CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7


முந்தைய பாகங்களுக்கு...

டிஸ்கி:  

      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி      

இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.

       கடந்த பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்க போவது CO-ORDINATE METHODS.

CO-ORDINATE METHOD இரண்டு வகைப்படும்.
1. ABSOLUTE CO-ORDINATE METHOD, 
2. INCREMENTAL CO-ORDINATE METHOD


1. ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன?
              வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது ஒரு பொதுவான புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது ABSOLUTE CO-ORDINATE METHOD எனப்படும்.


2. INCREMENTAL CO-ORDINATE METHOD என்றால் என்ன?
             வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD எனப்படும்.


       நண்பர்களே, ABSOLUTE, INCREMENTAL பற்றி கீழே உள்ள வரைபடத்தின் மூலம் விளக்கமாக பார்க்கலாம்.


         மேலே படத்தில் அளவுடன் ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதற்கு முதலில் ஒரு பொதுவான புள்ளி வைக்க வேண்டும். அந்த படத்திற்கு புள்ளிகள் எப்படி குறிக்க வேண்டும். முதலில் அந்த படத்தை ஒரு GRAPH SHEET இல் வரைந்து கொள்ளுங்கள். நான் அந்த படத்திற்கு நடுப்பகுதியை பொதுவான புள்ளியாக வைத்து வரைந்துள்ளேன். இதில் முதல் கால்பகுதி, இரண்டாம் கால்பகுதி, மூன்றாம் கால்பகுதி, நான்காம் கால்பகுதி என நாம் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் GRAPH SHEETஇல் பிரிப்பது போல பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் MACHINE இல் நாம் ஒரு பொதுவான புள்ளியை கொடுப்போம். அதற்கேற்ப X.Y புள்ளிகளுக்கு + அல்லது - கொடுக்க வேண்டும்.

           
           மேலே படத்தில் GRAPH SHEET இல் கொடுக்கப்பட்ட படத்தை மையப்படுத்தி வரைந்துள்ளேன். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க + மற்றும் - கொடுத்துக் கொளுங்கள். நாம் GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து மில்லிமீட்டராக பிரிதுள்ளோம். நமக்கு கொடுக்கப்படும் படங்களின் அளவுகள் மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டே இருக்கும். சரி நண்பர்களே, மேற்கண்ட முறையில் GRAPH SHEETஇல் படத்தை வரைந்து கொள்ளுங்கள். 


இப்போது ABSOLUTE METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம். 
          முதல் புள்ளி மூன்றாம் கால் பகுதியில் இருப்பதால் X மற்றும் Y க்கு மைனஸ் குறி வரும்,  X ஆனது பூஜ்யத்தில் இருந்து மூன்று கட்டங்கள் தள்ளி இருப்பதால் X-30 என குறிக்க வேண்டும். கவனியுங்கள் 30 என ஏன் போட்டிருக்கேன் என்றால் படத்தில் அளவுகள் மில்லி மீட்டரில் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து MM ஆக வைத்துள்ளோம்.
இங்கு மையப்புள்ளி என்பதை ORIGIN என சொல்வோம்.
இனி மையப்புளியை வைத்து ஒவ்வொரு புள்ளிக்கும் X,Y பார்ப்போம்.
1. X-30.0    Y-20.0
2. X20.0     Y-20.0
3. X20.0     Y10.0
4. X40.0     Y10.0
5. X40.0     Y20.0
6. X-10.0    Y20.0
7. X-20.0    Y10.0
(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)
8. X-20.0    Y-10.0
9. X-30.0    Y-20.0
9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும். 


     நண்பர்களே, இன்று ABSOLUTE METHOD பற்றி பார்த்தோம். அடுத்த பாகத்தில் INCREMENTAL METHOD பற்றி பார்ப்போம்.

அப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.


மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7"



வாழ்க்கை உயர்வது எப்போது?


         ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.

  உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.

        நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

       எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

   சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.

    சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

       இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.
இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு".
மேலும் வாசிக்க... "வாழ்க்கை உயர்வது எப்போது?"



திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?


       தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு சில முக்கிய கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு இருந்த கூட்டணி அப்படியே இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைத்திருந்த சமயத்தில் கூட்டனிக்கிடையே பிளவை ஆரம்பித்தி வைத்தவர் ஜெயலலிதா. கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே இந்த தேர்தலுக்கும் கூட்டணி கட்சிகளை கலந்த ஆலோசிக்காமலே தன்னிச்சையாக போட்டியிடும் இடங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான தேமுதிக, அதிமுக உடன் கூட்டனியில் இருக்கிறோமா? இல்லையா? என்ற தெரியாத திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டது. 
           அதிமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜெ விடம் எப்படி பணிவுடன் நடந்து கொள்வார்களோ அந்த அளவுக்கு விஜயகாந்தும், அவரது கட்சியினரும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். அப்படி நடந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்பார்த்த இடங்கள் கேட்டுப் பெற்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது. ஆனால் ஜெ நினைத்தது வேறு. தேமுதிக வளர இந்த உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக இருக்கும் என எண்ணியே இடங்கள் தராமல் எல்லா இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஒரு பெரிய கட்சியின் நிழலில் சட்டசபை தேர்தலில் ஜெயித்த தேமுதிக வுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இது ஒரு புறமிருக்க திமுகவும் காங்கிரஸை கழட்டி விட்டது. இது ஏற்கனவே எதிர்பார்த்த முடிவுதான். இப்படி திமுக, அதிமுகவும் கூட்டணிகளை விடுத்து தனித்தனியே போட்டியிடும் இடங்களை அறிவித்தது. ஆனால் தேமுதிக மிகவும் தாமதமாகவே போட்டியிடும் இடங்களை அறிவித்துள்ளது. இது அவர்களின் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதத்தை காட்டுகிறது. அந்த சூழ்நிலையிலும், அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ளது. 
           தனது கட்சியை வளர்க்க ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும் பாமக போல யாருடனும் கூட்டணி வைக்கும் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது தேமுதிக. அக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக. தேமுதிக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா? அல்லது தேமுதிகவுக்கு வாக்களிப்பார்களா? இதே நிலை தான் மற்ற கட்சிக்கும். 
       மக்களின் வாக்களிக்கும் உரிமையை இவ்வாறான கூட்டனிகளே தீர்மானிப்பதாக இந்த சூழ்நிலை அமைகிறது. வாக்காளர்கள் தனித்து முடிவெடுப்பதெல்லாம் மலையேற்றி விட்டது இந்த கூட்டணி முறை. நான்கு மாதத்துக்கு முன் ஒரு கட்சிக்கு விரும்பி ஓட்டு போட்ட மக்களுக்கு இன்று அந்த கட்சி விரும்பாத கட்சியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்த கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதே ஆகும். திமுக, அதிமுக, கம்யும்னிஸ்ட் போன்ற பழைய கட்சிகள் கூட்டணி தர்மத்தை மாற்றிக் கொண்டே இருக்கலாம், அது அவர்களுக்கு புதிதல்ல. ஆட்சியை பிடிக்க அவர்கள் போடும் கணக்கு இது. ஆனால் தேமுதிக எந்த கணக்குடன் கூட்டணி அமைகிறது? கடந்த சட்டசபை தேர்தலில் கொடுக்கப்படும் இடங்களின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியை முடிவு செய்தது. அந்த சமயங்களில் அதிமுகவுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்தே அதிக இடங்களை பெற்றது. இந்த தேர்தலிலும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகாமல் ஜெ சுதாரித்து விட்டார். அதனாலேயே தேமுதிகவுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டு கம்யுநிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டனியால் தேமுதிகவின் வாக்கு வாங்கி குறையுமா? கூடுமா? என்பது தேர்தல் முடிவைப் பொறுத்தே தெரியும். வாக்கு வாங்கி சரியும் பட்சத்தில் தேமுதிகவிடம் இருந்து மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என்பது தெரிய வரும். விஜகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் மக்கள் மத்தியில் நிலையான கட்சியாக உருவெடுத்துள்ளதா என்பதும் இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே உள்ளது.
        தேமுதிக உருவான காலத்தில் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்ல கட்சி உருவெடுத்துள்ளது என உணர்வு தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. கட்சி வளர்க்க போதிய நிதி வசதியும் இல்லாததை இந்த கூட்டணி அமைத்தலில் காணப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் சமச்சீர் கல்வி பிரச்சனையில் ஜெ வை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. அது ஏன்? இன்று வரை தேமுதிக எந்த கொள்கையுடன் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளதாக நினைக்கிறேன். மக்களுக்கு ஆதரவான கட்சியாக இருக்கப் போகிறதா? அல்லது, மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் நெருக்கடி தரும் கட்சியாக இருக்கப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க... "திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?"



சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு?


ஒருவர் : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
மற்றவர்: அப்புறம் ?
ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..


ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.



ஒருவர்: கவனிச்சீங்களா... ஏதோ வதந்தியை நம்பி நிறைய பெண்கள் தாலி மாத்திக்கிட்டாங்க...
மற்றவர்: நீங்க வேற... சில பெண்கள் கணவனையே மாத்திட்டாங்களாம்


தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை 
போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை

*******************************

இந்த tom & jerry காமெடியை பார்த்தாலே பெரியவங்களும் சின்ன பசங்களா மாறிருவாங்க. வாங்க, நாமளும்  tom & jerry சேட்டையை பாக்கலாம்.

கொசுறு: ரெண்டு நாளா அடிக்கடி கரண்ட் கட் ஆகுது. அதான் இன்னைக்கு  தேடி கண்டுபிடித்த கொசுறுகள்.. ஹி..ஹி...
மேலும் வாசிக்க... "சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு?"



பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...


பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இமானுவேல் சேகரன் நினைவு விழாவிற்காக வந்த ஒரு கட்சியின் தலைவரை, முன்கூட்டியே கைது செய்ததற்காக, தொண்டர்களின் எழுச்சியால், பரமக்குடியே ஸ்தம்பித்து, ராமநாதபுரம் மாவட்டமே சீர்குலைந்து, இன்று இந்தியாவில் அவப்பெயர் பெற்றுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
பின், 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதில் நடந்த அடிதடி சண்டையில், 2 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகளில் படிக்கும்போது, மிகவும் வேதனையாக உள்ளது. 

எந்தவொரு தலைவரின் நினைவு விழா கொண்டாடப்பட்டாலும், அந்த தலைவரை தெய்வமாக நினைத்து, அவரின் கொள்கைகளை கடைபிடித்து, அவரின் வழியில் மற்றவர்களும் நடக்க வேண்டும். இதைத் தவிர்த்து, அடிதடி சண்டையில் இறங்கி, மற்ற கலவரங்களை உருவாக்கவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உண்டாக்கவோ, மக்களின் பொதுச் சொத்துக்களை சீரழிக்கவோ கூடாது. 

இதுபோன்ற செயல்களைக் கண்டு இளைஞனாகிய எனக்கு, மிகவும் வேதனையாக உள்ளது. இதுபோன்ற விழாவிற்கு தலைவர்களோ, தொண்டர்களோ வராவிட்டால் அல்லது தடை செய்யப்பட்டாலோ, பஸ், ரயில் போன்றவைகளை சூறையாட வேண்டுமா? அதற்கான உத்தரவு பிறப்பித்த அதிகாரியுடன் கலந்தாலோசித்து காரணத்தை அறிந்துகொள்ள வேண்டியதுதானே புத்திசாலித்தனம். 

இதையெல்லாம் செய்யாமல், எவ்வளவோ அற்புத வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும், இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது மனிதத் தன்மையல்ல. அதிலும், கலவரம் நடந்து பல நாட்கள் ஆகியும், விசாரணை என்ற பெயரில், நினைவு நாள் கொண்டாடக் கூடிய மக்கள், கிராமங்களில் இரவும், பகலும் வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்தும், ஆண்கள் இல்லாதபட்சத்தில், பெண்களை மிரட்டி விசாரிப்பதும், மிகப்பெரிய கொடுமை. 

இதனால், மக்கள் நிம்மதி இழந்து, மிகவும் பயந்து நடமாடுகின்றனர். செய்தி உதவி தினமலர். மக்களின் நண்பன் என சொல்லக்கூடிய காவல்துறையே, சம்பந்தமில்லாத நபர்களையும், கல்லூரி மாணவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்துவது மிகவும் கொடுமையானது.விசாரிக்க வேண்டுமென்றால், மாவட்ட எஸ்.பி., மூலம், கிராமத் தலைவரையோ அல்லது ஊராட்சித் தலைவரையோ அழைத்து, அந்தத் தலைவரின் மூலம், யாரெல்லாம் இவ்விழாவிற்கு சென்கின்றனரோ, அவர்களின் பட்டியலை வாங்கி, விசாரிப்பதுதான் முறை. 

சம்பந்தமில்லாதவர்களையும், கண்ணில் தெரிந்தவர்களையும் கைது செய்வது, துன்புறுத்துவது ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று. எவ்வளவு நாள்தான் இப்படி அடிமையாக வாழ முடியும். ஒருவன் தவறு செய்தாலோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினாலோ, அவனுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் நம் சட்டம். 

அந்த வகையில், ஒருபோதும் அவர்களை மன்னிக்க முடியாது. கண்டிப்பாக அவர்களை கண்டறிந்து, தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து.எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விழாவில் பங்கேற்பவர்கள், அவர் பங்கேற்பதற்கு அனுமதி பாஸ் வழங்கும்போது, அவர்களின் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாரமான சான்றிதழ்கள் வாங்கிக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். 

அவ்வாறு செய்தால்தான், தவறு செய்தவர்களை மட்டும் தண்டிக்க முடியும். இல்லையெனில், சம்பந்தமில்லாமல் இருப்பவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகாது. தயவுசெய்து மக்களை துன்புறுத்தாமல், மக்களின் நண்பனாக நின்று விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். செய்யுமா?
மேலும் வாசிக்க... "பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ..."



டுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது?

நண்பர்களே, 
         இன்னைக்கு சண்டை ச்சே... ச்சே... "சண்டே", எல்லோரும் செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்போம். நானும்தான். அதான் இன்னைக்கு பதிவு லேட்டா போடறேன். என்ன போடலாம்னு யோசிச்சு யோசிச்சு சண்டே பத்தி கூகிள்ல தேடி இப்பிடி போட்டிருக்கேன். ஹி...ஹி... இந்த பதிவை பார்த்து டென்சன் ஆகாம என்ஜாய் பண்ணுங்க சண்டேயை...









டிஸ்கி: இந்த படங்கள் எங்க இருந்து சுட்டு இருக்கேன்னு அந்த படத்திலேயே போட்டிருக்கு. பார்த்துக்கங்க. ஹி.. ஹி...
மேலும் வாசிக்க... "டுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது?"



விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ


            
        சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றுவிட்டது. அந்த நேரம் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தரை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
     அந்த விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். தரை இறங்க விமானம் முயன்றபோது ஓடு தளத்தில் மற்றொரு விமானம் நிற்பதை விமானி கவனித்துவிட்டார். தரை இறங்கினால் மோதும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக விமானி விமானத்தை உயரே கிளப்பினார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஓடு தளத்தில் இன்னொரு விமானம் நிற்பதால் தரை இறக்க முடியவில்லை.
          உடனடியாக அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போதுதான் எந்திர கோளாறு காரணமாக டெல்லி விமானம் ஓடு தளத்தில் நிற்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக “தள்ளு வாகனம்” மூலம் டெல்லி விமானம் அப்புறப்படுத்தப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதன்பின் டெல்லியில் இருந்து வந்த விமானம் தரை இறக்க அனுமதிக்கப்பட்டது.
           25 நிமிட தாமதத்துக்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானியின் சாமர்த்திய முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 318 பயணிகள் உயிர் தப்பினார்கள். ஒரு தளத்தில் விமானம் நிற்கும் போது இன்னொரு விமானம் இறங்க அனுமதி அளித்தது ஏன்? இந்த தவறு நடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விமான தள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி: சன் நியூஸ், மாலைமலர்

இன்றைய மற்றொரு பதிவு: 

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6

மேலும் வாசிக்க... "விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ"

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6

முந்தைய பாகங்களுக்கு...



டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி


இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
    
    நண்பர்களே, CNCயில் எனக்கு MACHINING CENTERஇல் மட்டுமே அனுபவம் இருப்பதால் நாம் VMC ( MACHINING CENTER) பற்றிய அடிப்படை PROGRAMஐ மட்டுமே இனி பார்க்க போகிறோம் என்பதை நினைவில் கொள்க. CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். CNC LATHE OPERATORS மன்னிக்க!
           
        CNC PROGRAMக்கு அடிப்படையே G CODE (PREPARATORY FUNCTION) மற்றும் M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.



G CODE (PREPARATORY FUNCTION) என்றால் என்ன?
            MACHINEஇன் பல விதமான MOVEMENTகளை உதாரணமாக, THREAD CUTTING, CANNED CYCLES, POSITIONING, ETC போன்றவற்றிற்கு MACHINEஐ தயார் செய்யும் கட்டளைகளுக்கு G CODE (PREPARATORY FUNCTION) எனப்படும். சுருக்கமாக சொன்னால் PROGRAMஐ CONTROL செய்வது G CODE (PREPARATORY FUNCTION) ஆகும்.
G CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.

M CODE (MISELLANEOUS FUNCTION) என்றால் என்ன?
              MACHINE அளவுகளுக்கு சம்பந்தமில்லாத இயக்கங்களாகிய START, STOP, COOLANT ON/OFF/ SPINDLE START/STOP போன்ற இயக்கங்களை குறிக்க பயன்படும் கட்டளைகளுக்கு M CODE (MISELLANEOUS FUNCTION) எனப்படும். சுருக்கமாக MACHINEஐ CONTROL செய்வது M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.
M CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.

ADDRESS CHARACTERS:
       G, M அல்லாத பிற ஆங்கில எழுத்துக்களும் PROGRAMக்கு பயன்படுகிறது. அவற்றிக்கான விளக்கங்கள் கீழே படத்தில் தரப்பட்டுள்ளது.

         நண்பர்களே, இன்றைய பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இவைகளே ஒரு PROGRAM மூலம் MACHINEக்கு கொடுக்கப்படும் கட்டளைகள் ஆகும். ஒரு OPERATORக்கு மேற்கண்டவை முழுவதும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் PROGRAM பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த பாகத்தில் CO-ORDINATE METHODS பற்றி பார்ப்போம்.

அப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.


மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6"



பிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...?


காலை நேரத்தில் பறிக்கப்படும் ரோஜா மலரை விட மாலை நேரத்தில் பறிக்கபடுகிற ரோஜா மலர்கள் நீண்ட நேரத்திற்கு மலர்ச்சியோடு இருக்கும்.

போக்கிரித்தனதிற்கு எல்லை உண்டு. ஆனால் மடத்தனதிற்கு எல்லை இல்லை.

நீங்கள் முயற்சி செய்யாமல் இருக்கும் வரை சந்தர்ப்பம் கூட தூங்கி கொண்டுதான் இருக்கும்.

எந்தக் காரியம் செய்தாலும் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருக்கக் கூடாது. மூளையும் அதில் ஈடுபட வேண்டும்.

தனக்கு தெரிந்த விசயத்தை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும்.

நேரத்தை இறைவன் படைத்தான். அவசரத்தை மனிதன் உண்டாக்கினான்.

பிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்க உரிமை உண்டு. ஆனால் உபயோகிக்கும் கம்பு சுண்டு விரல் பருமனுக்கு மேலே இருக்கக் கூடாது.
டிங்கோ வகை நாய்
டிங்கோ என்னும் ஆஸ்திரேலியா வகை நாய்க்கு குரைக்கத் தெரியாது.

உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்.

நாக்கின் நடுப்பகுதியில் சுவை அரும்புகள் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் எந்தச் சுவையும் அறிய முடியாது.


இன்றைய மற்றொரு பதிவு:

ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்

மேலும் வாசிக்க... "பிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...?"

ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்

    நண்பர்களே, நாம் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கி நமக்கு தெரிந்த விசயங்களை பதிவுகளாக எழுதி வந்தாலும் நமது பிளாக்கின் தோற்றம் ரொம்ப முக்கியம். கூகிள் தளம் சில பேஸிக் டெம்ப்ளேட்களை வழங்கி வந்தாலும் அவற்றில் சில புதிய வசதிகள் இருக்காது. சில வசதிகள் தேவையெனில் தனியாக இணைக்க வேண்டும். ஆனால் டெம்ப்ளேட் வழங்குவதற்கென்றே சில இலவச தளங்கள் உள்ளன. அவற்றில் சில தளங்களை இங்கே தொகுத்துள்ளேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். 
http://btemplates.com/


http://www.bloggerblogtemplates.com/


http://www.blogtemplates.org/


http://www.newbloggertemplates.com/


http://www.hongkiat.com/blog/50-most-beautiful-blogger-templates/


http://mashable.com/2007/09/13/blogger-templates/


http://blogandweb.com/templates-blogger/


http://www.ourblogtemplates.com/

http://www.bloggertemplates4you.com/

http://www.allblogtools.com/category/blogger-templates/


http://www.atulperx.com/category/blogger-templates/


http://www.premiumbloggertemplates.com/


இங்கே குறிப்பிடப்படாத சில டெம்ப்ளேட் தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிருங்கள். 
மேலும் வாசிக்க... "ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்"



பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு

        அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன் பரிசோதனை கூடத்தில் இரவும் பகலும் ஏதாவது சோதனைகளும், பரிசோதனைகளும் செய்வதிலேயே பிசியாக இருப்பார். அப்படிச் செய்யும் போது அந்த அறை முழுவதுமே கணக்கற்ற, தூக்கி எறியப்பட்ட விதவிதமான சிறிய பெரிய பொருட்களால் நிறைந்து விடும். அந்த குப்பை முழுதும் அவர் அந்த ஆய்வகத்திலிருந்து வீட்டின் புழக்கடையில் கொண்டு போய் போட்டு விடுவார். அவர் ஒரு புதிய ஆய்வகத்திற்கு மாற்றம் செய்து போன போது தன் பழைய வீட்டை ஹென்றி ஃபோர்டு (முதன் முதலாக போர்டு காரை உருவாக்கியவர்) அவர்களுக்கு விற்று விட்டார். ஹென்றி ஃபோர்டு வீட்டை புதுப்பித்து குடியேறினார். ஆனால் புழக்கடையிருந்த குப்பைக் குவியல் மட்டும் அகற்றாமல் அப்படியே விட்டு வைத்திருந்தார்.
         இந்த குப்பையை எதற்காக அகற்றாமல் வைத்திருக்கிறீர்கள் என அவர் நண்பர் ஒருவர், ஒருநாள் அவரைப் பார்த்து கேட்டார். அதை நான் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க போகிறேன். பலப்பல கண்டுபிடிப்புக்கு பின்னால், எடிசன் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று மக்களுக்கு நான் காட்டப் போகிறேன். பல சோதனைகளில் அவர் எத்தனை முறை ஏதோ தவறு காரணமாக தொல்லி அடைந்தார் என்பதற்கு இந்தக் குப்பைக் குவியல் தான் சாட்சி. எந்த ஒரு லட்சியத்தை அடைவதற்கு முன்பு பலமுறை தோல்வியடைந்தாலும், அதை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று என் நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்த போகிறேன்.
         வெற்றியடைவதற்கு முன் தோல்விகளைச் சந்திக்க தைரியமில்லை எனில், எந்த ஒரு லட்சியத்தையும் நாம் அடைய முடியாது என்று கூறினார் ஃபோர்டு. உண்மைதான் தவறுகள் இழைக்க சுதந்திரமிருக்கும் இடத்தில் தாமதமாக வேணாலும் வெற்றி கிடைப்பது நிச்சயம். தவறிழைக்க அஞ்சுபவர்கள் பாதுகாப்பைத் தேடி ஆமை போலத் தன் ஓட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. 
மேலும் வாசிக்க... "பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு"

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

                
    எல்லா உயிர் பிராணிகளுக்கும் தூக்கம் என்பது இயல்பான செயல் ஆகும். அதிகமான உடல் உழைப்பு செய்தும் அமைதியாக இருப்பவர்களுக்கு குறைந்த சக்தி செலவாகிறது. ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டுமென்பது அவர் எவ்வளவு மன அமைதியுடனும் மன நெருக்கடியின்றியும் இருக்கிறார் என்பதைப் பொருத்ததாகும்.
              பலர் அதிக தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள் எனில் வேறு பலர் குறைந்த தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள். தூக்க மருந்தை சாப்பிடுபவர்களுக்கும் அமைதியான நல்ல தூக்கம் வருவதில்லை. வயிறு சுத்தமாக இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. உடல் சக்தியும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் கண்ட பொருட்களை சாப்பிட்டு அவர்களுடைய வயிறு நிரம்பியிருக்கும் போதும், மலச்சிக்கல் இருக்கும் போதும் அதிகம் தூங்குகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் குறைந்த அளவு தூங்குவதால் அவர்களுக்கு பயன் இருக்காது.
           தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.


இன்றைய மற்றொரு பதிவு:

பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?

மேலும் வாசிக்க... "தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!"



பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?

பிரபல பதிவர்களின் கையில் மங்காத்தா படத்தில் உள்ள ஐநூறு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என அவர்களே சொல்லும் கற்பனை பதிவு.


வேடந்தாங்கல் கருன்:
          எனக்கு ஐநூறு கோடி ரூபாய் கிடைத்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சொந்தமாக வாங்கி பிளாட் போட்டு, வீடுகள் கட்டி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வேன். அதன் மூலம் வரும் வருமானத்தில் நிஜ மங்காத்தா விளையாடி மேலும் பணம் சம்பாதிபேன். அதன் மூலம் சென்னையை வளைத்து போடும் எண்ணம் உள்ளது.

நாஞ்சில் மனோ:
      எனக்கு அந்த ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் பஹ்ரைனில் பெரிய பைவ்ஸ்டார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி முதலாளி ஆவேன். அதோடு ஒரு கம்ப்யுட்டர் சென்டர் ஒன்றை ஆரம்பித்து அதில் பலவித லேப்டாப்கள் விற்பனை செய்வேன். அதோடு மக்களுக்கு பயன்படும் வகையில் "நல்ல லேப்டாப் தேர்வு செய்வது எப்படி?" என்பதை பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன்.

செங்கோவி:
        மன்மதலீலை இரண்டு பாகங்கள் முடித்து மூன்றாம் பாகம் எழுதி வரும் இந்த தருணத்தில் எனக்கு ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் மன்மதலீலை மூன்று பாகங்களையும் திரைப்படமாக எடுப்பேன். மன்மதலீலை படத்துக்கு பொருத்தமான கதாநாயகன், கதாநாயகியை போட்டிகள் வைத்து தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கான கேள்விகள் என் மன்மதலீலை தொடரிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சி.பி: 
      எனக்கு அந்த பணம் கிடைத்தால் புதிதாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து எனது கதைகளை படங்களாக எடுத்து நானே விநியோகம் செய்வேன். எல்லா படங்களும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓட வைக்கும் டிரிக் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன். 
விக்கி: 
         ஹே... ஹே... எனக்கு பணம் கெடச்சா.... என்ன செய்வேன்னு இப்படி வெளிபடையா சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். என்கிட்டே பணம் இருக்குன்னு காட்டிக்க மாட்டேன். இந்தியா முதல் வியட்நாம் வரை நானே ராஜா, நானே மந்திரியாக இருப்பேன்.

நிரூபன்:
       பாஸ், எனக்கு பணம் கிடச்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா செய்ய வேண்டியதை கரெக்டா செஞ்சுடுவேன். எதை செஞ்சா கொள்ளை லாபம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியுமாதலால் பணம் கொட்டோ கொட்டு என கொட்டும்.

பன்னிக்குட்டி ராமசாமி:
          எனது டெர்ரர் குரூப்பை கார்ப்பரேட் நிறுவனமாக மாத்தி பெரிய ஊர் முழுதும் பெரிய மால்கள் தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் செய்வேன். ஹி...ஹி... என்னடா இது, டெர்ரர் குரூப்ஸ் நல்லது செயராங்களேன்னு கேட்கறிங்களா? எங்கள் மீது இருக்கும் மொக்கை என்ற அவப்பெயரை நீக்கி டெர்ரர் குரூப்ஸ் நல்ல குரூப்ஸ் என்ற பெயர் கிடைக்கும் வகையில் செயல்படுவோம்.

சசி:
      ஹி... ஹி... நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியாதா? பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் போல நானும் ஒரு கம்ப்யுட்டர் நிறுவனம் ஆரம்பித்து கூகிள்க்கு போட்டியா ஒரு புதிய பிரவ்சர் தொடங்கி விரைவில் முதல் இடத்தை பெறுவேன். அதோடு தினம் தினம் புதிய சாப்ட்வேர்கள் உருவாக்கி உலகில் பெரிய கம்ப்யுட்டர் நிறுவனமாக மாற்றுவேன். 

மாத்தியோசி:
      ஹி...ஹி... நான் மத்தவங்க மாதிரி என்ன செஞ்சேன்னு கதை சொல்லிட்டு இருக்க மாட்டேன். எப்புடி ஐநூறு ரூவா பணத்தோட எஸ்கேப் ஆயிட்டோம்ல. நான் எங்க எப்படி இருக்கேன்னு யாருக்கும் தெரியாது. அப்படியே உங்க முன்னாடி நான் வந்தா சும்மா அதிரடியா தான் வருவேன். அப்ப ஐநூறை, ஐயாயிரமாக மாத்தி இருப்பேன்.

புஸ்கி: 
    நம்ம மக்களை நாமளே சொன்னா கோச்சுக்க மாட்டாங்கனு நம்புறேனுங்க.


இன்றைய மற்றொரு பதிவு:

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

மேலும் வாசிக்க... "பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1