நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான மற்றும் வேதனையான செய்தி சொல்லப் போறேன். பர்ஸ்ட் மகிழ்ச்சி செய்தியை சொல்லிறேன். விலைவாசி கண்டமேனிக்கு ஏறிப் போச்சு என்னையா மகிழ்ச்சியான செய்தின்னு கேட்க்கறிங்களா? உண்மையிலே மகிழ்ச்சி தான்...
ஆமா மறுபடியும் பெட்ரோல் விலை குறையப் போகுதாம். சர்வதேச அளவுல கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி இருக்றதுனால நம்ம நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை கொஞ்சம் குறைக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க. போன வருஷம் மதிய அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கி பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் ஒப்படைத்தது. அது முதல் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்து. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 74 ரூபாய் வரை அதிகரித்ததே வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைத்து வயிற்றில் பாலை (பெட்ரோலை) வார்த்தனர். இந்நிலையில் மேலும் விலையை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படி எவ்வளவு ரூபாய் குறைக்க போறாங்கன்னு தெரியுமா? வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அந்த ஒரு ரூபாயில் நாம ஒரு கிலோ மீட்டர் கூட அதிகமா போக முடியாது. என்னத்த கொறச்சு?, நாம இப்படியே அவங்க தர்ற அல்வாவுக்கு வாயை தொறந்துகிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு சொட்டு நெய் கூட நம்ம வாயில விழாது. அப்புறம் இப்படி விலையை குறைச்சா ஒரு சாதனையாம். ஆமாங்க கடந்த 2009ம் ஆண்டு இப்படி அடுத்தடுத்து ரெண்டு முறை விலையை குறைச்சாங்களாம். அந்த சாதனையை இந்த வருஷம் சமன் செய்ய போறாங்களாம். எப்படியெல்லாம் சாதனை செயறாங்கப்பா, முடியல...
இப்போ வேதனையான செய்தி:
மின்சார கட்டணம் கூட போகுதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே அதோட சேர்ந்து சின்ன பூச்சாண்டியும் காட்ட போறாங்க. அதாவது ஏற்கனவே மின்சார வாரியம் மின்சார பயனீட்டு அளவுக்கு ரேட்டை உயர்த்தி ஒரு மாதிரியை மக்கள் மத்தியில் சர்வே மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்கள்ல. அந்த ரேட்டே இப்போ இருக்கிற அளவை விட ரெண்டு மடங்கு அதிகமா ஒரு யூனிட்க்கு அதிகமாயிருச்சு. அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். அதாவது நாப்பது ரூபாயில் இருந்து, நூத்திபத்து ரூபாயாக ஏத்த போறாங்க.
அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம். அந்த அமௌன்ட்டும் அதிகமாயிருச்சு. இப்போ சொல்லுங்க ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட் இருக்கிறது இல்லை. இப்போ ரேட்டும் அதிகமாயிருச்சுன்னா நாம கரன்ட்டை சிக்கனமா பயன்படுத்தறோம்னு சொல்லி ஆதிகாலத்துக்கு போகாம இருந்தா சரி தான்...
இன்றைய பொன்மொழி:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!
இன்றைய விடுகதை:
செடியில் விளையாத பஞ்சு
தறியில் நூற்காத நூல்
கையில் தொடாத துணி. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: குடம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: