CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts


நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மீண்டும் ஒரு நெல்லை பயணம். நம்ம உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம். அவரது இனிய அழைப்பிற்கினங்கி எல்லா பதிவுலக தோழர்களும் ஒன்று கூடி சிறப்பிப்போம்.
நெல்லையில் பக்ரைன் மக்கா மையம் கொண்டு வருகிற பதிவுலக நண்பர்களுக்கு வேண்டிய அனைத்து(?!)தேவைகளையும் செய்திருப்பதாக உளவுத்துறை அறிவித்துள்ளது.

விஜயன் அவர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் போட்டு பேஸ்புக்கை கலக்கி வருகிறார்.

நண்பர்கள் கருன், சௌந்தர், சிபி, மனோ, சுரேஷ், சம்பத், நக்கீரர், ராஜபாட்டை, கூடல் பாலா, வைரை சதீஷ், விஜயன், கற்போம் பிரபு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்தினவேல் ஐயா என இன்னும் பல பதிவர்கள் நெல்லையை மையம் கொள்ள வருகிறார்கள். இவர்களோடு நானும் இணைகிறேன்,

சரி, நண்பர்களே, நீங்கள் ஆவலுடன்? எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக? தொடராக? வர இருக்கிறது. படித்து கொள்ளு(ல்லு)ங்கள்.

எல்லா வளங்களும் பெற்று சிறக்க மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மேலும் வாசிக்க... "நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்"



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை


ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  


       சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது. 

   எப்படி எலி கிடைக்கிறது?
    மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க. 

சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...

டிஸ்கி: இந்த செய்தி திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
மீள்பதிவு.
பொன்மொழி, விடுகதை அடுத்த இடுகையில்...

மேலும் வாசிக்க... "சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை"



பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...


     அந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய  புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 















நன்றி: கூகிள் சர்ச்  
நண்பர்களே, 

மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள் 

இந்த இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை நிலக்கடலை.


டிஸ்கி:  பொன்மொழிகள், விடுகதைகள் வழக்கம் போல அடுத்த இடுகை முதல் வெளி வரும்.


மேலும் வாசிக்க... "பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க..."



விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ


            
        சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றுவிட்டது. அந்த நேரம் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தரை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
     அந்த விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். தரை இறங்க விமானம் முயன்றபோது ஓடு தளத்தில் மற்றொரு விமானம் நிற்பதை விமானி கவனித்துவிட்டார். தரை இறங்கினால் மோதும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக விமானி விமானத்தை உயரே கிளப்பினார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஓடு தளத்தில் இன்னொரு விமானம் நிற்பதால் தரை இறக்க முடியவில்லை.
          உடனடியாக அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போதுதான் எந்திர கோளாறு காரணமாக டெல்லி விமானம் ஓடு தளத்தில் நிற்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக “தள்ளு வாகனம்” மூலம் டெல்லி விமானம் அப்புறப்படுத்தப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதன்பின் டெல்லியில் இருந்து வந்த விமானம் தரை இறக்க அனுமதிக்கப்பட்டது.
           25 நிமிட தாமதத்துக்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானியின் சாமர்த்திய முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 318 பயணிகள் உயிர் தப்பினார்கள். ஒரு தளத்தில் விமானம் நிற்கும் போது இன்னொரு விமானம் இறங்க அனுமதி அளித்தது ஏன்? இந்த தவறு நடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விமான தள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி: சன் நியூஸ், மாலைமலர்

இன்றைய மற்றொரு பதிவு: 

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6

மேலும் வாசிக்க... "விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ"



சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜெ அறிக்கை: ஒரு பார்வை

     நண்பர்களே, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அது பற்றிய ஒரு பார்வை:

அன்று சென்னைக்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை:
       கடந்த 2007 ம் வருடம் ஜூலை 1 ல் அமெரிக்க அணு சக்தி போர் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்தில் நிறுத்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஒரு 500 மெகாவாட் திறனுள்ள ஒரு கப்பலே கடும் ஆபத்து நிறைந்தது எனவும், கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் எனவும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 
அவரின் முழு அறிக்கை கீழே:


இன்று கூடங்குளத்திற்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை:
       2000 மெகவாட் திறனுள்ள அணுமின் உலையால் எப்படி ஆபத்து இருக்காது என சொல்கிறார். நேற்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் கூடங்குளம் அணுமின் உலை பாதிப்பு இல்லை என சொல்லி இருக்கிறார். 

அவரின் அறிக்கை கீழே:
       கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.  2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.  பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள், குறிப்பாக, கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட அந்தப் பகுதி கடற்கரை கிராமங்களில் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, ஏழை, எளியவர்களுக்கான அரசு; சராசரி மனிதர்களுக்கான அரசு; சாமானிய மக்களுக்கான அரசு.  தமிழக மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் தான், எனது அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.  எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.


     அவரின் மேற்கண்ட அறிக்கையில் மக்களுக்காக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுகப்படுள்ளது என தெளிவாக சொல்லவில்லை. வெறும் தைரியத்தை கொடுக்கும் வகையிலே அவரின் அறிக்கை அமைந்துள்ளது. அன்று சென்னைக்கு என்றவுடனே ஒரு சாதாரண அணு ஆயுத கப்பலே ஆபத்து என்று சொன்னவர், இன்று ஒரு பெரிய அணுஉலை ஆபத்து இல்லை என சொல்லியுள்ளார்.


       சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? மக்களே சிந்தியுங்கள். உண்மை நிலையை அரசு உணர வேண்டும். நம் மக்கள் காக்கப்பட வேண்டும்.
மேலும் வாசிக்க... "சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜெ அறிக்கை: ஒரு பார்வை"



கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!

நண்பர்களே, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நம் நண்பர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்து நாமும் கோஷம் போடுவோம். நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். நம் மக்களை காத்திட நாம் ஒன்றுபடுவோம். வெற்றிபெறுவோம்.

தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


மூடிடு... மூடிடு..... கூடங்குளம் அணு உலையை மூடிடு... 


வேண்டாம்.... வேண்டாம்.... அணுஉலை வேண்டாம்.....


ஆபத்து.... ஆபத்து.... அணுஉலையால் ஆபத்து....


வேண்டாம்... வேண்டாம்.... மக்கள் இனம் அழிய வேண்டாம்...


தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....


வேண்டும்... வேண்டும்... எங்கள் ஊர் எங்களுக்கு வேண்டும்....


காத்திடு... காத்திடு... எங்கள் உயிரை காத்திடு...


போராடுவோம்... போராடுவோம்... அணுஉலையை மூடும் வரை போராடுவோம்...


தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....


இழைக்காதே.... இழைக்காதே..... துரோகம் இழைக்காதே....


ஆக்காதே.... ஆக்காதே... அணுஉலைக்கு எங்களை பலி ஆக்காதே....


பூட்டு போடு.... பூட்டு போடு... அணுஉலைக்கு பூட்டு போடு...


தீர்வு வேண்டும்... தீர்வு வேண்டும்... நிரந்தர தீர்வு வேண்டும்....



மடிய போகிறோம்... மடிய போகிறோம்.... அணுஉலையால் மடிய போகிறோம்...



தமிழக அரசே.... தமிழக அரசே.... தமிழக அரசே... தமிழக அரசே....


எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....


ஒன்றுபடுவோம்.... ஒன்றுபடுவோம்... அணுஉலைக்கு எதிராக ஒன்றுபடுவோம்...




அணுஉலைக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவும், நல்ல முடிவு கிடைத்திடவும் ஒன்றுபடுவோம்.
மேலும் வாசிக்க... "கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!"



பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?

         சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு  (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும்  மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு  எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை. 
           நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.  
     அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ  குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி  பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும்  என் வேலையை பார்த்துட்டு இருந்தேன்.      வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும்  இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ) 
         குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான்  இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா? 
          அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம்  ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும்  ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில்  போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க. 
        லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.
மேலும் வாசிக்க... "பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?"



விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை??



விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி.

எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். 

அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள்.


அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌றிட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு கே‌ட்‌கிறா‌‌ன், "நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நா‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டது உன‌க்கு ‌நினை‌விரு‌க்‌கிறதா?" 

மனை‌வி, "ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது" எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி சொ‌ல்‌கிறா‌ள்.

"அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து அவரது து‌ப்பா‌க்‌கியை எ‌ன் ந‌ெ‌‌ற்‌றி‌ப் பொ‌‌ட்டு‌க்கு நேராக ‌பிடி‌த்தபடி உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினாரே அது...?"

"‌ம்‌ம்‌ம் அதுவு‌ம் ‌நினை‌விரு‌க்‌கிறது..." எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே நா‌ற்கா‌லி‌யி‌ல் அம‌ர்‌ந்தா‌ள் மனை‌வி. 

"ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் ஜெ‌யி‌ல்ல போ‌ட்டுடுவே‌ன்" எ‌ன்று ‌மிர‌ட்டினாரே..

"ஆமா‌ம்.. ந‌ன்றாக ‌நினை‌விரு‌க்‌கிறது.. அத‌ற்கு எ‌ன்ன இ‌ப்போ?" எ‌ன்றா‌ள்.

நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்.

மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கறாரு பாருங்க?


இன்றைய மற்றொரு பதிவு: வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!



மேலும் வாசிக்க... "விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை??"



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.

     ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  
மேலும் வாசிக்க... "சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!."



யோவ்! ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற? வீடியோ இணைப்பு!!

தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கொடுமை:


     சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்களை அரசு அதிகாரிகள் அரசு ஆணையோடு அகற்றினார்கள். அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலை அதிகாரிகள் அகற்றும் போது கோவிலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் அதிகாரிகளிடம் வாதிடுகிறார். அப்போது வன்முறை ஏற்படும் என பயந்து போலீசார் அவரை அப்புறப்படுதுகிறார்கள். 
மேலும் வாசிக்க... "யோவ்! ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற? வீடியோ இணைப்பு!!"



மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!

நேற்று அதிகாலை கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மினி வேன் வேளாங்கண்ணி சென்று விட்டு மதுரை ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வோல்வோ பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்தவர்களில் ஆறு பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விபத்திற்குள்ளான வேன் அப்பளமாக நொறுங்கி இருந்தது. மோதிய வோல்வோ பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் பாதி கவிழ்ந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.
மேலும் வாசிக்க... "மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!"



பின்லாடன் கொல்லப்பட்டான்! அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்?!



ஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டிவிட்டது, அமெரிக்கா.எப்போதும், பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து, பெருமூச்சு விடுவதே நமக்கு தலைவிதி என்றாகிவிட்டது. இதிலும் அப்படிதான். ஆமாம் நண்பர்களே, மும்பை அட்டாக்,ஐ தான் குறிப்பிடுகிறேன்.

குருவி சுடுவதை போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றவனை, ராஜமரியாதையுடன், சிறையில் வசதி செய்து கொடுத்து, "நான் ஒன்றும் செய்யவில்லை' என, அவன் எதிர்வாதம் செய்வதற்கு, ஒரு வக்கீலையும் வைத்துக் கொடுத்துள்ளோம்.
மேலும் வாசிக்க... "பின்லாடன் கொல்லப்பட்டான்! அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்?!"



மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்?



தமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.
மேலும் வாசிக்க... "மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்?"



இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!

இவன் மனுசனே இல்லை. ரோபோ, ஆமாங்க அவன் தலையில செங்கல் கற்களை எப்படி லாவகமா அடுக்குகிறான்னு பாருங்க. இவிங்க தான் உண்மையான உழைப்பாளிகள்.


மேலும் வாசிக்க... "இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!"



பெண் என்பவள், அடுக்களை பதுமையா? காம கொடூரனுக்கு உரியவளா?



தினமலரில் ஒரு செய்தியைப் படித்தவுடன் அதை பற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.


ல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்.


தலைநகர் டில்லியில், கே.என்.கட்ஜு மார்க் என்ற போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, 200 மீட்டர் தொலைவில், டில்லி புறநகரான ரோஹினி பகுதியைச் சேர்ந்த, 77 வயது மூதாட்டியை, ரிக்ஷாக்காரன் கற்பழித்த சம்பவம் அதைவிட கொடூரமானது.


பெண் என்பவள், அடுக்களை பதுமையாகவும், ஆணின் அந்தரங்க தேவைகளுக்கு உரியவளாகவும், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவளாகவும் இருக்க வேண்டும் என, ஆணாதிக்கவாதிகள் விரும்புகின்றனர். 


ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றனர்.ஆண்களுக்கான உரிமை, பெண்களுக்கும் உண்டு. பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர் அல்ல."அங்கங்கள் வேறுபட்டிருந்தாலும், உணர்வு, உணர்ச்சி, அறிவு, வலிமை இருவருக்கும் பொது தான். இதில், நீ என்ன உயர்ந்தவன், நான் என்ன தாழ்ந்தவள்' .


அமெரிக்காவில் கூட, தகுதி படைத்தவர்களாய் இருந்தும், பெண் என்ற காரணத்திற்காக, உயர் பதவி கொடுக்க தயங்குகின்றனர்.பர்தா அணியாத பெண்களின் முகங்களில், ஆசிட் வீசுவது, பெண்களுக்கான கல்விக் கூடங்களை தகர்ப்பது போன்ற செயல்கள், ஆப்கானிஸ்தானில் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.


தனியார், "டிவி' சேனல்களில், பாலியல் வன்முறை சார்ந்த கருத்துக்கள், பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.
பெண் விடுதலை, பாலின சமத்துவம் பெற, நல்ல தலைவர்கள் வரவேண்டும். 
மேலும் வாசிக்க... "பெண் என்பவள், அடுக்களை பதுமையா? காம கொடூரனுக்கு உரியவளா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1