CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts


வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?



வணக்கம் வலை நண்பர்களே,

BLOG - வலைப்பூ என்பது கூகிள் தரும் ஓர் இலவச சேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இலவச சேவைக்கு சிலர் பணம் செலவு செய்து சொந்த முகவரியும் வாங்கியிருப்போம். ஆனாலும் கூகிளின் இலவச டாஷ்போர்ட் உபயோகித்து பதிவுகள் எழுதி வருகிறோம். பதிவுகளை எழுதுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருப்பார்கள். அதனடிப்படையிலே அவர்களின் பதிவுகள் எழுதப்பட்டு இருக்கும். அவரர்களின் பதிவுக்கும் கண்டிப்பாக வாசகர்கள் இருப்பார்கள். அந்த வாசகர்கள் அவரது பதிவை விரும்பி வந்து படிப்பவர்களாகவும் இருக்கலாம், அதே சமயம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த பதிவு எந்தளவுக்கு மோசமாக எழுதப்பட்டு உள்ளது என அறியவும் படிக்கலாம். எல்லோருக்கும் எல்லா வலைப்பூக்களும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் வாசிக்க... "வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?"



மார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்!

கடந்த மாதம் நமது தளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து இடுகைகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
 
நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.
ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher.
 
உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
படத்தில் இருப்பது யாரு? கண்டுபிடிச்சுட்டு பதிவை படிங்க.
 
சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு  (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும்  மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன்.
வணக்கம், பதிவுலக நண்பர்களே,
கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் "பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன்.
மதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க.
மேலும் வாசிக்க... "மார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்!"



வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

நண்பர்களே, 
உங்களுடன் சில கருத்துகளை இந்த இடுகையின் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து எழுதியுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள்.
             வலைப்பூ தொடங்கிய காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவமே எனக்கும் ஏற்பட்டது. நானும் ஆரம்ப காலங்களில் காப்பி பேஸ்ட் பதிவுகள் போட்டுள்ளேன். அது தவறு என தெரிந்தவுடன் அத்தகைய தவறுகள் செய்வதில்லை. அப்புறம் யாராவது கமென்ட் போடுவாங்களா? திரட்டியில் பிரபல இடுகையாக வருமா? என ஏங்கிய காலம் உண்டு. அப்புறம் தான் தெரிந்தது, நாமும் மற்ற பதிவுகளுக்கு கமென்ட் போட்டால் தான் நமக்கும் கமெண்ட்ஸ் வரும். அதே போல தான் திரட்டிகளில் ஓட்டும் (பதிவுலக பாஷையில் சொல்லனும்னா மொய்க்கு மொய்) என சிலர் மூலம் தெரிந்து கொண்டேன். அப்புறந்தான் கமெண்ட்ஸ் மற்றும் திரட்டிகளில் பிரபல இடுகைகளும் வரத் தொடங்கியது. 
    போதும் போதும், இதே மாதிரி எத்தனை பதிவர்கள் தான் பதிவு போடுவாங்களோன்னு நினைக்கறிங்களா? ஹே.. ஹே.. கோச்சுக்காதிங்க, இந்த மாதிரியான பதிவுகள் தான் புதியவர்களுக்கு ஊக்கம் தரும் நண்பர்களே. புதிய ப்ளாக் தொடங்குபவர்கள் பிளாக் டிப்ஸ் தரும் பதிவுகளை கண்டிப்பாக வாசியுங்கள். உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

 தமிழ்வாசி வலைப்பூ கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு தங்கள் நல்ஆதரவுடன் இன்று நானூறுக்கும் மேலான (FOLLOWERS) தொடர்பவர்களையும், மூணு லட்சத்துக்கும் மேலாக பக்க பார்வை (PAGE VIEW HITS) ஹிட்ஸ்ம் பெற்று உள்ளது. இதற்கு காரணமான அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பதிவுலகில் புதியவர்கள் வருகை அதிகமாக உள்ளது. அதுவும் புதிய தகவல்களை அள்ளித்தரும் பதிவர்கள் நிறைய வலம் வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதை குறித்து மகிழ்ச்சியே.

தமிழ்வாசி பற்றிய சில புள்ளி விவரங்கள்:
ஆரம்பம்: மே 2010
மொத்த இடுகைகள்:361
மொத்த கருத்துரைகள்: 7018
இன்றைய அலாக்ஸா ரேங்க்: 108079
இந்திய அளவில் அலாக்ஸா ரேங்க்: 14776
மொத்த பக்கப் பார்வைகள்: 303000 க்கு மேல்..

தொடர்பு கொள்ள:
முகநூல் முகவரி: https://www.facebook.com/sprakashkumar
முகநூல் குழும முகவரி: https://www.facebook.com/groups/tamilvaasi/
கூகிள் ப்ளஸ் முகவரி: https://plus.google.com/u/0/106412922467461633842/posts
ட்விட்டர் முகவரி: https://twitter.com/#!/tamilvaasi

இன்றைய பொன்மொழி:
நேரத்தைத் தள்ளிப் போடாதே. தாமதித்தால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்!

இன்றைய விடுகதை:
பத்து விரல் பந்தாட
ஐந்து விரல் அமர்ந்திருக்க
சூரியனுடன் வாதாட
எமனுடன் போராட. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.


புதிதாக தொடர்பவர்களையும், வலைப்பூவுக்கு தவறாமல் வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன். நன்றி


மேலும் வாசிக்க... "வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!"



என் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள்

நண்பர்களே,
எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?

      மேற்கண்ட இடுகையில் சில விடுகதைகள் போட்டிருந்தேன். அதற்கான விடைகள் அடுத்த இடுகையில் வரும் என சொல்லி இருந்தேன். ஆனால் நேரம் இல்லாமையால் அந்த இடுகையில் விடைகளை போட இயலவில்லை. இதோ இன்றைய இடுகையில் விடைகளை இட்டுள்ளேன். ஓரிரு விடுகதைகளுக்கு சரியாக பதிலளித்த சத்ரியன்ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருவரும் பத்து விடைகள் சொல்லா விட்டாலும் ஓரிரு விடைகள் சரியாக சொன்னதால் அவர்களுக்கு பரிசாக ஒரு மின் புத்தகம் அனுப்பப்படும். விடைகளை முயற்சித்த பன்னிக்குட்டி ராமசாமிக்கும், மற்றும் பின்னூட்டமிட்ட அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இனி விடைகளை காண்போமா?
மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து

பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?
விடை: பதநீர்

கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன?
விடை: பேனா

சிமிழிலே தண்ணீர்
தண்ணீர் மேலே தனிக்கொடி
கோடி மேலே சூரியன். அது என்ன?
விடை: கைவிளக்கு

பூவாமல் காய்ப்பது என்ன காய்? அது
புண்ணின்றிப் புழு புழுக்கும். அது என்ன?
விடை: அத்திப்பழம்

வந்தாரு திரும்பி வந்தாரு
சொல்லுமிடம் வச்சாரு. அது என்ன?
விடை: பல்

நிறங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?.
விடை: புளி

ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?
விடை: காற்று

வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?
விடை: கடிதம்

மூக்கனுக்கு மூன்று முழ நீளம்
மூக்கன் பொண்டாட்டிக்கு
முளைத்தது அகிலம் அதிகம். அது என்ன?
விடை: வாழைப்பழம், வாழை இலை

மஞ்சள் பூக்கையிலே
மாட்டேன் என்று சொன்னீரே
பிள்ளை பெற்று கையில் கொடுத்தால்
முத்தமிட வந்தீரே. அது என்ன?
விடை: வேர்கடலை

    நண்பர்களே, விடுகதைகளுக்கான விடைகளை தெரிந்து கொண்டீர்களா? நேற்றைய இடுகையில் ஒரு அறிவிப்பு போட்டிருந்தேன். அதில் இந்த இடுகை முதல் ஒரு சவால் காத்திருக்கிறது என போட்டிருந்தேன். அது என்னான்னா இனி ஒவ்வொரு இடுகை முதல் ஒரு பொன்மொழியும், ஒரு விடுகதையும் சேர்ந்தே வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விடுகதைக்கான விடைகள் வழக்கம் போல அடுத்த இடுகையில் வெளிவரும்.

இன்றைய பொன்மொழி:
நண்டைச் சுட்டு நரியை காவலுக்கு வைத்தது போல!

இன்றைய விடுகதை:
ஓஹோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே
டம்மார அம்மானுக்கு மகமாரி போட்டிருக்கு. அது என்ன?
     
      விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் இட வேண்டாம். எனக்கு மெயில்(thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
விடை அடுத்த இடுகையில்...

மேலும் வாசிக்க... "என் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள்"



எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?



நண்பர்களே, 
      உங்கள் அறிவுக்கு ஓர் சவால். கீழ்க்கண்டவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?

கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன?

சிமிழிலே தண்ணீர்
தண்ணீர் மேலே தனிக்கொடி
கோடி மேலே சூரியன். அது என்ன?

பூவாமல் காய்ப்பது என்ன காய்? அது
புண்ணின்றிப் புழு புழுக்கும். அது என்ன?

வந்தாரு திரும்பி வந்தாரு
சொல்லுமிடம் வச்சாரு. அது என்ன?

நிறங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?.

ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?

வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?

மூக்கனுக்கு மூன்று முழ நீளம்
மூக்கன் பொண்டாட்டிக்கு
முளைத்தது அகிலம் அதிகம். அது என்ன?

மஞ்சள் பூக்கையிலே
மாட்டேன் என்று சொன்னீரே
பிள்ளை பெற்று கையில் கொடுத்தால்
முத்தமிட வந்தீரே. அது என்ன?

டிஸ்கி: 
             மேற்க்கண்ட விடுகதைகளின் விடைகள் அடுத்த இடுகையில் வெளிவரும்.

மேலும் வாசிக்க... "எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?"



பதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர்

நண்பர்களே,
        உங்களுக்கு இலக்கியத்தில் ( இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா? உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா? உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இங்கே நடக்கிறது.
    தமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
    அந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர். 


போட்டியின் விவரங்கள்: 

1. கவிதைப் போட்டி

2. கதைப் போட்டி

3. கட்டுரைப் போட்டி

4. நகைச்சுவைப் போட்டி

5. அனுபவங்களைப் பகிரும் போட்டி

6. ஹைக்கூ போட்டி

7.புகைப்படப் போட்டி

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி 

9. சமையல் போட்டி 

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி 

போட்டி நிபந்தனைகள்:

  1. நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  2. படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
  3. மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
  4. தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
  5. தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
  6. படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
  7. படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
  8. எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
  9. படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
    வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். 
  10. படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
  11. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011
  12. போட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
மேலதிக தகவல்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011



இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!


டிஸ்கி:தமிழ்த்தோட்டம் தள அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வாசிக்க... "பதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1