_EmMpPD9kJeYNSS2KpEU401Cl1mECuyQhIApTKr86z02KctjcZUehe8bI9AyRjUujwTr8P73o2tMC9lc0l8DLqw9yZj9hfGZxLvb9V-JXcAByTbQd4og8znsCrydfNiHyLYP0xnM/s1600/googleplus-30x43.png" /></a><a href="http://feeds.feedburner.com/tamilvaasi" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-yDHCd_YQoXe-X-D93k9Kn0AUvi-jFQttMNMbEjWTzGsLfNosLnCjHS5Kv4osmjZxk2TboQtKenIMjmpUNWFDoMi6Rr42ufYUlKkfM8P_CdegAFncQ2Dyx5NG8wCYJnYQzOYrqIWvK9s/s1600/rss-30x43.png" /></a><center/></center></center>
மேற்கண்ட நிரலிகளில் மஞ்சள் கலர் காட்டியுள்ள இடங்களில் உங்கள் சமூக தளங்களின் லிங்க்கை கொடுத்து மாற்றவும்.


3. GADGETஐ SAVE செய்யவும். இனி உங்கள் பிளாக்கில் உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைக்கவும்.
THANKS: spiceupyourblog

இன்றைய பொன்மொழி:
வஞ்சனை வாழ்வை கெடுக்கும்!

இன்றைய விடுகதை:
அத்திக்கட்டை முள் எடுத்து 
அடைப்பாரும் இல்லை
அழகான பூ எடுத்து
முடிப்பாரும் இல்லை. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: நெற்பயிர்
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே: 

ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?


மேலும் வாசிக்க... "பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1