3G என்பது 3 வது தலைமுறையினர் என்பதை குறிப்பதாகும். அதாவது 3 ம் தலைமுறையினருக்கான அதிநவீன வசதிகளை அளிக்கும் தொலை தொடர்பு சேவை என்பதாகும். இந்தியாவில் 3 G சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயனில் உள்ளது. ஆனால், உலகில் முதல் முறையாக கடந்த 2001 ம் ஆண்டே ஜப்பானில் 3G சேவை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2002 ல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சேவை வழங்கப்பட்டது. தற்போது பழ நாடுகளில் 3G சேவை கடந்தாண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
தல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு!
நேத்து கே டி வியில நம்ம தல படம் தீனா ஒளிபரப்புனாங்க. படத்தை பார்த்ததும் என் மனம் என் கல்லூரி நாட்களுக்கு பின்னோக்கி சென்றது. அப்போ எங்க காலேஜ்ஜே அஜித் ஃபேன்ஸ் தான். தல படம் ரிலீஸ் ஆன மொத நாள் மொத காட்சியில எங்க நண்பர்ஸ் கூட்டமும் தியேட்டருல தான் அட்டெண்டன்ஸ் போட்டோம். காலேஜ் பிகர்களும் அங்க வந்திருங்க. மத்த டிபார்ட்மென்ட் பசங்க அதுக கூட கடலை வறுத்துகிட்டு இருப்பானுக... ஹி...ஹி... நாங்க மெக்கானிகல், ஒரு பிகரும் எங்க டிபார்ட்மென்ட்ல இல்லை. வயித்தேரிச்சலோட அவிங்கள மொறைச்சோம். படத்துக்கு வந்த மத்த ஃபிகர்களை சைட் அடிச்சுட்டு கமென்ட் அடிச்சுகிட்டு இருப்போம். டிக்கெட் உள்ளே போயி எடத்த தேடி உட்கார்ந்து.... ம்ஹும்... அந்த காலமெல்லாம் வசந்த காலம் தான்.
வரவேண்டிய நேரத்தில் ரஜினி கண்டிப்பாக வருவார்: தனுஷ்
எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்தார்.
மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாதமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரஜினிகாந்த் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து விட்டு நடிகர் தனுஷ் நேற்றிரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்றார்.
தனி வீட்டில் அவர் தங்கி இருந்த படியே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தனுஷ் கூறினார்.
ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார் என்று கேட்டதற்கு, அவர் எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில கண்டிப்பாக வருவார் என்றார் தனுஷ்.
தனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...!
கோபாலு: அண்ணே! அண்ணே! ஏண்ணே சோகமா இருக்கீங்க... அண்ணி உங்கள திட்டிடாங்களா?
தனபாலு: அடேய்.... எப்ப பாரு... அண்ணிய என்கூட சிண்டு முடிஞ்சு விடாம இருக்க மாட்டியே.... என் சோகத்துக்கு காரணம் வேறடா....
கோபாலு: சரிண்ணே... அண்ணிய பத்தி பேசல.... உங்க சோகத்துக்கு வேற என்ன காரணம்ண்ணே....
தனபாலு: எல்லாம் எம்பய படிப்பு பத்தி தான் கவலைப்படுறேன்...
கோபாலு: உம்பயலுக்கு என்னண்ணே... ராஜா வீட்டு கன்னுக்குட்டி...
ஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா?
ஆமையும் , முயலும்
முயல் தனது வேகத்தில் பெருமை கொண்டு, ஆமையை போட்டிக்கு அழைத்தது. போட்டி ஆரம்பித்தது. முயல் வேகமாக முன்னேறியது. ஆமையோ மேதுவாக ஊர்ந்தது. எனவே முயல் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு ஆமை இந்த இடத்துக்கு வருவதற்குள், கிளம்பி விடலாம் என எண்ணி கண் அயர்ந்து விட்டது. விழித்து பார்க்கும் போது ஆமை வெற்றி கோட்டை அடைந்து போட்டியை வென்று விட்டது.
இதனால் கிடைக்கும் நீதி:
நிதானமாக தொடர்ந்து செயல்படுதல் வெற்றியை கொடுக்கும்.
இந்தக் கதையை இன்னும் வேறு சில கோணங்களில் மாற்றி அமைத்து பார்ப்போமா?
நெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....
காலையில் சீக்கிரமா எந்திருச்சு கிளம்பி சீனா ஐயாவையும் பிக்கப் பண்ணிட்டு மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டு வந்து சேர்ந்தப்ப மணி 5: 15. அங்க இருக்கற தமிழ்நாடு தேயிலை தொட்டக்கழக டீ கடையில் ஆளுக்கு ஒரு காபி சாப்பிட்டு வம்ப வெலைக்கு வாங்குற மணிக்காக ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அவர்க்கு போன் பண்ணினா இதோ வந்துட்டேன்னு தான் சொன்னார். ஆனா வரல... அப்புறமா ஒரு பத்து நிமிசம் கழிச்சு அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. எந்த எடத்துல இருக்கீங்க என கேட்டாரு. அப்புறமா அவருக்கு இடத்தை சொல்லி அவரும் எங்க கூட ஜாயின் பண்ணிட்டாரு.
லேபிள்கள்:
அரட்டை,
பதிவர்கள் சந்திப்பு
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)
சித்ரா அக்கா பேச ஆரம்பிக்கும் போது பதிவர்களிடையே சிரிப்பலை எழுந்து அவரை திக்கு முக்காட வைத்தது. இம்சை அரசன் பாபு அவர்கள் தமிழ்மணத்தின் மணி மகுடமே என வாழ்த்தினார். உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அவ்வளவு ஓட்டுகளும், கருத்துகளும் வருகிறதோ...என கலாய்த்தார். அதற்கு சித்ரா அக்கா எல்லோருக்கும் கமென்ட் போடுவேன், அவர்களை உற்சாகபடுத்துவேன். அவ்வளவு தான். அதோடு தான் தந்தையின் வழியில் திசை மாறாமல் செல்வதாகவும் சொன்னார்.
DTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது? ஒரு பார்வை!
டிஸ்கி: பன்னிக்குட்டியார் கேட்டுக்கொண்டதுக்கிணங்க மீள்பதிவு.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான கட்டுரையா இருக்கு, மீள்பதிவு செய்யலாமே?இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலாச்சாரக் காவலர்களும்" ஏன்...? ஒரு சில "அறிவு ஜீவிகளும்" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 6,76,615 தான்.
நான் டீக்கடை வைக்க போறேன்! விதவிதமான டீ தயாரிப்பது எப்படி?
நான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.
லேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்றிய மனோ...
"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே..."
"டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
"டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
கலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா? மக்களுக்கு தெரியும்!!!
தி.மு.க.,வின் தேர்தல் தோல்வி பற்றி கருணாநிதி ஒரு அறிக்கையில் "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், வஞ்சனையாளர்கள் பழி தீர்த்துக் கொண்டதன் விளைவு' என சொல்லியிருக்கிறார். "திராவிட இயக்கம் தழைத்த இடத்தில், தருப்பைப் புல்லை முளைக்கச் செய்யும் முயற்சி இது' என்கிறார். எழுபது ஆண்டு கால அரசியல் அனுபவத்தால் கலைஞர் கற்ற பாடம் இதுதானா?
யோவ்! ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற? வீடியோ இணைப்பு!!
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கொடுமை:
சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்களை அரசு அதிகாரிகள் அரசு ஆணையோடு அகற்றினார்கள். அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலை அதிகாரிகள் அகற்றும் போது கோவிலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் அதிகாரிகளிடம் வாதிடுகிறார். அப்போது வன்முறை ஏற்படும் என பயந்து போலீசார் அவரை அப்புறப்படுதுகிறார்கள்.
பெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா காமெடிஸ்
சோமு: கருண் சார் கிட்ட டியுசன் சேர போறேண்டா... நானும் படிக்க போறேண்டா...
ராமு: ஏண்டா... உனக்கு தான் படிக்ரதுனாலே பிடிக்காதே... என்ன திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு...
சோமு: பிளஸ் டு பெயிலா போயிட்டேனா காலேஜ் சேர முடியாது,,,, அம்மா கொடுக்கற இலவச லேப்டாப் வாங்க முடியாதுல.. அதான்
****************************
யார் இந்த பிரபலங்கள்? ஏமாற்றும் தமிழ் சேனல்! வீடியோ இணைப்பு.
டி வி சேனல்களால் எப்படிஎல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்று மாலை ராஜ் டி வி யில் யார் இந்த பிரபலங்கள் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் இரண்டு திரைப்பட நடிகர், நடிகைகளின் பாதி முகம் ஒரே படமாக இணைத்து ஒரு போட்டி நடத்தப்படுகிறது. போட்டி என்னவோ ரொம்ப ஈசிதாங்க. அந்த [படத்தில் உள்ள நடிகர், நடிகைகள் யார என போன் செய்து சொல்ல வேண்டும். சரியான பதில் சொல்பவர்களுக்கு ருபாய் முப்பதாயிரம் பரிசாக தரப்படும் என அறிவிப்பு செய்கிறார்கள். மொபைல் போனிலிருந்து மட்டுமே கால் செய்ய வேண்டுமாம்.
ஒருவர் போன் செய்து மீரா ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீகாந்த் என்று சொல்கிறார். இன்னொருவர் சினேகா மற்றும் லாரன்ஸ் என்கிறார். இப்படியே மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்கள் சொல்கிறார்கள். போட்டியை நடத்துபவர் தவறான பதில் என்கிறார். நேயர்களை மீண்டும் மீண்டும் போன் செய்யுமாறு தூண்டுகிறார். ஆனால் போன் செய்பவர்கள் தவறான பெயர்களையே சொல்கிறார்கள். விக்ரம், விக்ராந்த், பரத், ஷ்ரேயா, என தவறாகவே சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிய கொஞ்சம் நேரம் இருக்கையில் ஒருவர் ஜோதிகா என சொல்கிறார், நிகழ்ச்சியை நடத்துபவர் சரியான விடை என்கிறார். ஆனால் அவருக்கு நடிகர் யாரென்று தெரியவில்லை என்கிறார். இப்படியே ஒரு அரை மணிநேரம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
என்ன ஏமாற்றுகிறார்கள் என கேட்கிறீர்களா? நம் பணம் தான் அவர்களுக்கு தேவை. போன் கால் ஒரு நிமிடத்துக்கு ரூபாய் பத்துக்கும் குறையாமல் வசூல் செய்கிறார்கள். அதிலும் நாம் போன் செய்த உடனே லைன் கிடைக்காது. வெய்ட்டிங் இருங்கள் என சொல்வார்கள். அப்போதிருந்தே நம் பணம் அவர்களால் பிடுங்கப்பட ஆரம்பிக்கும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு லைன் கிடைக்கவே கிடைக்காது. ஆமாங்க, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் அவர்களாகவே போன் செய்த மாதிரி தவறான விடையை சொல்வார்கள். இதனால் மக்கள் போன் செய்யும் போது வெய்ட்டிங் கால் ஆகும். ஆனால் நம்முடைய கால்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெய்ட்டிங்லேயே இருக்கும். அதற்குள் நாம் பல நூறுகளை இழந்திருப்போம். இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
என்ன ஏமாற்றுகிறார்கள் என கேட்கிறீர்களா? நம் பணம் தான் அவர்களுக்கு தேவை. போன் கால் ஒரு நிமிடத்துக்கு ரூபாய் பத்துக்கும் குறையாமல் வசூல் செய்கிறார்கள். அதிலும் நாம் போன் செய்த உடனே லைன் கிடைக்காது. வெய்ட்டிங் இருங்கள் என சொல்வார்கள். அப்போதிருந்தே நம் பணம் அவர்களால் பிடுங்கப்பட ஆரம்பிக்கும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு லைன் கிடைக்கவே கிடைக்காது. ஆமாங்க, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் அவர்களாகவே போன் செய்த மாதிரி தவறான விடையை சொல்வார்கள். இதனால் மக்கள் போன் செய்யும் போது வெய்ட்டிங் கால் ஆகும். ஆனால் நம்முடைய கால்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெய்ட்டிங்லேயே இருக்கும். அதற்குள் நாம் பல நூறுகளை இழந்திருப்போம். இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.
மேற்கண்ட பிரபலங்கள் யாரென்று நீங்களே சொல்லுங்கள்.டேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே?
இனிய உறவுகளே!
கடந்த சில இல்லையில்லை பல நாட்களாக நான் ஒவ்வொரு பதிவின் கீழேயும் பொன்மொழிகளும், விடுகதைகளும் எழுதுவது இல்லை. பதிவு எழுதுவதற்கே நேரமில்லாமல் இருக்கும் போது பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர். சில பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் பொன்மொழிகளும், விடுகதைகளுமே நன்றாக இருந்ததே என்றும் சொன்னார்கள். குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள். (பாருடா, என் பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் இம்புட்டு வரவேற்பு இருக்குதா?) அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்றைய பதிவு முழுவதுமே பொன்மொழிகள், விடுகதைகள் தான்.
Subscribe to:
Posts (Atom)
|