CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?

      உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

        நம்ம ஊரு மக்களின் எதிர்ப்பை சந்தித்து பல மாநிலங்களும் வெளிச்சம் பெற போகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடலாம். இந்நிலையில் இந்த ஆண்டு நிறைவுறும் ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளை விளக்கி ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுனில்குமார் பேசுகையில் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது என கூறியுள்ளார். ஏன் இந்த பாரபட்சம்? தமிழகத்தில் எட்டு, பத்து மணிநேர மின்வெட்டு இருப்பது அவருக்கு தெரியாதா? இன்னும் சில மாதத்தில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் மாநிலத்திற்கு சிறிய அளவு கூட மின்சாரம் ஒதுக்க முடியாதா? மத்திய அரசு நினைத்தால் முடியும். ஆனாலும் காங்கிரஸ் எப்போதும் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு கடுகளவு கூட நல்ல திட்டங்கள் செய்யாது. இந்நிலையில் மின்சாரம் கிடைக்குமா? சந்தேகம் தான்.

    தமிழக அரசும் வேறு வழிகளில் முயற்சி செய்ததா எனத் தெரியவில்லை? கூடங்குளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல தெரிகிறது. இங்கே நமக்கு மின்சாரம் இல்லை என கை விரிக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது. 

        இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு மின்சாரம் எங்கிருந்து தரப்படும்? அந்த மின்சாரத்தில் ஒரு பத்து சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கினால் பல மணிநேரம் மின்வெட்டு கொஞ்சமாவது குறையுமே? ஆக, மின்சாரம் இருந்தும் நமக்கு தராமல் கை விரிகிறது மத்திய அரசு, என நம்பாமல் இருக்க முடிகிறதா? என்ன?
மேலும் வாசிக்க... "பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?"



Avast Internet Security 7 - ஒரு வருட இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய!

Avast Internet Security 7 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கே ஒரு வருட வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ் torrent file ஆக இணைக்கப்பட்டுள்ளது. முதலில் லைசன்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.kickasstorrents.com/avast-internet-security-7-licence-t6203135.html
Torrent file டவுன்லோட் செய்ய bit torrent software டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Avast தளத்தில் Avast Internet Security 7 இல் trial version என்பதை click செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் முடிந்த பின் setup file இன்ஸ்டால் செய்யவும்.

1. Express install கிளிக் செய்யவும்.

2. பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த license file இன் location தேர்ந்தெடுத்து next தரவும்.

3. முழுவதும் இன்ஸ்டால் செய்து முடித்த பின் கீழே படத்தில் உள்ளது போல restart கொடுத்து கம்ப்யூட்டரை restart செய்யவும்.
 


4. கம்ப்யூட்டர் restart ஆன பின் desktopஇல் avast internet security iconஐ கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல window ஓபன் ஆகும். அதில் database update கிளிக் செய்து லேட்டஸ்ட் databaseக்கு update செய்யவும்.
முழுமையாக இன்ஸ்டால் முடிந்த பின் கம்ப்யூட்டரை virus scan செய்யவும்.
source: Activate Avast Internet Security 7 with License File or Activation Code
மேலும் வாசிக்க... "Avast Internet Security 7 - ஒரு வருட இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய!"



Facebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் பார்ப்பது எப்படி?

        கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பகிர்ந்த படங்களை பார்ப்பதில் பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளது. படங்களுக்கு வலப்பக்கத்தில் படங்களுக்கான கருத்துகளை பார்க்க வசதி வந்தது. தற்போது படங்களை முழு ஸ்கிரீன்ல் பார்க்க வசதி வந்துள்ளது. இதன் மூலம் படத்தின் தெளிவு தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தை விட சுமார் நான்கு மடங்கு பெரிது படுத்தி காட்டுகிறது. படத்தின் குவாலிடியை பொறுத்து இதன் அளவு மாறுபடும். ஆனால் தெளிவில் குறை இருக்காது.

இரண்டு வழிகளில் Full Screen Modeஐ பெறலாம்:
1. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்து மவுசை முன்னும் பின்னும் நகர்த்தி பார்த்தால் வலது மேல் மூலையில் ஒரு இருபக்க அம்புக்குறி காட்டும், அதை கிளிக் செய்தால் அந்த படம் முழு ஸ்கிரீன் மோடில் காட்டும்.
2. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்தால் படத்தின் கீழே option என இருக்கும். அங்கே கிளிக் செய்தால் Enter full screen என இருக்கும். அதன் மூலமும் full screen mode க்கு செல்லலாம்.
escape கொடுத்தால் full screen modeஇல் இருந்து பழைய நிலைக்கு திரும்பலாம்.

மேற்கண்ட இரண்டு வழிகளில் உங்களுக்கு பிடித்த வசதியை பயன்படுத்தி full screen modeஇல் படங்களை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "Facebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் பார்ப்பது எப்படி?"



மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்

மதிப்புமிக்க தமிழக அரசே....
         நலமா இருக்கிங்களா? நீங்க நல்லாத்தான் இருப்பீங்க, என்ன மாதிரி பாமரன்கள் ஏதோ இருக்கோம். இருந்த வேலையும் போச்சு. ஆமாங்க அரசே, உங்கள நம்பி இருந்ததுக்கு என்ன போல நிறைய பேருக்கு வேலை இல்லாம போனதுதான் மிச்சம். இரும்பு பட்டறையில வேல பார்த்துட்டு தான் இருந்தேன். ரெண்டு மூணு மணி நேரம் கரண்ட் கட் ஆனா பரவாயில்லை. நாள் முழுதும் கட் ஆச்சுனா எப்படிங்க அரசே வேலை பாக்க முடியும்? நான் வேல பாத்த கம்பெனிக்காரங்க சின்னதா தொழில் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களால கரண்ட் கட் சமாளிக்க முடியல. அங்க என்னை மாதிரி பத்து பேரு வேலை பார்த்திட்டு இருந்தோம். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகலைன்னு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வேற பக்கம் போயி வேல பாக்கலாம்னா அங்கேயும் அதே பிரச்னையை சொல்லி வேலை தர மறுக்குறாங்க. வேற பொழப்பு பொழைக்கலாம்னா என்னோட வறுமை தடுக்குது. 
             எம் பொண்டாட்டியும் மிசின்தறி வேலைக்கு போயிட்டு இருந்தா... அங்கயும் கரண்ட் பிரச்னையை காரணம் காட்டி அவளுக்கும் வேலை போச்சு. எப்பவுமே ஆர்டர் கம்மி, மிசின் ரிப்பேர் அதனால வேலை கம்மியா இருக்குன்னு கேட்டு பழகிப் போன எங்களுக்கு கரண்ட் இல்லை அப்படின்னு முதலாளிக சொல்றது புதுசா இருக்கு. எங்க பொழப்புக்கு எமனா கரண்ட் கட் இருக்கு. வீட்டுல பாதி நேரத்துக்கும் மேல கரண்ட் இல்லை. அத எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம். ஆனா வேலை இல்லையே, எங்க போயி என் கஷ்டத்த சொல்ல. அதான் அரசுக்கு கடிதமா எழுதறேன்.
           மழை இல்லை, ஆத்துல தண்ணி வரல, அதான் கரண்ட் கட் இருக்குதுன்னு இதுநாள் வரை சொல்லிட்டு இருந்திங்க. ஆனா இப்போ அதெல்லாம் சொல்லாம கூடங்குளம் தொறக்கல, அதான் கரண்ட் கட் ஆகுதுன்னு சொல்றிங்க. என்னமோ தொறங்க. எங்கள போல இருக்கறவங்க வேலைக்கு ஒரு வழி சொல்லுங்க. 
சரிங்க அரசே, உங்கள நம்பி ஒட்டு போட்ட எங்கள எப்படியாவது வாழ வழி செய்யுங்க. இந்த கடிதம் என்னைப் போல வேலை இழந்து வாடும் அனைவரின் சார்பில் எழுதியுள்ளேன். நன்றிங்க...

இப்படிக்கு,
தமிழ்ப் பாமரன்.
மேலும் வாசிக்க... "மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்"



மரமும்..மனிதனும்....



உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
மேலும் வாசிக்க... "மரமும்..மனிதனும்...."



தீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா?

தீயணைப்பான் வரலாறு:
முதன்முதலில்,1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப்பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இருவேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.
இதன் பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த சார்சு வில்லியம் மாண்பை நவீன தீயணைப்பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசியம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.
இதன் பிறகு 1881ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்களும், 1905 ம் ஆண்டில் உருசியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட்என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பன்-டை-ஆக்சைடை அடிப்படையாக கொண்ட தீயணைப்பான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வளிமங்கள் (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவுக்கும் பரவியது. எனினும் இந்த வளிமங்கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உருவாக்கவல்லது என்ற காரணத்தால் ஐரோப்பா மற்றும் அவுத்திரேலிய நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா, நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.


தீயணைப்பான் வேலை செய்யும் முறை
நெருப்பு முக்கோணம்
பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ வெப்பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படுகின்றது.
குளிர்வித்தல்:
இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.
போர்த்துதல்:
இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக்கப்படுவதால், நெருப்பு அணைக்கப்படுகின்றது.


தீயணைப்பான்கள் வகைப்பாடு (Fire Extinguisher Classes): 
தீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.
இந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது.
A பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
B பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற நீர்ம பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
C பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
D பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
E பிரிவு தீவிபத்து: மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

மேற்கூறிய இந்திய தீவிபத்து வகைப்பாட்டின் படி தீயணைப்பான்களின் பயன்பாடு பின்வரும்படி நிர்ணயக்கப்பட்டுள்ளது.


நீர் தீயணைப்பான் WATER Fire extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன்படுகிறது. நீரை வேகமாக பீய்ச்சியடிக்க கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுகிறது. இவ்வகை தீயணைப்பான்கள் A வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை குளிர்வித்தல் முறையில் செயல்படுகின்றன.

வேதிநுரை தீயணைப்பான் Foam Fire Extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் குறிப்பிட்ட வேதிப்பொடிகள் தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வேதிப்பொடிகளை வேகமாக பீய்ச்சியடிக்க நைட்ரசன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A & b வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன .

உலர் வேதிப் பொடி தீயணைப்பான் Dry Chemical Powder:
இவ்வகை தீயணைப்பான்களில் அம்மோனியம் பாஸ்ப்பேட் போன்றவை தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A,B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் CO2 Fire Extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

சிறப்பு உலர்வேதிப்பொடி தீயணைப்பான் Special Dry Chemical Powder:
இவ்வகை தீயணைப்பான்களில் பல்வேறு வேதிப்பொடிகள் (உலோகத்துக்கு உலோகம் மாறுபடும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் D வகை விபத்துகளைத் தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.
source: wikipedia
நேற்றைய ட்ரான்ஸ்பார்மர் தீ சம்பவத்தால் மேற்கண்ட பதிவு பகிர்ந்துள்ளேன். டிப்ளமோ படிக்கும் போது தீயணைப்பான்கள் பற்றி படித்தது. சில Fire Extinguisher classes மறந்து விட்டது. ஆகையால் இணையத்தில் தேடி மீண்டும் படித்து அறிந்து கொண்டேன். விக்கிபீடியா தளத்தில் முழுமையான தகவல்கள் இருந்ததால் அதிலிருந்து பகிர்ந்துள்ளேன். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க... "தீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா?"



டிரான்ஸ்பார்மரில் தீ! பதறிய நான்?

       இன்று மதியம் என் இண்டர்நெட் பில் கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்கு பக்கத்து தெருவில் வறப்போ ஒரு டிரான்ஸ்பார்மரில் அடிப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. பைக்கில் போய்ட்டு இருந்ததுனால தீயை மட்டும் பார்த்தேன். ட்ரான்ஸ்பார்மர் இருக்கு என்பதையே கவனிக்கவில்லை. அதை தாண்டி போனதும் தான் ட்ரான்ஸ்பார்மர் கீழே தீ எரிஞ்சுகிட்டு என்பதே நான் கவனிச்சேன். உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. எல்லாரும் வீட்டை பூட்டிட்டு உள்ள இருந்திருப்பாங்க போல. கொஞ்சம் தள்ளி சின்ன கடை இருந்துச்சு. அங்க கேட்கற மாத்ரி தீ.... தீ.... ட்ரான்ஸ்பார்மர்ல தீ..ன்னு கத்தினேன். நான் கத்துனது அவங்களுக்கு கேட்கல. என்னடா செய்றதுன்னு திரும்பி திரும்பி பார்த்தேன். பக்கத்துல கொஞ்சம் உள்ள தள்ளி மணல் கொட்டி இருந்துச்சு. உடனே வேகமா போயி அந்த மணலை கையில அள்ளி நெருப்பு மேல போட்டேன். மணல் விழுந்த இடத்துல தீ கொஞ்சமா அனைஞ்சுச்சு. 
       மறுபடியும் ஒரு கை மணல் அள்ளிட்டு திரும்ப கத்தினேன். யாராச்சும் ஆள் வருவாங்களான்னு? அந்த பக்கமா ஒரு கட்டட வேலையில ரெண்டு சித்தாள்கள் என் சத்தத்தை கேட்டு வேகமா வந்தாங்க. அவங்க கிட்ட தண்ணி கேட்டதும் ஆளுக்கு ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்தாங்க. குடத்தை வாங்கி நெருப்பு மேல ஊத்தினேன். ஓரளவு தீ முழுமையா அனைஞ்சது. ட்ரான்ஸ்பார்மர் ஆங்கிள் கம்பிகள் தீயில் பழுத்து இருந்துச்சு. திரும்ப ரெண்டு மூணு தடவ தண்ணி ஊத்தினேன். ஓரளவு தீ அனைஞ்சது. நல்ல வேளை சரியான நேரத்துல நான் பார்த்ததுனால தீயை அணைக்க முடிஞ்சது. இல்லையினா, தீ இன்னும் பரவி ட்ரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க்குக்கு பரவி இருந்தா பெரும் விபத்தே நடந்திருக்க வாய்ப்பு உண்டு. 
மேலும் வாசிக்க... "டிரான்ஸ்பார்மரில் தீ! பதறிய நான்?"



பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம். 




      3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP, MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது.


இந்த மென்பொருள் மூலமாக எந்த விதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம்.

screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முக தேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம். 

MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்:

இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். Multi language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும்.


இந்த மென்பொருள் பெற்றுள்ள விருதுகளை பார்க்க இங்கே கிளிக்கவும்.
மேலும் வாசிக்க... "பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher"



நல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா!?

தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்துக்கு அப்புறமா பஸ் டிக்கட் ரேட் அதிகரிச்சது நம்மளுக்கு இப்போ பழகிப் போன விஷயம். பழைய ரேட்டுல இருந்து சுமாரா ஒன்னரை மடங்கு கூடியிருக்கு. இதனால அதிக தூரம் போற விரைவு எக்ஸ்பிரஸ் பஸ்களில், உதாரணத்துக்கு சென்னை டூ மதுரைன்னு எடுத்துகிட்டா மதுரைக்கு பத்து டிக்கெட்டும், திருச்சிக்கு ஒரு பத்து டிக்கெட்டும் ஏறும். ஆனா சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில விழுப்புரம், செங்கல பட்டு, என இடையில இருக்குற ஊர்களுக்கு ஆட்கள் ஏறுறது இல்லை. அதுக்கு என்ன காரனம்னா அந்த ஊர்களுக்கு போற சாதாரண அரசு பஸ்களின் ரேட் விரைவு பஸ்களின் ரேட்டை விட கம்மி. அதனால அந்த இடையில இருக்குற ஊர்களுக்கு கிலோ மீட்டருக்கான ரேட்டை ஒரு முக்கிய ஆபிசர் குறைச்சார். அதனால சாதாரண அரசு பஸ்களின் ரேட்டும், விரைவு பஸ்களின் ரேட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவா இருந்துச்சு. அதனால மக்களும் விரைவு பஸ்சில் ஓரளவு ஏறினாங்க. சரிங்க, இது நல்ல விஷயம் தானே, என்ன சொல்ல வரேன்னு கேட்கறிங்களா? ரேட் குறைக்காத வரைக்கும் அந்த ஆபீசர் நல்லா தான் இருந்தார். ரேட்டை குறைச்சதுக்கப்புறம் அவருக்கு ஆப்பு வச்சுட்டாங்க. ஆமாங்க, அதுக்கு காரணமா சங்கரன்கோவில் தேர்தலை சொல்லி இருக்காங்க அரசு தரப்பு. அதாவது தேர்தலுக்காக ரேட் கொறச்சிருகாங்கன்னு சிலர் பேசியதே காரணமாம். இப்போ அந்த ஆபீசர் வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்திட்டாங்க.
********************************
இங்க போன ஆட்சியில பஸ்ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி போன்ற சில முக்கியமான இடத்துல தற்போதைய முக்கிய அரசியல்வாதி இலவச  டாய்லெட்களை கட்டி விட்டாரு. நவீன முறையில காசு வாங்காம இலவசமா மக்கள் யூஸ் பண்ற மாதிரி இருந்துச்சு.  டாய்லெட்டை சுத்தம் செய்ய ஆட்களும் இருந்தாங்க. அடிக்கடி சுத்தம் செஞ்சு டாய்லெட் அசிங்கமா இல்லாம பார்த்துட்டாங்க. அப்புறமா காலப்போக்கில ஆட்சி மாறுச்சு. அந்த டாய்லெட் நிலைமையும் மாறுச்சு. கொஞ்ச நாளா பூட்டு போட்டிருந்தாங்க. இப்ப திடீர்னு தொறந்து டாய்லெட் முன்னாடி கல்லா கட்டி ஒருத்தர் திடீர்னு வந்திருக்காரு. பிரீ யூஸா (free use) இருந்தது இப்போ பே யூஸா (pay use) மாறியிருச்சு. யார என்ன சொல்றது? நல்லதுக்கும் காலம் இல்லையான்னு டவுட் வருது?
மேலும் வாசிக்க... "நல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா!?"



ஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா?

        மதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஹெல்மெட் சட்டம் வந்ததுல இருந்து பழைய ஹெல்மெட்டை தேடிக் கண்டுபிடிச்சு தூசி தொடச்சு நிறைய பேரு யூஸ் பண்றாங்க. ஹெல்மெட் இல்லாதவங்க புதுசா ஹெல்மெட் வாங்கி யூஸ் பண்றாங்க. இந்த ரெண்டு வாரத்துல நான் பார்த்த அளவுல நிறைய பேரு ரோட்டோரத்துல விக்கிற ஹெல்மெட் வாங்கறாங்க. இந்த ஹெல்மெட் வாங்க முதல் காரணம் ரேட் ரொம்ப கம்மி. அதனால இங்க தான் கூட்டம் அதிகமா இருக்குதுங்க. ஆனா இந்த ஹெல்மேட்டுகள் தரமா இருக்கான்னு யோசிக்கறாங்களான்னு தெரியல. ஐஎஸ்ஐ முத்திரை இருக்கான்னு பாக்கிறாங்களான்னு தெரியல. கலர் கலரா, டிசைன் டிசைனா இருக்கான்னு தான் பாக்கிறாங்க. அதுல நிறைய பேரு ஏதோ சட்டம் போட்டுட்டாங்க, அதுக்கு கண் துடைச்ச மாதிரி பாதி மண்டையை மட்டும் கவர் பண்ற மாதிரியான ஹெல்மெட்கள் தான் அதிகமா வாங்கறாங்க. ஹெல்மெட்டுல நம்ம பாதுகாப்பு இருக்குதுங்கிறத மறந்து போயிருறாங்க. வாங்கறது வாங்கறோம், முழுசா தலையை கவர் பண்ற மாதிரி வாங்கி போட்டா நமக்கு தானே நல்லது. முழுமையான ஹெல்மெட் இருந்தாதான் விபத்துன்னு நடந்தா தலையை பாதுகாக்கும். பாதி ஹெல்மெட் போட்டிருந்தா முகம், தாடை போன்ற பகுதியில அடி பட வாய்ப்பு இருக்கே. அதை நிறைய பேரு மறந்துடுறாங்க. ஆக, ஹெல்மெட்டை சட்டத்துக்காக மட்டுமே யூஸ் பண்றாங்க போல.
        நிறைய பேரு ஹெல்மெட்டை வண்டியில மாட்டி விட்டுட்டு தான் ஓட்டராங்க. போலிஸ் செக் போஸ்ட்க்கு பக்கத்துல வந்ததும் எடுத்து தலையில மாட்டிக்கறாங்க. ஒரு நாள் கோரிப்பாளையம் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அப்போ ஒரு கான்ஸ்டபில் ஹெல்மெட் போடாம நின்னுட்டு இருந்தவங்கள பிடிச்சிட்டு இருந்தாரு. அப்போ எனக்கு முன்னாடி ஒரு வயசானவரு ஹெல்மெட்டை வண்டிக்கு பின்னாடி கயிறு போட்டு கட்டி வச்சிருந்தார். அந்த சிக்னல்ல வண்டிய ஸ்டாப் பண்ணிட்டு இறங்கி வேக வேகமா கயிறை கழட்டி ஹெல்மெட்டை எடுக்றதுக்குள்ள சிக்னல் ஓபன் ஆயிருச்சு, பின்னாடி எல்லோரும் ஹாரன் அடிக்க அவரு ரொம்ப பதட்டம் ஆயிட்டாரு. ஹெல்மெட் கட்டின கயிறை மடிச்சு வைக்க கூட நேரமில்லாம வண்டி ஹேன்ட்பாரில் சுத்திகிட்டு வண்டிய கிளப்பினார். கயிற சரியா வைக்காம ஒரு பக்கம் தரையில ஒரசிட்டே போச்சு. இவர மாதிரியே இன்னும் நிறைய பேரு வண்டி மிர்ரர்ல மாட்டுறதும், பெட்ரோல் டேங்க் மேல வைக்றதும், சைடுல மாட்டி வைக்ரதுமா இருக்காங்க. இன்னும் சிலர் பெட்ரோல் டேங்க்ல சின்ன குழந்தைகளை உட்கார வச்சிட்டு, குழந்தை தலையில மாட்டி விட்டுடுறாங்க. குழந்தைக்கு அது எவ்ளோ இம்சையா பீல் பண்ணும்ங்கிறதையே மறந்துறாங்க. 
          அப்புறமா பெட்ரோல் டேங்க்ல வச்சிட்டு போறதுல எவ்வளவு ஆபத்து இருக்குன்னு நிறைய பேரு உணர மாட்டிங்கறாங்க. கலெக்டர் ஆபிஸ் ரோட்டுல நாலு நாளுக்கு முன் போயிட்டு இருந்தேன். அந்த ரோட்டுல ஸ்பீட் பிரேக்கர் அதிகம். முன்னாடி போன பைக் ஸ்பீட் ப்ரேக்கர்ல ஏறி இறங்கறப்ப வண்டியில இருந்து ஹெல்மெட் விழுந்திருச்சு. இதனால எதுத்த மாதிரி வந்த பைக் அந்த ஹெல்மெட் மேல மோதி தடுமாறி நின்னுச்சு. ஹெல்மெட் சொந்தக்காரரும் வண்டிய நிறுத்த அப்படியே அந்த இடத்துல டிராபிக் ஜாம் ஆயிருச்சு. இதுக்கு காரணம் பெட்ரோல் டேங்க்ல ஹெல்மெட்டை வச்சதே காரணம். புதுசா ஹெல்மெட் போடறவங்க தான் இந்த மாதிரி செய்றாங்க. தலை வேர்க்கும், முடி கொட்டிப் போயிரும். காத்தோட்டமா இல்லை இப்படி நிறைய காரணம் வேற சொல்வாங்க. ஹெல்மெட் போட்டு போட்டு பழகினா தானே இந்த மாதிரி காரணம் சொல்லாம இருக்க முடியும். 
         விபத்துல தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தலைக்காயத்தை ஓரளவு தடுக்கவே ஹெல்மெட். பேப்பர்ல டூவீலர் விபத்து பத்தி படிக்கறப்போ ஹெல்மெட் அணியவில்லை அப்படின்னு பிராக்கெட் போட்டு குறிப்பிட்டு இருப்பாங்க, நிறைய பேர் பார்த்திருப்பிங்க, அதுக்கு காரணம் என்னான்னா டூவீலர் விபத்துல ஹெல்மெட் போடாம இருந்து இறந்துட்டாங்கன்னா இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க. அதுக்கு ப்ரூப் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தும் தலையில அடிபடாமவா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அத பத்தி கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்.
மேலும் வாசிக்க... "ஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா?"



Windows 8 Beta Version Download செய்ய! Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்!

Windows 8 Operating system  developer version சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் சில பிழைகளை கண்டறிந்து, அவைகளை சரி செய்து தற்பொழுது Beta version-ஆக, அதாவது பொது பயனாளிகள் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த Beta பதிப்பிலும் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த பதிப்பினை முழுமையாக பயன்படுத்தி பார்த்து பிழைகளை களைந்து முழுமையான தொகுப்பு விரைவில் வெளியாகும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதுவரை Windoes 8 Beta Version பயன்படுத்தலாம்.

இந்த Windoes 8 Beta Version-ஐ மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து டௌன்லோட் செய்யலாம். இந்த பதிப்பு 32 bit மற்றும் 64 bit என இரண்டிலும் கிடைக்கிறது. Windows 8 version இன்ஸ்டால் செய்வது Windows 7 version-ஐ போலவே இருப்பதால் எளிமையே. மேலும் USB Flash Drive மூலமாகவும் இன்ஸ்டால் செய்ய முடியும்.

System Requirements for Windows 8 Beta version

  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device or higher
  • To use touch, you need a tablet or monitor that supports multitouch
  • To access Windows Store and to download and run apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768
  • To snap apps, you need a screen resolution of at least 1366 x 768
New Features Added in Windows 8 Beta version

  • Instead of Start Menu orb there is a charm bar on the Desktop screen.
  • Along with text secret password there is also a picture password.
  • New Metro UI graphical interface has been added in it.
  • New applications have been added to enhance Social Networking and Email experience.
  • One of the main aspects of windows 8 is its performance and speed. Windows 8 has been tested in rigorous conditions like sudden power off.
  • Alarm Feature has been added in it.

Windows 8 Beta version download here.


Windows Logon Screen

Windows 8 Start Screen


Control Panel


Playing Videos in Windows 8


Windows 8 Beta version download here.

Windows 8 எல்லா சோதனைகளும் முடிந்து இறுதி தொகுப்பு இந்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க... "Windows 8 Beta Version Download செய்ய! Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்!"



குமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு!

வணக்கம், பதிவுலக நண்பர்களே,
கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் "பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
பதிவை பகிர்ந்த குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
பதிவின் லிங்க்: பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?
மேலும் வாசிக்க... "குமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு!"



சமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அனுபவம்

RockMelt என்று ஒரு ப்ரௌசர் உள்ளது. பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக இந்த பதிவு. RockMelt - Not a browser. A WOWser என்ற அடைமொழியுடன் உள்ள இந்த ப்ரௌசரின் தனித்தன்மை என பார்த்தோமானால் சமூக தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பல சமூக தளங்களை தாங்கி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சமூக பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் இதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளன. மேலும் ப்ரௌசிங் செய்கையிலும் விரைவான செயல்பாட்டையே தருகிறது. ஆனால் இந்த ப்ரௌசர் எல்லோராலும் பயன்படுத்திட முடியாது. பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களால் மற்ற பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு கொடுத்த பின்னர், அவர்களால் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

எவ்வாறு பயன்படுத்துவது?
1. http://www.rockmelt.com/ என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்யவும்.


2. டவுன்லோட் செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும். இன்ஸ்டால் செய்த பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். இங்கே உங்களது பேஸ்புக் அக்கௌன்ட் மூலம் லாகின் செய்யவும்.


3. லாகின் செய்த பின்னர் கீழே உள்ள பக்கம் ஓபன் ஆகும். இங்கே use app என்பதை கிளிக் செய்யவும்.


4. Use app கிளிக் செய்தவுடன் கீழே உள்ள பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் சில options-களுக்கு permission கொடுக்க வேண்டும். பின்னர் கீழே allow என்பதை கிளிக் செய்யவும்.


5. அடுத்து ஓபன் ஆகும் பாக்சில் நமக்கு தேவையான சில applications செலக்ட் செய்து add and continue செய்யவும்.


6. அடுத்து ஓபன் ஆகும் பாக்சில் நீங்கள் விரும்பும் பேஸ்புக் பயனாளிகளுக்கு invite செய்யலாம். 


7. அடுத்து connect with facebook கிளிக் செய்து லாகின் செய்தால் ப்ரௌசர் ஓபன் ஆகும்.


8. லாகின் செய்கையில் keep me logged in to rockmelt என்ற கட்டத்தை மறக்காமல் கிளிக் செய்யவும்.


9. கீழே படத்தில் உள்ளது போல ப்ரௌசர் ஓபன் ஆகும். இதில் பேஸ்புக்கின் அத்து வசதிகளும் இணைந்தே வருவதால் மற்ற தளங்களை இயக்கிக் கொண்டே பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கலாம். 
முக்கியமாக இந்த ப்ரௌசரில் இருந்து வெளியேறுகையில் மறக்காமல் log out செய்யவும்.


Rockmelt browser-ன் சில வசதிகள்:
- எந்த தளத்தில் நீங்கள் இருந்தாலும் பேஸ்புக் நண்பர்களுடன் சாட் மற்றும் மற்றைய தொடர்பில் இருக்க முடியும்.
- உங்கள் ஸ்டேடஸ். ட்வீட்ஸ், வால் போஸ்ட் ஆகியவைகளை எளிதாக ஷேர் செய்ய வசதி உள்ளது.
- சமூக தளங்களில் இணைந்தே இருப்பதால் அண்மைய செய்திகளை உடனுக்குடனே அப்டேட் செய்து அறிந்து கொள்ளலாம்.
- உங்களுக்கு விருப்பமான தளங்களில் இருந்து (Facebook, Twitter, Tumblr, and more) உடனடி செய்திகளை உடனுக்குடனே அறிந்து கொள்ளலாம்.
- Automatic sync மூலமாக மற்றைய ப்ரௌசர்களில் இருந்து புக்மார்க் செய்யப்பட்ட தளங்களை rockmelt-க்கு எளிதாக அப்டேட் செய்யலாம்.

மேலும் அறிய விரும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும்.
மேலும் வாசிக்க... "சமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அனுபவம்"



திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு

என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன். 

சரி, வாங்க ஸ்கூலுக்கு போலாம்.

ஒண்ணாம் வகுப்பு:
கொடைக்கானல் பக்கத்துல இருக்குற தாண்டிக்குடில தான் LKG ல இருந்து பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வர படிச்சேன். அவ்ளோ தாங்க நம்ம இங்கிலீஸ் படிப்பு. என்னால இந்த மூணு வருசத்தையும் எப்பவுமே மறக்க மாட்டேன். ஏன்னா, . எங்க ஊரு தாண்டிக்குடிக்கு பக்கத்து ஊரு. அப்போ ஸ்கூல் பஸ் இல்லாததுனால அரசு பஸ் வரும்.  பஸ் செம கூட்டமா வரும். அந்த கூட்டத்துல அந்த சின்ன வயசுல பஸ்ல டிக்கெட் எடுத்து போயிட்டு வருவேன். ஒரு தடவ நாலாவது ரேங்க் வாங்கிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணினேன். எதுக்குனா மொத மூணு ரேங்க்குக்கு தான் ஸ்பெஷல் பேட்ஜ் தருவாங்க. நாலாவது ரேங்க்குக்கு பேட்ஜ் இல்லாததுனால தான்.

ரெண்டாம் வகுப்பு:
திண்டுக்கல் பக்கத்துல சின்னாளபட்டியில வீடு கட்டி செட்டில் ஆனோம். அதனால ரெண்டாம் வகுப்பு ஆர்சீ ஸ்கூல சேர்த்து விட்டாங்க. என்னவோ தெரியல தமிழ் மீடியத்துல சேர்த்துட்டாங்க. ஸ்கூல்ல சாயுங்காலமா எக்ஸ்ட்ரா டைமில் வாய்ப்பாடு புக்க வச்சிட்டு படிச்சு மனப்பாடம் செஞ்சது இன்னும் மறக்கல.

மூணாம் வகுப்பு:
டீச்சர் நோட்டுல கொஸ்ட்டின் ஆன்சர் எழுதச் சொல்வாங்க. நானும் பக்கத்துல இருக்றவனும் யார் பர்ஸ்ட் எழுதறான்னு போட்டி போட்டுட்டு கடகடன்னு எழுதுவேன். எழுதி முடிச்சுட்டு நோட்டை திருப்பி பார்த்தா கையெழுத்து ரொம்ப ஒர்ஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் வேறென்ன, டீச்சர் கிட்ட இருந்து செம திட்டு தான் கெடைச்சுச்சு. 

நாலாம் வகுப்பு:
டீச்சருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட்டா இருந்தது நாலாம் வகுப்புல இருந்துதான். ஒரு எக்ஸாம்ல சயின்ஸ்ன்னு நினைக்கிறன். மார்க் கம்மியா போட்டிருக்காங்கன்னு டீச்சர் கிட்ட சண்டை போட்டதா ஞாபகம். ட்ராயிங் வரைய ஆரம்பிச்சது அப்போதான்னு நினைக்கிறேன். பென்சில் ட்ராயிங் ஓரளவு வரைவேன்.

அஞ்சாம் வகுப்பு:
அப்போ லீடரா இருந்தேன். மதியம் லஞ்ச் டைமில் படிக்காம விளையாடுறவங்க பேரை தினமும் எழுதணும். அப்போ ஒரு பொண்ணு பேரை எழுதிட்டு, அந்த பொண்ணு ரொம்ப கெஞ்சுச்சுன்னு அழிச்சுட்டேன். ஆனா டீச்சர் அந்த பேரையும் வாசிச்சு பணிஸ்மென்ட் தந்தாங்க. ஏண்டா, பேரை அழிச்சுட்டன்னு, என்னையும் திட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு,

ஆறாம் வகுப்பு:
திண்டுக்கல் MSP நாடார் ஸ்கூலுக்கு மாறினேன். புதுப்புது பசங்க. கொஞ்சம் மிரண்டுதான் போனேன். எப்பவும் அஞ்சு ரேங்க் வாங்கி பழக்கப்பட்ட நான் ஒரு மார்க், ரெண்டு மார்க் வித்தியாசத்துல பத்து இருபதுன்னு வாங்க ஆரம்பிச்சேன். எப்படி எழுதினாலும் ரேங்க் வர முடியல. காம்பிடிசன் அதிகம்.

ஏழாம் வகுப்பு:
கணக்கு பாடம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மொத மொதலா டியூசன் போனேன். வீட்டுக்கு போக ஈவ்னிங் ஏழரை மணி ஆயிரும். அப்புறமா படிச்சு ஹோம் ஒர்க் எழுதியும் எழுதாம தூங்கிடுவேன். காலையில ஸ்கூலுக்கு பஸ்ல போறப்ப மீதி ஹோம் ஒர்க் செஞ்சதா ஞாபகம், 

எட்டாம் வகுப்பு:
இந்த கிளாஸ் எனக்கு மறக்க முடியாதது. ஏன்னா சோசியல் சயின்ஸ் பாடத்துல வகுப்புல அதிக தடவ பர்ஸ்ட் மார்க் வாங்கியிருந்தது தான். எப்படி வாங்க முடிஞ்சதுனா, சோசியல் சயின்ஸ் சார் காலையில சீக்கிரமா எங்கள வரச் சொல்லி ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு பக்கத்தையும் படிச்சு அப்படியே ஒப்பிக்க சொல்வார். அப்படி படிச்சதுனால எப்படி கேள்வி கேட்டாலும் பதில் எழுத முடிஞ்சது. அப்ப இருந்தே எல்லா பாடத்தையும் எல்லா பக்கமும் அட்லீஸ்ட் வாசிட்டு எக்ஸாமுக்கு போற பழக்கம் வந்துச்சு.

ஒன்பதாம் வகுப்பு:
இந்த வகுப்புல எல்லா வாத்தியார்களும் வழக்கத்துக்கு மாறா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அடுத்து டென்த்ல, அதனால எல்லோரும் நிறைய மார்க் வாங்கனும்கிற நோக்கத்தில பாடம் நடத்தினாங்க. எங்களையும் அப்படியே தயார் செஞ்சாங்க. கணக்கு பாடம் கொஞ்சம் கடினமா இருந்துச்சு. அதுல கொஞ்சம் கவனம் செலுத்தி படிச்சேன்.

பத்தாம் வகுப்பு:
என்னை பாக்றவங்க எல்லாம் நானூறு, நானூத்தி அம்பதுக்கு மேல வாங்கனும்னு சொல்லி சொல்லியே ஒரு பயத்தை உண்டாக்கினாங்க.  எழுதுன எல்லா மாச, ரிவிஷன் எக்ஸாம்ல மார்க் ரொம்பவே கம்மியா வந்துச்சு. எல்லா பசங்களுக்கும் அப்படித்தான். அப்படியே புக்ல இருக்றத வரி மாறாம எழுதினாலும் மார்க் வரவு கம்மி தான். அதனால புக்கை அட்டை டூ அட்டை படிச்சோம். பப்ளிக் எக்ஸாம் எழுதினேன். எங்கே, மார்க் கம்மியா வந்திரும்னு பயத்துல இருந்த நான் நானூத்தி அம்பதுக்கு மேல வாங்காட்டியும், நானூறுக்கு மேல வாங்கிட்டேன். அப்பத்தான் கொஞ்சம் பயம் போச்சு. 

பதினொன்னாம் வகுப்பு:
டூல் & டை(tool&die) படிக்கணும்னு ஆசைப்பட்ட நான் சில சூழ்நிலைக் காரணத்தால ஸ்கூல் வேற மாறி எங்க ஊர் தம்பித்தோட்டம் ஸ்கூலில சேர்ந்தேன். மொத்தமே ஐநூறு மார்க்குக்கு படிச்சு பழகி இருந்த எனக்கு ஆயிரத்து இருநூறு மார்க்கு பாடத்த பார்த்து மயக்கமே வந்திருச்சு. இருந்தாலும் ஆசிரியர்கள் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த வருஷம் ஆண்டு விழாவுல கப்பலோட்டிய தமிழன் அப்படின்னு ஒரு நாடகம் போட்டோம். அதுல நான்தான் மெயின் ரோல். சிதம்பரனார் இல்லை. ஆங்கிலேய துரை வேஷம். அதுக்காக பட்லர் இங்கிலீஷ் பேசிப் பேசி பழகினேன். ஓரளவு நல்லா வந்துச்சு பட்லர் இங்கிலீஷ். இந்த மாதிரி ஜாலியாவும், படிப்புமா அந்த கிளாஸ் போச்சு.

பனிரெண்டாம் வகுப்பு:
கல்வி வாழ்வின் முக்கியமான கட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு. அதுக்கேத்த மாதிரியே வகுப்புல ஆசிரியர்கள், வீட்டுல பெற்றோர்கள், நண்பர்கள் எல்லோர்  ஒத்துழைப்பு கெடச்சு நல்லா படிச்சேன். பிசிக்ஸ் சார் வீட்டுல நைட்டு தங்கி (ட்யூசன் தான். ஆனா நேரங்காலம் இல்லாமல்) கண் முழிச்சு படிப்போம், காலையில நாலு மணிக்கு பிசிக்ஸ் சார் கையில டீயோடஎங்கள எழுப்பி விடுவாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் பக்கம் பக்கமா படிச்சு, நிறைய நோட்ஸ் படிச்சு பப்ளிக் எழுதி ஓரளவு மார்க் வாங்கினேன். 

ரைட்டுங்க, என்கூட ஸ்கூலுக்கு பொறுமையா வந்த உங்களுக்கு நன்றிங்கோ.

என்னை மாதிரி கீழே இருக்குற அஞ்சு பேரை அவங்களோட ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகனும்னு அன்பா கூப்பிடுறேன்.
உணவுலகம் சங்கரலிங்கம் சார் அவர்கள்.
கற்போம் தள பிரபு அவர்கள்
இந்திராவின் கிறுக்கல்கள் இந்திரா அவர்கள்
தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்கள்
ரேவா கவிதைகள் ரேவா அவர்கள்

இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கனும்னு ஆசை. யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?
மேலும் வாசிக்க... "திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு"



மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்

நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?

1. மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்.


2. முழுமையான சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் சப்ளையை துண்டிக்கவும். தொடர்ந்து சார்ஜரை மின் இணைப்பில் வைக்க கூடாது.


3. புளூடூத் வசதியை பயன்படுத்திய பின்னர் புளுடூத்தை சுவிட்ச் ஆப் செய்யவும்.


4. WI-FI தேவையில்லாத சமயங்களில் சுவிட்ச் ஆப் செய்யவும்.


5. 3G வசதி இருந்தாலும் GSM Mode-ஐ யூஸ் செய்யவும். 3G/GSM Mode என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடும்.


6. மொபைலின் Auto Brightness வசதியை எப்பொதும் ஆப் செய்தே வைக்க வேண்டும்.


7. மொபைல் ரிங் டோன் உடன் சேர்த்தோ அல்லது தேவைப்படாத சமயங்களில் வைப்ரேசன் வசதியை ஆப் செய்யவும்.


8. மொபைல் ஸ்கிரீன் background light நேரத்தை முடிந்த வரை குறைவான நேரத்திற்கு செட் செய்ய வேண்டும்.


9. மொபைல் கேமரா பயன்படுத்தும் போது அதிக நேரம் கடத்தாமல் விரைந்து போட்டோ எடுக்கவும். கேமரா ஆன் செய்து தாமதப்படுத்தினால் சார்ஜ் விரைவில் தீர வாய்ப்பு உண்டு.


10. பின்புலத்தில் ரன் ஆகும் சில அப்ளிகேசன் ப்ரோக்ராம்களை நிறுத்த வேண்டும்.


11. வார்னிங் டோன், கீபேட் பட்டன் டோன், இன்னும் சில தேவையில்லாத அதிகப்படியான டோன்களை ஆப் செய்ய வேண்டும்.


12. மொபைலில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.


13. தேவையில்லாமல் நீண்ட பேசுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.


14. அனிமேட்டட் வால்பேப்பர் படங்களை திரையில் வைக்க வேண்டாம். 


15. கேம்ஸ் விளையாடும் போது வைப்ரேசன், ம்யூசிக் போன்றவற்றை ஆப் செய்ய வேண்டும்.
மேலும் வாசிக்க... "மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1