இந்த ரெண்டு நாளா நான் நிம்மதியாவே வேலை பாக்க முடியல. தொடர்ந்து பல நம்பர்ல இருந்து பல மிஸ்டு கால் வந்துக்கிட்டே இருந்துச்சு. பொதுவா நான் மிஸ்டு கால் வந்தாலே நான் கண்டுக்கிற மாட்டேன். ஆனா தொடர்சியா பல நம்பர்களிளிருந்து வந்ததால ஒரு நம்பருக்கு கால் பண்ணினேன்.
ஹலோ... யாருங்க இத்தன மிஸ்டு கால் கொடுக்கிறது? ரொம்ப டார்ச்சர் பன்றிங்களே! என கேட்டது தான் மிச்சம்... அந்த பக்க போன்ல இருந்து ஒரு கர கர குரல். நீ தான் தமிழ்வாசி பிரகாஷா? என கேட்க, நானும் , ஆமா, நான்தான் பிரகாஷ் பேசுறேன், என்ன விஷயம்? என கேட்டேன்.
எதிர் தரப்பில், இங்க பாரு தம்பி! எங்க தலைவர் விஜயகாந்துக்கு எதிரா உன் ப்ளாக்கில் எழுதிக்கிட்டு இருக்க? இது நல்லாயில்லை. நானும் பாத்திக்கிட்டு தான் இருக்கேன். ரெண்டு மூணு மாசமா
விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்? அப்படின்னு நீயா ஒரு கருத்து கணிப்பு போட்ட? அப்புறம் என்னானா? விஜயகாந்த் ஜெயலலிதா கிட்ட கூட்டணி சேர்ந்தது சரியா? தவறா? அப்படின்னு இப்ப கருத்து கணிப்பு நடத்திக்கிட்டு இருக்க... என்ன தம்பி நெனச்சிக்கிட்டு இருக்க? சரி போனாப் போகுதுன்னு விட்டா
விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் அப்படின்னு ஒரு பதிவு போட்டு அதுல காப்டன் டிவி இல வந்த வீடியோவை போட்டிருக்க. சரி அதோட நிறுத்திக்கிருவேன்னு பாத்தா வடிவேலு, எங்காள பத்தி நக்கலா கமென்ட் அடிச்சதையும், வீடியோ படமாவும் செய்திகளாவும் போட்டு நாரடிக்கிற..." என போதையில் கரகரத்தது ஒரு குரல். அப்புறம் என்னென்னமோ உளறினான்.
நாமெல்லாம் யாரு... கண்டவிங்க பேச்சை காதுல வாங்கிக்கிற மாட்டோம்ல... நம்ம வேலைய நாம கரட்ட பாப்போம்ல...